திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

368 திருவாசக ஆராய்ச்சியுரை ''வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போது நான் வினைக்கேடன் என்பாய் போல இணையனா னென்றுள்னை யறிவித்தென்னை ஆட்கொண்டு" (சத 22) ''பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப்பானெனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ் செய்வான் எத்த னாகிவந் தில்புகுந்தெமை ஆளுங்கொண்டு" (சென்னிப் ) என்பன ஈண்டறியற் பாலன. இனிதாய் என்பது - இன்னிதாய் என ஒற்று விரிந்து நின்றது. ஊன் அதனையுடைய உடலை உணர்த்தியது. ஊனிலாவியை யோம் புதற் பொருட்டு (சத 40) என்புழிப் போல, நாடகம் என்றது ஈண்டு ஆனந்தக் கூத்தை, "நக்குமழுதுந் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தரற் கூத்து நவிற்றி (புணர்ச்சிப் 8) என வருதல் காண்க. உருகிப் பருக வைத்த வா என இயையும். பருக வைத்தவா என்ற வினையால், என்பதற்கு உனது அருட் பெருக்கை என உரைக்கப்பட்டது. "உருகிப் பெருகி யுளங் குளிர முகந்து கொண்டு பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை..... தெள் 15 ஏசறவு 9. *"பருகிய வின் பரங்கருணைத் தடங்கடலில்" என வருவன காண்க. வைத்தவா று - அருள் செய்தவாறும். "அன்பரில்... உனைப் பருக நின்றதோர் அப்பனே" (சத 98) என வருதல் காண்க. ஞான நாடகம் - மெய்ஞ்ஞானத்தால் உயிர் திருவருட் சத்தியைச் சார்ந்து இறைவனை அடைந்து மகிழ்தல். இது உயிரினுள் நிகழ்வதாகும். ''ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம் ஞானநடம் தான் நடுவே நாடு" என்பது திருவருட்பயன். ஆண்டு கொண்டதம் ஊனை நாடகம் ஆடுவித்ததும் உனைப் பருக வைத்ததும் ஞான நாடகம் ஆடுவித்ததும் வையகத்துள் அறியாமை நீங் கும் பொருட்டேயாகும். ஏகாரம்- தேற்றம். அதனை நைய என்பதனோ டும் கூட்டுக. அவிச்சை அறியாமை. இது ஆணவத்தால் ஏற்பட்டது. வையகத்துடைய இச்சை எனப் பாடல் கொளின் அது அடுத்த திருப் பாட்டில் அந்த தியாக வரும் முறையில் விச்சதின்றியே என்பதனோடு முரண்படும். ஆதலின் வையகத்துடை அவிச்சை எனப் பாடங் கொள் ளப்பட்டது. இதன் கண், ஊனை நாடகம் ஆடுவித்தமையானும் ஞான சாடகம் ஆடுவித்தமையானும் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 95. திருச்சதகம் 100. விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணு மண்ணக முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும் புயை னேனையுன் கோயில் வாயிலிற் பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக் குரிய னாக்கினாய் தாம்வ ளர்த்ததோர் நச்சு மாமர மாயி னுங்கொலார் நானும் அங்ஙனே யுடைய நாதனே. 369 ப-ரை : விண்ணும் மண்ணக முழுதும் யாவையும். விண்ணுலகத் தையும் மண்ணுலகம் முழுவதையும் மற்றும் எல்லா அலகங்களையும், விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய் - வித்தாகிய அம்மூலகாரணம் புலப்படுதலில்லாமலே படைத்தருள்வாய்; வைச்சு வாங்குவாய் - சுட்டிய காலம் வரையும் காத்து வைத்து உரிய காலத்திலே ஒடுக்குவாய்; வஞ்ச கம் பெரும் புலையனேனை + அறியாமையையுடைய பெரும் இழிவரலை யுடைய என்னையும், உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய்-நினது திருக் கோயிலின் வாயிலில் நின்னை என்றும் தரிசிக்க வேண்டும் என் னும் பித்துடையவனாய் நிற்கும் வண்ணம் செய்தாய்; பெரிய அன் பருக்கு உரியன் ஆக்கினாய் -பேரன்பர்களாகிய மெய்யடியார்களுக்கு உரியே னாகுமாறு செய்தாய்; தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும் கொலார்- உலகத்தவர் தம்மால் வளர்க்கப்பட்டது ஒரு நச்சு மாமரமானா லும் அதனை தாம் வெட்டி அழிக்கமாட்டார்; உடைய நாதனே - என்னை அடிமையாகவுடைய தலைவனே; நானும் அங்ஙனே- நின்னால் வளர்க்கப் பட்ட யானும் குற்றமுடையேனாயினும் நின்னாற் துன்புறுத்தப்படா தொழிதல் வேண்டும். விண்ணுலகத்தையும் மண்ணுலக முழுவதையும் மற்றும் எல்லா வுலகங்களையும் வித்தாகிய மூலகாரணம் புலப்படுதவில்லாமலே விளைவு செய்குவாய்; சுட்டிய காலம் வரையும் காத்து வைத்து உரிய காலத்திலே ஒடுக்குவாய்; வஞ்சகமுடைய பெரும் இழிவரலையுடைய என்னையும் உன் திருக்கோயில் வாயிலில் நின்னை என்றும் தரிசிக்க வேண்டும் என்னும் பித்துடையவனாய் நிற்கும் வண்ணம் செய்தாய்; பேரன்பர்களாகிய மெய் யடியார்களுக்கு உரியேனாகுமா று செய்தாய்; உலகத்தவர் தம்மால் வளரிக்கப்பட்டது ஒரு நச்சு மாமரமானானும் அதனைத் தாமே அழிக்க மாட்டார்; உடையநாதனே ! நின்னால் வளர்க்கப்பட்ட யானும் குற்ற முடையேனாயினும் நின்னாற் துன்புறுத்தப்படாதொழிதல் வேண்டும். விச்சு, வைச்சு, பிச்சன் என்பன நச்சு என்னும் எதுகை நோக்கித் திரிந்தன. இனி இதற்கு முதற் திருப்பாட்டின் ஈற்றிலுள்ள வித்தை யின் போலியாகிய விச்சை எவ்பதை இத்திருப்பாட்டிற்கு முதலாகக் கொண்டமையின் அங்ஙனமாயிற்று எனினும் அமையும். 47
368 திருவாசக ஆராய்ச்சியுரை ' ' வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போது நான் வினைக்கேடன் என்பாய் போல இணையனா னென்றுள்னை யறிவித்தென்னை ஆட்கொண்டு ( சத 22 ) ' ' பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப்பானெனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ் செய்வான் எத்த னாகிவந் தில்புகுந்தெமை ஆளுங்கொண்டு ( சென்னிப் ) என்பன ஈண்டறியற் பாலன . இனிதாய் என்பது - இன்னிதாய் என ஒற்று விரிந்து நின்றது . ஊன் அதனையுடைய உடலை உணர்த்தியது . ஊனிலாவியை யோம் புதற் பொருட்டு ( சத 40 ) என்புழிப் போல நாடகம் என்றது ஈண்டு ஆனந்தக் கூத்தை நக்குமழுதுந் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தரற் கூத்து நவிற்றி ( புணர்ச்சிப் 8 ) என வருதல் காண்க . உருகிப் பருக வைத்த வா என இயையும் . பருக வைத்தவா என்ற வினையால் என்பதற்கு உனது அருட் பெருக்கை என உரைக்கப்பட்டது . உருகிப் பெருகி யுளங் குளிர முகந்து கொண்டு பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை ..... தெள் 15 ஏசறவு 9 . * பருகிய வின் பரங்கருணைத் தடங்கடலில் என வருவன காண்க . வைத்தவா று - அருள் செய்தவாறும் . அன்பரில் ... உனைப் பருக நின்றதோர் அப்பனே ( சத 98 ) என வருதல் காண்க . ஞான நாடகம் - மெய்ஞ்ஞானத்தால் உயிர் திருவருட் சத்தியைச் சார்ந்து இறைவனை அடைந்து மகிழ்தல் . இது உயிரினுள் நிகழ்வதாகும் . ' ' ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம் ஞானநடம் தான் நடுவே நாடு என்பது திருவருட்பயன் . ஆண்டு கொண்டதம் ஊனை நாடகம் ஆடுவித்ததும் உனைப் பருக வைத்ததும் ஞான நாடகம் ஆடுவித்ததும் வையகத்துள் அறியாமை நீங் கும் பொருட்டேயாகும் . ஏகாரம்- தேற்றம் . அதனை நைய என்பதனோ டும் கூட்டுக . அவிச்சை அறியாமை . இது ஆணவத்தால் ஏற்பட்டது . வையகத்துடைய இச்சை எனப் பாடல் கொளின் அது அடுத்த திருப் பாட்டில் அந்த தியாக வரும் முறையில் விச்சதின்றியே என்பதனோடு முரண்படும் . ஆதலின் வையகத்துடை அவிச்சை எனப் பாடங் கொள் ளப்பட்டது . இதன் கண் ஊனை நாடகம் ஆடுவித்தமையானும் ஞான சாடகம் ஆடுவித்தமையானும் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 95 . திருச்சதகம் 100. விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணு மண்ணக முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும் புயை னேனையுன் கோயில் வாயிலிற் பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக் குரிய னாக்கினாய் தாம்வ ளர்த்ததோர் நச்சு மாமர மாயி னுங்கொலார் நானும் அங்ஙனே யுடைய நாதனே . 369 - ரை : விண்ணும் மண்ணக முழுதும் யாவையும் . விண்ணுலகத் தையும் மண்ணுலகம் முழுவதையும் மற்றும் எல்லா அலகங்களையும் விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய் - வித்தாகிய அம்மூலகாரணம் புலப்படுதலில்லாமலே படைத்தருள்வாய் ; வைச்சு வாங்குவாய் - சுட்டிய காலம் வரையும் காத்து வைத்து உரிய காலத்திலே ஒடுக்குவாய் ; வஞ்ச கம் பெரும் புலையனேனை + அறியாமையையுடைய பெரும் இழிவரலை யுடைய என்னையும் உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய் - நினது திருக் கோயிலின் வாயிலில் நின்னை என்றும் தரிசிக்க வேண்டும் என் னும் பித்துடையவனாய் நிற்கும் வண்ணம் செய்தாய் ; பெரிய அன் பருக்கு உரியன் ஆக்கினாய் -பேரன்பர்களாகிய மெய்யடியார்களுக்கு உரியே னாகுமாறு செய்தாய் ; தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும் கொலார்- உலகத்தவர் தம்மால் வளர்க்கப்பட்டது ஒரு நச்சு மாமரமானா லும் அதனை தாம் வெட்டி அழிக்கமாட்டார் ; உடைய நாதனே - என்னை அடிமையாகவுடைய தலைவனே ; நானும் அங்ஙனே- நின்னால் வளர்க்கப் பட்ட யானும் குற்றமுடையேனாயினும் நின்னாற் துன்புறுத்தப்படா தொழிதல் வேண்டும் . விண்ணுலகத்தையும் மண்ணுலக முழுவதையும் மற்றும் எல்லா வுலகங்களையும் வித்தாகிய மூலகாரணம் புலப்படுதவில்லாமலே விளைவு செய்குவாய் ; சுட்டிய காலம் வரையும் காத்து வைத்து உரிய காலத்திலே ஒடுக்குவாய் ; வஞ்சகமுடைய பெரும் இழிவரலையுடைய என்னையும் உன் திருக்கோயில் வாயிலில் நின்னை என்றும் தரிசிக்க வேண்டும் என்னும் பித்துடையவனாய் நிற்கும் வண்ணம் செய்தாய் ; பேரன்பர்களாகிய மெய் யடியார்களுக்கு உரியேனாகுமா று செய்தாய் ; உலகத்தவர் தம்மால் வளரிக்கப்பட்டது ஒரு நச்சு மாமரமானானும் அதனைத் தாமே அழிக்க மாட்டார் ; உடையநாதனே ! நின்னால் வளர்க்கப்பட்ட யானும் குற்ற முடையேனாயினும் நின்னாற் துன்புறுத்தப்படாதொழிதல் வேண்டும் . விச்சு வைச்சு பிச்சன் என்பன நச்சு என்னும் எதுகை நோக்கித் திரிந்தன . இனி இதற்கு முதற் திருப்பாட்டின் ஈற்றிலுள்ள வித்தை யின் போலியாகிய விச்சை எவ்பதை இத்திருப்பாட்டிற்கு முதலாகக் கொண்டமையின் அங்ஙனமாயிற்று எனினும் அமையும் . 47