திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் - நிலையியற்பொருள் இயங்கியற் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே யான் எல்லாப் பிறவி களிலும் பிறந்து இளைப்படைந்தேன். ''ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப்பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை" அம்மானை 14 என அடிகள் பிறாண்டும் கூறியிருத்தலுங் காண்க. 32-5. மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உண்மையாகவே உன் அழகிய திருவடிகளைக் கண்டு இப்பொழுது அப் பிறவித் துன்பங்களினின்றும் விடுபட்டேன்; உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா - அடியேன் உய்யும் பொருட்டு என் மனத்துள் 'ஓம்' என்னும் பிரணவவுருவாய் நின்ற மெய்யனே. விமலா - மாசற்ற வனே. விடைப்பாகா - தருமவடிவாகிய ஏறு ஊர்ந்தவனே, வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - வேதங்கள் ஐயனே என்று அழைக்கவும் அவற்றிற்கெல்லாம் எட்டாது மேல் உயர்ந்தும் கீழ் சூழ்ந்தும் புடைபரந்தும் அமைந்த நுட்பமான பொருளாய் உள்ளவனே. மெய்யே கண்டு எனக்கூட்டிக் காட்சியளவையானே நேரில் கண்டு எனவுரைக்க. திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை. உருநா மறியவோ ரந்தணனாய் ஆண்டுகொண்டான் " (தெள்ளேணம் 1) 'கண்ணார் நுதலோய் கழவிணைகள் கண்டேன் கண்கள் களிகூர" (குழைத் 9) நீவாவென்னக், கண்ணார உய்ந்தவா றன்றேயுன் சுழல்கண்டே (திரு வேசறவு 2) என அடிகள் அருளியவாறுங் காண்க. பொன்னடி - அழகிய அடி. பொன் -அழகு பு. வெ.மா.128 உரை. பொன்னடி என்பதற்கு பொன்போலும் அருமையும் தூய்மையும் ஒளியு முடைய திருவடியெனீனுமாம். "எவ்வாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்றமையால் வீடுற்றேன் என்றது எல்லாப் பிறப்புகளின் துன்பங்களி னின்றும் விடுதலையடைதலைக் குறித்தது. உய்ய நின்ற என இயையும். ஓங்காரம் - பிரணவம். அது அகர உகர மகரமாகிய பகுப்பினையும் விந்து நாதமாகிய முதலினையு முடையது. அகர உகர மகர விந்து நாதமாகிய ஐந்தும் இறைவனது ஐந்தொழிலைக் குறிக் கும். அதனால் ஓம் என்பது இறைவனுக்குரிய சிறந்ததொரு மறைமொழி யாகும். அம்மறைமொழி வடினாய் உயிர்க்குயிராய் நின்று இறைவன் உயிர்களை இயக்குதலின் 'என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற என்றார். அங்ஙனம் இறைவன் உள்ளத்துள் ஓங்காரமாய் நிற்பினும் உண்மை இயல்பில் திரிவடையானாதலின் மெய்யா' என்றார். விமலன் - மாசற்ற வன். மலம் - மாசு; அழுக்கு. வி. இன்மைப்பொருளுணர்த்தும் உபசர்க்கம். வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே என்பத னாள் நான்மறைகளால் இறைவன் இயல்புமுழுவதும் அறியப்படாமையின் சிவபுராணம் 13 பொதுவகையால் இறைவனை அழைக்கவும் அவற்றிற்கு எட்டாது மேலு யர்ந்தும் கீழ் சூழ்ந்தும் புடைபட விரிந்தும் நுண்ணியனாய் உள்ளான் என் பதும், அவன் அருள் செய்யும் சிவஞான மொன் றானேயே அறியப்படுபவனா வான் என்பதும் கொள்ளப்படும். வேதக்காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரிந்த போதக் காட்சிக்கும் காணலன் '' எனக் கந்தபுராணத்தும். சூரன் அமைச் 127, ''அல்லையீ தல்லயீதென மறைகளு மன்மைச் சொல்லினாற் றுதித்திளைக்குமிச் சுந்தரன்* கடவுள் 29. எனப் பரஞ்சோதி திருவிளையாடற்புராணத்தும் வருவன காண்க. இறைவனருளிய வேதங்கள் இறைவன் இயல்பினை முழுவதும் உரைக்க மாட்டாமையின் அவற்றற்பெறும் பயன் என்னையெனின்? இறைவனுக் குரிய பொதுவியல்பு சிறப்பியல்பு என்னும் சரியல்புகளுள் பொதுவியல்பு வேதமுதலிய நூல்களாற் கூறப்படும். சிறப்பியல்பும் நூல்களாற் கூறப் படினும் அனுபவவுணர்வு உண்டாதற்கு அவனருளாற் பெறும் சிவஞானம் வேண்டும். ஆதலின் இறைவனருளிய வேதம் முதலிய நூல்களும் பயன்றரு வனவாமென்க. 36-40. வெய்யாய் தனியாய் -ஞாயிற்றின் வெம்மையையும் திங்க ளின் தண்மையையும் உடையவனே, இயமானன் ஆம் விமலா -உயிரை உருவாகக்கொண்டு உண்ணின்று இயக்குதவின் உயிராக விளங்கும் தூயோனே. பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி - பொய் யான நினைவு சொல் செயல்கலெல்லாம் விட்டு நீங்கும்படி குருவடிவில் வந்து அருள் செய்து, மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய் சுடரே - மெய் அறிவாகி விளங்குகின்ற உண்மை ஒளியே. எ ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே - எவ்வகையான அறிவும் இல்லாதேனுக்கு இன்பத்தைத் தரு கின்ற பெருமானே. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே- அறியாமையாகிய இருளை நீங்கச் செய்யும் நல்ல அறிவுருவானவனே. இறைவன் அட்டமூர்த்தங்களுள் ஞாயிற்றின் உருவாக நின்று வெம் மையைத் தந்து உலகினை உய்வித்தலின் 'மெய்யாய் என்றும், திங்களின் உருவாய் நின்று தண்மையினைத் தந்து உலகினை உய்வித்தலின் 'தணியாய்' என்றும் கூறினார். "தண்ணியான் வெய்யோன்" (தே. ஞான01-26) வெய் யாய் தணியாய் அணியாய் போற்றி" (தே. திருநாவு 271:3) என வருவன காண்க. இங்கு வெம்மையும் தண்மையும் இறைவனையும் அவன் அருட் சத்தியையும் குறிப்பனவாகும். விந்து வெப்பமுடையது; நாதம் தட்ப முடையது. விந்து நாதங்கள் சிவனையும் சத்தியையும் குறிக்கும். ஆண்மை யும் பெண்மையுமாகிய ஈரியல்புகளையுடைய இறைவன் எல்லாவுயிர்களி டத்தும் உயிர்க்குயிராய் நின்று அவற்றினை ஆண் பெண்ணாகப் படைத்து
திருவாசக ஆராய்ச்சியுரை எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் - நிலையியற்பொருள் இயங்கியற் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே யான் எல்லாப் பிறவி களிலும் பிறந்து இளைப்படைந்தேன் . ' ' ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப்பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை அம்மானை 14 என அடிகள் பிறாண்டும் கூறியிருத்தலுங் காண்க . 32-5 . மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உண்மையாகவே உன் அழகிய திருவடிகளைக் கண்டு இப்பொழுது அப் பிறவித் துன்பங்களினின்றும் விடுபட்டேன் ; உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா - அடியேன் உய்யும் பொருட்டு என் மனத்துள் ' ஓம் ' என்னும் பிரணவவுருவாய் நின்ற மெய்யனே . விமலா - மாசற்ற வனே . விடைப்பாகா - தருமவடிவாகிய ஏறு ஊர்ந்தவனே வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - வேதங்கள் ஐயனே என்று அழைக்கவும் அவற்றிற்கெல்லாம் எட்டாது மேல் உயர்ந்தும் கீழ் சூழ்ந்தும் புடைபரந்தும் அமைந்த நுட்பமான பொருளாய் உள்ளவனே . மெய்யே கண்டு எனக்கூட்டிக் காட்சியளவையானே நேரில் கண்டு எனவுரைக்க . திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை . உருநா மறியவோ ரந்தணனாய் ஆண்டுகொண்டான் ( தெள்ளேணம் 1 ) ' கண்ணார் நுதலோய் கழவிணைகள் கண்டேன் கண்கள் களிகூர ( குழைத் 9 ) நீவாவென்னக் கண்ணார உய்ந்தவா றன்றேயுன் சுழல்கண்டே ( திரு வேசறவு 2 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . பொன்னடி - அழகிய அடி . பொன் -அழகு பு . வெ.மா .128 உரை . பொன்னடி என்பதற்கு பொன்போலும் அருமையும் தூய்மையும் ஒளியு முடைய திருவடியெனீனுமாம் . எவ்வாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்றமையால் வீடுற்றேன் என்றது எல்லாப் பிறப்புகளின் துன்பங்களி னின்றும் விடுதலையடைதலைக் குறித்தது . உய்ய நின்ற என இயையும் . ஓங்காரம் - பிரணவம் . அது அகர உகர மகரமாகிய பகுப்பினையும் விந்து நாதமாகிய முதலினையு முடையது . அகர உகர மகர விந்து நாதமாகிய ஐந்தும் இறைவனது ஐந்தொழிலைக் குறிக் கும் . அதனால் ஓம் என்பது இறைவனுக்குரிய சிறந்ததொரு மறைமொழி யாகும் . அம்மறைமொழி வடினாய் உயிர்க்குயிராய் நின்று இறைவன் உயிர்களை இயக்குதலின் ' என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற என்றார் . அங்ஙனம் இறைவன் உள்ளத்துள் ஓங்காரமாய் நிற்பினும் உண்மை இயல்பில் திரிவடையானாதலின் மெய்யா ' என்றார் . விமலன் - மாசற்ற வன் . மலம் - மாசு ; அழுக்கு . வி . இன்மைப்பொருளுணர்த்தும் உபசர்க்கம் . வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே என்பத னாள் நான்மறைகளால் இறைவன் இயல்புமுழுவதும் அறியப்படாமையின் சிவபுராணம் 13 பொதுவகையால் இறைவனை அழைக்கவும் அவற்றிற்கு எட்டாது மேலு யர்ந்தும் கீழ் சூழ்ந்தும் புடைபட விரிந்தும் நுண்ணியனாய் உள்ளான் என் பதும் அவன் அருள் செய்யும் சிவஞான மொன் றானேயே அறியப்படுபவனா வான் என்பதும் கொள்ளப்படும் . வேதக்காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரிந்த போதக் காட்சிக்கும் காணலன் ' ' எனக் கந்தபுராணத்தும் . சூரன் அமைச் 127 ' ' அல்லையீ தல்லயீதென மறைகளு மன்மைச் சொல்லினாற் றுதித்திளைக்குமிச் சுந்தரன் * கடவுள் 29 . எனப் பரஞ்சோதி திருவிளையாடற்புராணத்தும் வருவன காண்க . இறைவனருளிய வேதங்கள் இறைவன் இயல்பினை முழுவதும் உரைக்க மாட்டாமையின் அவற்றற்பெறும் பயன் என்னையெனின் ? இறைவனுக் குரிய பொதுவியல்பு சிறப்பியல்பு என்னும் சரியல்புகளுள் பொதுவியல்பு வேதமுதலிய நூல்களாற் கூறப்படும் . சிறப்பியல்பும் நூல்களாற் கூறப் படினும் அனுபவவுணர்வு உண்டாதற்கு அவனருளாற் பெறும் சிவஞானம் வேண்டும் . ஆதலின் இறைவனருளிய வேதம் முதலிய நூல்களும் பயன்றரு வனவாமென்க . 36-40 . வெய்யாய் தனியாய் -ஞாயிற்றின் வெம்மையையும் திங்க ளின் தண்மையையும் உடையவனே இயமானன் ஆம் விமலா -உயிரை உருவாகக்கொண்டு உண்ணின்று இயக்குதவின் உயிராக விளங்கும் தூயோனே . பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி - பொய் யான நினைவு சொல் செயல்கலெல்லாம் விட்டு நீங்கும்படி குருவடிவில் வந்து அருள் செய்து மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய் சுடரே - மெய் அறிவாகி விளங்குகின்ற உண்மை ஒளியே . ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே - எவ்வகையான அறிவும் இல்லாதேனுக்கு இன்பத்தைத் தரு கின்ற பெருமானே . அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே அறியாமையாகிய இருளை நீங்கச் செய்யும் நல்ல அறிவுருவானவனே . இறைவன் அட்டமூர்த்தங்களுள் ஞாயிற்றின் உருவாக நின்று வெம் மையைத் தந்து உலகினை உய்வித்தலின் ' மெய்யாய் என்றும் திங்களின் உருவாய் நின்று தண்மையினைத் தந்து உலகினை உய்வித்தலின் ' தணியாய் ' என்றும் கூறினார் . தண்ணியான் வெய்யோன் ( தே . ஞான01-26 ) வெய் யாய் தணியாய் அணியாய் போற்றி ( தே . திருநாவு 271 : 3 ) என வருவன காண்க . இங்கு வெம்மையும் தண்மையும் இறைவனையும் அவன் அருட் சத்தியையும் குறிப்பனவாகும் . விந்து வெப்பமுடையது ; நாதம் தட்ப முடையது . விந்து நாதங்கள் சிவனையும் சத்தியையும் குறிக்கும் . ஆண்மை யும் பெண்மையுமாகிய ஈரியல்புகளையுடைய இறைவன் எல்லாவுயிர்களி டத்தும் உயிர்க்குயிராய் நின்று அவற்றினை ஆண் பெண்ணாகப் படைத்து