திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

374 திருவாசக ஆராய்ச்சியுரை பனே - தொண்டர்களுக்குத் தளர்ந்த இடத்துப் புதைபொருள் போல உதவுபவனே, எங்கள் மன்னனே - எங்கள் அரசனே, எனை வையகத்து நைய வைப்பதோ சொலாய்-அடியவனாகிய என்னைப் பொய்யாகிய உலக வாழ்வில் வருந்தும்படி வைப்பதுதானோ நின் திருவுள்ளக் கருத்து? கறி யருள்க, எனக்கு அப்பனே, அமுதனே,ஆனந்தனே, உள்ளம் உருகும் வண் ணம் இனிமையால் வாயூறுதற்கேதுவாகிய தேனை ஒப்பவனே உனக் குரிய மெய்யன்பர்களைப் போல யானும் உரிமையுடையேனாகி நினது திரு வருட் பெருக்கைப் பருகும் வண்ணம் ஞானாசாரியனாய்க் காட்சி தந்து நின்ற ஒப்பற்ற தூயோனே, சுடர்முடியனே. துணையாளனே, தொழும் பாளர் எய்த்தவிடத்துப் புதைபொருள் போல் உதவுபவனே, எங்கள் மன்னனே, எனை வையகத்து வருந்தும்படி வைப்பதுதானே நினது திரு வுள்ளக் கருத்து? கூறியருள்க என்பதாம். அமுதனே என்றார் கழிபெருஞ்சுவையோ டுறுதிபயத்தலுடைமை யான். ஆனந்தனே என்றார். இறைவன் என்றும் அழியாப் பேரின்ப முடையனாயிருத்தலின், •அத்தனா னந்தன்” (திருவெம் 3) ''அத்தர் ஆனந்தரால் அன்னே யென்னும் " (அன்னை 3 "அன்பன் அமுதளித் தூறு மானந்தன்" (குயிற்)ே என அடிகள் பிறண்டும் இறைவனை ஆனந்தன் என்றருளிச் செய்தமை காண்க. அள்ளுறுதல் வாயூறுதல். "அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுலாய்" (திருவெம் 3) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க. அகநெகவும் வாயூறவும் செய்யும் தேன் எனத் தேனின் விசேடம் கூறியவாறு. தேன் ஓப்பன் -தேன் போன்றவன். "கோற்றே னெனக் கென்கோ குரைகடல் வாயமு தென்கோ" (உயிருண்ணிப் 8) என அடிகள் அருளியவாறுங் காண்க. அன்பரில் என்புரி இல் ஒப்புப்பொருட்டு, உனைப் பருக - உன் திருவருட் பெருக்கைப் பருக. " என்பொலா மணியை யேத்தி யினி தருள்பருக மாட்டா" (அச்சப் 3) என வருதல் காண்க. பருகற் கினிய பரங் கருணைத் தடங்கடலை" (தெள் 15) "சிவன் கருணைத் தேன் பருகி'' (குலாப் 5) என்பனவும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலன. நின்றது - ஞானாசாரியனாகக் காட்சி கொடுத்து நின்றது. துப்பன் - தூயோன். துப்பு - தூய்மை. (பிங் 10:626) இனி "தப்பனே தூயாய் தூய வெண் ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத் தொப்பனே " (அருட் () என துப்பனே என்பதின் வேருகத் தூயாய் என்றலின் தப்பனே என்பதற் குப் பவளம் போன்றவனே எனினுமமையும். 'பவளச் செவ்வி யாயின வீசன்' (282) எனத் திருக்கோவையாரிலும் பெருங்கடற் பவளம் போல் வண்ணராகிலும் " (ஞான 242-5) எனத் தேவாரத்தும் வரு வன ஈண்டறியற்பாலன. முடி - சடையானியன்ற முடி. “பைவா யரவு மறியும் மழுவும் பயின் மலர்க்கை. மொய்வார் சடைமுடி முன்னவள்" (170) எனத் திருச்சதகம் 375 . திருக்கோலையாரில் வருதலும். சடைமுடி என்பதற்குச் "சடைகளா னியன் ற முடி எனப் பேராசிரியர் உரைத்தமையும் காண்க. அது ஒளி மின்னங் கல யுடைத்தாகலின் இறைவனைச் சுடர் முடியனே என்றார். குஞ் "ஒளி யவ் (திருக்கோவை 172) என்பதும் சடைமுடியேரன் + விடத்து விரியுஞ் சடையானியன்ற முடியையுடையவன்; மின்னங் கலரு மென்பதற்கு மின்னவ் விடத்தலர்ந்தாற் போலுஞ் சடையெனினு மமை யும்" என்னும் அப்பகுதி (பேர்) உரையும் ஈண்டறியற்பாலன.. இறை வன் சடை செஞ்சடையாதலின் சுடர்தல் என்பதற்குச் செவ்வொளி விளங்குதல் எனவுரைக்க. 'சடையே நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே." (11-ந் திருமுறை) என்னும் இளம் பெருமானடிகள் திருவாக்கு இங்கு கருதத்தக்கது. துணையானன் துணையாகவுள்ளவன். "தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற தாயானை". பல்லுயிர்க்கும் தணையானானை ' (நாவு 208:4:276:3) எனத் தவாரத்தும் வருவன காண்க. தொழும்பாளர்- தொழும்பர். அடியவர். அடியவர்க்கு எய்த்த இடத்துப் புதைபொருள் போல உதவுதலின் "தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பே" என்றார். "எனக் கெய்ப்பினில் வைப்பே' (நீத் 30) என அடிகள் பிறிதோரிடத் தும் அருளியமை காண்க. "பத்தரு கெய்ப்பினில் வைப்பென வுதவும் முத்தித்தாள " அடியவர் எய்ப்பினில் வைப்பாகக் கருதி வைத்த நிதியே' திருவிடைமும்?:41-2 கோயில் திருப்பண்ணி 33, எனப் பதினொராந் திருமுறையில் வருதலுங் காண்க. இதன் கண், பலபட விளித்து 'எனை வையத்து நைய வைப்பதோ சொலாய்" என்பதனால் என்னை வையகத்து வைப்பதை நீட்டியாது விரைய உய்யக் கொண்டருள வேண்டும் என்னும் குறிப்புப் பெறப்படு தலின் ஆனந்தாதீத விருப்பம் என்னும் பதிகப் பொருள் போந்தவாறு காண்க. 103. மன்ன வெம்பிரான் வருக வென்னெனை * 08. மாலு நான்முகத் தொருவன் யாரினும் முன்ன எம்பிரான் வருக வென்னெனை முழுதும் யாவையும் இறுதி யுற்றநாட் பின்ன எம்பிரான் வருக என்னெனைப் பெய்சு ழற்கண்அன் பாயென் னாவினாற் பன்ன வெம்பிரான் வருக வென்னெனைப் பாவ நாசநின் சீர்கள் பாடவே. சுருடரு செஞ்சடை வெண்சுட ரம்பலவன் திருக்கோவை 338.
374 திருவாசக ஆராய்ச்சியுரை பனே - தொண்டர்களுக்குத் தளர்ந்த இடத்துப் புதைபொருள் போல உதவுபவனே எங்கள் மன்னனே - எங்கள் அரசனே எனை வையகத்து நைய வைப்பதோ சொலாய் - அடியவனாகிய என்னைப் பொய்யாகிய உலக வாழ்வில் வருந்தும்படி வைப்பதுதானோ நின் திருவுள்ளக் கருத்து ? கறி யருள்க எனக்கு அப்பனே அமுதனே ஆனந்தனே உள்ளம் உருகும் வண் ணம் இனிமையால் வாயூறுதற்கேதுவாகிய தேனை ஒப்பவனே உனக் குரிய மெய்யன்பர்களைப் போல யானும் உரிமையுடையேனாகி நினது திரு வருட் பெருக்கைப் பருகும் வண்ணம் ஞானாசாரியனாய்க் காட்சி தந்து நின்ற ஒப்பற்ற தூயோனே சுடர்முடியனே . துணையாளனே தொழும் பாளர் எய்த்தவிடத்துப் புதைபொருள் போல் உதவுபவனே எங்கள் மன்னனே எனை வையகத்து வருந்தும்படி வைப்பதுதானே நினது திரு வுள்ளக் கருத்து ? கூறியருள்க என்பதாம் . அமுதனே என்றார் கழிபெருஞ்சுவையோ டுறுதிபயத்தலுடைமை யான் . ஆனந்தனே என்றார் . இறைவன் என்றும் அழியாப் பேரின்ப முடையனாயிருத்தலின் அத்தனா னந்தன் ( திருவெம் 3 ) ' ' அத்தர் ஆனந்தரால் அன்னே யென்னும் ( அன்னை 3 அன்பன் அமுதளித் தூறு மானந்தன் ( குயிற் )ே என அடிகள் பிறண்டும் இறைவனை ஆனந்தன் என்றருளிச் செய்தமை காண்க . அள்ளுறுதல் வாயூறுதல் . அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுலாய் ( திருவெம் 3 ) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க . அகநெகவும் வாயூறவும் செய்யும் தேன் எனத் தேனின் விசேடம் கூறியவாறு . தேன் ஓப்பன் -தேன் போன்றவன் . கோற்றே னெனக் கென்கோ குரைகடல் வாயமு தென்கோ ( உயிருண்ணிப் 8 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . அன்பரில் என்புரி இல் ஒப்புப்பொருட்டு உனைப் பருக - உன் திருவருட் பெருக்கைப் பருக . என்பொலா மணியை யேத்தி யினி தருள்பருக மாட்டா ( அச்சப் 3 ) என வருதல் காண்க . பருகற் கினிய பரங் கருணைத் தடங்கடலை ( தெள் 15 ) சிவன் கருணைத் தேன் பருகி ' ' ( குலாப் 5 ) என்பனவும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலன . நின்றது - ஞானாசாரியனாகக் காட்சி கொடுத்து நின்றது . துப்பன் - தூயோன் . துப்பு - தூய்மை . ( பிங் 10 : 626 ) இனி தப்பனே தூயாய் தூய வெண் ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத் தொப்பனே ( அருட் ( ) என துப்பனே என்பதின் வேருகத் தூயாய் என்றலின் தப்பனே என்பதற் குப் பவளம் போன்றவனே எனினுமமையும் . ' பவளச் செவ்வி யாயின வீசன் ' ( 282 ) எனத் திருக்கோவையாரிலும் பெருங்கடற் பவளம் போல் வண்ணராகிலும் ( ஞான 242-5 ) எனத் தேவாரத்தும் வரு வன ஈண்டறியற்பாலன . முடி - சடையானியன்ற முடி . பைவா யரவு மறியும் மழுவும் பயின் மலர்க்கை . மொய்வார் சடைமுடி முன்னவள் ( 170 ) எனத் திருச்சதகம் 375 . திருக்கோலையாரில் வருதலும் . சடைமுடி என்பதற்குச் சடைகளா னியன் முடி எனப் பேராசிரியர் உரைத்தமையும் காண்க . அது ஒளி மின்னங் கல யுடைத்தாகலின் இறைவனைச் சுடர் முடியனே என்றார் . குஞ் ஒளி யவ் ( திருக்கோவை 172 ) என்பதும் சடைமுடியேரன் + விடத்து விரியுஞ் சடையானியன்ற முடியையுடையவன் ; மின்னங் கலரு மென்பதற்கு மின்னவ் விடத்தலர்ந்தாற் போலுஞ் சடையெனினு மமை யும் என்னும் அப்பகுதி ( பேர் ) உரையும் ஈண்டறியற்பாலன .. இறை வன் சடை செஞ்சடையாதலின் சுடர்தல் என்பதற்குச் செவ்வொளி விளங்குதல் எனவுரைக்க . ' சடையே நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே . ( 11 - ந் திருமுறை ) என்னும் இளம் பெருமானடிகள் திருவாக்கு இங்கு கருதத்தக்கது . துணையானன் துணையாகவுள்ளவன் . தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற தாயானை . பல்லுயிர்க்கும் தணையானானை ' ( நாவு 208 : 4 : 276 : 3 ) எனத் தவாரத்தும் வருவன காண்க . தொழும்பாளர் தொழும்பர் . அடியவர் . அடியவர்க்கு எய்த்த இடத்துப் புதைபொருள் போல உதவுதலின் தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பே என்றார் . எனக் கெய்ப்பினில் வைப்பே ' ( நீத் 30 ) என அடிகள் பிறிதோரிடத் தும் அருளியமை காண்க . பத்தரு கெய்ப்பினில் வைப்பென வுதவும் முத்தித்தாள அடியவர் எய்ப்பினில் வைப்பாகக் கருதி வைத்த நிதியே ' திருவிடைமும் ? : 41-2 கோயில் திருப்பண்ணி 33 எனப் பதினொராந் திருமுறையில் வருதலுங் காண்க . இதன் கண் பலபட விளித்து ' எனை வையத்து நைய வைப்பதோ சொலாய் என்பதனால் என்னை வையகத்து வைப்பதை நீட்டியாது விரைய உய்யக் கொண்டருள வேண்டும் என்னும் குறிப்புப் பெறப்படு தலின் ஆனந்தாதீத விருப்பம் என்னும் பதிகப் பொருள் போந்தவாறு காண்க . 103. மன்ன வெம்பிரான் வருக வென்னெனை * 08 . மாலு நான்முகத் தொருவன் யாரினும் முன்ன எம்பிரான் வருக வென்னெனை முழுதும் யாவையும் இறுதி யுற்றநாட் பின்ன எம்பிரான் வருக என்னெனைப் பெய்சு ழற்கண்அன் பாயென் னாவினாற் பன்ன வெம்பிரான் வருக வென்னெனைப் பாவ நாசநின் சீர்கள் பாடவே . சுருடரு செஞ்சடை வெண்சுட ரம்பலவன் திருக்கோவை 338 .