திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

380 திருவாசக ஆராய்ச்சியுரை "சிற்றம்பலத் தாடுமெங் கூத்தப்பிரான்" (204) "அம்பலத்துக் குளிக்கும் பிரான்" (229) "சிற்றம்பலத்து நடம்பயில் வோன்'' (268) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க. கழல் - கழலணிந்த திருவடி.'"செயன் மன்னுஞ் சீர்க் கழற் சிற்றம்பலவர் " 395 எனத் திருக்கோவையாரில் வருதலுங் காண்க. கழல்போது - திருவடிமலர். "தில்லையோன் அடிப்போது" (கோவை 181) என வருதலுங் காண்க. "வீடு தந்தருளு" எனப் பின்னர் வருதலால் "அம்பலத்தாடு நின் கழற்போது கூடவேண்டும்" என்பதற்குத் தில்லைச்சிற்றம்பலத்தின் கண் ஆனந்தத் தாண்டவஞ் செய்யும் நின் திருவடி மலர்களைச் சார்ந்து தரி சிக்க அருள்செய்ய வேண்டும் எனப் பொருளுரைக்கப்பட்டது. புழுக்கூடு - புழுக் கூடாகிய உடம்பு, ''ஊனார் புழுக் கூடு", "முடை யார் புழுக் கூடு (சத 59,60) "புழுக்கணுடைப் புன்குரம்பை (அடைக் 1) ஈமுழுப் புழுக் குரம்பை " (பிடித் 2) "புழுவினாற் பொதிந் திடு குரம்பை" (சென்னிப் 8) எனப் பிருண்டு அருளியவாறுங் காண்க. இறைவன் திருவடிமலரை அடைதற்கு இவ்வுடம்பு தடையாக இருத்த லின் 'இப்புழுக்கூடு நீக்கு" என்றார். வீட வேண்டும் - நீக்க வேண்டும் என்றது நீங்க அருள்செய்ய வேண்டும் என்றவாறு. நீக்கு அருளு என் னும் வினைமுதல்கள் நீக்குவாய் அருளுவாய் என்னும் முன்னிலை யேவ லொருமை வினைமுற்றுப் பொருளில் வந்தன. அருளு என்பதில் உ, சாரியை. மெய்யர் என்றது மெய்ம்மையையுடையவர்கள் எனப் பொருள்படு மாயினும் நின் மெய்யர் என்றதனால் மெய்யன்புடைய அடியவர்களை உணர்த்தியது. மெய்யர்க்கு என நான்காவது விரிக்க. மெய்யனே என் பதற்கு மெய்பொருளாக நின்று அருள் செய்பவனே என்பது கருத்தா கக் கொள்க. " மெய்யர் மெய்யை " (பொற்சுண் 12) " அடியவர் படு துயர் களைவதோர் வாய்மையர்" (ஞான 344: 2) மெய்யர்க்கு மெய்ப் பொருளான விமலனை"" "மெய்யர் மெய்ப்பொருளோ" (சுந் 45:11; 52:2) என வருவன காண்க. இதன்கண், "இப்புழுக் கூடு நீக்கு", "வீடு தந்தருளு'' என்பவற் றால் வீட்டின்பமாகிய ஆனந்தாதீதத்தை விரும்புதல் புலப்படுதலின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க, 100. -
380 திருவாசக ஆராய்ச்சியுரை சிற்றம்பலத் தாடுமெங் கூத்தப்பிரான் ( 204 ) அம்பலத்துக் குளிக்கும் பிரான் ( 229 ) சிற்றம்பலத்து நடம்பயில் வோன் ' ' ( 268 ) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க . கழல் - கழலணிந்த திருவடி . ' செயன் மன்னுஞ் சீர்க் கழற் சிற்றம்பலவர் 395 எனத் திருக்கோவையாரில் வருதலுங் காண்க . கழல்போது - திருவடிமலர் . தில்லையோன் அடிப்போது ( கோவை 181 ) என வருதலுங் காண்க . வீடு தந்தருளு எனப் பின்னர் வருதலால் அம்பலத்தாடு நின் கழற்போது கூடவேண்டும் என்பதற்குத் தில்லைச்சிற்றம்பலத்தின் கண் ஆனந்தத் தாண்டவஞ் செய்யும் நின் திருவடி மலர்களைச் சார்ந்து தரி சிக்க அருள்செய்ய வேண்டும் எனப் பொருளுரைக்கப்பட்டது . புழுக்கூடு - புழுக் கூடாகிய உடம்பு ' ' ஊனார் புழுக் கூடு முடை யார் புழுக் கூடு ( சத 59 ) புழுக்கணுடைப் புன்குரம்பை ( அடைக் 1 ) ஈமுழுப் புழுக் குரம்பை ( பிடித் 2 ) புழுவினாற் பொதிந் திடு குரம்பை ( சென்னிப் 8 ) எனப் பிருண்டு அருளியவாறுங் காண்க . இறைவன் திருவடிமலரை அடைதற்கு இவ்வுடம்பு தடையாக இருத்த லின் ' இப்புழுக்கூடு நீக்கு என்றார் . வீட வேண்டும் - நீக்க வேண்டும் என்றது நீங்க அருள்செய்ய வேண்டும் என்றவாறு . நீக்கு அருளு என் னும் வினைமுதல்கள் நீக்குவாய் அருளுவாய் என்னும் முன்னிலை யேவ லொருமை வினைமுற்றுப் பொருளில் வந்தன . அருளு என்பதில் சாரியை . மெய்யர் என்றது மெய்ம்மையையுடையவர்கள் எனப் பொருள்படு மாயினும் நின் மெய்யர் என்றதனால் மெய்யன்புடைய அடியவர்களை உணர்த்தியது . மெய்யர்க்கு என நான்காவது விரிக்க . மெய்யனே என் பதற்கு மெய்பொருளாக நின்று அருள் செய்பவனே என்பது கருத்தா கக் கொள்க . மெய்யர் மெய்யை ( பொற்சுண் 12 ) அடியவர் படு துயர் களைவதோர் வாய்மையர் ( ஞான 344 : 2 ) மெய்யர்க்கு மெய்ப் பொருளான விமலனை மெய்யர் மெய்ப்பொருளோ ( சுந் 45:11 ; 52 : 2 ) என வருவன காண்க . இதன்கண் இப்புழுக் கூடு நீக்கு வீடு தந்தருளு ' ' என்பவற் றால் வீட்டின்பமாகிய ஆனந்தாதீதத்தை விரும்புதல் புலப்படுதலின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க 100 . -