திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

386 திருவாசக ஆராய்ச்சியுரை நின் கருணையினாலேயாம் என்பது அருத்தாபத்தியாற் பெறப்படும். "கடை யவனேனைக் கருணையினாற் கலந்தாண்டு கொண்ட விடையவனே'' (நீத் 1) என அடிகள் அருளியவாறு காண்க. இதன் கண், கொங்கையர் கொவ்வைச் செவ்வாய் விள்ளேன் எனி னும், அதனை விடுதி கண்டாய் என்பதனால் உலக வாழ்வில் பற்றுடையே னாயினும் நீக்கி என்னைக் கைவிடாது காத்தல் வேண்டும் என்பது பெறப் படுதலீன் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டும் என் பதும் பெறப்பட்டவாறு காண்க. 2. 107. காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவா குருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. உத்தரகோசமங்கைக்கு ப-ரை : விளங்கும் திருவாரூர் உறைவாய்-வீராட்புருடனுக்கு இதய கமலமாக விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகே சனே, மன்னும் அரசே - எக்காலத்தும் நிலை பெறும் திருவுத்தர கோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே. வார் உறு பூண் முலையாள் பங்க - கச்சுப் பொருந்திய அணிகலங்கள் அமைந்த தனங் களையுடைய உமையம்மையை ஒரு கூற்றிலுடையவனே, என்னை வளர்ப் பவனே - என்னை வளர்ப்பவனே. கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற் றங்கரை மரமாய் வேர் உறுவேனை - கருமை பொருந்திய கண்களையுடைய மகளிரது ஐம்புலவின் பங்களை விரும்பும் காமமாகிய ஆற்றங்கரைக்கணுள்ள மரம் போலாக மெய்யுணர்வாகிய வேர் ஆற்று நீரால் அளிக்கப்பட்டு பிற வித் துன்பமாகிய வெள்ளத்தில் வீழக்கடவேனை, வீடுதி கண்டாய்-கை விடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். து இ திருவாரூர் உறைவாய், உத்தரகோச மங்கைக்கு அரசே, பூண் முலை யாள் பங்க, என்னை வளர்ப்பவனே,கருமை பொருந்திய கண்களையுடைய மகளிரது ஐம்புல இன்பங்களை விரும்பும் காமமாகிய ஆற்றங்கரைக் கணுள்ள மரம் போலாய் வேருறுவேனைக் கைவிடுகின் றனையோ? கைவீடா தொழிய வேண்டும் என்பதாம். காருறுகண் - கருமை பொருந்திய கண். கருமை கண்ணிற்கு இலக் கணமாதல் "ஈசற் கியான் வைத்த அன்பினகன்று அவன் வாங்கிய என் பாசத்திற் காரென்று அவன் தில்லையின் ஒளிபோன்று அவன் தோள் பூசத்திரு நீறென வெளுத்து ஆங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தையிற் பெருநீளம் பெருங்கண்களே " 427 (109 கோவை) எனவும், நீத்தல் விண்ணப்பம் 387 "கண்ணிற் கியல்பு கசடறக் கிளப்பின் வெண்மை கருமை செம்மை யகல் நீள் மொளியென நிகழ்த்துவர் புலவர்'" (ஷை செய்யுள் உரைமேற்) எனவும் வருவனவற்றாலுமறியப்படும். காருறுகண் என்பதற்குக் கரிய மைதீட்டிய கண் எனினுமாம். அழகினையுடைய மகளிர் என்பார் அவ் வழகினைக் கண்மேலிட்டுக் "காருறு கண்ணியர்" என்றார். அழகினை நுதன் மேலிட்டு 'நன்னுதல் விறலியர் " (பதிற் 47) எனப் பிறர் கூறி யிருத்தலுங் காண்க. கண்ணியரது என ஆறாவது விரிக்க. ஐம்புலன் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலவின்பங்கள், அவ்வின் பங்களை விரும்புங் காமத்தினை "ஐம்புலன்" என உபசரித்தார். மரமாய் வேருறுவேனை என்றது மரம் போலாக மெய்யுணர்வாகிய வேர் அரிக்கப்பட்டு பிறவித் துன்பமாகிய வெள்ளத்தில் வீழக்கடவேனை என்ற ஆற்றங்கரை மரமாய் வேருறுவேனை என்றதன் ஆற்றலால் மெய் யுணர்வாகிய வேர் காமவெள்ளமாகிய ஆற்று நீரால் அலைக்கப்பட்டுப் பிறவித் துன்பமாகிய வெள்ளத்தில் வீழக்கடவேனை எனப் பொருள் உரைக்கப்பட்டது. வாறு காமத்தை ஆறாகவும் தம்மை ஆற்றங்கரைக்கணுள்ள மரமாகவும் மெய்யுணர்வை அம்மரத்தின் வேராகவும் தாம் காமத்தினால் பிறவித் துன்பத்தில் வீழ்ந்து வருந்துதலை அவ்வேர் ஆற்று நீரால் அலைக்கப்பட்டு அம்மரம் ஆற்று வெள்ளத்தில் வீழ்தலாகவும் உருவகஞ் செய்து "ஐம் புலன் ஆற்றங்கரை மரமாய் வேருதுவேனை' என்றார். விளங்குந் திருவாரூர் என்றது வீராட்புருடனுக்கு இதயகமலமாக விளங்கும் திருவாரூர் என அதன் விளக்கச் சிறப்பு விரிக்கப்பட்டது. "திருவாரூர் உறைவாய்" எனக் தியாகேசனையும்." உத்தர கோச மங் கைக்கு அரசே" என அரசனையும், "முலையாள் பங்க" என அம்மை அப்பனையும் விளித்தது. யான் வேண்டும் குறைகளை ஈந்து பாதுகாத்து அம்மை யப்பனுாய் என்னை வளரிக்க வேண்டும் எனத் தமது குறைகளை இவ்விளிகள் மூலம் விண்ணப்பித்துக் கொண்டதாகும். 19 இதன் கண் ''ஐம்புல னாற்றங்கரை மரமாய் வேருறுவேனை விடுதி கண்டாய்" என்பதனால் பிரபஞ்ச வைராக்கியம் என்னும் பதிக நுத லிய பொருளும்,தம்மைக் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் பெறப் பட்டவாறு காண்க. 3. 108. வளர்சின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவு நீங்கியிப்பால் மிளிர்கின்ற வென்னை விடுதிகண் டாய்வெண் மதிக்கொழுந்தொன் ஞெ ளிர்கின்ற நீண்முடி யுத்தர கோசமங் கைக்கரசே தெளிகின்ற பொன்னுமின் னும்அன்ன தோற்றச் செழுஞ்சுடரே.
386 திருவாசக ஆராய்ச்சியுரை நின் கருணையினாலேயாம் என்பது அருத்தாபத்தியாற் பெறப்படும் . கடை யவனேனைக் கருணையினாற் கலந்தாண்டு கொண்ட விடையவனே ' ' ( நீத் 1 ) என அடிகள் அருளியவாறு காண்க . இதன் கண் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய் விள்ளேன் எனி னும் அதனை விடுதி கண்டாய் என்பதனால் உலக வாழ்வில் பற்றுடையே னாயினும் நீக்கி என்னைக் கைவிடாது காத்தல் வேண்டும் என்பது பெறப் படுதலீன் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டும் என் பதும் பெறப்பட்டவாறு காண்க . 2 . 107. காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவா குருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே . உத்தரகோசமங்கைக்கு - ரை : விளங்கும் திருவாரூர் உறைவாய் - வீராட்புருடனுக்கு இதய கமலமாக விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகே சனே மன்னும் அரசே - எக்காலத்தும் நிலை பெறும் திருவுத்தர கோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே . வார் உறு பூண் முலையாள் பங்க - கச்சுப் பொருந்திய அணிகலங்கள் அமைந்த தனங் களையுடைய உமையம்மையை ஒரு கூற்றிலுடையவனே என்னை வளர்ப் பவனே - என்னை வளர்ப்பவனே . கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற் றங்கரை மரமாய் வேர் உறுவேனை - கருமை பொருந்திய கண்களையுடைய மகளிரது ஐம்புலவின் பங்களை விரும்பும் காமமாகிய ஆற்றங்கரைக்கணுள்ள மரம் போலாக மெய்யுணர்வாகிய வேர் ஆற்று நீரால் அளிக்கப்பட்டு பிற வித் துன்பமாகிய வெள்ளத்தில் வீழக்கடவேனை வீடுதி கண்டாய் - கை விடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . து திருவாரூர் உறைவாய் உத்தரகோச மங்கைக்கு அரசே பூண் முலை யாள் பங்க என்னை வளர்ப்பவனே கருமை பொருந்திய கண்களையுடைய மகளிரது ஐம்புல இன்பங்களை விரும்பும் காமமாகிய ஆற்றங்கரைக் கணுள்ள மரம் போலாய் வேருறுவேனைக் கைவிடுகின் றனையோ ? கைவீடா தொழிய வேண்டும் என்பதாம் . காருறுகண் - கருமை பொருந்திய கண் . கருமை கண்ணிற்கு இலக் கணமாதல் ஈசற் கியான் வைத்த அன்பினகன்று அவன் வாங்கிய என் பாசத்திற் காரென்று அவன் தில்லையின் ஒளிபோன்று அவன் தோள் பூசத்திரு நீறென வெளுத்து ஆங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தையிற் பெருநீளம் பெருங்கண்களே 427 ( 109 கோவை ) எனவும் நீத்தல் விண்ணப்பம் 387 கண்ணிற் கியல்பு கசடறக் கிளப்பின் வெண்மை கருமை செம்மை யகல் நீள் மொளியென நிகழ்த்துவர் புலவர் ' ( ஷை செய்யுள் உரைமேற் ) எனவும் வருவனவற்றாலுமறியப்படும் . காருறுகண் என்பதற்குக் கரிய மைதீட்டிய கண் எனினுமாம் . அழகினையுடைய மகளிர் என்பார் அவ் வழகினைக் கண்மேலிட்டுக் காருறு கண்ணியர் என்றார் . அழகினை நுதன் மேலிட்டு ' நன்னுதல் விறலியர் ( பதிற் 47 ) எனப் பிறர் கூறி யிருத்தலுங் காண்க . கண்ணியரது என ஆறாவது விரிக்க . ஐம்புலன் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலவின்பங்கள் அவ்வின் பங்களை விரும்புங் காமத்தினை ஐம்புலன் என உபசரித்தார் . மரமாய் வேருறுவேனை என்றது மரம் போலாக மெய்யுணர்வாகிய வேர் அரிக்கப்பட்டு பிறவித் துன்பமாகிய வெள்ளத்தில் வீழக்கடவேனை என்ற ஆற்றங்கரை மரமாய் வேருறுவேனை என்றதன் ஆற்றலால் மெய் யுணர்வாகிய வேர் காமவெள்ளமாகிய ஆற்று நீரால் அலைக்கப்பட்டுப் பிறவித் துன்பமாகிய வெள்ளத்தில் வீழக்கடவேனை எனப் பொருள் உரைக்கப்பட்டது . வாறு காமத்தை ஆறாகவும் தம்மை ஆற்றங்கரைக்கணுள்ள மரமாகவும் மெய்யுணர்வை அம்மரத்தின் வேராகவும் தாம் காமத்தினால் பிறவித் துன்பத்தில் வீழ்ந்து வருந்துதலை அவ்வேர் ஆற்று நீரால் அலைக்கப்பட்டு அம்மரம் ஆற்று வெள்ளத்தில் வீழ்தலாகவும் உருவகஞ் செய்து ஐம் புலன் ஆற்றங்கரை மரமாய் வேருதுவேனை ' என்றார் . விளங்குந் திருவாரூர் என்றது வீராட்புருடனுக்கு இதயகமலமாக விளங்கும் திருவாரூர் என அதன் விளக்கச் சிறப்பு விரிக்கப்பட்டது . திருவாரூர் உறைவாய் எனக் தியாகேசனையும் . உத்தர கோச மங் கைக்கு அரசே என அரசனையும் முலையாள் பங்க என அம்மை அப்பனையும் விளித்தது . யான் வேண்டும் குறைகளை ஈந்து பாதுகாத்து அம்மை யப்பனுாய் என்னை வளரிக்க வேண்டும் எனத் தமது குறைகளை இவ்விளிகள் மூலம் விண்ணப்பித்துக் கொண்டதாகும் . 19 இதன் கண் ' ' ஐம்புல னாற்றங்கரை மரமாய் வேருறுவேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கியம் என்னும் பதிக நுத லிய பொருளும் தம்மைக் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் பெறப் பட்டவாறு காண்க . 3 . 108. வளர்சின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவு நீங்கியிப்பால் மிளிர்கின்ற வென்னை விடுதிகண் டாய்வெண் மதிக்கொழுந்தொன் ஞெ ளிர்கின்ற நீண்முடி யுத்தர கோசமங் கைக்கரசே தெளிகின்ற பொன்னுமின் னும்அன்ன தோற்றச் செழுஞ்சுடரே .