திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

396 திருவாசக ஆராய்ச்சியுரை கொள்ளி - நெருப்புப் பற்றிய விறகு. இருதலைக் கொள்ளி - இருபக்க மும் நெருப்புப்பற்றிய விறகு. உள் எறும்பு - அவ்விறகின் உட்டுளையில் அகப்பட்ட எறும்பு, அவ்வெறும்பு நெருப்பு நெருங்க நெருங்க மிக வருந்துவது போல, நின்னைப் பிரிந்த யான் நின்னை விட்டு அகல அகில் மிக வருந்துவேனாயினேன் என்பார், 'இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த விரிதலையேனை' என்றார். இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பென் உள்ளம்" நாவு 75: 8. எனத் தேவாரத்தும். ''கொள்ளித் தலையின் எறும்பது போலக் குலையுமென்றன் (106) 31 உள்ளத் துயரை ' எனக் கந்தர் அலங்காரத்தும், இடைநிலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி ஒருதலைப் படான் உறவி போன்றமை" 399. என அகநானூற்றினும் வருவனவுங் காண்க. "1 விரிதலை-மயிர் விரிந்த தலை அது இறைவனைப் பிரிந்த வருத்த மிகுதியால் உண்டானதாகும் வியன் - பெருமை. மூவுலகு - மேல் கீழ் நடு உலகு. மூவுலருக்கும் என உம்மை விரிக்க. ஒரு தலைவன் =ஒப்பற்ற தலைவன், பொருதலை மூவிலை வேல்-போர் செய்தற்குரிய மூவிலைவேல். பொரு சூலப்படை " " போர் கொள் குலப்படை (ஞான 100:6; 252:5) எனத் தேவாரத்து வருவன காண்க, மூவிலைவேல் என்றது மூவிலைச் குலத்தினை இதனை இறைவன் ஏந்துதல்; *"மூவிலைச் சூலப் படையமர் கொள்கையி னாரும்" வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீறி மிழளையார்' "மூவிலை வேற் கையானை'' நாவு 305;1. "கொல்லும் முவிலை வேலுடையானை'' சங் 56:3. ''இவையார்ந்த மூவிலைவேல் ஏந்தி போற்றி" ந வு 245: 3. எனவும், வவனேந்துதல் ஞான 205:8, ஞாள 207: 3. * மூவிலைச் சூலம் மழுவின் வேறு என்பது "வெண் மழு மூவிலைச் சூலப் படையமர் கொள்கையி னாரும்'' மூவிலைச் சூலமும் மழு வும் பற்றினார் போலும்" (ஞான 205:9; 980:7) எனத் தேவா ரத்து மழுவின் வேறாகச் சூலம் கூறப்படுதலால் அறியப்படும். நீத்தல் விண்ணப்பம் ""மூவிலைச் சூலம் வலனேந்தி....ஆருரமர்ந்தானே." எனவும் தேவாரத்து வருவனவற்றால் அறியலாம். "மூவிலை யொருதாட் குலமேந்துதல் மூவரும் யானென மொழிந்த வாறே (0) # 397 ஞான 105:1 எனத் திருவொற்றியூர் ஒருபாவொரு பஃதில் வருதலால் மூவிலைச் சூலம் ஏந்துதலின் கருத்து இனி துரைக்கப்படும். வலன் - வலம் என்பதன் போலி, இதன் கண், இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பொத்து நினைப் பிரிந்த விரிதலையேனை வீடுதி கண்டாய் என்பதனால் நின்னைப் பிரிந்து உலக வாழ்க்கையில் வருத்தப்படுகின்ற என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும் எனப் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண் டும் என்பதும் புலப்படுமாறு காண்க. 9. 114. பொலிகின்ற நின்றாள் புகுதப்பெற் குக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற வென்னை விடுதிகண் டாயனி தேர் விளரி ஒலிநின்ற பூம்பொழில் உத்தர கோசமங் கைக்கரசே வலி நின்ற திண்சிலை யாலெரித் தாய்புர மாறுபட்டே. ப-ரை : அளி தேர் விளரி ஒலி நின்ற பூ பொழில்வண்டுகள் தேனுாகிய உணவினைத் தேடுங்கால் பாடும் விளரிப் பண்ணின் ஒலி நிலை பெற்ற பூஞ்சோலையையுடைய, உத்தர கோசமங்கைக்கு அரசே-திரு வுத்தரகோசமங்கையென்னும் தலத்துக்கு அரசனே, புரம் மாறுபட்டு வலிநின்ற திண்சிலையால் எரித்தாய்.முப்புரங்களையும் பகைத்து வலியிலை பெற்ற மேருமலையாகிய வில்லினால் அழலம்பைச் செலுத்தி எரித்தவனே' ஆக்கையைப் போக்கப் பெற்று - நின்னருளால் உடம்பினை நீக்கப்பெற்று, பொலிகின்ற நின் தாள் புகுதப் பெற்று - அதனால் விளங்குகின்ற நின் திருவடிகளை அடையப் பெற்று உய்யுமாறு, மெலிகின்ற என்னை விடுதி கண்டாய்-உய்யுமாறு வருந்துகின்ற என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். உத்தரகோசமங்கைக்கு அரசே, முப்புரங்களையும் மாறுபட்டுத் திண் சிலையால் எரித்தவனே. மின்னருளால் உடம்பினைப் போக்கப்பெற்று அத னால் யின் திருவடிகளை அடையப்பெற்று உய்யுமாறு வருந்துகின்ற என் னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதவ் வேண்டும் என்பதாம். ஆக்கையைப் போக்கப்பெற்று மீன்றாள் புகுகப்பெற்று மெலிகின்ற என மாறிக் கூட்டி, ஆக்கையைப் போக்கப்பெற்று அதனால் நின் தான் புகுதப்பெற்று உய்யுமாறு மெலிகின்ற எனச் சில சொற்கள் வருவித் துரைக்க.
396 திருவாசக ஆராய்ச்சியுரை கொள்ளி - நெருப்புப் பற்றிய விறகு . இருதலைக் கொள்ளி - இருபக்க மும் நெருப்புப்பற்றிய விறகு . உள் எறும்பு - அவ்விறகின் உட்டுளையில் அகப்பட்ட எறும்பு அவ்வெறும்பு நெருப்பு நெருங்க நெருங்க மிக வருந்துவது போல நின்னைப் பிரிந்த யான் நின்னை விட்டு அகல அகில் மிக வருந்துவேனாயினேன் என்பார் ' இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த விரிதலையேனை ' என்றார் . இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பென் உள்ளம் நாவு 75 : 8 . எனத் தேவாரத்தும் . ' ' கொள்ளித் தலையின் எறும்பது போலக் குலையுமென்றன் ( 106 ) 31 உள்ளத் துயரை ' எனக் கந்தர் அலங்காரத்தும் இடைநிலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி ஒருதலைப் படான் உறவி போன்றமை 399 . என அகநானூற்றினும் வருவனவுங் காண்க . 1 விரிதலை - மயிர் விரிந்த தலை அது இறைவனைப் பிரிந்த வருத்த மிகுதியால் உண்டானதாகும் வியன் - பெருமை . மூவுலகு - மேல் கீழ் நடு உலகு . மூவுலருக்கும் என உம்மை விரிக்க . ஒரு தலைவன் = ஒப்பற்ற தலைவன் பொருதலை மூவிலை வேல் - போர் செய்தற்குரிய மூவிலைவேல் . பொரு சூலப்படை போர் கொள் குலப்படை ( ஞான 100 : 6 ; 252 : 5 ) எனத் தேவாரத்து வருவன காண்க மூவிலைவேல் என்றது மூவிலைச் குலத்தினை இதனை இறைவன் ஏந்துதல் ; * மூவிலைச் சூலப் படையமர் கொள்கையி னாரும் வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீறி மிழளையார் ' மூவிலை வேற் கையானை ' ' நாவு 305 ; 1 . கொல்லும் முவிலை வேலுடையானை ' ' சங் 56 : 3 . ' ' இவையார்ந்த மூவிலைவேல் ஏந்தி போற்றி வு 245 : 3 . எனவும் வவனேந்துதல் ஞான 205 : 8 ஞாள 207 : 3 . * மூவிலைச் சூலம் மழுவின் வேறு என்பது வெண் மழு மூவிலைச் சூலப் படையமர் கொள்கையி னாரும் ' ' மூவிலைச் சூலமும் மழு வும் பற்றினார் போலும் ( ஞான 205 : 9 ; 980 : 7 ) எனத் தேவா ரத்து மழுவின் வேறாகச் சூலம் கூறப்படுதலால் அறியப்படும் . நீத்தல் விண்ணப்பம் மூவிலைச் சூலம் வலனேந்தி .... ஆருரமர்ந்தானே . எனவும் தேவாரத்து வருவனவற்றால் அறியலாம் . மூவிலை யொருதாட் குலமேந்துதல் மூவரும் யானென மொழிந்த வாறே ( 0 ) # 397 ஞான 105 : 1 எனத் திருவொற்றியூர் ஒருபாவொரு பஃதில் வருதலால் மூவிலைச் சூலம் ஏந்துதலின் கருத்து இனி துரைக்கப்படும் . வலன் - வலம் என்பதன் போலி இதன் கண் இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பொத்து நினைப் பிரிந்த விரிதலையேனை வீடுதி கண்டாய் என்பதனால் நின்னைப் பிரிந்து உலக வாழ்க்கையில் வருத்தப்படுகின்ற என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும் எனப் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண் டும் என்பதும் புலப்படுமாறு காண்க . 9 . 114. பொலிகின்ற நின்றாள் புகுதப்பெற் குக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற வென்னை விடுதிகண் டாயனி தேர் விளரி ஒலிநின்ற பூம்பொழில் உத்தர கோசமங் கைக்கரசே வலி நின்ற திண்சிலை யாலெரித் தாய்புர மாறுபட்டே . - ரை : அளி தேர் விளரி ஒலி நின்ற பூ பொழில்வண்டுகள் தேனுாகிய உணவினைத் தேடுங்கால் பாடும் விளரிப் பண்ணின் ஒலி நிலை பெற்ற பூஞ்சோலையையுடைய உத்தர கோசமங்கைக்கு அரசே - திரு வுத்தரகோசமங்கையென்னும் தலத்துக்கு அரசனே புரம் மாறுபட்டு வலிநின்ற திண்சிலையால் எரித்தாய்.முப்புரங்களையும் பகைத்து வலியிலை பெற்ற மேருமலையாகிய வில்லினால் அழலம்பைச் செலுத்தி எரித்தவனே ' ஆக்கையைப் போக்கப் பெற்று - நின்னருளால் உடம்பினை நீக்கப்பெற்று பொலிகின்ற நின் தாள் புகுதப் பெற்று - அதனால் விளங்குகின்ற நின் திருவடிகளை அடையப் பெற்று உய்யுமாறு மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் - உய்யுமாறு வருந்துகின்ற என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . உத்தரகோசமங்கைக்கு அரசே முப்புரங்களையும் மாறுபட்டுத் திண் சிலையால் எரித்தவனே . மின்னருளால் உடம்பினைப் போக்கப்பெற்று அத னால் யின் திருவடிகளை அடையப்பெற்று உய்யுமாறு வருந்துகின்ற என் னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதவ் வேண்டும் என்பதாம் . ஆக்கையைப் போக்கப்பெற்று மீன்றாள் புகுகப்பெற்று மெலிகின்ற என மாறிக் கூட்டி ஆக்கையைப் போக்கப்பெற்று அதனால் நின் தான் புகுதப்பெற்று உய்யுமாறு மெலிகின்ற எனச் சில சொற்கள் வருவித் துரைக்க .