திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

398 திருவாசக ஆராய்ச்சியுரை tr அளி- வண்டு. அளி முரல் கொங்கார் தடமலர் திருக்கோவை 119. "தாரிடை யளிக ளார்ப்ப" (கம்ப வரைக் காட்சி 80) என்புழியும். இப்பொருட்டாதல் காண்க, தேர்தல் - தேனாகிய உணவினைத் தேடுதல். "பூந்தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள்'" ஞான 238:9. கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத்தும்பி" (குறுந் 2) என வருதலுங் காண்க. விளரி- இரங்கற் பண். விளரி யுறுகருந் தீந்தொடை (புறநா.260:2) என் புழி விளரி என்பதற்கு "இரங்கற் பண்ணாகிய விளரி" என அதன் உரையாசிரியர் பொருளுரைத்தவாறு காண்க. '"விளரிப் பண் கண்ணி னார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்ந்து " (பு வெ. மா 197) என வரு தலுங் கா க '"நுளையர் விளரி நொடிதருக் தீம்பாலை" (7-48) என் னும் சிலப்பதிகாரவுரையில் " விளரி யென்றார் விளரி இரங்கினார் பாடும் பண்ணாதலால்" என அரும்பதவுரைகாரர் உரைத்தமையும் சண்டைக் கேற்ப அறியற்பாவது. வலிநின்ற திண்சிலை என்றது வலிநிலைபெற்ற திண்ணிய மேருமலை வில்லை குறிப்பினால் உணர்த்தியது. பகைவர் புரங்களை மேருவே வில் வாகக் கொண்டு எரித்தமை, என "மேருவே வில்லா மேவலர் புரங்கண்மூன் றெரித்த கையனே '' (7') அருட்பத்தில் அருளியமையானும் "அம்பலவர் பகை செகுக்குங் குனிதரு தீண்சிலை" என்னும் திருக்கோவையாருக்கு (98) அம்புலவர் பகையைச் செகுக்கும் வளைந்த திண்ணிய சிலையாகிய மேரு என்ற பேராசிரியர் உரையானும் அறிக "பெரிய மேரு வரையே சிலையா மலைவுற்றார் எயின்மூன்றும்'' ஞான 3:9 ஞரன 83:6 "விண்டார் புரம் வேவ மேருச் சிலையாகக் கொண்டான் " ''கைம்மருவு மேருவிலு... மும்மகிலு கொடியளவிற் பொடிசெய்த முதல்வன் ஞான 131; 4 ''அந்தரமூவெயிலு மனலாய் வீழ வோரம்பினால் மந்தரமேரு வில்லாக வளைத்தான் ' ஞான 918:3 எனத் தேவாரத்தும், "விண் பயில் புரங்கள் வேறு வைதீகத் தேரின் மேரூத் திண்சிலை குனிய நின்றார்" எனப் பெரிய புராணத்தும் (குங் குளிய 30) வருவன காண்க. எரித்தாய் - அழலம்பைச் செலுத்தி எரித் தாய். "மும்மதிலுங் கருமால் வரையே சிலையாம்..... அழலம்பொன்றி னால் எய்த எம்மான்'" "நீடுவரை மேருவிலதாக நிகழ்நாக மழஎம்பால் கூடலர்கண் முவெயிலெரித்த குழகன்' (ஞசன 315:7; 341 - 3) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. இங்ஙனம் வில்லும் அம்பும் கூறப்படி னும் இறைவன் சிரிப்பே முப்புரங்களை அழித்தது. இதனை நீத்தல் விண்ணப்பம் "தச்சு விடுத்தலுந் தாமடி பீட்டலும் அச்சு முரிந்ததென் றுந்தீபற அழிந்தன முப்புரம் உந்தீபற" உ ந்தி 3 என்னும் அடிகள் திருவாக்கினாலுமறியலாம். 399 "எண்ணிலார் புரங்கள் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும்' நாவு 68:3 விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி நக்கானை'' அடங்கார் புரிமெரிய நக்காய் போற்றி நாவு 270:1 தரியவர்கள் புரமூன்றுந் தழலால் வேவச் சிரித்தானை நாவு 250: 5 BT) 298: 10 எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. புரம் எரித்தாய் என்ற விளியினால் மும்மலப் புரமாகிய உடலைப் போக்கி வீடு அருள வேண்டும் என்னும் உள்ளுறைப் பொருள் போத ருதல் காண்க, புகுதப் இதன் கண். ஆக்கையைப் போக்கப் பெற்று நின்தாள் பெற்று மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போத ருதல் காண்க. 10. 115. மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யானுன் மணிமலர்த்தாள் வேறுபட் டேனை விடுதிகண் டாய்னினை யேன்மனத்தே 'ஊறும்மட் டேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே நீறுபட் டேயொளி காட்டும் பொன்மேனி நெடுத்தகையே. ப-ணர : வினையேன் மனத்து ஊறும் மட்டே - பிராரத்த வினை யுடையேனாயினும் பேரருளாள் எனது மனத்தின் கண்ணே ஊறுகின்ற தேன் போன்றவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே - நிலைபெறும் உத்தரகோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே. நீறு பட்டு ஒளி காட் டும் பொஸ்மேனி நெடுந்தகையே-திருவெண்ணீறு அணியப்பட்டு வெண் மையான ஒளி காட்டும் பொன்போலும் திருமேனியையுடைய பேரருளை யுடையவனே, அஞ்சு எனை மறபட்டு வஞ்சிப்ப - ஐம்பொறிகளும் சிறி யேனை முரண்பட்டு மயக்க, யான் உன் மணிமலர் தாள் வேறுபட்டேனை - அதனால் மீனது அழகிய மலர்போன்ற திருவடிகளைப் பிரிந்தேன். அங் ஙனம் பிரிந்த என்னை, விடுதி கண்டாய் - கைவீடுகின்றேையா? கைவிடா தொழிதல் வேண்டும்.
398 திருவாசக ஆராய்ச்சியுரை tr அளி- வண்டு . அளி முரல் கொங்கார் தடமலர் திருக்கோவை 119 . தாரிடை யளிக ளார்ப்ப ( கம்ப வரைக் காட்சி 80 ) என்புழியும் . இப்பொருட்டாதல் காண்க தேர்தல் - தேனாகிய உணவினைத் தேடுதல் . பூந்தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் ' ஞான 238 : 9 . கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத்தும்பி ( குறுந் 2 ) என வருதலுங் காண்க . விளரி இரங்கற் பண் . விளரி யுறுகருந் தீந்தொடை ( புறநா .260 : 2 ) என் புழி விளரி என்பதற்கு இரங்கற் பண்ணாகிய விளரி என அதன் உரையாசிரியர் பொருளுரைத்தவாறு காண்க . ' விளரிப் பண் கண்ணி னார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்ந்து ( பு வெ . மா 197 ) என வரு தலுங் கா ' நுளையர் விளரி நொடிதருக் தீம்பாலை ( 7-48 ) என் னும் சிலப்பதிகாரவுரையில் விளரி யென்றார் விளரி இரங்கினார் பாடும் பண்ணாதலால் என அரும்பதவுரைகாரர் உரைத்தமையும் சண்டைக் கேற்ப அறியற்பாவது . வலிநின்ற திண்சிலை என்றது வலிநிலைபெற்ற திண்ணிய மேருமலை வில்லை குறிப்பினால் உணர்த்தியது . பகைவர் புரங்களை மேருவே வில் வாகக் கொண்டு எரித்தமை என மேருவே வில்லா மேவலர் புரங்கண்மூன் றெரித்த கையனே ' ' ( 7 ' ) அருட்பத்தில் அருளியமையானும் அம்பலவர் பகை செகுக்குங் குனிதரு தீண்சிலை என்னும் திருக்கோவையாருக்கு ( 98 ) அம்புலவர் பகையைச் செகுக்கும் வளைந்த திண்ணிய சிலையாகிய மேரு என்ற பேராசிரியர் உரையானும் அறிக பெரிய மேரு வரையே சிலையா மலைவுற்றார் எயின்மூன்றும் ' ' ஞான 3 : 9 ஞரன 83 : 6 விண்டார் புரம் வேவ மேருச் சிலையாகக் கொண்டான் ' ' கைம்மருவு மேருவிலு ... மும்மகிலு கொடியளவிற் பொடிசெய்த முதல்வன் ஞான 131 ; 4 ' ' அந்தரமூவெயிலு மனலாய் வீழ வோரம்பினால் மந்தரமேரு வில்லாக வளைத்தான் ' ஞான 918 : 3 எனத் தேவாரத்தும் விண் பயில் புரங்கள் வேறு வைதீகத் தேரின் மேரூத் திண்சிலை குனிய நின்றார் எனப் பெரிய புராணத்தும் ( குங் குளிய 30 ) வருவன காண்க . எரித்தாய் - அழலம்பைச் செலுத்தி எரித் தாய் . மும்மதிலுங் கருமால் வரையே சிலையாம் ..... அழலம்பொன்றி னால் எய்த எம்மான் ' நீடுவரை மேருவிலதாக நிகழ்நாக மழஎம்பால் கூடலர்கண் முவெயிலெரித்த குழகன் ' ( ஞசன 315 : 7 ; 341 - 3 ) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . இங்ஙனம் வில்லும் அம்பும் கூறப்படி னும் இறைவன் சிரிப்பே முப்புரங்களை அழித்தது . இதனை நீத்தல் விண்ணப்பம் தச்சு விடுத்தலுந் தாமடி பீட்டலும் அச்சு முரிந்ததென் றுந்தீபற அழிந்தன முப்புரம் உந்தீபற ந்தி 3 என்னும் அடிகள் திருவாக்கினாலுமறியலாம் . 399 எண்ணிலார் புரங்கள் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும் ' நாவு 68 : 3 விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி நக்கானை ' ' அடங்கார் புரிமெரிய நக்காய் போற்றி நாவு 270 : 1 தரியவர்கள் புரமூன்றுந் தழலால் வேவச் சிரித்தானை நாவு 250 : 5 BT ) 298 : 10 எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . புரம் எரித்தாய் என்ற விளியினால் மும்மலப் புரமாகிய உடலைப் போக்கி வீடு அருள வேண்டும் என்னும் உள்ளுறைப் பொருள் போத ருதல் காண்க புகுதப் இதன் கண் . ஆக்கையைப் போக்கப் பெற்று நின்தாள் பெற்று மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போத ருதல் காண்க . 10 . 115. மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யானுன் மணிமலர்த்தாள் வேறுபட் டேனை விடுதிகண் டாய்னினை யேன்மனத்தே ' ஊறும்மட் டேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே நீறுபட் டேயொளி காட்டும் பொன்மேனி நெடுத்தகையே . - ணர : வினையேன் மனத்து ஊறும் மட்டே - பிராரத்த வினை யுடையேனாயினும் பேரருளாள் எனது மனத்தின் கண்ணே ஊறுகின்ற தேன் போன்றவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே - நிலைபெறும் உத்தரகோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே . நீறு பட்டு ஒளி காட் டும் பொஸ்மேனி நெடுந்தகையே - திருவெண்ணீறு அணியப்பட்டு வெண் மையான ஒளி காட்டும் பொன்போலும் திருமேனியையுடைய பேரருளை யுடையவனே அஞ்சு எனை மறபட்டு வஞ்சிப்ப - ஐம்பொறிகளும் சிறி யேனை முரண்பட்டு மயக்க யான் உன் மணிமலர் தாள் வேறுபட்டேனை - அதனால் மீனது அழகிய மலர்போன்ற திருவடிகளைப் பிரிந்தேன் . அங் ஙனம் பிரிந்த என்னை விடுதி கண்டாய் - கைவீடுகின்றேையா ? கைவிடா தொழிதல் வேண்டும் .