திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

408 திருவாசக ஆராய்ச்சியுரை 121. பொருளே தமியேன் புகலிட மேநின் புகழ் இகழ்வார் வெருளே எனைவிட் டிடுதிகண் டாய் மெய்மை யார் விழுங்கும் அருளே யணிபொழில் உத்தர கோசமங் கைக்கரசே இருளே வெளியே யிகபர மரகி யிருந்தவனே. ப-ரை: பொருளே - மெய்ப்பொருளாகவுள்ளவனே, தமியேன் புக லிடமே - வேறு புகலிட மில்லாத தமியேனுக்குப் புகலிடமாயுள்ளவனே, நின் புகழ் இகழ்வார் வெருளே - நின் மெய்ப்புகழை பழித்தரைப்பவர்க்கு அச்சத்தைச் செய்பவனே, மெய்ம்மையார் விழுங்கும் அருளே - மெய்யடி யார்கள் விழுங்குகின்ற அருளமுதமே, அணி பொழில் உத்தரகோசமங் கைக்கு அரசே - அழகிய சோலை சூழ்ந்த திருவுத்தரகோச மங்கை என்னும் தலத்துக்கு அரசே. இருளே - உலகியல் உணர்வால் உணரப்படாது மறைந் திருப்பவனே. வெளியே - மெய்யுணர்வால் உணரப்பட்டு வெளிப்படு பவனே, இகம் பரம் ஆகி இருந்தவனே-உயிர்களுக்கெல்லாம் இம்மை மறுமையும் வீடு பேறும் அருள்பவனுாய் இருக்கின் றவனே, என்னை விட்டிடுதி கண்டாய் - என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடா தொழிதல் வேண்டும். பொருளே, தமியேன் புகவிடமே, நின்மெய்ப்புகழை இகழ்வார்க்கு அச்சத்தைச் செய்பவனே, மெய்மையால் விளங்கும் அருளமுதமே, உத் தரகோசமங்கைக்கு அரசே, இருளே, வெளியே, இகபரமாகி இருந்தவனே. என்னைக் கைவிடுகின் றனையோ கைவிடாதொழில் வேண்டும் என்பதாம். பொருள் - மெய்ப்பொருள் குறள் 351 பரிமேல். பொருளே என்றார், இறைவன் மெய்யர்க்கு மெய்ப்பொருளாயுள்ளானாதலின். மெய்யர்க்கு மெய்ப்பொருளான விமலனை" "நீர்பலி ஏற்றதென் என்று விண்ணப் பஞ் செய்பவர்க்கு மெய்ப்பொருளாய விழி கொண்டீர்" (சுந் 45: 11; 88:9) எனத் தேவாரத்தும் வருவன காண்க. நின்னையொழிய வேறு புகலிடமில்லேன் என்பது தோன்றத் தமி யேன் புகலிடமே என்றார். 'போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறி தொன்றில்லை" (சத 62) என அடிகள் அருளியவாறுங் காண்க. இறை வனே உயிர்களுக்குப் புகலிடமாயுள்ளான் என்பது, "எமக்குப் புகலாம் விருப்பர்க்கு'' திருக்கோவை 143. "பற்றற்றவர்க்குப் புகலோன்" திருக்கோவை 188. புகலிடமாய் நின்ற புண்ணியன் றானே'' திருமந் 1723 "ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை ஒருவன் பாத மல்லதை பிறிது முண்டோ பெறும்புக னமக்கே" ஞானாமிர்தம் 53:23:5 என வருவனவற்றலுமறிக. நீத்தல் விண்ணப்பம் 409 புகழ் என்றது பொருள் சேர் புகழை. "பொருள்சேர் புகழ் புரிந்தார். மாட்டு " (குறள் 5) என வருதலுங் காண்க. ஏதில் பெரும் புகழ் எனினு மமையும்."ஏதில் பெரும் புகழ் எங்கள் ஈசன்" (திருவார்த் 8) என அடி கள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க. "குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடர்" "கோதில் புகழான்'' "பழிசே ரில் புகழான்" எனத் தேவாரத்தும் வருவன காண்க, வெருள் - அச்சம். ஞான 274:11 ஞான 341:9 சுந் 23:10 மெய்ம்மையார் - மெய்யன்பர். விழுங்கும் என்ற வினையினால் அருள் என்பதற்கு அருளமுதம் என உரைக்கப்பட்டது. வன் "வழங்குகின் முய்க்குள் அருளாரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்கு கின்றேன்" (அடைக்கலப் 10) என அடிகள் பிறிதோ ரிடத்து அருளியவாறுங் காண்க. பசுஞானம் பாசஞானங்களினால் இறை உணரப்படானாதலின் இருளே" என்றும். பதிஞானமொன்றி னாலே உணரப்படுவனாதலின் "வெளியே" என்றும் அருளிச் செய்தார். "பாசஞான த்தாலும். பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரமனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி (9-ம் சூத்) எனச் சிவ ஞான சித்தியாரில் வருதலுங் காண்க. ஆம் இகம் - எடுத்த பிறப்பாகிய இம்மைப் பயனையும் இப்பிறப்பில் செய்த வினைப் பயனால் வரும் மறுமைப் பயனையும் உணர்த்தியது. பரம்- இம்மை மறுமை யல்லாத வீடு பேறாகிய பயனை உணர்த்தியது. இகம் இம்மை மறுமையினையும் பரம் வீடு பேற்றினையும் குறிக்கும் என்பதனை மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்தும் தேவருக்கும் வீடுபேறாய் நின்றானை." திருவாக்கானுமறிக என்னும் அப்பரடிகள் இகபரமாகியிருந்தவனே என்றதனால் இம்மை மறுமைப் பயன்களையும் வீடு பேற்றினையும் அருள் பவன் இறைவன் என்பது போதரும். ""இகபரமும்.....ஆம் பேராளன்" (ஞான 184:3) எனத் தேவாரத்து வருதலும் காண்க. இருக்கின்ற வனே என்னாது இருந்தவனே என இறந்த காலத்தாற் கூறியது துணிவு பற்றியாகும். இதன் கண், தமியேன் புகலிடமே என்னை விட்டிடுதி கண்டாய் என் பதனால் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டுமென் பதும் புலனாதல் காண்க. 52 17.
408 திருவாசக ஆராய்ச்சியுரை 121. பொருளே தமியேன் புகலிட மேநின் புகழ் இகழ்வார் வெருளே எனைவிட் டிடுதிகண் டாய் மெய்மை யார் விழுங்கும் அருளே யணிபொழில் உத்தர கோசமங் கைக்கரசே இருளே வெளியே யிகபர மரகி யிருந்தவனே . - ரை : பொருளே - மெய்ப்பொருளாகவுள்ளவனே தமியேன் புக லிடமே - வேறு புகலிட மில்லாத தமியேனுக்குப் புகலிடமாயுள்ளவனே நின் புகழ் இகழ்வார் வெருளே - நின் மெய்ப்புகழை பழித்தரைப்பவர்க்கு அச்சத்தைச் செய்பவனே மெய்ம்மையார் விழுங்கும் அருளே - மெய்யடி யார்கள் விழுங்குகின்ற அருளமுதமே அணி பொழில் உத்தரகோசமங் கைக்கு அரசே - அழகிய சோலை சூழ்ந்த திருவுத்தரகோச மங்கை என்னும் தலத்துக்கு அரசே . இருளே - உலகியல் உணர்வால் உணரப்படாது மறைந் திருப்பவனே . வெளியே - மெய்யுணர்வால் உணரப்பட்டு வெளிப்படு பவனே இகம் பரம் ஆகி இருந்தவனே - உயிர்களுக்கெல்லாம் இம்மை மறுமையும் வீடு பேறும் அருள்பவனுாய் இருக்கின் றவனே என்னை விட்டிடுதி கண்டாய் - என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடா தொழிதல் வேண்டும் . பொருளே தமியேன் புகவிடமே நின்மெய்ப்புகழை இகழ்வார்க்கு அச்சத்தைச் செய்பவனே மெய்மையால் விளங்கும் அருளமுதமே உத் தரகோசமங்கைக்கு அரசே இருளே வெளியே இகபரமாகி இருந்தவனே . என்னைக் கைவிடுகின் றனையோ கைவிடாதொழில் வேண்டும் என்பதாம் . பொருள் - மெய்ப்பொருள் குறள் 351 பரிமேல் . பொருளே என்றார் இறைவன் மெய்யர்க்கு மெய்ப்பொருளாயுள்ளானாதலின் . மெய்யர்க்கு மெய்ப்பொருளான விமலனை நீர்பலி ஏற்றதென் என்று விண்ணப் பஞ் செய்பவர்க்கு மெய்ப்பொருளாய விழி கொண்டீர் ( சுந் 45 : 11 ; 88 : 9 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . நின்னையொழிய வேறு புகலிடமில்லேன் என்பது தோன்றத் தமி யேன் புகலிடமே என்றார் . ' போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறி தொன்றில்லை ( சத 62 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . இறை வனே உயிர்களுக்குப் புகலிடமாயுள்ளான் என்பது எமக்குப் புகலாம் விருப்பர்க்கு ' ' திருக்கோவை 143 . பற்றற்றவர்க்குப் புகலோன் திருக்கோவை 188 . புகலிடமாய் நின்ற புண்ணியன் றானே ' ' திருமந் 1723 ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை ஒருவன் பாத மல்லதை பிறிது முண்டோ பெறும்புக னமக்கே ஞானாமிர்தம் 53 : 23 : 5 என வருவனவற்றலுமறிக . நீத்தல் விண்ணப்பம் 409 புகழ் என்றது பொருள் சேர் புகழை . பொருள்சேர் புகழ் புரிந்தார் . மாட்டு ( குறள் 5 ) என வருதலுங் காண்க . ஏதில் பெரும் புகழ் எனினு மமையும் . ஏதில் பெரும் புகழ் எங்கள் ஈசன் ( திருவார்த் 8 ) என அடி கள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க . குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடர் கோதில் புகழான் ' ' பழிசே ரில் புகழான் எனத் தேவாரத்தும் வருவன காண்க வெருள் - அச்சம் . ஞான 274 : 11 ஞான 341 : 9 சுந் 23:10 மெய்ம்மையார் - மெய்யன்பர் . விழுங்கும் என்ற வினையினால் அருள் என்பதற்கு அருளமுதம் என உரைக்கப்பட்டது . வன் வழங்குகின் முய்க்குள் அருளாரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்கு கின்றேன் ( அடைக்கலப் 10 ) என அடிகள் பிறிதோ ரிடத்து அருளியவாறுங் காண்க . பசுஞானம் பாசஞானங்களினால் இறை உணரப்படானாதலின் இருளே என்றும் . பதிஞானமொன்றி னாலே உணரப்படுவனாதலின் வெளியே என்றும் அருளிச் செய்தார் . பாசஞான த்தாலும் . பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரமனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி ( 9 - ம் சூத் ) எனச் சிவ ஞான சித்தியாரில் வருதலுங் காண்க . ஆம் இகம் - எடுத்த பிறப்பாகிய இம்மைப் பயனையும் இப்பிறப்பில் செய்த வினைப் பயனால் வரும் மறுமைப் பயனையும் உணர்த்தியது . பரம் இம்மை மறுமை யல்லாத வீடு பேறாகிய பயனை உணர்த்தியது . இகம் இம்மை மறுமையினையும் பரம் வீடு பேற்றினையும் குறிக்கும் என்பதனை மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்தும் தேவருக்கும் வீடுபேறாய் நின்றானை . திருவாக்கானுமறிக என்னும் அப்பரடிகள் இகபரமாகியிருந்தவனே என்றதனால் இம்மை மறுமைப் பயன்களையும் வீடு பேற்றினையும் அருள் பவன் இறைவன் என்பது போதரும் . இகபரமும் ..... ஆம் பேராளன் ( ஞான 184 : 3 ) எனத் தேவாரத்து வருதலும் காண்க . இருக்கின்ற வனே என்னாது இருந்தவனே என இறந்த காலத்தாற் கூறியது துணிவு பற்றியாகும் . இதன் கண் தமியேன் புகலிடமே என்னை விட்டிடுதி கண்டாய் என் பதனால் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டுமென் பதும் புலனாதல் காண்க . 52 17 .