திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

410 திருவாசக ஆராய்ச்சியுரை 122. இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை யென்னினல்லால் விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க நஞ்சமுதா அருந்தின னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே. ப-ரை: மிக்க நஞ்சு அமுதா அருந்தினனே - பெருநஞ்சாகிய ஆல் கால விடத்தை அமிழ்த உணவாக உண்டவனே, மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே-நிலைபெறும் திருவுத்தரகோசமங்கை என்னும் தலத் துக்கு அரசே, பிறவிப் பிணி பட்டு மடங்கினர்க்கு மருந்தின னே - பிறவி யாகிய பிணியின் வாய்ப் பட்டுக் கீழ்மை அடைந்தோர்க்கு அந்நோயினைத் தீர்க்கும் மருந்தாகவுள்ளவனே, இருந்து எனை ஆண்டு கொள் - இகபரம் அருளபவனாயிருந்து என்னைத் தொண்டனாக ஆட்சிபண்ணிக்கொள்; விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் - விரும்புவார்க்கு என்னை விற்றுக்கொள் அல்லது ஒற்றி வைத்துக்கொள் என்று கூறின் கூறவா மன்றி, விருந்தினனேனை விடுதி கண்டாய் - வேருெரு உரிமையுமில்லாத புதிய அடிமையாகிய என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். நஞ்சை அமுதாய் அருந்தினனே, உத்தரகோச மங்கைக்கு அரசே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கு அப்பிணியைத் தீர்க்கும் மருந்தாக வுள்ளவனே இகபரமருள்பவனாயிருந்து என்னைத் தொண்டனாக ஆட்சி பண்ணிக் கொள்க. என்ரை விற்றுக்கொள் அல்லது ஒற்றிவை என்று கூறின் கூறலாமன்றி வேறு உரிமையில்லாத விருந்தினனேனைக் கைவிடு கின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். இருந்து என்றது முன்னைய திருப்பாட்டில் இகபரமாயிருத்தலைச் சுட்டியது. ஆண்டு கொள் - அடிமைத் தொண்டனாக ஆட்சிபண்ணிக் கொள். அடிமைகொண்ட பொருளை விற்றலும் ஒற்றி வைத்தலும் இயலு மாகலின் '"விற்றுக் கொள் ஒற்றிவை" என்றர். வீற்றல் - தனக்குரிய உரிமை முழுவதையும் இழந்து தான் கொடுத்த பொருளின் விலையினைப் பெற்றுக்கொள்ளல். ஒற்றி - முழு உரிமையும் பெறாமல் அனுபவிக்கும் உரிமை மட்டும் பெற்றது. ஒற்றியாக வாங்கப்பட்ட பொருள் வருவாயை எடுப்பதற்குரியதன்றி விற்றற்குரியதன்று. எத்துணைக் காலஞ் சென்ற பின்னரும் ஒற்றி கொடுத்தவன் தாள் பெற்ற பணத்தைத் திருப்பித் தரும் போது அவ்லொற்றிப் பொருன் அவனிடம் ஒப்படைத்தல் வேண்டும். ''ஊன்றி நின்றார்ஐவர்க் கொற்றி வைத்தாய் பின்னை யொற்றி யெல்லாம் சொன்று கொண்டாய் கச்சியேகம்பமேய சுடர் வண்ணனே" நாவு 09:9. நீத்தல் விண்ணப்பம் "விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பி யாட்பட்டேன்" சந் 95 2 எனத் தேவாரத்தும் வருவன காண்க. ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்பவற்றுள் ஆண்டு கொள் என்பது ஆண்டு கொள்ளுந் தன்மை நினக்கன்றிப் பிறர் எவர்க்கும் இன்மையையும், விற்றுக்கொள் என்பது எனை விலைப் பொருளாகப் பெற் றுக்கொண்டு என் விலையைக் கொடுக்கத்தக்கார் பிறர் இல்லாமையையும், ஒற்றிவை என்பது அவ்வாறே ஒற்றிப் பொருளாக ஏற்றுக்கொண்டு என் தொண்டிற்குரிய விலையைக் கொடுக்கத் தக்கார் பிறர் எவரும் இல்லாமை யையும் உணர்த்தி நின்றன. அதுபற்றியே ''விடுதிகண்டாய்" என்றார். என்னினல்லால் என்பதற்கு "என்று கூறுதலன்றி" எனப் பொரு ளுரைத்தல் அமையாது. என்னை? என்னின் என்பது "என்று கூறின்' எனப் பொருள் தருமன்றி என்று கூறுதல் எனப் பொருள் தருமாறில்லை. என்று கூறிண் என்றதன் ஆற்றலால் என்று கூறின் கூறலாமன்றிப் பிறி தொன்றுங் கூறுதற்கு உரிமையில்லாமை பெறப்படும். "பூதங்கள் தோறு நின் றாயெனி னல்லால் போக்கிலன் வரவிலன் எனை நினைப்புலவோர், கீதங்கள் பாடுதல் ஆடுதலல்லால் கேட்டறியோருனைக் கண்டறிவாரை (பள்ளி 5) என்பதிலும் ''நின்ற யெனினல்லால்" என்பது நின்றாய் என்று கூறிற் கூறலாமன்றி வேறு கூறமுடியாது எனப் பொருள் தந்து நின்றவாறுங் காண்க. விருந்தின னேனை - புதிய அடியவனாகிய என்னை. விருந்து - புதுமை. இறைவனொடு போந்த மெய்யடியார்கள் பழவடியார்களாதலின் அவர் கள் முன்னே ஆட்கொள்ளப்பட்ட தாம் புதிய அடியன் என்னும் கருத் தினராய் '' விருந்தினனேனை ' என்றார். நின் பழவடியாரொடு மென்படிறு விரும்பரனே " நீத்35. பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்" அம்மானை உன்பழவடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன்." ஆசைப் பன்னா ளுன்னைப் பணிந்தேத்தும் பழையவடியா ரொடும் கூடாது என்னாயகமே யிற்பட்டிங் கிருந்தேன்" ஆனந்த 2. "பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மை தீர்த் தாட்கொண்டாற் என அடிகள் அருளியவாறுங் காண்க. பொல்வாதோ " திருவெம்பா 3
410 திருவாசக ஆராய்ச்சியுரை 122. இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை யென்னினல்லால் விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க நஞ்சமுதா அருந்தின னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே . - ரை : மிக்க நஞ்சு அமுதா அருந்தினனே - பெருநஞ்சாகிய ஆல் கால விடத்தை அமிழ்த உணவாக உண்டவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே - நிலைபெறும் திருவுத்தரகோசமங்கை என்னும் தலத் துக்கு அரசே பிறவிப் பிணி பட்டு மடங்கினர்க்கு மருந்தின னே - பிறவி யாகிய பிணியின் வாய்ப் பட்டுக் கீழ்மை அடைந்தோர்க்கு அந்நோயினைத் தீர்க்கும் மருந்தாகவுள்ளவனே இருந்து எனை ஆண்டு கொள் - இகபரம் அருளபவனாயிருந்து என்னைத் தொண்டனாக ஆட்சிபண்ணிக்கொள் ; விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் - விரும்புவார்க்கு என்னை விற்றுக்கொள் அல்லது ஒற்றி வைத்துக்கொள் என்று கூறின் கூறவா மன்றி விருந்தினனேனை விடுதி கண்டாய் - வேருெரு உரிமையுமில்லாத புதிய அடிமையாகிய என்னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . நஞ்சை அமுதாய் அருந்தினனே உத்தரகோச மங்கைக்கு அரசே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கு அப்பிணியைத் தீர்க்கும் மருந்தாக வுள்ளவனே இகபரமருள்பவனாயிருந்து என்னைத் தொண்டனாக ஆட்சி பண்ணிக் கொள்க . என்ரை விற்றுக்கொள் அல்லது ஒற்றிவை என்று கூறின் கூறலாமன்றி வேறு உரிமையில்லாத விருந்தினனேனைக் கைவிடு கின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . இருந்து என்றது முன்னைய திருப்பாட்டில் இகபரமாயிருத்தலைச் சுட்டியது . ஆண்டு கொள் - அடிமைத் தொண்டனாக ஆட்சிபண்ணிக் கொள் . அடிமைகொண்ட பொருளை விற்றலும் ஒற்றி வைத்தலும் இயலு மாகலின் ' விற்றுக் கொள் ஒற்றிவை என்றர் . வீற்றல் - தனக்குரிய உரிமை முழுவதையும் இழந்து தான் கொடுத்த பொருளின் விலையினைப் பெற்றுக்கொள்ளல் . ஒற்றி - முழு உரிமையும் பெறாமல் அனுபவிக்கும் உரிமை மட்டும் பெற்றது . ஒற்றியாக வாங்கப்பட்ட பொருள் வருவாயை எடுப்பதற்குரியதன்றி விற்றற்குரியதன்று . எத்துணைக் காலஞ் சென்ற பின்னரும் ஒற்றி கொடுத்தவன் தாள் பெற்ற பணத்தைத் திருப்பித் தரும் போது அவ்லொற்றிப் பொருன் அவனிடம் ஒப்படைத்தல் வேண்டும் . ' ' ஊன்றி நின்றார்ஐவர்க் கொற்றி வைத்தாய் பின்னை யொற்றி யெல்லாம் சொன்று கொண்டாய் கச்சியேகம்பமேய சுடர் வண்ணனே நாவு 09 : 9 . நீத்தல் விண்ணப்பம் விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பி யாட்பட்டேன் சந் 95 2 எனத் தேவாரத்தும் வருவன காண்க . ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்பவற்றுள் ஆண்டு கொள் என்பது ஆண்டு கொள்ளுந் தன்மை நினக்கன்றிப் பிறர் எவர்க்கும் இன்மையையும் விற்றுக்கொள் என்பது எனை விலைப் பொருளாகப் பெற் றுக்கொண்டு என் விலையைக் கொடுக்கத்தக்கார் பிறர் இல்லாமையையும் ஒற்றிவை என்பது அவ்வாறே ஒற்றிப் பொருளாக ஏற்றுக்கொண்டு என் தொண்டிற்குரிய விலையைக் கொடுக்கத் தக்கார் பிறர் எவரும் இல்லாமை யையும் உணர்த்தி நின்றன . அதுபற்றியே ' ' விடுதிகண்டாய் என்றார் . என்னினல்லால் என்பதற்கு என்று கூறுதலன்றி எனப் பொரு ளுரைத்தல் அமையாது . என்னை ? என்னின் என்பது என்று கூறின் ' எனப் பொருள் தருமன்றி என்று கூறுதல் எனப் பொருள் தருமாறில்லை . என்று கூறிண் என்றதன் ஆற்றலால் என்று கூறின் கூறலாமன்றிப் பிறி தொன்றுங் கூறுதற்கு உரிமையில்லாமை பெறப்படும் . பூதங்கள் தோறு நின் றாயெனி னல்லால் போக்கிலன் வரவிலன் எனை நினைப்புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதலல்லால் கேட்டறியோருனைக் கண்டறிவாரை ( பள்ளி 5 ) என்பதிலும் ' ' நின்ற யெனினல்லால் என்பது நின்றாய் என்று கூறிற் கூறலாமன்றி வேறு கூறமுடியாது எனப் பொருள் தந்து நின்றவாறுங் காண்க . விருந்தின னேனை - புதிய அடியவனாகிய என்னை . விருந்து - புதுமை . இறைவனொடு போந்த மெய்யடியார்கள் பழவடியார்களாதலின் அவர் கள் முன்னே ஆட்கொள்ளப்பட்ட தாம் புதிய அடியன் என்னும் கருத் தினராய் ' ' விருந்தினனேனை ' என்றார் . நின் பழவடியாரொடு மென்படிறு விரும்பரனே நீத் 35 . பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் அம்மானை உன்பழவடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன் . ஆசைப் பன்னா ளுன்னைப் பணிந்தேத்தும் பழையவடியா ரொடும் கூடாது என்னாயகமே யிற்பட்டிங் கிருந்தேன் ஆனந்த 2 . பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மை தீர்த் தாட்கொண்டாற் என அடிகள் அருளியவாறுங் காண்க . பொல்வாதோ திருவெம்பா 3