திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

412 திருவாசக ஆராய்ச்சியுரை மிக்க நஞ்சு என்றார் அளவானும் கொடுமையானும் மிக்க விடமாதலின். "பாரிடம் விண்ணு மெங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட" (ஞான 314:4) *கடல் கடைந்திடக் கனன்றெழுந்த விடம்" (ஞான 220:10) "வானஞ் சும்பெரு விடத்தை (ஞான 281:5) என வருவனவும் " கனை கடற் செய்த நஞ்சு என்றதனாள் நஞ்சின் பெருமை கூறினார் செய்யாத நஞ்சிற் செய்த நஞ்சு கொடிதாகலின் அதன் கொடுமை விளங்க செய்த நஞ்சென்றார்" (141 பேர் ) எனவும். '"ஓங்கும் ஒருவிடம் உண்டு - உலகம் முழுவதையும் சுடும் வண்ணம் மேன்மேலும் வளரா நின்றதோர் விடத்தைத் தானுண்டு " (158 பேர்) எனவும் வருஉம் திருக் கோவையார் உரைப் பகுதிகளும் ஈண்டறியற்பாலன. இறைவன், தேவர் கள் உய்யவேண்டி + உண்ணலாகா கஞ்சை அமுதம் போவ விரும்பி உண் டமையின் '' நஞ்ச மமுதாய் அருந்தினனே" என்றார். ''நஞ்சம் விருப்பாக உண்ணவனை'' ஞான 101:6 "நஞ்சம் அழுதாக வுண்ட கடவுள்" ஞான 254: 3 "நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர்' நாவு 284:8, "பேரமுதம் உண்டார்கள் உய்யப் பெருங்கடல் நஞ்சு. ஆரமுதா யுண்டான் ' சாவு: 19:9 "வானத்தவ ருய்ய வன்னஞ்சையுண்ட கண்டத்து' எனத் தேவாரத்தும், "உம்பர் உய்யக் களமாம் விட மமிர்தாக்கிய தில்லைத் தொல்லோன்' (22) "ஓங்குமொரு விடமுண்டம் பலத்தும்பருய்ய வன்று தாங்கு மொருவன் " (158) நாவு 80.6 "விண்ணோர் குழுவினை யுய்ய நஞ்சுண்டு" (229) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க. " பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கு மரூந்தினனே" எனக் கூட் டிப் பொருள் கொள்க, மடங்குதல் - கீழ்ப்படுதல். ''காரொலி மடங்க... களத்தி னார்த்த பேரொலி'' (கம்ப நாக பாச 201) அல்லலைச் செய்யும் பிறவியாகிய பிணியின் வாய்ப்பட்டுக் கீழ்மையடைந்தோர்க்கு மருந்தா யுள்ளான் இறைவனாதலின் 'மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கி னர்க்கே'' என்மூர். "பிறவிப் பிணிக்கோர் மருந்தே புணர்ச்சிப் * +உண்ணவாகா நஞ்சு " "உண்ணற்கரிய நஞ்சை" " உண்பரிய நஞ்சுதனை'' தே. ஞான 49:9; 74:7; 335.7. நீத்தல் விண்ணப்பம் 413 ''மருந்து நம்மல்லற் பிறவிப் பிணிக்கு' (திருக்கோவை 148) என அடிகள் பிறாண்டும் அருளியவாறு காண்க. இதன் கண், என்னை ஆண்டு கொள் வீற்றுக்கொள் ஒற்றிவை என்னினல்லால் விடுதி கண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கிய மும் கைவிடாதொறிதல் வேண்டும் என்பதும் புலப்படுதல் அறிக. 18. 123. மடங்கவென் வல்வினைக் காட்டைதின் மன்னருட் டீக்கொளுவும் விடங்கவென் றன்னை விடுதிகண் டாயென் பிறவியைவே ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமய் கைக்கரசே கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக் கொம்பினையே. ப-ரை: உத்தரகோச மங்கைக்கு அரசே - திருவுத்தரகோச மங்கை என்னும் தலத்துக்கு அரசனே, கொடு கரி குன்று உரித்து- கொடிய கஜன் என்னும் யானையாகிய குன்றினை உரித்து மாதங்காரி என்னும் மூர்த்தத்தினால். வஞ்சிக் கொம்பினை அஞ்சுவித்தாய் - வஞ்சிக் கொம்பு போன்ற உமையம்மையை அச்சமுறச் செய்தவனே, என் வல் வினை காட்டை - எனது வலிய வினையாகிய காட்டினை, மடங்க - கீழ்ப்பட்டழியு நின் மன் அருள் தீ கொளுவும் விடங்க - நினது நிலைபெற்ற அருளாகிய தீயை இட்டு எரிக்கின்ற சுயம்பு மூர்த்தியே, என்றன்னை விடுதி கண்டாய் - என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாது. ள் பிற வியை வேரொடும் களைந்து ஆண்டு கொள் - எனது பிறவியாகிய மரத் தினை அதற்கு வேராகிய அவரவினொடும் நீக்கி ஆட்கொண்டருளுவாயாக. மாறு. உத்தரகோச மங்கைக்கு அரசே, கொடுங்கரிக் குன்றினை உமையம்மையை அச்சமுறச் செய்தவனே, எனது வலிய வினையாகிய காட்டினைக் கீழ்ப்பட்ட ழியும்படி நினது பேரருளாகிய தீயையிட்டு எரிக் கின்ற விடங்கனே. என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாது என் பிறவியை வேரொடுங் களைந்து ஆட்கொண்டருளுவாயாக என்பதாம். மடங்குதல் - கீழ்ப்படுதல். வினையென்பது சஞ்சித ஆகாய கன்மங் வினையைக் காடு என்றது மிகுதி பற்றி. வினையைக் காடு என்ற களை. தற்கு ஏற்ப அருளைத் தீ என்றார். கொளுவுதல்-மாட்டி எரித்தல். விடங்கன் - உளி முதலிய கருவிகளால் தோற்றுவிக்கப்படாதவன். என் றது சுயம்பு என்றவாறு. பிறவியை வேரொடும் என்றமையால் பிறவி மரம் எனப்பட்டது இது ஏகதேசவுருவகம். "பிறவிவே ரறுத்தென் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா' பிடித்த 6. பிறவிவே ரறுக்குங் கரும்பினை'' சுங் 58:6 என வருவன காண்க.
412 திருவாசக ஆராய்ச்சியுரை மிக்க நஞ்சு என்றார் அளவானும் கொடுமையானும் மிக்க விடமாதலின் . பாரிடம் விண்ணு மெங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட ( ஞான 314 : 4 ) * கடல் கடைந்திடக் கனன்றெழுந்த விடம் ( ஞான 220 : 10 ) வானஞ் சும்பெரு விடத்தை ( ஞான 281 : 5 ) என வருவனவும் கனை கடற் செய்த நஞ்சு என்றதனாள் நஞ்சின் பெருமை கூறினார் செய்யாத நஞ்சிற் செய்த நஞ்சு கொடிதாகலின் அதன் கொடுமை விளங்க செய்த நஞ்சென்றார் ( 141 பேர் ) எனவும் . ' ஓங்கும் ஒருவிடம் உண்டு - உலகம் முழுவதையும் சுடும் வண்ணம் மேன்மேலும் வளரா நின்றதோர் விடத்தைத் தானுண்டு ( 158 பேர் ) எனவும் வருஉம் திருக் கோவையார் உரைப் பகுதிகளும் ஈண்டறியற்பாலன . இறைவன் தேவர் கள் உய்யவேண்டி + உண்ணலாகா கஞ்சை அமுதம் போவ விரும்பி உண் டமையின் ' ' நஞ்ச மமுதாய் அருந்தினனே என்றார் . ' ' நஞ்சம் விருப்பாக உண்ணவனை ' ' ஞான 101 : 6 நஞ்சம் அழுதாக வுண்ட கடவுள் ஞான 254 : 3 நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர் ' நாவு 284 : 8 பேரமுதம் உண்டார்கள் உய்யப் பெருங்கடல் நஞ்சு . ஆரமுதா யுண்டான் ' சாவு : 19 : 9 வானத்தவ ருய்ய வன்னஞ்சையுண்ட கண்டத்து ' எனத் தேவாரத்தும் உம்பர் உய்யக் களமாம் விட மமிர்தாக்கிய தில்லைத் தொல்லோன் ' ( 22 ) ஓங்குமொரு விடமுண்டம் பலத்தும்பருய்ய வன்று தாங்கு மொருவன் ( 158 ) நாவு 80.6 விண்ணோர் குழுவினை யுய்ய நஞ்சுண்டு ( 229 ) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க . பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கு மரூந்தினனே எனக் கூட் டிப் பொருள் கொள்க மடங்குதல் - கீழ்ப்படுதல் . ' ' காரொலி மடங்க ... களத்தி னார்த்த பேரொலி ' ' ( கம்ப நாக பாச 201 ) அல்லலைச் செய்யும் பிறவியாகிய பிணியின் வாய்ப்பட்டுக் கீழ்மையடைந்தோர்க்கு மருந்தா யுள்ளான் இறைவனாதலின் ' மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கி னர்க்கே ' ' என்மூர் . பிறவிப் பிணிக்கோர் மருந்தே புணர்ச்சிப் * + உண்ணவாகா நஞ்சு உண்ணற்கரிய நஞ்சை உண்பரிய நஞ்சுதனை ' ' தே . ஞான 49 : 9 ; 74 : 7 ; 335.7 . நீத்தல் விண்ணப்பம் 413 ' ' மருந்து நம்மல்லற் பிறவிப் பிணிக்கு ' ( திருக்கோவை 148 ) என அடிகள் பிறாண்டும் அருளியவாறு காண்க . இதன் கண் என்னை ஆண்டு கொள் வீற்றுக்கொள் ஒற்றிவை என்னினல்லால் விடுதி கண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கிய மும் கைவிடாதொறிதல் வேண்டும் என்பதும் புலப்படுதல் அறிக . 18 . 123. மடங்கவென் வல்வினைக் காட்டைதின் மன்னருட் டீக்கொளுவும் விடங்கவென் றன்னை விடுதிகண் டாயென் பிறவியைவே ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமய் கைக்கரசே கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக் கொம்பினையே . - ரை : உத்தரகோச மங்கைக்கு அரசே - திருவுத்தரகோச மங்கை என்னும் தலத்துக்கு அரசனே கொடு கரி குன்று உரித்து- கொடிய கஜன் என்னும் யானையாகிய குன்றினை உரித்து மாதங்காரி என்னும் மூர்த்தத்தினால் . வஞ்சிக் கொம்பினை அஞ்சுவித்தாய் - வஞ்சிக் கொம்பு போன்ற உமையம்மையை அச்சமுறச் செய்தவனே என் வல் வினை காட்டை - எனது வலிய வினையாகிய காட்டினை மடங்க - கீழ்ப்பட்டழியு நின் மன் அருள் தீ கொளுவும் விடங்க - நினது நிலைபெற்ற அருளாகிய தீயை இட்டு எரிக்கின்ற சுயம்பு மூர்த்தியே என்றன்னை விடுதி கண்டாய் - என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாது . ள் பிற வியை வேரொடும் களைந்து ஆண்டு கொள் - எனது பிறவியாகிய மரத் தினை அதற்கு வேராகிய அவரவினொடும் நீக்கி ஆட்கொண்டருளுவாயாக . மாறு . உத்தரகோச மங்கைக்கு அரசே கொடுங்கரிக் குன்றினை உமையம்மையை அச்சமுறச் செய்தவனே எனது வலிய வினையாகிய காட்டினைக் கீழ்ப்பட்ட ழியும்படி நினது பேரருளாகிய தீயையிட்டு எரிக் கின்ற விடங்கனே . என்னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாது என் பிறவியை வேரொடுங் களைந்து ஆட்கொண்டருளுவாயாக என்பதாம் . மடங்குதல் - கீழ்ப்படுதல் . வினையென்பது சஞ்சித ஆகாய கன்மங் வினையைக் காடு என்றது மிகுதி பற்றி . வினையைக் காடு என்ற களை . தற்கு ஏற்ப அருளைத் தீ என்றார் . கொளுவுதல் - மாட்டி எரித்தல் . விடங்கன் - உளி முதலிய கருவிகளால் தோற்றுவிக்கப்படாதவன் . என் றது சுயம்பு என்றவாறு . பிறவியை வேரொடும் என்றமையால் பிறவி மரம் எனப்பட்டது இது ஏகதேசவுருவகம் . பிறவிவே ரறுத்தென் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா ' பிடித்த 6 . பிறவிவே ரறுக்குங் கரும்பினை ' ' சுங் 58 : 6 என வருவன காண்க .