திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கொடுங் கரிக் குன்று - கொல்லும் கொடுமையும் குன்று போன்ற தோற்றமுமுடைய கயாசுரன் என்னும் யானை. சுரிக் குன்று உரித்தமை, ''கருங்கட மூன்றுகு நால்வாய்க் கரியுரித்தோன்'' (55) உருப் பனையன்ன கைக்குன் றுரித்து'' (137) 414 எனத் திருக்கோவையாரில் வருவனவற்றலுமறிக. உரித்து அஞ்சுவித் தாய் என்றது யானையை உரிக்கும் போது கொண்ட ஒளியும் உக்கிரமும் மிகுந்த மாதங்காரி என்னும் உக்கிரத் திருவுருவினால் உமையை அஞ்சச் செய்தவனே என்றவாறு. கயாசுரன் என்னும் அசுரனை அழித்தபோது இறைவன் கொண்ட திருவுருவைக் கண்டு இறைவி அஞ்சினள் என்ப தாம். அரிவை அஞ்ச வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த எங்கள் அன்ப'ை' ''உமை யஞ்சவே கொல்லை யானை உரித் தவன் '' (நாவு 74:2; 189.5) என வருவல காண்க. வஞ்சிக் கொம்பு ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யாய் குறிப்பினால் உமையம்மையை உணர்த்தியது. வஞ்சிக் கொம்பினை மகளிர்க்கு உவமை கூறுதலை வஞ்சிக் கொம்பனாள் ' (சீவ 353) என்ப தினாலுங் காண்க. இதன் கண், வல்வினையைக் கொளுத்தி பிறவியை வேரொடுங்களைக் தரண்டுகொள் என்தன்னை விடுதி கண்டாய் என வருவனவற்றால் பிர பஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலனா தலறிக. 19. 124. கொம்பரில் லாக்கொடி போல்அல மந்தனன் கோமளமே வெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர் நண்ணுகில்லா உம்பருள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே அம்பர மேநில னேஅனல் காலொடப் பானவனே. ப-ரை: விண்ணர் கண்ணுகில்லா உம்பர் உள்ளாய்-விண்ணுல கத்தவர்களும் அணுகமாட்டாத மேலாகிய சிவபுரத்திலுள்ளவனே; மன் னும் உத்தரகோச மங்கைக்கு அரசே - நிலைபெறும் திருவுத்தரகோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே, அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு. ஆனவனே - ஆகாயமும் நிலனும் தீயும் காற்றும் திருமாயுள்ளவனே, கோமளமே - என்றும் ஒரு பெற்றித்தாய இளமையினையுடையவனே, கொம்பர் இல்லர கொடி போல் அலமந்தனன் - படருவதற்குக் கொழு கொம்பு இல்லாத இளங்கொடி சுழல்வது போலச் சுழன்று வருந்தி, வெம்புக்கின்றேனை விடுதி கண்டாய் - உலசுவாதனையால் வாடுகின்ற என் னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். நீத்தல் விண்ணப்பம் விண்ணுலகத்தவரும் அணுகமாட்டாத மேலான சிவபுரத்திலுள்ள வனே. உத்தரகோச மங்கைக்கரசே. ஆகாயமும் நிலனும் தீயும் காற்றும் நீருமாயுள்ளவனே, கோமளமே. கொம்பரில்லாக் கொடி போலச் சுழன்று வருந்தி வாடுகின்ற என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். கொம்பர்- கொமூகொம்பு. அலமருதல் - சுழலுதல். "அலமர றெரு மர லாயிரண்டுஞ் சுழற்சி" என்பது தொல்காப்பியம் (உரி 310:14), ஈண்டு சுழன்று வருந்துதலை உணர்த்தியது. அலமந்தனன் என்னும் தன்மை ஒருமை இறந்தகால வினைமுற்று எச்சப் பொருட்டாய் வெம்பு கின்றேனை என்பதனோடு முடிந்தது. கோமலம்- இளமை. இறைவன் என்றும் மூவா விளநலமுடையனாதலின் 'கோமளமே' என்றார். "முத்தியர் மூப்பிலார்" 8:2 "முப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி 300:0 என ஆளுடைய பிள்னையாரும் 415 "மூவா முதலாய மூர்த்தி தன்னை" 210:3 மூவாத மேனி முக்கண்ணினானை 242:4 "மூவாத மேனி முக்கண்ணா போற்றி 209:2 என ஆளுடைய அரசும் அருளியமை காண்க. வேரோடு ராயினர். கேரமளம் - மென்மையுமரம். வெம்புதல் - வாடுதல், மரம் வெம்ப" (கலி 10:4) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. விண்ணவர் என்றது விண்ணில் வாழும் திருமால் பிரமன் இந்திரன் முத லான தேவர்களை இவர்கள் சிவஞானம் பெறாமையால் அணுகமாட்டா கண்ணமாட்டா·அணுகமாட்டாத. "விண்ணகத் தேவரு நண் ணவு மாட்டா விழுப்பொருளே " (திருப்பள்ளி 9) என வருதலுங் காண்க, கில் - ஆற்றலுணர்த்துவதோர் இடைநிலை. உம்பர் என்றது இறைவனது மேலாகிய சிவபுரத்தை உணர்த்தியது. உம்பருள்ளாய். மேலாகிய சிவ புரத்தினுள்ளவனே ''ஊனையுருக்கு முடையானை உம்பரானை" உம் பரா போற்றி " (சத 58:67) என வருவன காண்க. திருமால் முதலிய விண்ணவரும் நண்ணமாட்டாத சிவலோகத்துள்ளாராதவின் அரியரா யினும் எம்மனோர்க்கு எளியரி என்னும் கருத்தால் 'உத்தரகோச மங்கைக் கரசே' என்றார். #1 செய்யுளாதலின் "அம்பரமே லேனே அனல் காலொடு அப்பான வனே" என ஐம்பூதங்களை முறை பிறழக் கூறினார். அவுை தோற்ற முறை பற்றி அம்பரம் கால் அனல் அப்பு நிலன் எனவும், ஒடுக்க முறை "மூவாவிளாலங்காட்டி" திருமுருகாற்றுப்படை
திருவாசக ஆராய்ச்சியுரை கொடுங் கரிக் குன்று - கொல்லும் கொடுமையும் குன்று போன்ற தோற்றமுமுடைய கயாசுரன் என்னும் யானை . சுரிக் குன்று உரித்தமை ' ' கருங்கட மூன்றுகு நால்வாய்க் கரியுரித்தோன் ' ' ( 55 ) உருப் பனையன்ன கைக்குன் றுரித்து ' ' ( 137 ) 414 எனத் திருக்கோவையாரில் வருவனவற்றலுமறிக . உரித்து அஞ்சுவித் தாய் என்றது யானையை உரிக்கும் போது கொண்ட ஒளியும் உக்கிரமும் மிகுந்த மாதங்காரி என்னும் உக்கிரத் திருவுருவினால் உமையை அஞ்சச் செய்தவனே என்றவாறு . கயாசுரன் என்னும் அசுரனை அழித்தபோது இறைவன் கொண்ட திருவுருவைக் கண்டு இறைவி அஞ்சினள் என்ப தாம் . அரிவை அஞ்ச வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த எங்கள் அன்ப'ை ' ' ' உமை யஞ்சவே கொல்லை யானை உரித் தவன் ' ' ( நாவு 74 : 2 ; 189.5 ) என வருவல காண்க . வஞ்சிக் கொம்பு ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யாய் குறிப்பினால் உமையம்மையை உணர்த்தியது . வஞ்சிக் கொம்பினை மகளிர்க்கு உவமை கூறுதலை வஞ்சிக் கொம்பனாள் ' ( சீவ 353 ) என்ப தினாலுங் காண்க . இதன் கண் வல்வினையைக் கொளுத்தி பிறவியை வேரொடுங்களைக் தரண்டுகொள் என்தன்னை விடுதி கண்டாய் என வருவனவற்றால் பிர பஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலனா தலறிக . 19 . 124. கொம்பரில் லாக்கொடி போல்அல மந்தனன் கோமளமே வெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர் நண்ணுகில்லா உம்பருள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே அம்பர மேநில னேஅனல் காலொடப் பானவனே . - ரை : விண்ணர் கண்ணுகில்லா உம்பர் உள்ளாய் - விண்ணுல கத்தவர்களும் அணுகமாட்டாத மேலாகிய சிவபுரத்திலுள்ளவனே ; மன் னும் உத்தரகோச மங்கைக்கு அரசே - நிலைபெறும் திருவுத்தரகோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு . ஆனவனே - ஆகாயமும் நிலனும் தீயும் காற்றும் திருமாயுள்ளவனே கோமளமே - என்றும் ஒரு பெற்றித்தாய இளமையினையுடையவனே கொம்பர் இல்லர கொடி போல் அலமந்தனன் - படருவதற்குக் கொழு கொம்பு இல்லாத இளங்கொடி சுழல்வது போலச் சுழன்று வருந்தி வெம்புக்கின்றேனை விடுதி கண்டாய் - உலசுவாதனையால் வாடுகின்ற என் னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . நீத்தல் விண்ணப்பம் விண்ணுலகத்தவரும் அணுகமாட்டாத மேலான சிவபுரத்திலுள்ள வனே . உத்தரகோச மங்கைக்கரசே . ஆகாயமும் நிலனும் தீயும் காற்றும் நீருமாயுள்ளவனே கோமளமே . கொம்பரில்லாக் கொடி போலச் சுழன்று வருந்தி வாடுகின்ற என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . கொம்பர்- கொமூகொம்பு . அலமருதல் - சுழலுதல் . அலமர றெரு மர லாயிரண்டுஞ் சுழற்சி என்பது தொல்காப்பியம் ( உரி 310 : 14 ) ஈண்டு சுழன்று வருந்துதலை உணர்த்தியது . அலமந்தனன் என்னும் தன்மை ஒருமை இறந்தகால வினைமுற்று எச்சப் பொருட்டாய் வெம்பு கின்றேனை என்பதனோடு முடிந்தது . கோமலம்- இளமை . இறைவன் என்றும் மூவா விளநலமுடையனாதலின் ' கோமளமே ' என்றார் . முத்தியர் மூப்பிலார் 8 : 2 முப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி 300 : 0 என ஆளுடைய பிள்னையாரும் 415 மூவா முதலாய மூர்த்தி தன்னை 210 : 3 மூவாத மேனி முக்கண்ணினானை 242 : 4 மூவாத மேனி முக்கண்ணா போற்றி 209 : 2 என ஆளுடைய அரசும் அருளியமை காண்க . வேரோடு ராயினர் . கேரமளம் - மென்மையுமரம் . வெம்புதல் - வாடுதல் மரம் வெம்ப ( கலி 10 : 4 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . விண்ணவர் என்றது விண்ணில் வாழும் திருமால் பிரமன் இந்திரன் முத லான தேவர்களை இவர்கள் சிவஞானம் பெறாமையால் அணுகமாட்டா கண்ணமாட்டா · அணுகமாட்டாத . விண்ணகத் தேவரு நண் ணவு மாட்டா விழுப்பொருளே ( திருப்பள்ளி 9 ) என வருதலுங் காண்க கில் - ஆற்றலுணர்த்துவதோர் இடைநிலை . உம்பர் என்றது இறைவனது மேலாகிய சிவபுரத்தை உணர்த்தியது . உம்பருள்ளாய் . மேலாகிய சிவ புரத்தினுள்ளவனே ' ' ஊனையுருக்கு முடையானை உம்பரானை உம் பரா போற்றி ( சத 58:67 ) என வருவன காண்க . திருமால் முதலிய விண்ணவரும் நண்ணமாட்டாத சிவலோகத்துள்ளாராதவின் அரியரா யினும் எம்மனோர்க்கு எளியரி என்னும் கருத்தால் ' உத்தரகோச மங்கைக் கரசே ' என்றார் . # 1 செய்யுளாதலின் அம்பரமே லேனே அனல் காலொடு அப்பான வனே என ஐம்பூதங்களை முறை பிறழக் கூறினார் . அவுை தோற்ற முறை பற்றி அம்பரம் கால் அனல் அப்பு நிலன் எனவும் ஒடுக்க முறை மூவாவிளாலங்காட்டி திருமுருகாற்றுப்படை