திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

420 திருவாசக ஆராய்ச்சியுரை செய்து அதனால் சுருங்கச் செய்த அன்பினையுடைய பயனற்ற அடியே னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் வெற் றடி யேனையென்றது நின்பாற் பெற்ற திருவருளைக் கொண்டு அன்பினைப் பெருகச் செய்து பிழையைச் சுருக்க வேண்டியது முறையாகவும் அதற்கு மாறாக பிழையைப் பெருக்கி அன்பைச் சுருக்கி அதனால் பயனற்ற அடி யேனை என்றவாறு. பெற்றது கொண்டு என்பதற்கு பெற்ற இவ்வுட லைக் கொண்டு என்பாருமுளர், வெறுமை - இன்மை. விடிலோ கெடுவேன் என்றது அடியேன் உற்று மிகத் தேறி நின் றேனாக நீ கைவீடின் கெட்டொழிவேன் என்றவாறு. வில்லேர் புரு வத் துமையாள் கணவா வீடிற் கெடுவேன் (நாவு 08:4) எனத் தேவா ரத்து வருதலும் காண்க. ஓ- அசை. அடியேன் தன்னைத் தாங்குநர் மற்று இல்லை என மாறிக் கூட்டுக. மற்று-பிறிது பொருளில் வந்தது. தரங்குநர் - கேட்டினின்றும் விலக்கிப் பாதுகாப்பார். உயிர்களின் வாழ்வுக்கு முதன்மையான பரம்பொருளாயிருந்து அவற் றின் ஆணவ வல்விருளை நீக்கி விடுபேறு அளித்தற் பொருட்டுத்தனு கரண புவன போகங்களைக் கொடுத்துத் தகுதி வருவித்து அருள் செய் பவனாதவின் இறைவனை "வாழ்முதவே" என்றார். உறதல் - சார்தல். மிகத் தேறுதல் - ஆட்கொள்ளப்பட்டமையால் வீடுபேறு கிடைத்தல் ஒரு தலையெனத் தெளிதல், அடியேன் உற்று மிகத் தேறி நின்றேன் என் றமையால் எனக்குள்ளவனே என்பதற்கு உள்பொருளாய் வெளிவந்து ஆட்கொண்டவனே எனப் பொருள் உரைக்கப்பட்டது. இதன் கண். பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன் பின் வெற்றடியேனை விடுதி கண்டாய்; வீடிலோ கெடுவேன் என்பத னால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலனாதல் காண்சு. 23. 128. உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யற்றுமுனி வெள்ளன லேனை விடுதிகண் டாய் வியன் மரத்தடக்கைப் பொள்ளனல் வேழத் துரியாய் புலனின்கட் போதலொட்டா மெள்ளன வேமொய்க்கும் நெய்க்குடத் தன்னை யெறும்பெனவே. TOOFTHE ப - ரை : பொள்ளல் வியல் மா தட கை நல்வேழத்து உரியாய் - துளையினையுடைய மிகவும் பெரிய நீண்ட தும்பிக்கையையுடைய நல்ல கஜன் என்னும் யானையின் தோலையுடையவனே, நெய் குடம் தன்னை மொய்க்கும் எறும்பு என- நெய் நிறைந்த குடத்தை மொய்க்கும் எறும்பைப் போல, நின் கண் போதல் ஓட்டா புலன் மேள்ளனவே மொய்க்கும். உள்ளம் நின்பால் சாரவொட்டாதபடி ஐம்புலன்களும் மெல்ல மெல்லச் நீத்தல் விண்ணப்பம் குழ்கின்றன: உள்ளன நிற்க இல்லன செய்யும். உன் மையாயின இருக்கப் பொய்யாயினவற்றையே செய்கின்ற, மையல் துழனி வெள்ள அனலேனை - மயக்கமாகிய ஆரவாரத்தின் மிக்க வெம்மையையுடையேனை. விடுதி கண்டாய்- கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். 421 வேழத்துரியாய். கெய்க்குடம் தன்னை மொய்க்கும் எறும்பென உள் ளம் நின்பாற் சாரவிடாதபடி புலன்கள் மெல்ல மெல்ல மொய்க்கின்றன. அதனால் உள்ளன நிறக இல்லன செய்யும் மயக்கமாகிய ஆரவாரத்தின் மிக்க வெம்மையையுடையேனைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழி தவ் வேண்டும் என்பதாம். உள்ளன - இறைவனை அடைதற்குரிய மெய்யாகிய தருமங்கள்; இல் வன - நிலையில்லாத அறம் பாவங்கள். மையல் என்றது பிறவிக்கு வித் தாகிய காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றனுள் ஒன்றாகிய மயக்கம். அது ஒன்றை மற்றொன்றாக உணரும் உணர்வு. அதனால் பிறவித் துன்பங்கள் உளவாகும். பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும், மருளானாம் மாணாப் பிறப்பு " (குறள் 351) என்றார் திருவள்ளுாவரும். தழனி - ஆரவாரம். ''அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும்" (தே.ஞா 288:37) + வையைத் துழனியும்'' (கல்லாடம் 41: 34) "திரு மலி தழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே " (பெரிய கண்ணப் 19) என்பவைற்றிலும் இப்பொருட்டாதல் காண்க. அத்துன்பங்களின் மிகு தியை உணர்த்த 'வெள்ளம்' என்றார். அனல் வெம்மை, தன்பத்தை வெம்மையெனல் வெந்துவர் கோடையின் மாத்த ைகரப்ப" என்ப திலுங் காண்க. வெள்ள அனலேனை என்பது வெள்ளனலேனை என எதுகை நோக்கி அகரம் கெட்டது. இனி மையல் தழனி வெள்ளன் எனக் கொண்டு 'மயக்க ஆரவாரப் பெருக்கினேன்' எனவும், மையல் துழனி வெள்ளன் அலேனை எனக்கொண்டு மயக்கத்தையும் ஆரவாரத்தை யும் உடைய தூயனல்லாத சிறியேனை' எனவும் பொருளுரைப்பாருமுளர். சீர் வியன் மா தட - ஒரு பொருட் பன்மொழி. மிகுதிப் பொருளில் வந்தது. பொள்ளல் - துனை, பொள்ளல் தடக்கை வேழம் என இயை யும், "பொள்ளல் கிள் பனைக்கைக் கயந்தான் உகைத்த நற்காளை" (திருத்தொண்டர் திருவந்85) எனப் பதினொராந் திருமுறையில் வருத லுங் காண்க. நல்வேமும் என்றது சிறந்த யானைக்குரிய இயல்புகள் அமைந்து முழுவதும் யானை வடிவமான கஜன் என்னும் அசுரன் என்ற வாறு. உரியாய்-உரியைப் போர்த்தவனே. "அத்தியி னுரிதனை யழகுறப் போர்த்தவன்" (தே. ஞான 286 : 4). போதலொட்டா என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. புலன் மெள்ளனவே மொய்க்கும் என்றது கின்னால் ஆட்கொள்ளப்பட் டமையின் வாதனை செய்யாது அடங்கியிருந்த புலன்கள் நின்பிரிவு நீட்
420 திருவாசக ஆராய்ச்சியுரை செய்து அதனால் சுருங்கச் செய்த அன்பினையுடைய பயனற்ற அடியே னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் வெற் றடி யேனையென்றது நின்பாற் பெற்ற திருவருளைக் கொண்டு அன்பினைப் பெருகச் செய்து பிழையைச் சுருக்க வேண்டியது முறையாகவும் அதற்கு மாறாக பிழையைப் பெருக்கி அன்பைச் சுருக்கி அதனால் பயனற்ற அடி யேனை என்றவாறு . பெற்றது கொண்டு என்பதற்கு பெற்ற இவ்வுட லைக் கொண்டு என்பாருமுளர் வெறுமை - இன்மை . விடிலோ கெடுவேன் என்றது அடியேன் உற்று மிகத் தேறி நின் றேனாக நீ கைவீடின் கெட்டொழிவேன் என்றவாறு . வில்லேர் புரு வத் துமையாள் கணவா வீடிற் கெடுவேன் ( நாவு 08 : 4 ) எனத் தேவா ரத்து வருதலும் காண்க . ஓ- அசை . அடியேன் தன்னைத் தாங்குநர் மற்று இல்லை என மாறிக் கூட்டுக . மற்று - பிறிது பொருளில் வந்தது . தரங்குநர் - கேட்டினின்றும் விலக்கிப் பாதுகாப்பார் . உயிர்களின் வாழ்வுக்கு முதன்மையான பரம்பொருளாயிருந்து அவற் றின் ஆணவ வல்விருளை நீக்கி விடுபேறு அளித்தற் பொருட்டுத்தனு கரண புவன போகங்களைக் கொடுத்துத் தகுதி வருவித்து அருள் செய் பவனாதவின் இறைவனை வாழ்முதவே என்றார் . உறதல் - சார்தல் . மிகத் தேறுதல் - ஆட்கொள்ளப்பட்டமையால் வீடுபேறு கிடைத்தல் ஒரு தலையெனத் தெளிதல் அடியேன் உற்று மிகத் தேறி நின்றேன் என் றமையால் எனக்குள்ளவனே என்பதற்கு உள்பொருளாய் வெளிவந்து ஆட்கொண்டவனே எனப் பொருள் உரைக்கப்பட்டது . இதன் கண் . பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன் பின் வெற்றடியேனை விடுதி கண்டாய் ; வீடிலோ கெடுவேன் என்பத னால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலனாதல் காண்சு . 23 . 128. உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யற்றுமுனி வெள்ளன லேனை விடுதிகண் டாய் வியன் மரத்தடக்கைப் பொள்ளனல் வேழத் துரியாய் புலனின்கட் போதலொட்டா மெள்ளன வேமொய்க்கும் நெய்க்குடத் தன்னை யெறும்பெனவே . TOOFTHE - ரை : பொள்ளல் வியல் மா தட கை நல்வேழத்து உரியாய் - துளையினையுடைய மிகவும் பெரிய நீண்ட தும்பிக்கையையுடைய நல்ல கஜன் என்னும் யானையின் தோலையுடையவனே நெய் குடம் தன்னை மொய்க்கும் எறும்பு என- நெய் நிறைந்த குடத்தை மொய்க்கும் எறும்பைப் போல நின் கண் போதல் ஓட்டா புலன் மேள்ளனவே மொய்க்கும் . உள்ளம் நின்பால் சாரவொட்டாதபடி ஐம்புலன்களும் மெல்ல மெல்லச் நீத்தல் விண்ணப்பம் குழ்கின்றன : உள்ளன நிற்க இல்லன செய்யும் . உன் மையாயின இருக்கப் பொய்யாயினவற்றையே செய்கின்ற மையல் துழனி வெள்ள அனலேனை - மயக்கமாகிய ஆரவாரத்தின் மிக்க வெம்மையையுடையேனை . விடுதி கண்டாய்- கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . 421 வேழத்துரியாய் . கெய்க்குடம் தன்னை மொய்க்கும் எறும்பென உள் ளம் நின்பாற் சாரவிடாதபடி புலன்கள் மெல்ல மெல்ல மொய்க்கின்றன . அதனால் உள்ளன நிறக இல்லன செய்யும் மயக்கமாகிய ஆரவாரத்தின் மிக்க வெம்மையையுடையேனைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழி தவ் வேண்டும் என்பதாம் . உள்ளன - இறைவனை அடைதற்குரிய மெய்யாகிய தருமங்கள் ; இல் வன - நிலையில்லாத அறம் பாவங்கள் . மையல் என்றது பிறவிக்கு வித் தாகிய காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றனுள் ஒன்றாகிய மயக்கம் . அது ஒன்றை மற்றொன்றாக உணரும் உணர்வு . அதனால் பிறவித் துன்பங்கள் உளவாகும் . பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு ( குறள் 351 ) என்றார் திருவள்ளுாவரும் . தழனி - ஆரவாரம் . ' ' அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும் ( தே.ஞா 288 : 37 ) + வையைத் துழனியும் ' ' ( கல்லாடம் 41 : 34 ) திரு மலி தழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே ( பெரிய கண்ணப் 19 ) என்பவைற்றிலும் இப்பொருட்டாதல் காண்க . அத்துன்பங்களின் மிகு தியை உணர்த்த ' வெள்ளம் ' என்றார் . அனல் வெம்மை தன்பத்தை வெம்மையெனல் வெந்துவர் கோடையின் மாத்த ைகரப்ப என்ப திலுங் காண்க . வெள்ள அனலேனை என்பது வெள்ளனலேனை என எதுகை நோக்கி அகரம் கெட்டது . இனி மையல் தழனி வெள்ளன் எனக் கொண்டு ' மயக்க ஆரவாரப் பெருக்கினேன் ' எனவும் மையல் துழனி வெள்ளன் அலேனை எனக்கொண்டு மயக்கத்தையும் ஆரவாரத்தை யும் உடைய தூயனல்லாத சிறியேனை ' எனவும் பொருளுரைப்பாருமுளர் . சீர் வியன் மா தட - ஒரு பொருட் பன்மொழி . மிகுதிப் பொருளில் வந்தது . பொள்ளல் - துனை பொள்ளல் தடக்கை வேழம் என இயை யும் பொள்ளல் கிள் பனைக்கைக் கயந்தான் உகைத்த நற்காளை ( திருத்தொண்டர் திருவந் 85 ) எனப் பதினொராந் திருமுறையில் வருத லுங் காண்க . நல்வேமும் என்றது சிறந்த யானைக்குரிய இயல்புகள் அமைந்து முழுவதும் யானை வடிவமான கஜன் என்னும் அசுரன் என்ற வாறு . உரியாய் - உரியைப் போர்த்தவனே . அத்தியி னுரிதனை யழகுறப் போர்த்தவன் ( தே . ஞான 286 : 4 ) . போதலொட்டா என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது . புலன் மெள்ளனவே மொய்க்கும் என்றது கின்னால் ஆட்கொள்ளப்பட் டமையின் வாதனை செய்யாது அடங்கியிருந்த புலன்கள் நின்பிரிவு நீட்