திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இறைவனது அட்டமூர்த்தங்களுள் நிலம் நீர் தீ வளி வான் என்னும் பூதங்கள் ஐந்தும் அடங்குதலினாலும், அவை முறையே பொன்மை வெண்மை செம்மை கருமை புகைமை என்னும் ஐந்து நிறங்களும் உண்மையானும் நிறங்களோ ரைந்துடையாய்' என்றார். "மண்புனல் அனல்கால் வான் ........... 18 வண்பொன்மை வெண்மை செம்மை கறுப்பொடு தூமவண்ணம்" எனச் சிவஞானசித்தியாரிலும், (சூத் 2. செய் 67 ) "பொன்பார் புனல் வெண்மை பொங்குமனல் சிவப்பு வன்கால் கருமைவளர் வானதூமம் - என்பர்," என உண்மைவிளக்கத்தும் வருவனவும் காண்க. தேவர்கள் தமக்குரிய- சில ஆற்றல்களினாற் றம்மை முதல்வராகக் கருதிச் செருக்குறுவராதலின் அவர் செருக்கினை அறுத்தற்பொருட்டு இறை வன் மறைத்திருப்பானாதவின் விண்ணோர்களேத்த மறைந்திருந்தாய் என்றார். இறைவன் தேவர்களின் உதவியின்றித் திரிபுரங்களைச் சிரித்து எரிசெய்யவும் அதனை உணராத தேவர், தாமும் அவ்வென்றிக்குரியராகக் கருதி இறுமாந்தமையும் அஃதுணர்ந்த இறைவன் இயக்கவடிவங்கொண்டு எதிரில் நின்றகாலை அவர்கள் அவனை அறியாதிருந்தமையையும் கேநோப நிடதத்துட் காண்க. இயல்பாகவே ஆணவ மலத்தாற் பிணிக்கப்பட்டிருத்தலின் தம்மை 'வல்வினையேன்* என்றார். ''வல்வினையேன், ஆழியப்பா வுடையாய்" (அடைக்கலப் 6) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. மறைந் திட மூடிய மாய இருளை என்றது அறிவு சிறிதும் விளங்காது தம்மை மூடிக்கொண்டு உடனிருக்கின்ற வஞ்சகத்தையுடைய ஆணவ இருளை என்ற வாறு, மாயம்-வஞ்சனை. " மடங்கல்போற் சினைஇ மாயஞ்செ யவுணரை" (கலி 2 :3) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. உயிர்களை அநாதிசம்பந்தமாகப் பற்றியிருக்கின்ற ஆணவ இருளை வலிகெடச் செய்தற்பொருட்டு நல்வினை தீவினையென்னும் தொழில்களைச் செய்யும்படி பிரவாக அநாதிரம்பந்தமாகிய கன்மமலத்தோடு சேர்ப்பன். அறம் பாவம் என்னும் கன்மம் நிகழ்தற்கு உடம்பு இன்றியமையாது இருத் தலின் பிரவாக அநாதிசம்பந்தமான மாயையோடு சேர்ப்பன்; இம்முறை மையே,'என்னை முடிய மாய இருளை அறம் பாவம் என்னும் அருங்கயிற் றாற் கட்டி, ஒன்பது வாயிற்குடிலைச் சிறியேற்கு நல்கி' என அருளிச் செய் யப்பட்டது. புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடியென்றது புறத்தே தோலைப் போர்வையாக இட்டு அதனால் உடம்பில் எங்குமுள்ள புழுக் களையும் அழுக்குகளையும் மறைத்து என்றவாறு. 19 சிவபுராணம் மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல்போர்த்த, குப்பாயம்' ஆசை 2. "அளிபுண் ணகத்துப் புறந்தோல்மூடி யடியேனுடைய யாக்கை ஆசை 5. என வருவன காண்க. மூடி என்பதற்கு முடிச்செய்த என ஒரு சொல் வருவித்துரைக்க. இதனால் ஒன்பது வாயிற்குடிலின் அமைப்புக் கூறிய வாறு. மலஞ்சோரு மொன்பது வாயிற்குடில் = மலம் சலம் தாது பிழை குறும்பி சளி என்னும் அழுக்குகள் சோருகின்ற ஒன்பது வாயில்களை யுடைய உடம்பாகிய குடிசை. ''கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல் ஏல்வுடைத் தாவ மைத்தங் கேஞ்சா லேகம் பண்ணி மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட ரே காவு 33:4. "புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலான் மூடி ஒழுக்கறா வொன்பதுவா யொற்றுமை யொன்று மில்லை" நாவு 52-2. எனத் தேவாரத்தும் வருவன காண்க. மலங்குதல் - கலங்குதல், இப்பொருட்டாதல் கதுவே கலுழல் கலங்குதல் மலங்குதல்' என்னும் பிங்களந்தையானும் (7:162) அறிக. புலனைந்தும் வஞ்சனையைச் செய்தல் - ஐம்புலன்களும் தம்மைக் கவருமாறு ஐம்பொறிகளையும் மயக்கித் தம்பால் இழுத்தல். அங்ஙனம் பொறிகள் புவன்களாலே மயக்கப்படுதலால் மாறுபட்டு விடுகின்றது. அதனால் அம் மனம் அன்பாகிக் கசிந்துள்ளுருகும் நலம் அற்றதாகின்றது. விலங்கும் என்பதற்கு எதிரில் நின்று தடுக்கும் எனினுமாம். உனக்கு - உன்னிடத்து. வேற்றுமை மயக்கம். "எம்பிரான் தில்லைச் சூம்பொழிற்கே" (திருக் கோவை 167) என்புழிப்போல, கசிந்துள்ளுருகுதல் - மனம் கசிந்து உள்ளே யுருகுதல். மாய இருளை (51) அருங்கயிற்றாற் கட்டி (52) புழுவழுக்கு மூடிச் செய்த (53) குடிலை (54) நல்கி (58) என முடிக்க. நிலந்தன்மேல் வந்தருளியென்றது இறைவன் இந்நிலவுலகத்தே குரு வடிவில் எழுந்தருளிவந்து என்றவாறு. "செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய பொங்குமலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி'' அம்மானை 1. பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி" வார்த்7. என வருவன காண்க. நீள்கழல்கள் காட்டியென்றது எல்லைகாண்டற்கரிய நீண்ட திருவடியைக் காணுமாறு செய்து என்றலைமேற் சூட்டி அருள் செய்து என்றவாறு.
திருவாசக ஆராய்ச்சியுரை இறைவனது அட்டமூர்த்தங்களுள் நிலம் நீர் தீ வளி வான் என்னும் பூதங்கள் ஐந்தும் அடங்குதலினாலும் அவை முறையே பொன்மை வெண்மை செம்மை கருமை புகைமை என்னும் ஐந்து நிறங்களும் உண்மையானும் நிறங்களோ ரைந்துடையாய் ' என்றார் . மண்புனல் அனல்கால் வான் ........... 18 வண்பொன்மை வெண்மை செம்மை கறுப்பொடு தூமவண்ணம் எனச் சிவஞானசித்தியாரிலும் ( சூத் 2. செய் 67 ) பொன்பார் புனல் வெண்மை பொங்குமனல் சிவப்பு வன்கால் கருமைவளர் வானதூமம் - என்பர் என உண்மைவிளக்கத்தும் வருவனவும் காண்க . தேவர்கள் தமக்குரிய- சில ஆற்றல்களினாற் றம்மை முதல்வராகக் கருதிச் செருக்குறுவராதலின் அவர் செருக்கினை அறுத்தற்பொருட்டு இறை வன் மறைத்திருப்பானாதவின் விண்ணோர்களேத்த மறைந்திருந்தாய் என்றார் . இறைவன் தேவர்களின் உதவியின்றித் திரிபுரங்களைச் சிரித்து எரிசெய்யவும் அதனை உணராத தேவர் தாமும் அவ்வென்றிக்குரியராகக் கருதி இறுமாந்தமையும் அஃதுணர்ந்த இறைவன் இயக்கவடிவங்கொண்டு எதிரில் நின்றகாலை அவர்கள் அவனை அறியாதிருந்தமையையும் கேநோப நிடதத்துட் காண்க . இயல்பாகவே ஆணவ மலத்தாற் பிணிக்கப்பட்டிருத்தலின் தம்மை ' வல்வினையேன் * என்றார் . ' ' வல்வினையேன் ஆழியப்பா வுடையாய் ( அடைக்கலப் 6 ) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க . மறைந் திட மூடிய மாய இருளை என்றது அறிவு சிறிதும் விளங்காது தம்மை மூடிக்கொண்டு உடனிருக்கின்ற வஞ்சகத்தையுடைய ஆணவ இருளை என்ற வாறு மாயம் - வஞ்சனை . மடங்கல்போற் சினைஇ மாயஞ்செ யவுணரை ( கலி 2 : 3 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . உயிர்களை அநாதிசம்பந்தமாகப் பற்றியிருக்கின்ற ஆணவ இருளை வலிகெடச் செய்தற்பொருட்டு நல்வினை தீவினையென்னும் தொழில்களைச் செய்யும்படி பிரவாக அநாதிரம்பந்தமாகிய கன்மமலத்தோடு சேர்ப்பன் . அறம் பாவம் என்னும் கன்மம் நிகழ்தற்கு உடம்பு இன்றியமையாது இருத் தலின் பிரவாக அநாதிசம்பந்தமான மாயையோடு சேர்ப்பன் ; இம்முறை மையே ' என்னை முடிய மாய இருளை அறம் பாவம் என்னும் அருங்கயிற் றாற் கட்டி ஒன்பது வாயிற்குடிலைச் சிறியேற்கு நல்கி ' என அருளிச் செய் யப்பட்டது . புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடியென்றது புறத்தே தோலைப் போர்வையாக இட்டு அதனால் உடம்பில் எங்குமுள்ள புழுக் களையும் அழுக்குகளையும் மறைத்து என்றவாறு . 19 சிவபுராணம் மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல்போர்த்த குப்பாயம் ' ஆசை 2 . அளிபுண் ணகத்துப் புறந்தோல்மூடி யடியேனுடைய யாக்கை ஆசை 5 . என வருவன காண்க . மூடி என்பதற்கு முடிச்செய்த என ஒரு சொல் வருவித்துரைக்க . இதனால் ஒன்பது வாயிற்குடிலின் அமைப்புக் கூறிய வாறு . மலஞ்சோரு மொன்பது வாயிற்குடில் = மலம் சலம் தாது பிழை குறும்பி சளி என்னும் அழுக்குகள் சோருகின்ற ஒன்பது வாயில்களை யுடைய உடம்பாகிய குடிசை . ' ' கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல் ஏல்வுடைத் தாவ மைத்தங் கேஞ்சா லேகம் பண்ணி மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட ரே காவு 33 : 4 . புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலான் மூடி ஒழுக்கறா வொன்பதுவா யொற்றுமை யொன்று மில்லை நாவு 52-2 . எனத் தேவாரத்தும் வருவன காண்க . மலங்குதல் - கலங்குதல் இப்பொருட்டாதல் கதுவே கலுழல் கலங்குதல் மலங்குதல் ' என்னும் பிங்களந்தையானும் ( 7 : 162 ) அறிக . புலனைந்தும் வஞ்சனையைச் செய்தல் - ஐம்புலன்களும் தம்மைக் கவருமாறு ஐம்பொறிகளையும் மயக்கித் தம்பால் இழுத்தல் . அங்ஙனம் பொறிகள் புவன்களாலே மயக்கப்படுதலால் மாறுபட்டு விடுகின்றது . அதனால் அம் மனம் அன்பாகிக் கசிந்துள்ளுருகும் நலம் அற்றதாகின்றது . விலங்கும் என்பதற்கு எதிரில் நின்று தடுக்கும் எனினுமாம் . உனக்கு - உன்னிடத்து . வேற்றுமை மயக்கம் . எம்பிரான் தில்லைச் சூம்பொழிற்கே ( திருக் கோவை 167 ) என்புழிப்போல கசிந்துள்ளுருகுதல் - மனம் கசிந்து உள்ளே யுருகுதல் . மாய இருளை ( 51 ) அருங்கயிற்றாற் கட்டி ( 52 ) புழுவழுக்கு மூடிச் செய்த ( 53 ) குடிலை ( 54 ) நல்கி ( 58 ) என முடிக்க . நிலந்தன்மேல் வந்தருளியென்றது இறைவன் இந்நிலவுலகத்தே குரு வடிவில் எழுந்தருளிவந்து என்றவாறு . செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய பொங்குமலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி ' ' அம்மானை 1 . பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி வார்த் 7 . என வருவன காண்க . நீள்கழல்கள் காட்டியென்றது எல்லைகாண்டற்கரிய நீண்ட திருவடியைக் காணுமாறு செய்து என்றலைமேற் சூட்டி அருள் செய்து என்றவாறு .