திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

436 திருவாசக ஆராய்ச்சியுரை தாமரை மேனி - செந்தாமரை போலும் திருமேனி. "செந்தாமரைக் காடனைய திருமேனி " (சத 20) எனவும், "சீருடைச் செங்கமலத்தில் திகழுருவாகிய செல்வன்'' (குயிற் 9) எனவும், "பூந்தாமரை மேனி'' (தே.நாவு 112:3) எனவும் வருவன காண்க. மேனி-நிறம். ஒப்பிலாதவன் - தானே தனக்கு ஒப்பன்றி வேறு ஒப்பு இல்லாதவன். நா வு 206:7 நாவு 252:8 21 H எனத் தேவாரத்தும், 24 21 இணையொருவர் தாமல் லால் யாரு மில்லார்" தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்'' "இணையு மளவு மில்லா விறையோன்" (202) தாமே தமக்கொப்பு மற்றில்லவர்'' (228) ஓரளவில்லா வொருவன் "" " (308) எனத் திருகோவையாரினும் வருவன காண்க. ஒப்பில்லாதவனே என் றதன் ஆற்றலால் உயர்வில்லாதவனே என்பதும் கொள்ளப்படும். மலங்கள் ஐந்து என்பதனை "ஐம்மலத்தாரு மதித்த சகலத்தர்' (திருமந் 2218) எனத் திருமூவர் கூறுதலும் காண்க. மலங்கள் ஐந்தா வன : ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்பன. ஆணவ மாகும் அதீதமேன் மாயையும் பணுந் துரியஞ் சுழுத்தி பொய்க் காமியம் பேணுங் கனவும் மாமாயை திரோதாயி காணு நனவும் மலக்களப் பாகுமே " 2220 எனத் திருமந்திரத்தும், மும்மல நெல்லி னுக்கு முளையொடு தவிடு உமிப்போல் மம்மர் செய்து அணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று பொய்மை செய் போசு பந்த போத்திருத் துவங்கள் பண்ணும் இம்மலம் மூன்றி னோடும் இருமலம் இசைப்பன் இன்னும்'' சூத். 2 செய் 88 மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்றும் ஏயுமும்மலங்கள் தத்தந் தொழிலினை இயற்ற ஏவுந் தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும் ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அனைந்து நிற்கும் " சூத் 2 செய் 87 நீத்தல் விண்ணப்பம் 437 "மலமாயை கன்மம் மாயே யந்திரோ நாயி மன்னி" சூத் 2 செய் 88 எனச் சிவஞான சித்தியாரிலும், ''ஒன்றாகி யழிவின்றிப் பலவாற்றலுடைத்தாய்ச் செம்புறு மாசென்னத், தொன்றாகி யருள்விளை வி னீங்கும் இருள்மலத்துடன் அத் தொடக்கு நீப்ப, மின்றாவு முடலாதி நல்கு மிருமாயை யீருவினைகட்கேது. வென்றோது சுருமமிவை நிகழ்த்து ஓரோதமு மெனும் ஐவகைப் பாசத்தை'" தழுவக் குழைந்த 61 என காஞ்சி புராணத்தும் வருவன காண்க. மலங்கள் ஐந்தனுள் ஆணவமலம் என்பது எண்ணிறந்த சத்திகளான் எண்ணிறந்த உயிர்களிலுஞ் செம்பிற் களிம்பு போல அநாதியே விரவி கிற்ப தொன்ருய்க் கேவலத்தில் ஆவரசக்தியானுஞ் சகலத்தில் அதோ நியாமிகா சத்தியானும் அஞ்ஞான நிகழ்ச்சிக்குக் காரணமாய் நிற்பது. கன்மம் என்பது சதசத்தாற் செய்யப்படுதலின் அறம் பாவமென்று இருவகைத்தாய் இருவகைக்கும் உரிய பயன் தருதலாற் செயப்படுபொரு ளாகிய தனக்கு முதற் காரணம் உண்டென்பது காட்டி கான்மிய மலம் எனப்பட்டுப் பந்தமுறுத்துதலொப்புமையான் மும்மலத்துள் ஒன்றென எண்ணப்பட்டு நன்மை தீமையாகிய காரணவேதுவானும் இன்பத் துன்ப மாகிய காரியவே துவரனும் அனுமித்தறியுமாறு நிற்பது. பது நீத்தமாகியும் அருவமாகியும் ஒன்றுகியும் உலகம் ஓர் வித்தாகியும் சடமாகியும் எங்கும் வியாபகமாகியும் முதல்வனுக்கோர் பரிக்கிரகசத்தியாகியும் புவன் போகமும் தனுகரணமுமாக உயிர்களின் பொருட்டு விரிந்ததோர் மலமாகியும் உள்ள இலக்கணங்களையுடையது. மாயேயம் என்பது மாயையின் காரியங்களாகும். திரோதாயி என்பது உயிரோடு ஒன்றி நின்று மலங்களைத் தொழிற்படுத்தி பாகம் வருவிக்கும் மறைப்புச் சத்தி. மாயை என் உண்டாவதற்கு மத்துற பொரு தயிரின் மலங்கள் ஐந்தாத் சுழல்வன் என்றது, மத்து மிகப் பொருந்தி அலைத்தலான் கரைந்து சுழலும் தயிரைப் போல ஆணவ முதலிய மலங்கள் ஐந்தால் சுழல்கின்றேனாயினேன் என்றவாறு. சுழல் வன் என்னும் எதிர்காலமுற்று சுழல்கின்றேனாயினேன் என நிகழ்காலப் பொருளில் வந்தது. இறைவனால் ஆட்கொள்ளப்பட்டும் சுழலும் நிலைமை உண்டாயது. அவ்விறைவன் பிரிவின் நீட்சி பற்றியாகும். பது மிகுதிப் பொருளில் வந்த உரிச்சொல். என் இதன் கண், " மலங்களைந்தாற் சுழல்வன் '', "விட்டிடுதி கண்டாய் '' என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண் டும் என்பதும் புலப்படுதல் காண்க. 29.
436 திருவாசக ஆராய்ச்சியுரை தாமரை மேனி - செந்தாமரை போலும் திருமேனி . செந்தாமரைக் காடனைய திருமேனி ( சத 20 ) எனவும் சீருடைச் செங்கமலத்தில் திகழுருவாகிய செல்வன் ' ' ( குயிற் 9 ) எனவும் பூந்தாமரை மேனி ' ' ( தே.நாவு 112 : 3 ) எனவும் வருவன காண்க . மேனி - நிறம் . ஒப்பிலாதவன் - தானே தனக்கு ஒப்பன்றி வேறு ஒப்பு இல்லாதவன் . நா வு 206 : 7 நாவு 252 : 8 21 H எனத் தேவாரத்தும் 24 21 இணையொருவர் தாமல் லால் யாரு மில்லார் தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய் ' ' இணையு மளவு மில்லா விறையோன் ( 202 ) தாமே தமக்கொப்பு மற்றில்லவர் ' ' ( 228 ) ஓரளவில்லா வொருவன் ( 308 ) எனத் திருகோவையாரினும் வருவன காண்க . ஒப்பில்லாதவனே என் றதன் ஆற்றலால் உயர்வில்லாதவனே என்பதும் கொள்ளப்படும் . மலங்கள் ஐந்து என்பதனை ஐம்மலத்தாரு மதித்த சகலத்தர் ' ( திருமந் 2218 ) எனத் திருமூவர் கூறுதலும் காண்க . மலங்கள் ஐந்தா வன : ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்பன . ஆணவ மாகும் அதீதமேன் மாயையும் பணுந் துரியஞ் சுழுத்தி பொய்க் காமியம் பேணுங் கனவும் மாமாயை திரோதாயி காணு நனவும் மலக்களப் பாகுமே 2220 எனத் திருமந்திரத்தும் மும்மல நெல்லி னுக்கு முளையொடு தவிடு உமிப்போல் மம்மர் செய்து அணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று பொய்மை செய் போசு பந்த போத்திருத் துவங்கள் பண்ணும் இம்மலம் மூன்றி னோடும் இருமலம் இசைப்பன் இன்னும் ' ' சூத் . 2 செய் 88 மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்றும் ஏயுமும்மலங்கள் தத்தந் தொழிலினை இயற்ற ஏவுந் தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும் ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அனைந்து நிற்கும் சூத் 2 செய் 87 நீத்தல் விண்ணப்பம் 437 மலமாயை கன்மம் மாயே யந்திரோ நாயி மன்னி சூத் 2 செய் 88 எனச் சிவஞான சித்தியாரிலும் ' ' ஒன்றாகி யழிவின்றிப் பலவாற்றலுடைத்தாய்ச் செம்புறு மாசென்னத் தொன்றாகி யருள்விளை வி னீங்கும் இருள்மலத்துடன் அத் தொடக்கு நீப்ப மின்றாவு முடலாதி நல்கு மிருமாயை யீருவினைகட்கேது . வென்றோது சுருமமிவை நிகழ்த்து ஓரோதமு மெனும் ஐவகைப் பாசத்தை ' தழுவக் குழைந்த 61 என காஞ்சி புராணத்தும் வருவன காண்க . மலங்கள் ஐந்தனுள் ஆணவமலம் என்பது எண்ணிறந்த சத்திகளான் எண்ணிறந்த உயிர்களிலுஞ் செம்பிற் களிம்பு போல அநாதியே விரவி கிற்ப தொன்ருய்க் கேவலத்தில் ஆவரசக்தியானுஞ் சகலத்தில் அதோ நியாமிகா சத்தியானும் அஞ்ஞான நிகழ்ச்சிக்குக் காரணமாய் நிற்பது . கன்மம் என்பது சதசத்தாற் செய்யப்படுதலின் அறம் பாவமென்று இருவகைத்தாய் இருவகைக்கும் உரிய பயன் தருதலாற் செயப்படுபொரு ளாகிய தனக்கு முதற் காரணம் உண்டென்பது காட்டி கான்மிய மலம் எனப்பட்டுப் பந்தமுறுத்துதலொப்புமையான் மும்மலத்துள் ஒன்றென எண்ணப்பட்டு நன்மை தீமையாகிய காரணவேதுவானும் இன்பத் துன்ப மாகிய காரியவே துவரனும் அனுமித்தறியுமாறு நிற்பது . பது நீத்தமாகியும் அருவமாகியும் ஒன்றுகியும் உலகம் ஓர் வித்தாகியும் சடமாகியும் எங்கும் வியாபகமாகியும் முதல்வனுக்கோர் பரிக்கிரகசத்தியாகியும் புவன் போகமும் தனுகரணமுமாக உயிர்களின் பொருட்டு விரிந்ததோர் மலமாகியும் உள்ள இலக்கணங்களையுடையது . மாயேயம் என்பது மாயையின் காரியங்களாகும் . திரோதாயி என்பது உயிரோடு ஒன்றி நின்று மலங்களைத் தொழிற்படுத்தி பாகம் வருவிக்கும் மறைப்புச் சத்தி . மாயை என் உண்டாவதற்கு மத்துற பொரு தயிரின் மலங்கள் ஐந்தாத் சுழல்வன் என்றது மத்து மிகப் பொருந்தி அலைத்தலான் கரைந்து சுழலும் தயிரைப் போல ஆணவ முதலிய மலங்கள் ஐந்தால் சுழல்கின்றேனாயினேன் என்றவாறு . சுழல் வன் என்னும் எதிர்காலமுற்று சுழல்கின்றேனாயினேன் என நிகழ்காலப் பொருளில் வந்தது . இறைவனால் ஆட்கொள்ளப்பட்டும் சுழலும் நிலைமை உண்டாயது . அவ்விறைவன் பிரிவின் நீட்சி பற்றியாகும் . பது மிகுதிப் பொருளில் வந்த உரிச்சொல் . என் இதன் கண் மலங்களைந்தாற் சுழல்வன் ' ' விட்டிடுதி கண்டாய் ' ' என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண் டும் என்பதும் புலப்படுதல் காண்க . 29 .