திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

438 திருவாசக ஆராய்ச்சியுரை 134. மத்துறு தண்டயி சிற்புலன் றீக்கது வக்கலங்கி வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண் டலைமிலைச்சிக் கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் தத்துறு நீறுடன் ஆரச்செஞ் சாத்தணி சச்சையனே. பரை: வெண் த ைமிலைச்சி - வெண்மையான நகுசிரம் என்னும் தலையினைத் தலையிற் சூடி, கொத்து உறு போது மிலைந்து - கொத்துக் களாகப் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி குடர்நெடு மாலை சுற்றி- குடர் போலும் நெடிய மாலையைக் கழுத்தைச் சுற்றித் தொங்க அணிந்து. தத்து உறு நீறுடன் - பரவப் பூசிய திருநீற்றுடன், செம் ஆர சாந்து அணி சச்சையனே - செஞ்சுந்தனக் குழம்பை அணிந்த ஆராய்ந்தறியப்படுபவனே. புலன் தீ கதுவ - ஐம்புலன்களாகிய நெருப்புப் பற்றி வெதுப்ப, மத்து உறு தண் தயிரிற் கலங்கி - மத்துப் பொருந்திய குளிர்ந்த தயிரைப் போலக் கலங்கி, வித்து உறுவேனை விடுதி கண் டாய் - பிறவிக்கு வித்தாக உறுவேனைக் கைவிடுகின்றனையோ? கைவிடா தொழிதல் வேண்டும். வெண்டலை மாவை மிலைச்சி கொத்தாகப் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் குடிக் குடர்நெடு மாலையைச் சுற்றித் தொங்க அணிந்து நீறுடன் செஞ்சாந்து அணிந்த சச்சையனே, புலன்களாகிய தீக்கதுவ மத்துறு தண் தயிரிற் கலங்கி பிறவிக்கு வித்தாக உறுவேனைக் கைவிடு கின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். புலன் றீக்கதுவ மத்துறு தண்டயிரீற் கலங்கி எனக் கூட்டுக. சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந்தானும்" நாவு 52:9 "பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப சிந்தை'' நாவு 96:3. மத்தார் தயிரேபோன் மறுகுமென் எனத் தேவாரத்தும் வருவன காண்க. புலனைத் தீ என்றது தீ தான் பற்றிய பொருனை எரிப்பது போலப் புலன் உயிரைக் கெடுத்தலின். "ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய அழிப்பனாய் வாழமாட்டேன் " '"ஐவர் வந்து முறைமுறை செய்ய அற்றுநாள் அலைந்து போனேன்" (தே. காவு 52:2:52:8) என வருவன காண்க. கதவ - பற்றி அழிக்க எனினு மமையும், வீத்துறுவேனை என்றது பிறவிக்கு வித்தாக உறுவேனை என்ற வாறு. பிறவிக்கு வித்தாதல் புலன்களின் வழிச் சென்று கீழ்மையடைதல். 11 வெண்டவை - நகுசிரம். மிலைச்சி - தலையிற் குடி, 'நலம் பெறுசென்னி நாமுற மிலைச்சி" குறிஞ்சி 116. தாருகாவனத்து இருடிகள் தாம் செய்த ஆபிசார வேள்வியினின்றும் தோன்றிய வெண்டக்யை இறைவனைக் கொல்லுமாறு ஏவுதலும் இறைவன் அதனைப் பிடித்து சடைமுடிக்கண் வைத்து நின் செயலினைப் புரீதி யென்றளன். அவ்வளவில் அதன் ஆற் றல் கெட்டது. இதனை, நீத்தல் விண்ணப்பம் "சீற்றமா முனிவர் வேள்வித் தீயில் வெண்டலைதான் ஒன்று தோற்றியே யுலகம் யாவுந் தொலைய நக் கெழுந்த தன்றே' எனக் கந்தபுராணத்து வருதலுமறிக. "பின்றழ் சடைமேல் நகுவெண்டவையா" ஞான 71: 4 செங்க ணரவு நகுவெண்டலையு முகிழ் வெண்டிங்களுந் தங்கு சடையன் ** ஞான 74:5 "" "புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய ஈனையுஞ் சடைமே லோர் நகுவெண்டலை குடி' 'நகுவெண்டலையர் களிர் கங்கை தங்கு முடியர் '' "கிடந்த நிர்ச் சடையிசைப் பிறையு மேங்கவே கிடந்து தானகுதலைக் கெடில வாணரே "நஞ்சமா நாக நகுசிர மாலை நகுவெண்டலை தஞ்சமா வாழுஞ் சரக்கறையோ வென்தனி செஞ்சமே" எனத் தேவாரத்தம் வருவன காண்க. ''நக்கெழு சிரத்தை யன்னார் நாதன்மேல் விடுத்த லோடும் அக்கணம் அணுக வற்றால் அகிலம திறவா வண்ணம் முக்கணன் அருள்செய் தந்த முண்டமுண் டகக்கை பற்றிச் செக்கரஞ் சடைமேற் கொண்டுன் செயலினைப் புரிதி யென்றான்'' கதீசி. 109. # " 439 நாவு 10:8 த வீசி 108 ஞான 84:1 நாவு8:? காவு 111 : 4 கொத்துறு போது மிலைந்து - கொத்தாகப் பொருந்திய கொன்றை மாலையைச் சூடி. "கொத்தினிற் பொலி கொன்றை கொடுக்கிலே" (நாவு 152:2:259:10) ''கொந்தணவு கறுங்கொன்றை மாலையானை" தேவாரத்தும், "கொந்தார் நறுங் கொன்றைக் கூத்தன்" (276) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க. மிலைதல் - குடுதல் "பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் " (44) என்னும் திருமுருகாற்றுப்படை யினுங் காண்க. கழுத்திலணிந்து மார்பில் தொங்கும் மாலை குடர்போல் நெடிதாயிருத் தலின் குடர் நெடுமாவை என்றார். இனி, சர்வசங்கார காரணன் தானே என்பது பேசதர தன்னால் அழிக்கப்பட்ட தேவத் தலைவர்களது எழும்பு தலையோடுகளை அணிவது போலக் குடரையும் அணிந்தான் எனக் கொள்ளு தலுமொன்று. தத்துதல் - பாய்தல்,பரத்தல். தத்தரி நெடுங்கட் டன் மகள்'' (மணி 2:7) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க தத்துறு நிறு -பரவம் பூசப்பட்ட நீறு. "மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
438 திருவாசக ஆராய்ச்சியுரை 134. மத்துறு தண்டயி சிற்புலன் றீக்கது வக்கலங்கி வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண் டலைமிலைச்சிக் கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் தத்துறு நீறுடன் ஆரச்செஞ் சாத்தணி சச்சையனே . பரை : வெண் ைமிலைச்சி - வெண்மையான நகுசிரம் என்னும் தலையினைத் தலையிற் சூடி கொத்து உறு போது மிலைந்து - கொத்துக் களாகப் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி குடர்நெடு மாலை சுற்றி- குடர் போலும் நெடிய மாலையைக் கழுத்தைச் சுற்றித் தொங்க அணிந்து . தத்து உறு நீறுடன் - பரவப் பூசிய திருநீற்றுடன் செம் ஆர சாந்து அணி சச்சையனே - செஞ்சுந்தனக் குழம்பை அணிந்த ஆராய்ந்தறியப்படுபவனே . புலன் தீ கதுவ - ஐம்புலன்களாகிய நெருப்புப் பற்றி வெதுப்ப மத்து உறு தண் தயிரிற் கலங்கி - மத்துப் பொருந்திய குளிர்ந்த தயிரைப் போலக் கலங்கி வித்து உறுவேனை விடுதி கண் டாய் - பிறவிக்கு வித்தாக உறுவேனைக் கைவிடுகின்றனையோ ? கைவிடா தொழிதல் வேண்டும் . வெண்டலை மாவை மிலைச்சி கொத்தாகப் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் குடிக் குடர்நெடு மாலையைச் சுற்றித் தொங்க அணிந்து நீறுடன் செஞ்சாந்து அணிந்த சச்சையனே புலன்களாகிய தீக்கதுவ மத்துறு தண் தயிரிற் கலங்கி பிறவிக்கு வித்தாக உறுவேனைக் கைவிடு கின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . புலன் றீக்கதுவ மத்துறு தண்டயிரீற் கலங்கி எனக் கூட்டுக . சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந்தானும் நாவு 52 : 9 பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப சிந்தை ' ' நாவு 96 : 3 . மத்தார் தயிரேபோன் மறுகுமென் எனத் தேவாரத்தும் வருவன காண்க . புலனைத் தீ என்றது தீ தான் பற்றிய பொருனை எரிப்பது போலப் புலன் உயிரைக் கெடுத்தலின் . ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய அழிப்பனாய் வாழமாட்டேன் ' ஐவர் வந்து முறைமுறை செய்ய அற்றுநாள் அலைந்து போனேன் ( தே . காவு 52 : 2 : 52 : 8 ) என வருவன காண்க . கதவ - பற்றி அழிக்க எனினு மமையும் வீத்துறுவேனை என்றது பிறவிக்கு வித்தாக உறுவேனை என்ற வாறு . பிறவிக்கு வித்தாதல் புலன்களின் வழிச் சென்று கீழ்மையடைதல் . 11 வெண்டவை - நகுசிரம் . மிலைச்சி - தலையிற் குடி ' நலம் பெறுசென்னி நாமுற மிலைச்சி குறிஞ்சி 116. தாருகாவனத்து இருடிகள் தாம் செய்த ஆபிசார வேள்வியினின்றும் தோன்றிய வெண்டக்யை இறைவனைக் கொல்லுமாறு ஏவுதலும் இறைவன் அதனைப் பிடித்து சடைமுடிக்கண் வைத்து நின் செயலினைப் புரீதி யென்றளன் . அவ்வளவில் அதன் ஆற் றல் கெட்டது . இதனை நீத்தல் விண்ணப்பம் சீற்றமா முனிவர் வேள்வித் தீயில் வெண்டலைதான் ஒன்று தோற்றியே யுலகம் யாவுந் தொலைய நக் கெழுந்த தன்றே ' எனக் கந்தபுராணத்து வருதலுமறிக . பின்றழ் சடைமேல் நகுவெண்டவையா ஞான 71 : 4 செங்க ணரவு நகுவெண்டலையு முகிழ் வெண்டிங்களுந் தங்கு சடையன் ** ஞான 74 : 5 புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய ஈனையுஞ் சடைமே லோர் நகுவெண்டலை குடி ' ' நகுவெண்டலையர் களிர் கங்கை தங்கு முடியர் ' ' கிடந்த நிர்ச் சடையிசைப் பிறையு மேங்கவே கிடந்து தானகுதலைக் கெடில வாணரே நஞ்சமா நாக நகுசிர மாலை நகுவெண்டலை தஞ்சமா வாழுஞ் சரக்கறையோ வென்தனி செஞ்சமே எனத் தேவாரத்தம் வருவன காண்க . ' ' நக்கெழு சிரத்தை யன்னார் நாதன்மேல் விடுத்த லோடும் அக்கணம் அணுக வற்றால் அகிலம திறவா வண்ணம் முக்கணன் அருள்செய் தந்த முண்டமுண் டகக்கை பற்றிச் செக்கரஞ் சடைமேற் கொண்டுன் செயலினைப் புரிதி யென்றான் ' ' கதீசி . 109 . # 439 நாவு 10 : 8 வீசி 108 ஞான 84 : 1 நாவு 8 :? காவு 111 : 4 கொத்துறு போது மிலைந்து - கொத்தாகப் பொருந்திய கொன்றை மாலையைச் சூடி . கொத்தினிற் பொலி கொன்றை கொடுக்கிலே ( நாவு 152 : 2 : 259 : 10 ) ' ' கொந்தணவு கறுங்கொன்றை மாலையானை தேவாரத்தும் கொந்தார் நறுங் கொன்றைக் கூத்தன் ( 276 ) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க . மிலைதல் - குடுதல் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் ( 44 ) என்னும் திருமுருகாற்றுப்படை யினுங் காண்க . கழுத்திலணிந்து மார்பில் தொங்கும் மாலை குடர்போல் நெடிதாயிருத் தலின் குடர் நெடுமாவை என்றார் . இனி சர்வசங்கார காரணன் தானே என்பது பேசதர தன்னால் அழிக்கப்பட்ட தேவத் தலைவர்களது எழும்பு தலையோடுகளை அணிவது போலக் குடரையும் அணிந்தான் எனக் கொள்ளு தலுமொன்று . தத்துதல் - பாய்தல் பரத்தல் . தத்தரி நெடுங்கட் டன் மகள் ' ' ( மணி 2 : 7 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க தத்துறு நிறு -பரவம் பூசப்பட்ட நீறு . மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த