திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

KRIS திருவாசக ஆரா காய்ச்சியுரை 440 மேனியான்' '', "வெயிலாய சோதி விளங்கு நீற்றர்" (நாவு 5:1:284 : 1) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. இனி, தத்து நீறு - ஒளி வீசு கின்ற நிறுமாம். 'ஒளி நீறு பூசும் ஒருவர் போலும்" (தே நாவு 302:4) என வருதலுங் காண்க, தத்துதல் - வீசுதல் சீவக 144 நச். " எ ஆரச் செஞ்சாந்து - செஞ்சந்தனக் குழம்பு. தாளி யறுகினர் சந் தனச் சாந்தினர்" (அன்னைப் 8) என அடிகள் அருளியமையுங் காண்சு. நீறுடன் செஞ்சாந்தணிந்தமை இறைவனது மாதொரு கூறனுாம் நிலையை குறிப்பிற் புலப்படுத்தலும் காண்க. பால் வெள்ளை மீறும் பசுஞ் சார் தும் பைங்கிளியுஞ். குலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக், கோலமே நோக்கி " (கோத் 18) என வருதலும் காண்க. " சர்ச்சை என்னும் சொல் சச்சையெனத் திரிந்தது. வடமொழிச் சர்ச்சை - ஆராய்வு. சர்ச்சையன் - ஆராய்ந்தறியப்படுபவன். இறைவன் கருநலளவையால் ஒருவாது ஆராய்ந்தறியப்படுபவனாதலால் சர்ச்சையன் என்ருர். "ஏதுக்களாலும் எடுத்து மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர் விட்டுள னெங்கள் சோதி" (தே 312:5) எனத் திரு ஞானசம்பந்த சுவாமிகளும் அருளியமையான் இறைவனை ஆராய்ந்தறி வதற்கு ஏதுக்களும் எடுத்த மொழியுமுடைய கருதலளவை உரியதாதலை எதிர் மறை முகத்தால் அங்கீகரித்தருளினார். "அருளினால் ஆகமத்தே அறியலாம் அளவினாலும் தெருனலாஞ் சிவனை (சிவஞான சித்தி பாயி ரம்) என வருதலுங் காண்க. வெண்டலை மிலைச்சுதல், கொத்தது போது மீவைதல், குடர்நெடு மாலை சுற்றுதல், தத்துறு நிறு அணிதல், ஆரச் செஞ்சாந்தணிதல் என்று ஈண்டுக் கூறப்பட்டனவன்றிப் புலித்தோலுடுத்தல், ஆனைத் தோல் போர்த் தல். பாம்பணிதல், நஞ்சுண்டல், பிறையணிதல், கபாலத்தைக் கோடல், எலும்பணிதல், தேையாட்டு மால் தரித்தல், மயிர்க் கயிறு தரித்தல் முதலாக இறைவனிடத்து மிகழ்வனவாக அறியும் இயல்புகளை ஆராயும் போது இறைவன் விருப்பு வெறுப்பில்லாதவன் என்பதும், முழு முதலா யுள்ளவன் என்பதும், சர்வ வல்லமையுள்ளவன் என்பதும், பேரருளரளன் என்பதும் முதலான இயல்புகள் புலப்படுதலின் ஆராய்ந்தறியப்படுவோன் எனப் பொருள் கொள்ளுதவ் பொருந்துமாறு காண்க. சச்சையன் என்ப தற்கு இங்ஙனம் பொருள் கொள்ளாமல் சத்து,சத்தா என்றாகி ஆவீறு ஐயாகும் என்னும் விதிபற்றி சத்தை என்றாகிப் பின்னர், வித்தை வீச்சை யென்று வந்தது போல சத்தை சச்சையெனப் பொருள் கூறுதல் பெரி தும் இடர்ப்பாடுடைத்தாகும். சச்சையன் என்பதற்கு உண்மைப் பொருளா யுள்ளவன் என்பது பொருள். இதன் கண், புலன் தீக்கதுவக் கலங்கி வித்துறுவேனை விடுதி கண் டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும போதகுதல் காண்க. நீத்தல் விண்ணப்பம் 135. சச்சைய னேமிக்க நண்புனல் விண்கால் நிலம் நெருப்பாம் விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி யாய்கரியாய் பச்சைய னேசெய்ய மேனிய னேயொண் படவரவக் கச்சைய னேகடந் தாய்தடந் தாள அடற்கரியே. 441 ப-ரை: சச்சையனே - ஆராய்ந்தறியப்படுபவனே, மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பாம் விச்சையனே - மிகுந்த குளிர்ந்த நீரும் வானும் காற்றும் நிலமும் நெருப்புமாகிய ஐம்பூதங்களிடத்தும் வியாபித்து நின்ற வியக்கத்தக்கவனே, வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனே - வெண்ணிற முடையவனே. கருநிறமுடையவனே. பச்சை கிறமுடைய வனே, செந்நிறமுடைய திருமேனியையுடையவனே, ஒண் பட அரவ கச்சையனே - ஒளி பொருந்திய படத்தையுடைய பாம்பாகிய கச்சையை யுடையவனே. தட தாள அடல் கரிகடந்தாய் - பெரிய கால்களையுடைய வலிய கயாசுரன் என்னும் மானையைக் கொன்று வெற்றி கொண்டவனே. விட்டிடுதி கண்டாய்- என்னைக் கைவிடுகின்றனையோ" கைவிடா தொழி தல் வேண்டும் என்பதாம். சச்சையனே புனல் வீண் கால் நிலம் நெருப்பாம் விச்சையனே வெண்மை கருமை பசுமை செம்மை ஆகிய நிறங்களையுடைய திருமேனியை யுடையவனே, அரவக் கச்சையனே. கயாசுரன் என்னும் யானையைக் கொன்று வெற்றி கொண்டவனே, என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். மிக்க தண்புனல் என மிகுதியும் தண்மையுமாகிய நீரின் பொதுக் குணமும் சிறப்புக் குணமும் கூறப்பட்டமையால் இவ்வாறே விண் கால் நிலம் நெருப்புக்களிலும் அவ்வவற்றின் பொதுக் குணம் சிறப்புக் குணங் களை விரித்துக் கொள்க விண் கல் நெருப்பு புனல் நிலம் எனத் தோற்ற முறைபற்றியாவது நிலம் புனல் நெருப்பு கால் விண் என ஒடுக்க முறை பற்றியாவது கூருது புனல் விண் கால் நிலம் நெருப்பு என முறை பிறழக் கூறினார். செய்யுளாதலின். இறைவன் ஐம்பூதங்களாயும் உள் ளான் என்பது, 'அலைகின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரமாகி நின்றீர்'' நாவு 25:8. "தோற்றுந் தீயொடு நீர் கலந் தூவெளி காற்றுமாகி நின்றான் '' நாவு 182:0 50 மண்ணவன் காண் தீயவன்காண் ஈரானுன் காண் வந்தலைக்கும் மாருதன் காண் மழை மேயஞ்சேர். விண்ணவன் காண்நாவு 205:1. "மண் இலங்குமீர் அனல் கால் வானுமாகி மற்றவற்றின் குணமெல்லாமாய் கின்றாரும் நாவு 272:5.
KRIS திருவாசக ஆரா காய்ச்சியுரை 440 மேனியான் ' ' ' வெயிலாய சோதி விளங்கு நீற்றர் ( நாவு 5 : 1 : 284 : 1 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . இனி தத்து நீறு - ஒளி வீசு கின்ற நிறுமாம் . ' ஒளி நீறு பூசும் ஒருவர் போலும் ( தே நாவு 302 : 4 ) என வருதலுங் காண்க தத்துதல் - வீசுதல் சீவக 144 நச் . ஆரச் செஞ்சாந்து - செஞ்சந்தனக் குழம்பு . தாளி யறுகினர் சந் தனச் சாந்தினர் ( அன்னைப் 8 ) என அடிகள் அருளியமையுங் காண்சு . நீறுடன் செஞ்சாந்தணிந்தமை இறைவனது மாதொரு கூறனுாம் நிலையை குறிப்பிற் புலப்படுத்தலும் காண்க . பால் வெள்ளை மீறும் பசுஞ் சார் தும் பைங்கிளியுஞ் . குலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கி ( கோத் 18 ) என வருதலும் காண்க . சர்ச்சை என்னும் சொல் சச்சையெனத் திரிந்தது . வடமொழிச் சர்ச்சை - ஆராய்வு . சர்ச்சையன் - ஆராய்ந்தறியப்படுபவன் . இறைவன் கருநலளவையால் ஒருவாது ஆராய்ந்தறியப்படுபவனாதலால் சர்ச்சையன் என்ருர் . ஏதுக்களாலும் எடுத்து மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர் விட்டுள னெங்கள் சோதி ( தே 312 : 5 ) எனத் திரு ஞானசம்பந்த சுவாமிகளும் அருளியமையான் இறைவனை ஆராய்ந்தறி வதற்கு ஏதுக்களும் எடுத்த மொழியுமுடைய கருதலளவை உரியதாதலை எதிர் மறை முகத்தால் அங்கீகரித்தருளினார் . அருளினால் ஆகமத்தே அறியலாம் அளவினாலும் தெருனலாஞ் சிவனை ( சிவஞான சித்தி பாயி ரம் ) என வருதலுங் காண்க . வெண்டலை மிலைச்சுதல் கொத்தது போது மீவைதல் குடர்நெடு மாலை சுற்றுதல் தத்துறு நிறு அணிதல் ஆரச் செஞ்சாந்தணிதல் என்று ஈண்டுக் கூறப்பட்டனவன்றிப் புலித்தோலுடுத்தல் ஆனைத் தோல் போர்த் தல் . பாம்பணிதல் நஞ்சுண்டல் பிறையணிதல் கபாலத்தைக் கோடல் எலும்பணிதல் தேையாட்டு மால் தரித்தல் மயிர்க் கயிறு தரித்தல் முதலாக இறைவனிடத்து மிகழ்வனவாக அறியும் இயல்புகளை ஆராயும் போது இறைவன் விருப்பு வெறுப்பில்லாதவன் என்பதும் முழு முதலா யுள்ளவன் என்பதும் சர்வ வல்லமையுள்ளவன் என்பதும் பேரருளரளன் என்பதும் முதலான இயல்புகள் புலப்படுதலின் ஆராய்ந்தறியப்படுவோன் எனப் பொருள் கொள்ளுதவ் பொருந்துமாறு காண்க . சச்சையன் என்ப தற்கு இங்ஙனம் பொருள் கொள்ளாமல் சத்து சத்தா என்றாகி ஆவீறு ஐயாகும் என்னும் விதிபற்றி சத்தை என்றாகிப் பின்னர் வித்தை வீச்சை யென்று வந்தது போல சத்தை சச்சையெனப் பொருள் கூறுதல் பெரி தும் இடர்ப்பாடுடைத்தாகும் . சச்சையன் என்பதற்கு உண்மைப் பொருளா யுள்ளவன் என்பது பொருள் . இதன் கண் புலன் தீக்கதுவக் கலங்கி வித்துறுவேனை விடுதி கண் டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும போதகுதல் காண்க . நீத்தல் விண்ணப்பம் 135. சச்சைய னேமிக்க நண்புனல் விண்கால் நிலம் நெருப்பாம் விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி யாய்கரியாய் பச்சைய னேசெய்ய மேனிய னேயொண் படவரவக் கச்சைய னேகடந் தாய்தடந் தாள அடற்கரியே . 441 - ரை : சச்சையனே - ஆராய்ந்தறியப்படுபவனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பாம் விச்சையனே - மிகுந்த குளிர்ந்த நீரும் வானும் காற்றும் நிலமும் நெருப்புமாகிய ஐம்பூதங்களிடத்தும் வியாபித்து நின்ற வியக்கத்தக்கவனே வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனே - வெண்ணிற முடையவனே . கருநிறமுடையவனே . பச்சை கிறமுடைய வனே செந்நிறமுடைய திருமேனியையுடையவனே ஒண் பட அரவ கச்சையனே - ஒளி பொருந்திய படத்தையுடைய பாம்பாகிய கச்சையை யுடையவனே . தட தாள அடல் கரிகடந்தாய் - பெரிய கால்களையுடைய வலிய கயாசுரன் என்னும் மானையைக் கொன்று வெற்றி கொண்டவனே . விட்டிடுதி கண்டாய்- என்னைக் கைவிடுகின்றனையோ கைவிடா தொழி தல் வேண்டும் என்பதாம் . சச்சையனே புனல் வீண் கால் நிலம் நெருப்பாம் விச்சையனே வெண்மை கருமை பசுமை செம்மை ஆகிய நிறங்களையுடைய திருமேனியை யுடையவனே அரவக் கச்சையனே . கயாசுரன் என்னும் யானையைக் கொன்று வெற்றி கொண்டவனே என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . மிக்க தண்புனல் என மிகுதியும் தண்மையுமாகிய நீரின் பொதுக் குணமும் சிறப்புக் குணமும் கூறப்பட்டமையால் இவ்வாறே விண் கால் நிலம் நெருப்புக்களிலும் அவ்வவற்றின் பொதுக் குணம் சிறப்புக் குணங் களை விரித்துக் கொள்க விண் கல் நெருப்பு புனல் நிலம் எனத் தோற்ற முறைபற்றியாவது நிலம் புனல் நெருப்பு கால் விண் என ஒடுக்க முறை பற்றியாவது கூருது புனல் விண் கால் நிலம் நெருப்பு என முறை பிறழக் கூறினார் . செய்யுளாதலின் . இறைவன் ஐம்பூதங்களாயும் உள் ளான் என்பது ' அலைகின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரமாகி நின்றீர் ' ' நாவு 25 : 8 . தோற்றுந் தீயொடு நீர் கலந் தூவெளி காற்றுமாகி நின்றான் ' ' நாவு 182 : 0 50 மண்ணவன் காண் தீயவன்காண் ஈரானுன் காண் வந்தலைக்கும் மாருதன் காண் மழை மேயஞ்சேர் . விண்ணவன் காண்நாவு 205 : 1 . மண் இலங்குமீர் அனல் கால் வானுமாகி மற்றவற்றின் குணமெல்லாமாய் கின்றாரும் நாவு 272 : 5 .