திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

442 திருவாசக ஆராய்ச்சியுரை நிலனாகி நெருப்பாய் நீராய் நிறைகாலாய் இவையிற்றின் நியமாகி ' நாவு 239:8. எனத் தேவாரத்து வருவனவற்றாலு மறிக. ஒருவனே பவ்வேறு இயல்பு களையுடையனாதல் வியப்புக்குரிய தாகலின் வீச்சையனே என்றார். வித்தை- விச்சை என்றாயிற்று. இறைவனுடைய ஈசானம் முதலிய திருமுகங்கள் ஐந்தனுள் ஈசானம் பசுமையும் வெண்மையும். தற்புருஷம் பொன்மையும், அகோரம் கருமையும், வாமதேவம் செம்மையும், சத்தியோசாதம் நல்ல வெண்மையு முடைமையின், ': வெளியாய் கரியாய் பச்சையனே செய்யமேனியனே" என்றார். ஈண்டுக்கூறிய நான்கு உபலட்சணத்தில் பொன்மையனே என்பதையும் சேர்த்துக்கொள்க. "புனல் விண் கால் நெருப்பாம் விச்சையனே" என்றமையால் புனலுக்கு வெண்மையும், விண் ணுக்குப் பசுமையும், காலுக்குக் கருமையும், நிலத்திற்குப் பொன்மையும், நெருப்பிற்குச் செம்மையும் கொள்ளப்படுதல், இனி. நில மண் புனல் அனல் கால் வான்....வண் பொலமை வெண்மை செம்மை கறுப்பொடு தூமவன்னம்" சூத்.2 செய். 07 எனச் சிவஞானசித்தியாரிலும், 'பொன் பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு வன் கால் கருமை வனர் வான் தூமம் என்பார்" (5) உண்மை விளக்கத்தும் வருவனவற்றாலறியப்படுதலின் இப்பூதங்களிற் கலந்து நிற்கும் இறைவனுக்கு ஐந்து நிறங்களும் அமையுமாறு காண்க. நிறங்களோர் ஐந்துடையாய் (சிலபுராணம் 49) என அடிகள் அருளிய வாறுங் காண்க. இனி, இறைவன் திருவடி ஞானமுடையார்க்கு வெளியாயும் குறை யுணர்வாகிய பசு அறிவும் பாச அறிவும் உடையார்க்கு வெளிப்படாமல் இருளாயுமிருத்தலின் வெளியாய் கரியாய்" என்றார் எனக் கோடலு மொன்று. ஊனக்கண் பாசம் உணராப்பதியை ஞானக்கண்ணினிற் சிந்தை நாடி (குத் 3) எனச் சிவஞான போதத்து வருதலுங் காண்க. பாதியாம் உமைதன்னோடும் பாகமாய் வீன்ற இறைவனது இடப் பாகம் பச்சை நிற முடையவனாகவும் வலப் பாகம் செம்மை நிறமுடையவனாகவும் விளங்குத லின் '' பச்சையனே செய்ய மேனியனே" என்றார் எனலுமாம் நிறமுடையார் பாலர் சாலப்பழையர்" (நாவு 23) :7) எனவும், " அயன் மாற்கரியொண்ணாச் செய்ய மேனியனே" (செத்திலாப் 1) எனவும் வரு பச்சை வன காண்க. ஒண்பட அரவு என்புழி ஒண்மை படத்தின்கணுள்ள ஒளி பொருந் திய மணிக்கு ஆகு எனக் கொள்னினுமமையும். பட அரவு - காகம். அரவைக் கச்சாக அணிந்தமை கச்சை + அரையில் அணியப்படும் வடம். நீத்தல் விண்ணப்பம் 'புற்றரவக் கச்சார்த்த புனிதா ", "பையரவக் கச்சையாய்" (நாவு 244 : 7; 812:3) எனத் தேவாரத்து வருதலாலுமறிக, இறைவன் அரவைக் கச்சாக அசைத்தமை குண்டலினி என்னும் சுத்தமாயையைத் தன்னுள் அடக்கி யிருத்தலைப் புலப்படுத்துவதாகும். கடத்தல் - வெல்லுதல். கடந்தாய் என்பது முன்னிலை வினைப்பெயர் விளியேற்று நின்றது. தடந்தான அடற்கரி என்றது சுஜன் என்னும் யானை வடிவையுடைய அசுரனை. தாள என்பதில் உடைமைப் பொருளில் வந்த அகரவுருபு ஒருமைக்கண் வந்தது. அடற்கரி கடந்தாய் என்பது இறைவனின் மறக்கருணையைப் புலப்படுத்தியது. இதன் கன், விட்டிடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடா தொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க. 31. 138. அடற்கரி போலைம் புலன்களுக் கஞ்சி யழிந்தவென்னை விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லாவ் தொடற்கள் யாய்சுடர் மாமணி யேசுடு நீச்சுமூலக் கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. ப.ரை: விழு தொண்டர்க்கு அல்லால் தொடற்கு அரியாய்+சிறந்த மெய்யடியார்க்கன்றிப் பிறர்க்குப் பற்றுதற்கு சுடர் அரியவனே. மாமணியே - ஒளி விளங்கும் பெரிய மாணிக்கமே. சுடு தீ சுழல - சுடுமியல் பினையுடைய நெருப்பும் தன்னைக் கண்டு அஞ்சிச் சுழலும்படி, கடல் கரிதாய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறை கண்டனே -திருப்பாற் கடவின் கண் கரிய நிறமுடைத்தாய் எழுந்த ஆலகால விடத்தை உணவாகக் கொண்டு மிடற்றில் தங்கச் செய்த அதனால் நஞ்சின் கறுப்புப் பொருந் திய திருமிடற்றையுடையவனே. அடல் கரிபோல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்து என்னை - கொல்லுதலையுடைய மானையைப் போன்ற ஐம் புலன்களுக்கும் அச்சமடைந்து நிலைகவங்கிய அடியேனை,விடற்கு அரி யாய் - விட்டு நீங்காதிருக்க வேண்டியவனே. என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். சுடர் விழுத்தொண்டர்க்கல்லால் பிறர்க்குப் பற்றுதற்கு அரியவனே, மாமணியே நஞ்சு அமுதாக்கும் கறைக்கண்டனே, வலிய யானை போன்ற ஐம்புலன்களுக்கு அஞ்சி மனமழிந்த என்னை விடற்கரீயாய், கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். அடற்கரி- கொல்லுதலையுடைய கரி, அடலேறு- கொல்லுதலையுடைய வேறு (கலி 102 : 31) என நச்சினார்க்கினியர் பொருளுரைத்தமையுங் காண்க. அடல் - வருத்துதலுமாம். கரிபோல் புலன் - யானையைப் போன்ற ஐம் புலன்கள். "வருங்கை யானை மதகளிறஞ்சு'' (நாவு 159 : 8) என்றார் தேவாரத்தும். சண்டு புலன் என்றது ஐம்புலன்களை போல் என்னும்
442 திருவாசக ஆராய்ச்சியுரை நிலனாகி நெருப்பாய் நீராய் நிறைகாலாய் இவையிற்றின் நியமாகி ' நாவு 239 : 8 . எனத் தேவாரத்து வருவனவற்றாலு மறிக . ஒருவனே பவ்வேறு இயல்பு களையுடையனாதல் வியப்புக்குரிய தாகலின் வீச்சையனே என்றார் . வித்தை விச்சை என்றாயிற்று . இறைவனுடைய ஈசானம் முதலிய திருமுகங்கள் ஐந்தனுள் ஈசானம் பசுமையும் வெண்மையும் . தற்புருஷம் பொன்மையும் அகோரம் கருமையும் வாமதேவம் செம்மையும் சத்தியோசாதம் நல்ல வெண்மையு முடைமையின் ' : வெளியாய் கரியாய் பச்சையனே செய்யமேனியனே என்றார் . ஈண்டுக்கூறிய நான்கு உபலட்சணத்தில் பொன்மையனே என்பதையும் சேர்த்துக்கொள்க . புனல் விண் கால் நெருப்பாம் விச்சையனே என்றமையால் புனலுக்கு வெண்மையும் விண் ணுக்குப் பசுமையும் காலுக்குக் கருமையும் நிலத்திற்குப் பொன்மையும் நெருப்பிற்குச் செம்மையும் கொள்ளப்படுதல் இனி . நில மண் புனல் அனல் கால் வான் .... வண் பொலமை வெண்மை செம்மை கறுப்பொடு தூமவன்னம் சூத் .2 செய் . 07 எனச் சிவஞானசித்தியாரிலும் ' பொன் பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு வன் கால் கருமை வனர் வான் தூமம் என்பார் ( 5 ) உண்மை விளக்கத்தும் வருவனவற்றாலறியப்படுதலின் இப்பூதங்களிற் கலந்து நிற்கும் இறைவனுக்கு ஐந்து நிறங்களும் அமையுமாறு காண்க . நிறங்களோர் ஐந்துடையாய் ( சிலபுராணம் 49 ) என அடிகள் அருளிய வாறுங் காண்க . இனி இறைவன் திருவடி ஞானமுடையார்க்கு வெளியாயும் குறை யுணர்வாகிய பசு அறிவும் பாச அறிவும் உடையார்க்கு வெளிப்படாமல் இருளாயுமிருத்தலின் வெளியாய் கரியாய் என்றார் எனக் கோடலு மொன்று . ஊனக்கண் பாசம் உணராப்பதியை ஞானக்கண்ணினிற் சிந்தை நாடி ( குத் 3 ) எனச் சிவஞான போதத்து வருதலுங் காண்க . பாதியாம் உமைதன்னோடும் பாகமாய் வீன்ற இறைவனது இடப் பாகம் பச்சை நிற முடையவனாகவும் வலப் பாகம் செம்மை நிறமுடையவனாகவும் விளங்குத லின் ' ' பச்சையனே செய்ய மேனியனே என்றார் எனலுமாம் நிறமுடையார் பாலர் சாலப்பழையர் ( நாவு 23 ) : 7 ) எனவும் அயன் மாற்கரியொண்ணாச் செய்ய மேனியனே ( செத்திலாப் 1 ) எனவும் வரு பச்சை வன காண்க . ஒண்பட அரவு என்புழி ஒண்மை படத்தின்கணுள்ள ஒளி பொருந் திய மணிக்கு ஆகு எனக் கொள்னினுமமையும் . பட அரவு - காகம் . அரவைக் கச்சாக அணிந்தமை கச்சை + அரையில் அணியப்படும் வடம் . நீத்தல் விண்ணப்பம் ' புற்றரவக் கச்சார்த்த புனிதா பையரவக் கச்சையாய் ( நாவு 244 : 7 ; 812 : 3 ) எனத் தேவாரத்து வருதலாலுமறிக இறைவன் அரவைக் கச்சாக அசைத்தமை குண்டலினி என்னும் சுத்தமாயையைத் தன்னுள் அடக்கி யிருத்தலைப் புலப்படுத்துவதாகும் . கடத்தல் - வெல்லுதல் . கடந்தாய் என்பது முன்னிலை வினைப்பெயர் விளியேற்று நின்றது . தடந்தான அடற்கரி என்றது சுஜன் என்னும் யானை வடிவையுடைய அசுரனை . தாள என்பதில் உடைமைப் பொருளில் வந்த அகரவுருபு ஒருமைக்கண் வந்தது . அடற்கரி கடந்தாய் என்பது இறைவனின் மறக்கருணையைப் புலப்படுத்தியது . இதன் கன் விட்டிடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடா தொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க . 31 . 138. அடற்கரி போலைம் புலன்களுக் கஞ்சி யழிந்தவென்னை விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லாவ் தொடற்கள் யாய்சுடர் மாமணி யேசுடு நீச்சுமூலக் கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே . ப.ரை : விழு தொண்டர்க்கு அல்லால் தொடற்கு அரியாய் + சிறந்த மெய்யடியார்க்கன்றிப் பிறர்க்குப் பற்றுதற்கு சுடர் அரியவனே . மாமணியே - ஒளி விளங்கும் பெரிய மாணிக்கமே . சுடு தீ சுழல - சுடுமியல் பினையுடைய நெருப்பும் தன்னைக் கண்டு அஞ்சிச் சுழலும்படி கடல் கரிதாய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறை கண்டனே -திருப்பாற் கடவின் கண் கரிய நிறமுடைத்தாய் எழுந்த ஆலகால விடத்தை உணவாகக் கொண்டு மிடற்றில் தங்கச் செய்த அதனால் நஞ்சின் கறுப்புப் பொருந் திய திருமிடற்றையுடையவனே . அடல் கரிபோல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்து என்னை - கொல்லுதலையுடைய மானையைப் போன்ற ஐம் புலன்களுக்கும் அச்சமடைந்து நிலைகவங்கிய அடியேனை விடற்கு அரி யாய் - விட்டு நீங்காதிருக்க வேண்டியவனே . என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . சுடர் விழுத்தொண்டர்க்கல்லால் பிறர்க்குப் பற்றுதற்கு அரியவனே மாமணியே நஞ்சு அமுதாக்கும் கறைக்கண்டனே வலிய யானை போன்ற ஐம்புலன்களுக்கு அஞ்சி மனமழிந்த என்னை விடற்கரீயாய் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . அடற்கரி- கொல்லுதலையுடைய கரி அடலேறு- கொல்லுதலையுடைய வேறு ( கலி 102 : 31 ) என நச்சினார்க்கினியர் பொருளுரைத்தமையுங் காண்க . அடல் - வருத்துதலுமாம் . கரிபோல் புலன் - யானையைப் போன்ற ஐம் புலன்கள் . வருங்கை யானை மதகளிறஞ்சு ' ' ( நாவு 159 : 8 ) என்றார் தேவாரத்தும் . சண்டு புலன் என்றது ஐம்புலன்களை போல் என்னும்