திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பிராரத்தவினை உள்ளவரையும் பிறவித் துன்பம் உளதாகலின் அத் அதனை ஐவா யரவம் என உருவகஞ் துன்பத்தின் கொடுமை நோக்கி செய்தார். பிறவித் துன்பம் உளதாதற்கு ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் ஏதுவாகலின் அதற்கு இயைய அரவத்திற்கும் ஐந்து வாயைக் கூறுவா ராயினர். இஐவா யரவனை" "ஐந்தலைய மாகணம்" (நாவு74 : 10; அரவம் பொருதல்- 226:3) எனத் தேவாரத்தும் வருவன காண்க. அரவம் தாக்கி விடம் கக்குதல், பொதும்புறல் என்றது அரவம் பொரு தலினாலே உள்ளே பொந்து உடைத்தாதல்; என்றது மனம் உள்ளிடின் றித் தன் நிலைமை கெடுதல். 450 இதன் கண். வினையேன் மனம் அஞ்சிப்பொதும்புற பிறவி ஐவாயர வம் பொரும்; வீன்பழவடியாரொடும் என்படிறு விரும்பும் அரனே. விட் டிடுதி கண்டாய்" என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கை விடாதொழிதல் வேண்டும் என்பதும் புவனாதல் காண்க. 85. 140. பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன் தீக்கதுவ வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை யார்நறவந் ததும்புமந் தாரத்திற் குரம் பயின்றுமந் தம்முரல்வண் டதும்புங் கொழுந்தே னவிர்சடை வானத் தடலரசே. ப-ரை : விரை ஆர் நறவம் ததும்பும் மந்தாரத்தில் நறுமணம் பொருந்திய தேன் நிறைந்த மந்தார மலரின்கண். தாரம் பயின்று மக் தம் முரல் வண்டு - எடுத்த விசையைப் பாடிப் பின் படுத்த விசையை ஒலிக்கும் வண்டுகளும், அதம்பும் கொழும் தேன் - அவற்றைக் கண்டு ஒதுங்கும் கொழுவிய தேனீக்களும் பொருந்திய. அடல் அரசே - விளங்கும் சடைமுடியினையுடைய தங்கிய வரம்பிலாற்றலையுடைய அரசனே. புகைந்து எரி-மரப்பொந்திற் பொருந்திய நெருப்பைப் போலப் புகைந்து எரிகின்ற அப்புலன் தீ கதுவ - அப்புலன்களாகிய நெருப்புப் பற்றிக் கொள்ள, வெதும்புறுவேனை விடுதி கண்டாய்- வெதும்புகின்ற என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். அவிர்சடை வானத்து சிதாகாயத்தின் கண் பொதும்பு உறு தி போல் வானத்தடலரசே ! ஐம்புலன்களாகிய நெருப்புப் பற்றிக் கொள்ள வெதும்புகின் றவனாகிய என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழி தல் வேண்டும் என்பதாம். பொதும்பு - மரப்பொந்து, பொதும்புது தீப் போல் புகைந்தெரி என் றது மரப்பொந்தினுள்ளே பற்றிய நெருப்பு அப்பொந்தின் வழியாகப் புகைந்து கொண்டு எரிவது போலப் புகைந்து எரிகின்ற என்றவாறு. அப்புலன் தீக் கதல என்புறி அ என்பது ரி தீ என இயையும். ஐவர் தீய பண்டறி சுட்டாய் ஐம்புலன்களின் தீமையையுணர்த்தியது. செய்வினை பலவுஞ் செய்ய'' ''ஐயர் வந்து முறை முறை துயரஞ் செய்ய" நீத்தல் விண்ணப்பம் 451 பிறவி (நாவு 52:9;52:8) எனத் தேவாரத்தும் வருவன காண்க. ஐவாயரவம் பொரும்..... மனம் அஞ்சிய பொதும்புறவே" (நீத்: 35) என முன்னர்த் திருப்பாட்டிற் கூறினமையால் அப்பொதும்பில் ஐம்புலன் தீக் கதுவலின் வெறும்புகின்றேனை என்றார். மந்தாரம் என்பது முதலிற் கூறும் சினையறி கிளவியாய் (தொல் வேற். மயங்கு 31) மந்தார மலரை உணர்த்தியது. மந்தார மலரின் கண் வண்டுந் தேனும் தங்கிய சடை என்க. தரரம்-உச்சவிசை : மந்தம்- மந்த ஓசை. "மந்தம் முழவுங் குழறு மியம்பும்" (தே.சுந் 4:10) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. வண்டு மந்தம் முரவல், "வண்டு மந்தம் மலி யம்பர் " (ஞான 83:4) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. வண்டு தாரம் மந்தம் என்னும் இசைவேறுபாடுகளை இசைப்பதாகக் கூறு வது கவி மரபு. காரடைந்த சோவை குழ்ந்து காமரம் வண்டிசைப்ப" சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு வேறாய உரு வாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலை' (தே.ஞான 47: 8; 132:7) என வருவன காண்க. அதும்புதல் ஒதுங்குதல். என்றது தாரம் மந்தம் இசைக்கும் ஆண் வண்டினைக் கண்டு அதற்கு முன் அம்மலரில் படிந் துள்ள கொழுத்த பெண் தேனீ ஒதுங்குமென்க. வானம் - சிதரகாயம். அடல் - வரம்பிலாற்றல். அரசு - இறைவன் இதன் கண், புலன் தீக்கதுவ வெதம்புறுவேனை விடுதிகண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதவ் வேண் டும் என்பதும் புலனாதல் காண்க. 141. அரைசே யறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லாவ் விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண் ணகைக் கருங்கட் டிரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பாதப்புயங்கா வரைசேர்த் தடர்த்தென்ன வள்வினை தான்வந் தடர்வனவே. ப-ரை: வெள் நகை கரு கண் திரை சேர் மடந்தை மணந்த வெள்ளிய எயிற்றினையும் கரிய கண்ணினையுமுடைய திரை பொருந்திய கங்கையைத் திருமணஞ் செய்தருளிய, திரு பொன் பாத புயங்கா. கண்டாரால் விரும்பப்படும் அழகினையுடைய பொன்போலும் திருவடியை யுடைய அரவாபரணனே விரை சேர் முடியாய் - நறுமணம் பொருந்திய சடைமுடியையுடையவனே. வரை சேர்ந்து அடர்ந்து என்ன மலைகள் பல சேர்ந்து நெருங்கினாற் போல வள்வினை வந்து அடர்வன - வலிய பிராரத்தவினைகள் திரண்டு வந்து நெருங்குகின்றன. ஆகையால். அரைசே. இறைவனே, அறியா சிறியேவ் பிழைக்கு - அறியவேண்டியதை அறியாத சிறுமையுடையேனது குற்றத்தினை நீக்குதற்கு. அஞ்சல் என்னின்-அஞ். சற்கவென்று நீ கூறியருளின், அதுவே அமையும். அல்லால் விடுத்
திருவாசக ஆராய்ச்சியுரை பிராரத்தவினை உள்ளவரையும் பிறவித் துன்பம் உளதாகலின் அத் அதனை ஐவா யரவம் என உருவகஞ் துன்பத்தின் கொடுமை நோக்கி செய்தார் . பிறவித் துன்பம் உளதாதற்கு ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் ஏதுவாகலின் அதற்கு இயைய அரவத்திற்கும் ஐந்து வாயைக் கூறுவா ராயினர் . இஐவா யரவனை ஐந்தலைய மாகணம் ( நாவு 74 : 10 ; அரவம் பொருதல் 226 : 3 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . அரவம் தாக்கி விடம் கக்குதல் பொதும்புறல் என்றது அரவம் பொரு தலினாலே உள்ளே பொந்து உடைத்தாதல் ; என்றது மனம் உள்ளிடின் றித் தன் நிலைமை கெடுதல் . 450 இதன் கண் . வினையேன் மனம் அஞ்சிப்பொதும்புற பிறவி ஐவாயர வம் பொரும் ; வீன்பழவடியாரொடும் என்படிறு விரும்பும் அரனே . விட் டிடுதி கண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கை விடாதொழிதல் வேண்டும் என்பதும் புவனாதல் காண்க . 85 . 140. பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன் தீக்கதுவ வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை யார்நறவந் ததும்புமந் தாரத்திற் குரம் பயின்றுமந் தம்முரல்வண் டதும்புங் கொழுந்தே னவிர்சடை வானத் தடலரசே . - ரை : விரை ஆர் நறவம் ததும்பும் மந்தாரத்தில் நறுமணம் பொருந்திய தேன் நிறைந்த மந்தார மலரின்கண் . தாரம் பயின்று மக் தம் முரல் வண்டு - எடுத்த விசையைப் பாடிப் பின் படுத்த விசையை ஒலிக்கும் வண்டுகளும் அதம்பும் கொழும் தேன் - அவற்றைக் கண்டு ஒதுங்கும் கொழுவிய தேனீக்களும் பொருந்திய . அடல் அரசே - விளங்கும் சடைமுடியினையுடைய தங்கிய வரம்பிலாற்றலையுடைய அரசனே . புகைந்து எரி - மரப்பொந்திற் பொருந்திய நெருப்பைப் போலப் புகைந்து எரிகின்ற அப்புலன் தீ கதுவ - அப்புலன்களாகிய நெருப்புப் பற்றிக் கொள்ள வெதும்புறுவேனை விடுதி கண்டாய்- வெதும்புகின்ற என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . அவிர்சடை வானத்து சிதாகாயத்தின் கண் பொதும்பு உறு தி போல் வானத்தடலரசே ! ஐம்புலன்களாகிய நெருப்புப் பற்றிக் கொள்ள வெதும்புகின் றவனாகிய என்னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழி தல் வேண்டும் என்பதாம் . பொதும்பு - மரப்பொந்து பொதும்புது தீப் போல் புகைந்தெரி என் றது மரப்பொந்தினுள்ளே பற்றிய நெருப்பு அப்பொந்தின் வழியாகப் புகைந்து கொண்டு எரிவது போலப் புகைந்து எரிகின்ற என்றவாறு . அப்புலன் தீக் கதல என்புறி என்பது ரி தீ என இயையும் . ஐவர் தீய பண்டறி சுட்டாய் ஐம்புலன்களின் தீமையையுணர்த்தியது . செய்வினை பலவுஞ் செய்ய ' ' ' ' ஐயர் வந்து முறை முறை துயரஞ் செய்ய நீத்தல் விண்ணப்பம் 451 பிறவி ( நாவு 52 : 9 ; 52 : 8 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . ஐவாயரவம் பொரும் ..... மனம் அஞ்சிய பொதும்புறவே ( நீத் : 35 ) என முன்னர்த் திருப்பாட்டிற் கூறினமையால் அப்பொதும்பில் ஐம்புலன் தீக் கதுவலின் வெறும்புகின்றேனை என்றார் . மந்தாரம் என்பது முதலிற் கூறும் சினையறி கிளவியாய் ( தொல் வேற் . மயங்கு 31 ) மந்தார மலரை உணர்த்தியது . மந்தார மலரின் கண் வண்டுந் தேனும் தங்கிய சடை என்க . தரரம் - உச்சவிசை : மந்தம் மந்த ஓசை . மந்தம் முழவுங் குழறு மியம்பும் ( தே.சுந் 4:10 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . வண்டு மந்தம் முரவல் வண்டு மந்தம் மலி யம்பர் ( ஞான 83 : 4 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . வண்டு தாரம் மந்தம் என்னும் இசைவேறுபாடுகளை இசைப்பதாகக் கூறு வது கவி மரபு . காரடைந்த சோவை குழ்ந்து காமரம் வண்டிசைப்ப சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு வேறாய உரு வாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலை ' ( தே.ஞான 47 : 8 ; 132 : 7 ) என வருவன காண்க . அதும்புதல் ஒதுங்குதல் . என்றது தாரம் மந்தம் இசைக்கும் ஆண் வண்டினைக் கண்டு அதற்கு முன் அம்மலரில் படிந் துள்ள கொழுத்த பெண் தேனீ ஒதுங்குமென்க . வானம் - சிதரகாயம் . அடல் - வரம்பிலாற்றல் . அரசு - இறைவன் இதன் கண் புலன் தீக்கதுவ வெதம்புறுவேனை விடுதிகண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதவ் வேண் டும் என்பதும் புலனாதல் காண்க . 141. அரைசே யறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லாவ் விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண் ணகைக் கருங்கட் டிரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பாதப்புயங்கா வரைசேர்த் தடர்த்தென்ன வள்வினை தான்வந் தடர்வனவே . - ரை : வெள் நகை கரு கண் திரை சேர் மடந்தை மணந்த வெள்ளிய எயிற்றினையும் கரிய கண்ணினையுமுடைய திரை பொருந்திய கங்கையைத் திருமணஞ் செய்தருளிய திரு பொன் பாத புயங்கா . கண்டாரால் விரும்பப்படும் அழகினையுடைய பொன்போலும் திருவடியை யுடைய அரவாபரணனே விரை சேர் முடியாய் - நறுமணம் பொருந்திய சடைமுடியையுடையவனே . வரை சேர்ந்து அடர்ந்து என்ன மலைகள் பல சேர்ந்து நெருங்கினாற் போல வள்வினை வந்து அடர்வன - வலிய பிராரத்தவினைகள் திரண்டு வந்து நெருங்குகின்றன . ஆகையால் . அரைசே . இறைவனே அறியா சிறியேவ் பிழைக்கு - அறியவேண்டியதை அறியாத சிறுமையுடையேனது குற்றத்தினை நீக்குதற்கு . அஞ்சல் என்னின் - அஞ் . சற்கவென்று நீ கூறியருளின் அதுவே அமையும் . அல்லால் விடுத்