திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை திண்வலை ஆக்கையின் துயர் என மாறிக் கூட்டுக. திண்வலையிலகப் பட்ட பிராணி அதனை வீட்டு நீங்கமாட்டாமை போல இவ்வுடம்பின் கட்பட்ட உயிர் அதனின் நீங்கமாட்டாது அவ்வுடம்பினாலுளதாகும் துன் பங்களை யெல்லாம் அநுபவிக்கும். இங்கே அடிகள் பிராரத்தவினைக் கீடா கத் தமக்குக் கிடைத்த உடம்பினை நீங்கமாட்டாது அதனாலுண்டாகும் துன்பங்களைப் பொறுக்கமாட்டாதவராய் ஆக்கையின் துயர் தினைத்தணை யேனும் பொறேன் என்றார். அங்ஙனமாகவும் அத்துயரை நீக்கவல்ல தனித் துணையாக நீ நிற்கவும் யான் அதனை மறந்து யான் என்று செருக் கடைந்து தலைகீழாக நடக்கத் தொடங்கினேனாயினும் அதனைப் பொறுத்து என்னைக் கைவிடலாகாது என்பார் விடுதி கண்டாய் என்றார். 456 இதன் கண் ஆக்கையின் துயர் தினைத்துணையேனும் பொறேன்; தருக்கித் தலையால் நடந்த எனை விடுதி கண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க. 39. 144. வலைத்தலை- மானன்ன தோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந் தேனை விடுதிகண் டாய்வெண் மதியிஞெற்றைக் கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி லாய மென்னும் மலைத்தலை வாமலை யாண்மண வாளவென் வாழ்முதலே. ப-ரை: வெள் மதியின் ஒற்றை கலை தலையாய் - வெண்மையான நிங் களின் ஒரு கலைப் பிறையைத் தயிைன்கணுடையவனே, கருணாகரனே - அருட்கு இருப்பிடமாகவுள்ளவனே. கயிலாயம் என்னும் மலை தலைவா திருக்கயிலாயம் என்று சொல்லப்படும் மலையில் எழுந்தருளியிருக்கும் தலை வனே. மயாள் மணவாளா - மலை மடந்தையாகிய பார்வதியம்மைக்கு மணவாளனே என் வாழ் முதலே - எனது வாழ்விற்கு முதற் பொருளா யுள்ளவனே. வலை தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலைப் பட்டு - வலையில் அகப்பட்ட மாளின் மருண்ட பார்வை போன்ற பார்வை யினையுடைய மகனிரின் நோக்கமாகிய வலையில் அகப்பட்டு. மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் - மயங்கி அந்த என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். மதியின் ஒற்றைக் கலைத் தலையாய். கருணாகரனே, கயிலாயமென் னும் மலைத் தலைவா, மலையாள் மணவாளா, என் வாழ் முதலே, மகளிர் நோக்கின் வலைப்பட்டு அலைந்த கைவீடுகின் றலையோ? கை விடாதொழிதல் வேண்டும் என்பதாம். என்னைத் வலைத்தலை என்பதில் தலை ஏழனுருபு. வேற்றுமை பெயர் கொள்ளுமாயினும் வலைத்தலை எனவே பொருள் கொள்ளப்படும் வத்ைதலை மால் என ஏழாம் அகப்பட்ட மான் அச்ச மிகுதியால் இயல்பாக மான் மருண்ட பார்வையுடைத்தாயினும் வலையிலகப்பட்ட விடத்து மருண்ட நீத்தல் விண்ணப்பும் 457 பார்வை மிக்குத் தோன்றும். அவ்விதம் மிக்க மருட்சியுடைமை பற்றி "வலைத்தலை மானன்ன கோக்கிறர்" என்றார். நோக்கியர் நோக்கின் வலை- நோக்கிளையுடைய மகளிரது நோக்கமாகிய வலை. "காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலை கலந்து வீசினபோ துள்ள மீனிழந்தார்'' (74) எனத் திருக்கோவையாரினும், மாழையொண் கண்ணினார்கள் வலைதனின் மயங்குகின்றேன்'' நாவு 51: 6 ''வாணர் நுதலார் வலைப்பட்டடியேன்" சுந் 9:9 மானை நோக்கியர் கண் வலையிற்பட்டு" சுர் 04: 0 எனத் தேவாரத்தும் வருவன காண்க. மிலைத்து அவந்தேனை - மயங்கி அலைந்தேனை. "மறிநே ரொண்கண் மடநல்லார் வலையிற்பட்டு மதிமயங்கி அறிவே யறிந்தேனையா ' "வேலங்காடு தடங்கண்ணார் வலையுட்பட்டுள் னெறிமறந்து மாலங்காடி மறந்தொழிந்தேன் மணியே முத்தே மரகதமே" சுந் 52:5 சுந் 54 : 6 "மானை நோக்கியர்கண் வலையிற் பட்டு வருந்தி எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியமையுங் காண்க. இனி மிலைத்தல் - குடுதல். ஈண்டு அவர் வறியை மேற்கொள்ளல் என உரைப் பினுமமையும். அலைதல் - உலகியல் வாழ்வில் திரிதல். 21 வெண்மதி என்பது இனஞ்சுட்டில்லாப் பண்புகொள்பெயர். "செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும்'' ( புறம் 38: 7) எனப் பிறாண்டும் வருதல் கான்சு. சென்னியில் ஒரு கலைப் பிறையைச் சூடினமையின் மதியின் ஒற்றைக்கலைத் தலையாய் என் றார். ஒற்றை வெண்பிறை தோன்றும் புனிதனார்க்கே' நாவு 231:2 "ஒற்றை வெண்பிறையானை யுமையோ டொன்றும் பேரானை" வு 232:5 எனத் தேவாரத்தும் வருவன காண்க, "மதியின் ஒற்றைக் கலைத்தலையாய்" என விளித்தது, ஒற்றைக் கலை யோடு நீலனை வந்து அடைந்த தல்களைத் தலைக்கண் வைத்து அணிந்து காத்தருளித்து போலத் தன்னையும் காத்தருள வேண்டும் என்னும் உள் ளுறையுடைமையால் கருத்துடையடைகொளியணியாகும். 58
திருவாசக ஆராய்ச்சியுரை திண்வலை ஆக்கையின் துயர் என மாறிக் கூட்டுக . திண்வலையிலகப் பட்ட பிராணி அதனை வீட்டு நீங்கமாட்டாமை போல இவ்வுடம்பின் கட்பட்ட உயிர் அதனின் நீங்கமாட்டாது அவ்வுடம்பினாலுளதாகும் துன் பங்களை யெல்லாம் அநுபவிக்கும் . இங்கே அடிகள் பிராரத்தவினைக் கீடா கத் தமக்குக் கிடைத்த உடம்பினை நீங்கமாட்டாது அதனாலுண்டாகும் துன்பங்களைப் பொறுக்கமாட்டாதவராய் ஆக்கையின் துயர் தினைத்தணை யேனும் பொறேன் என்றார் . அங்ஙனமாகவும் அத்துயரை நீக்கவல்ல தனித் துணையாக நீ நிற்கவும் யான் அதனை மறந்து யான் என்று செருக் கடைந்து தலைகீழாக நடக்கத் தொடங்கினேனாயினும் அதனைப் பொறுத்து என்னைக் கைவிடலாகாது என்பார் விடுதி கண்டாய் என்றார் . 456 இதன் கண் ஆக்கையின் துயர் தினைத்துணையேனும் பொறேன் ; தருக்கித் தலையால் நடந்த எனை விடுதி கண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க . 39 . 144. வலைத்தலை- மானன்ன தோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந் தேனை விடுதிகண் டாய்வெண் மதியிஞெற்றைக் கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி லாய மென்னும் மலைத்தலை வாமலை யாண்மண வாளவென் வாழ்முதலே . - ரை : வெள் மதியின் ஒற்றை கலை தலையாய் - வெண்மையான நிங் களின் ஒரு கலைப் பிறையைத் தயிைன்கணுடையவனே கருணாகரனே - அருட்கு இருப்பிடமாகவுள்ளவனே . கயிலாயம் என்னும் மலை தலைவா திருக்கயிலாயம் என்று சொல்லப்படும் மலையில் எழுந்தருளியிருக்கும் தலை வனே . மயாள் மணவாளா - மலை மடந்தையாகிய பார்வதியம்மைக்கு மணவாளனே என் வாழ் முதலே - எனது வாழ்விற்கு முதற் பொருளா யுள்ளவனே . வலை தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலைப் பட்டு - வலையில் அகப்பட்ட மாளின் மருண்ட பார்வை போன்ற பார்வை யினையுடைய மகனிரின் நோக்கமாகிய வலையில் அகப்பட்டு . மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் - மயங்கி அந்த என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . மதியின் ஒற்றைக் கலைத் தலையாய் . கருணாகரனே கயிலாயமென் னும் மலைத் தலைவா மலையாள் மணவாளா என் வாழ் முதலே மகளிர் நோக்கின் வலைப்பட்டு அலைந்த கைவீடுகின் றலையோ ? கை விடாதொழிதல் வேண்டும் என்பதாம் . என்னைத் வலைத்தலை என்பதில் தலை ஏழனுருபு . வேற்றுமை பெயர் கொள்ளுமாயினும் வலைத்தலை எனவே பொருள் கொள்ளப்படும் வத்ைதலை மால் என ஏழாம் அகப்பட்ட மான் அச்ச மிகுதியால் இயல்பாக மான் மருண்ட பார்வையுடைத்தாயினும் வலையிலகப்பட்ட விடத்து மருண்ட நீத்தல் விண்ணப்பும் 457 பார்வை மிக்குத் தோன்றும் . அவ்விதம் மிக்க மருட்சியுடைமை பற்றி வலைத்தலை மானன்ன கோக்கிறர் என்றார் . நோக்கியர் நோக்கின் வலை நோக்கிளையுடைய மகளிரது நோக்கமாகிய வலை . காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலை கலந்து வீசினபோ துள்ள மீனிழந்தார் ' ' ( 74 ) எனத் திருக்கோவையாரினும் மாழையொண் கண்ணினார்கள் வலைதனின் மயங்குகின்றேன் ' ' நாவு 51 : 6 ' ' வாணர் நுதலார் வலைப்பட்டடியேன் சுந் 9 : 9 மானை நோக்கியர் கண் வலையிற்பட்டு சுர் 04 : 0 எனத் தேவாரத்தும் வருவன காண்க . மிலைத்து அவந்தேனை - மயங்கி அலைந்தேனை . மறிநே ரொண்கண் மடநல்லார் வலையிற்பட்டு மதிமயங்கி அறிவே யறிந்தேனையா ' வேலங்காடு தடங்கண்ணார் வலையுட்பட்டுள் னெறிமறந்து மாலங்காடி மறந்தொழிந்தேன் மணியே முத்தே மரகதமே சுந் 52 : 5 சுந் 54 : 6 மானை நோக்கியர்கண் வலையிற் பட்டு வருந்தி எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியமையுங் காண்க . இனி மிலைத்தல் - குடுதல் . ஈண்டு அவர் வறியை மேற்கொள்ளல் என உரைப் பினுமமையும் . அலைதல் - உலகியல் வாழ்வில் திரிதல் . 21 வெண்மதி என்பது இனஞ்சுட்டில்லாப் பண்புகொள்பெயர் . செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும் ' ' ( புறம் 38 : 7 ) எனப் பிறாண்டும் வருதல் கான்சு . சென்னியில் ஒரு கலைப் பிறையைச் சூடினமையின் மதியின் ஒற்றைக்கலைத் தலையாய் என் றார் . ஒற்றை வெண்பிறை தோன்றும் புனிதனார்க்கே ' நாவு 231 : 2 ஒற்றை வெண்பிறையானை யுமையோ டொன்றும் பேரானை வு 232 : 5 எனத் தேவாரத்தும் வருவன காண்க மதியின் ஒற்றைக் கலைத்தலையாய் என விளித்தது ஒற்றைக் கலை யோடு நீலனை வந்து அடைந்த தல்களைத் தலைக்கண் வைத்து அணிந்து காத்தருளித்து போலத் தன்னையும் காத்தருள வேண்டும் என்னும் உள் ளுறையுடைமையால் கருத்துடையடைகொளியணியாகும் . 58