திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

478 திருவாசக ஆராய்ச்சியுரை என்னை பவள மலை போன்ற ஒளிபொருந்திய திருமேனியையுடையவனே, ஆளாகவுடையவனே. சிற்றுயிர்க்கு இரங்கி யருனி. விடத்தையுண்டு அவ்வுயிர்களைப் பாதுகாத்தவனே, கீழ்மையுடையவனாகிய யான் வின் திருவருள் அமுதத்தினை உண்ணும் வண்ணம் யான் உன்னை ஏசினும் எத்தினும் என்பிழையின் பொருட்டு மனமுருகி வருந்துவேனைக் கைவிடுகின் றனையோ? கைடாதொழிதல் வேண்டும் என்பதாம் ஏசுதல் - பழித்தல்: இகழுதல் எனினுமாம். ஏத்துதல் - புகழ்தல் உயர்த்திக் கூறல், குழைதல் என்ற வினையினாலும் வேசறுதலானும் அவற்றுக்கு எழுவாகிய மனம் என்பது வருவிக்கப்பட்டது. அகங் குழைந்து '" (பொன்னூசல் 8) என வருதலும் காண்க, தல் - வருந்துதல். ... ஆலகால இறைவன் செம்பவளமலை போன்ற ஒளிபொருந்திய திருமேனியை யுடையனாகலின் " செம்பளை வெற்பின் தேசுடையாய்" என்றார். "செம்பவளத் திருமேனி செல்வனும்' ஞான 270: 5. "பவள வண்ணப் பரிசாந் திருமேனி'' ஞான 27 : 5. நாவு3 "செம்பவள எரிபோன் மேனிப் பிரான்'' ''செம்பவளத் திரள் போல்வான் காண்" நாவு 237:4. "செம்பவளத் திருமேனிச் சிவனே''நாவு 311:16. எனத் தேவாரத்தும். "கொழும் பவள நிறவரை மேனியன்'' (260) * பவளச் செவ்வி யாயின வீசன்" (282) பூலித்து வேசறு எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க. இறைவன் ஞானசாரி யனாய் அடிகளை ஆட்கொண்டருள எழுந்தருளியபோது ஒளிமிக்க செங் நிறத் திருமேனியனாய் காட்சியளித்தானாகளின் 'பவள வெற்பின் தேசு டையாய் எனையாளுடையாய் என்றார். " "எந்தம ராமிவ னென்றிங் கெள்னையு மாட்கொண்டருளும் செந்தழல் போற்றீரு மேனித் தேவர்பிரான் குயிற் 10. செந்தழல் புரை திருமேனியுங் காட்டி... வந் தாண்டாய்" பள்ளி 8. திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்" குழைத் 10. என அடிகள் பிரண்டும் அருளியவாறு காண்க, தேசு -ஒளி. "தேசுடை விளக்கே' (பிடித்?) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க ஆளுடை நீத்தல் விண்ணப்பம் யாய் - என்னை ஆளாகவுடையவனே. "நமையாளுடையான் ",''நாயேனை ஆளுடையான் (தசாங் 2; P] எனை ஆளுடை நாயகன்'' முனாளுடையீசன் '' (திருப்படை 2, 6) என அடிகள் பிராண்டும் அருளி யமை காண்க. "என்னை சகல சிற்றுயிர் என்றது விஞ்ஞானாகலர் பிரனயாகலர் அல்லாத வர்க்கத்து உயிர்களைக் குறித்தது. திருமால் முதலிய தேவர்கள் யாவரும் மற்றையோரும் சகலவர்க்கத்தினரேயாவர். காய்சின ஆலம் - சுடும் வெம் மையையுடைய ஆலாலம் காய்சினம் என்பதற்கு சுடும் வெம்மை என் பது பொருளாதல், "காய் சினம் தவிராது "(புற 59.5) என்பதற்கு " சுடுகின்ற வெம்மை ஒறியாது" என அதன் உரைகாரர் உரைத்தமையா னும் அறியப்படும். "மண்டி மலையை எடுத்து மத்தாக்கி யவ்வாசுகி யைத், தண்டி யமரர் கடைந்த கடல் விடம்" (நாவு 93:10) சுடும் வெம்மைத்தாக எழுந்தமை. "அண்டவர்கள் கடல் கடைய அதனுட் டோன்றி யகிர்ந் தெழுந்த வாலாலம் வேலை ஞாலம். எண்டிசையுஞ் சுடுகின்ற வாற்றைக் கண்டு" நாவு 296:8. 479 திருநெடுமால் நிறத்தை யடுவான் வீசும்பு சுடுவான் எழுந்த விசை போய்ப் பெருகிட' நாவு 14:1. என வருவன காண்க. தேவர்கள் நஞ்சை அஞ்சி தும் சரணம் என்ன இறைவன் அவர்க்கிரங்கி அந்நஞ்சையுண்டு அவர்களைக் காத்தமையின் சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆலமுண்டாய் என்றார். வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரோடு கடைந்திட வெழுந்த நஞ்சங் கண்டு பஃறேவரஞ்சி அடைந்து துஞ்சரண மென்ன வருள் பெரிதுடையராகித் தடங் கட னஞ்ச முண்டார் சாய்க்காடு மேவினாரே"நாவு 05:2. எனத் தேவாரத்து வருதலுங் காண்க. கடையவன் - கீழ்மை யுடையவனாகிய யான் என்னும் பொருட்டு தன்மை ஒருமைப் பெயர். "கடையவனேனைக் கருணையினாற் கலந் தாண்டு கொண்ட விடையவனே' நீத் 1. 'நாயிற் கடைப்பட்ட நம்மை யிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடி" பொற்8. நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்து " பூவல்லி 3. "கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை" கண்டபத் 4. என அடிகள் தம்மைக் கடைப்பட்டவனுகக் கூறுமாறுங் காண்க.
478 திருவாசக ஆராய்ச்சியுரை என்னை பவள மலை போன்ற ஒளிபொருந்திய திருமேனியையுடையவனே ஆளாகவுடையவனே . சிற்றுயிர்க்கு இரங்கி யருனி . விடத்தையுண்டு அவ்வுயிர்களைப் பாதுகாத்தவனே கீழ்மையுடையவனாகிய யான் வின் திருவருள் அமுதத்தினை உண்ணும் வண்ணம் யான் உன்னை ஏசினும் எத்தினும் என்பிழையின் பொருட்டு மனமுருகி வருந்துவேனைக் கைவிடுகின் றனையோ ? கைடாதொழிதல் வேண்டும் என்பதாம் ஏசுதல் - பழித்தல் : இகழுதல் எனினுமாம் . ஏத்துதல் - புகழ்தல் உயர்த்திக் கூறல் குழைதல் என்ற வினையினாலும் வேசறுதலானும் அவற்றுக்கு எழுவாகிய மனம் என்பது வருவிக்கப்பட்டது . அகங் குழைந்து ' ( பொன்னூசல் 8 ) என வருதலும் காண்க தல் - வருந்துதல் . ... ஆலகால இறைவன் செம்பவளமலை போன்ற ஒளிபொருந்திய திருமேனியை யுடையனாகலின் செம்பளை வெற்பின் தேசுடையாய் என்றார் . செம்பவளத் திருமேனி செல்வனும் ' ஞான 270 : 5 . பவள வண்ணப் பரிசாந் திருமேனி ' ' ஞான 27 : 5 . நாவு 3 செம்பவள எரிபோன் மேனிப் பிரான் ' ' ' ' செம்பவளத் திரள் போல்வான் காண் நாவு 237 : 4 . செம்பவளத் திருமேனிச் சிவனே''நாவு 311 : 16 . எனத் தேவாரத்தும் . கொழும் பவள நிறவரை மேனியன் ' ' ( 260 ) * பவளச் செவ்வி யாயின வீசன் ( 282 ) பூலித்து வேசறு எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க . இறைவன் ஞானசாரி யனாய் அடிகளை ஆட்கொண்டருள எழுந்தருளியபோது ஒளிமிக்க செங் நிறத் திருமேனியனாய் காட்சியளித்தானாகளின் ' பவள வெற்பின் தேசு டையாய் எனையாளுடையாய் என்றார் . எந்தம ராமிவ னென்றிங் கெள்னையு மாட்கொண்டருளும் செந்தழல் போற்றீரு மேனித் தேவர்பிரான் குயிற் 10 . செந்தழல் புரை திருமேனியுங் காட்டி ... வந் தாண்டாய் பள்ளி 8 . திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய் குழைத் 10 . என அடிகள் பிரண்டும் அருளியவாறு காண்க தேசு -ஒளி . தேசுடை விளக்கே ' ( பிடித் ? ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க ஆளுடை நீத்தல் விண்ணப்பம் யாய் - என்னை ஆளாகவுடையவனே . நமையாளுடையான் ' ' நாயேனை ஆளுடையான் ( தசாங் 2 ; P ] எனை ஆளுடை நாயகன் ' ' முனாளுடையீசன் ' ' ( திருப்படை 2 6 ) என அடிகள் பிராண்டும் அருளி யமை காண்க . என்னை சகல சிற்றுயிர் என்றது விஞ்ஞானாகலர் பிரனயாகலர் அல்லாத வர்க்கத்து உயிர்களைக் குறித்தது . திருமால் முதலிய தேவர்கள் யாவரும் மற்றையோரும் சகலவர்க்கத்தினரேயாவர் . காய்சின ஆலம் - சுடும் வெம் மையையுடைய ஆலாலம் காய்சினம் என்பதற்கு சுடும் வெம்மை என் பது பொருளாதல் காய் சினம் தவிராது ( புற 59.5 ) என்பதற்கு சுடுகின்ற வெம்மை ஒறியாது என அதன் உரைகாரர் உரைத்தமையா னும் அறியப்படும் . மண்டி மலையை எடுத்து மத்தாக்கி யவ்வாசுகி யைத் தண்டி யமரர் கடைந்த கடல் விடம் ( நாவு 93:10 ) சுடும் வெம்மைத்தாக எழுந்தமை . அண்டவர்கள் கடல் கடைய அதனுட் டோன்றி யகிர்ந் தெழுந்த வாலாலம் வேலை ஞாலம் . எண்டிசையுஞ் சுடுகின்ற வாற்றைக் கண்டு நாவு 296 : 8 . 479 திருநெடுமால் நிறத்தை யடுவான் வீசும்பு சுடுவான் எழுந்த விசை போய்ப் பெருகிட ' நாவு 14 : 1 . என வருவன காண்க . தேவர்கள் நஞ்சை அஞ்சி தும் சரணம் என்ன இறைவன் அவர்க்கிரங்கி அந்நஞ்சையுண்டு அவர்களைக் காத்தமையின் சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆலமுண்டாய் என்றார் . வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரோடு கடைந்திட வெழுந்த நஞ்சங் கண்டு பஃறேவரஞ்சி அடைந்து துஞ்சரண மென்ன வருள் பெரிதுடையராகித் தடங் கட னஞ்ச முண்டார் சாய்க்காடு மேவினாரே நாவு 05 : 2 . எனத் தேவாரத்து வருதலுங் காண்க . கடையவன் - கீழ்மை யுடையவனாகிய யான் என்னும் பொருட்டு தன்மை ஒருமைப் பெயர் . கடையவனேனைக் கருணையினாற் கலந் தாண்டு கொண்ட விடையவனே ' நீத் 1 . ' நாயிற் கடைப்பட்ட நம்மை யிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடி பொற் 8 . நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்து பூவல்லி 3 . கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை கண்டபத் 4 . என அடிகள் தம்மைக் கடைப்பட்டவனுகக் கூறுமாறுங் காண்க .