திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வந்து அவர்க்கு அருள்புரிந்தமையின் 'பாங்கா யிருந்து" என்றார். சட்டமா சித்தி அணிமா மகிமா கரிமா இலகிமா பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வகித்துவம் என்பன. "அணிஞா மகிமா கிரிமா வதிமா நணுகீ சத்துவம் வழித்துவ நன்குள விணைசேர் பிராத்திப் பிராகா மியமென் குணமார் சித்திக டுளங்கக் கூறினான்'' நம்பி திருவிளை அட்டமா 15 என வருதல் காண்க. 64-5. வேடுவன் ஆகி வேண்டுஉரு கொண்டு - பாண்டியனுக்காகச் சோழனொடு போர்புரிதற்பொருட்டு வேட்டுவப் பரியாளனாகி அச்சமயத் திற்கு வேண்டிய திருவுருவத்தினை எடுத்து, காடது தன்னில் கரந்த கள்ள மும் - காடுமூடிக்கிடந்த மடுவினிடத்துக் குகிரையோடு குதித்து மறைந்த தந்திரமும். முன்னொருகாலத்தில் சோழமன்னன் ஒருவன் தன் வலிமையினை வியந்து செருக்குடையனாய் தென் திசையொழிந்த மூன்று திசைகளிலு முள்ள அரசர்களை வென்று பின் தென்றிசை நோக்கி வருவானாயினான். அக்காலத்தில் மதுரையிலிருந்து அரசுசெய்த பாண்டியமன்னன். அவன் தன்னை எதிர்க்க வருதலை அறிந்து உற்றகாலத்துத் தெய்வமல்லாமல் வேறு உதவியில்லை எனத்தேறித் திருக்கோயிவிற் சென்று சொக்கனை வணங்கி சோழன் திக்கெலாம் வென்று நம்மேல் வந்தான்' என் று விண்ணப்பஞ் செய்தான். அப்போது சொக்கன் திருவருளால் நின் படையொடு சென்று இளைத்திடாது அமாசெய்; வென்றி தநகுவம்' என்று அசரீரி வாக்குத் தோன்றிற்று. பாண்டியன் கேட்டுத் தன்படையொடு சென்று அவகினாடு போர்செய்தான். அப்போது இறைவன் திருவருளால் பாண்டியனின் சிறுபடை அளவில்லாத வெம்படையாய் விளங்கச் சோழ னின்தானை எதிர்நின்று பொரவாற்றாது முதுகிட்டது. அது கண்ட சோழன் வெகுண்டு மூலபலத்தோடு எதிர்க்கக் கண்டு பாண்டியன், எலளை யாளுடையாய் தேவரீர் மொழிந்தது கொண்டு எதிர்க்கின்றேன் என்று கூறி முன்செல்ல இறைவனும் வேட்டுவப் பரியாளாகிப் போர்க்கனத்துத் தோன்றிப் பாண்டியன் முற்போந்து சோழன் ஏறிவந்த குதிரை முகத்தில் வேலினை எறிய அது கண்ட சோழன் நீ புகுமிடம் புகுந்து குதிரையோடு உன்னை டிப்பன் என்றுகூறித் தொடரச் சொக்கனும் அவனுக்குத் தளர்ந்தவன் போல் நடித்து.களத்தினை விட்டு ஓடுவான் போல் குதிரை யொடும் மதுரை நோக்கிப் போகப் தொடங்கினான். சோழனும் தன் படைவெள்ளத்தொடு பின்றொடர்ந்தான். சொக்கனும் மதுரைமாநகரின் மேல்பாலுள்ள ஆழம்மிக்க தடத்துட் பாய்ந்து மறையப் பின்றொடர்ந்து +இவற்றின் விரிவைப் பரஞ்சோதி நிருவிளையாடற்புராணம் அட்டமா சித்தியுப்தேடுத்த படலம் 23-7 செய்யுள்களிற் காண்க. கீர்த்தித் திருவகவல் வந்த சோமனும் வந்த வேகத்தினால் குதிரையோடு அத்தடத்துட் பாய்ந்து மாண்டான் என நம்பி திருவிளையாடற்புராணம் கூறும். இவ்வரலாறு, மண்டிரு வேட்டுப் பஞ்சவற் பொருத கிள்ளியுங் கிளையுங் கிளர்படை நான்குந் திண்மையுஞ் செருக்குந் தேற்றமும் பொன்றிட வெளிவா யுரக கிருணாட் டொருவக் கொலைக்கொண் டாழி குறியுடன் படைத்து மறியப் புதைத்த மறங்கெழு பெருமான் (83:11.6) எனக்கல்லாடந்து வருதலுங் காண்க. வேடுவனாகி - வேட்டுவப் பரியாளனாகி. விரைவின் வெங்களத்துத் தோன்றி வேட்டுவப் பரியா ளாகி "(நம்பி திருவிளை. சோழனை 20) என வருதலுங் காண்க. இறைவன் வேட்டுவப் பரியாளாகியது அச்சமயத்திற்கு வேண்டிய திருவுருவாதலின் 'வேண்டுருக் கொண்டு' என்றார். சோழனைத் தடத்தில் வீழ்த்திய இடம் அடிகள் காலத்துக் காடாய்க் கிடந்தமை பற் றிக் காடது தன்னில்' என்றார். போர்க்களத்திலே புறங்கொடுத்தான் என்று சோழன் எண்ணும் படி களத்தினைவிட்டு மதுரை நோக்கிச் சென்று அச்சோழன் படையொடும் பின்றொடர்ந்து தடத்துள் பாய்ந்து மாளுமாறு இறைவன் தன் படையொடு அதனுட் பாய்ந்து மறைந்தமை யின் கரந்த கள்ளமும்' என்றார். L 06-7. மெய்க் காட்டிட்டு -படைத்திரளின் உண்மையைக் காட்டி யருளி, வேண்டு உருக்கொண்டு - தான் விரும்பியகோர் உருவினை மேற் கொண்டு, தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் - தகுதியுடையோன் ஒருவ னாகத் தோன்றிய தன்மையும். முற்காலத்து அரசுபுரிந்த பாண்டியமன்னன் ஒருவனுக்குச் சுந்தர சாமந்தன் என்னும் படைத்தலைவன் ஒருவன் இருந்தான். அவன் சிவ பெருமானிடத்தும் அவன் அடியாரிடத்தும் பேரன்புடையனாய் ஒழுகிவரு நாளில் சேதிபர்கோன் என்னும் கிராதர் கோமான் பெரும்படையொடு தன்னுடன் பொருதற்கு வர எண்ணியிருப்பதை ஒற்றர் மூலம் அறிந்த பாண்டியன் தன் படைத்தலைவனை அழைத்து அதனை அறிவித்து நீ பொன்ன றையைத் திறந்து வேண்டும் திரவியங்களை எடுத்துப் படைதிரட்டு என் ரூன். படைத்தலைவனும் பொருள்பலவும் எடுத்துக் கொண்டு திருக்கோயிலை அடைந்து அங்கயற்கண்ணி பங்கனை அங்கையாற்றெழுது இப்பொருள் உடன்னடியவர்க்கே பயன்படன் வேண்டும் என்று. இறைஞ்சி அப்பொருள் கொண்டு சிவனடியார்க்கு நாடொம் அமுது செய்வித்து மன்னவன் பொருள் முழுவதையும் ஆற திங்களில் அழித்தான். அரசனும் ஆறு திங் கள் சென்றதும் தன்படைத்தலைவனை அழைத்துப் படைகள் எவ்வளவு தொகுத்தனை என்துவினாவ, அவனும் அடியவர்க் கெளிய சுந்தரனுண்டு; அவன் அடிமேன் கருத்தினை முடிப்பான். வேண்டியபொழுல் படையு முண்டு' என்று உரைப்ப மன்னவனும் அதிசயித்துச் செனைத்தலைவ நாளைக் னு, 7
திருவாசக ஆராய்ச்சியுரை வந்து அவர்க்கு அருள்புரிந்தமையின் ' பாங்கா யிருந்து என்றார் . சட்டமா சித்தி அணிமா மகிமா கரிமா இலகிமா பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வகித்துவம் என்பன . அணிஞா மகிமா கிரிமா வதிமா நணுகீ சத்துவம் வழித்துவ நன்குள விணைசேர் பிராத்திப் பிராகா மியமென் குணமார் சித்திக டுளங்கக் கூறினான் ' ' நம்பி திருவிளை அட்டமா 15 என வருதல் காண்க . 64-5 . வேடுவன் ஆகி வேண்டுஉரு கொண்டு - பாண்டியனுக்காகச் சோழனொடு போர்புரிதற்பொருட்டு வேட்டுவப் பரியாளனாகி அச்சமயத் திற்கு வேண்டிய திருவுருவத்தினை எடுத்து காடது தன்னில் கரந்த கள்ள மும் - காடுமூடிக்கிடந்த மடுவினிடத்துக் குகிரையோடு குதித்து மறைந்த தந்திரமும் . முன்னொருகாலத்தில் சோழமன்னன் ஒருவன் தன் வலிமையினை வியந்து செருக்குடையனாய் தென் திசையொழிந்த மூன்று திசைகளிலு முள்ள அரசர்களை வென்று பின் தென்றிசை நோக்கி வருவானாயினான் . அக்காலத்தில் மதுரையிலிருந்து அரசுசெய்த பாண்டியமன்னன் . அவன் தன்னை எதிர்க்க வருதலை அறிந்து உற்றகாலத்துத் தெய்வமல்லாமல் வேறு உதவியில்லை எனத்தேறித் திருக்கோயிவிற் சென்று சொக்கனை வணங்கி சோழன் திக்கெலாம் வென்று நம்மேல் வந்தான் ' என் று விண்ணப்பஞ் செய்தான் . அப்போது சொக்கன் திருவருளால் நின் படையொடு சென்று இளைத்திடாது அமாசெய் ; வென்றி தநகுவம் ' என்று அசரீரி வாக்குத் தோன்றிற்று . பாண்டியன் கேட்டுத் தன்படையொடு சென்று அவகினாடு போர்செய்தான் . அப்போது இறைவன் திருவருளால் பாண்டியனின் சிறுபடை அளவில்லாத வெம்படையாய் விளங்கச் சோழ னின்தானை எதிர்நின்று பொரவாற்றாது முதுகிட்டது . அது கண்ட சோழன் வெகுண்டு மூலபலத்தோடு எதிர்க்கக் கண்டு பாண்டியன் எலளை யாளுடையாய் தேவரீர் மொழிந்தது கொண்டு எதிர்க்கின்றேன் என்று கூறி முன்செல்ல இறைவனும் வேட்டுவப் பரியாளாகிப் போர்க்கனத்துத் தோன்றிப் பாண்டியன் முற்போந்து சோழன் ஏறிவந்த குதிரை முகத்தில் வேலினை எறிய அது கண்ட சோழன் நீ புகுமிடம் புகுந்து குதிரையோடு உன்னை டிப்பன் என்றுகூறித் தொடரச் சொக்கனும் அவனுக்குத் தளர்ந்தவன் போல் நடித்து.களத்தினை விட்டு ஓடுவான் போல் குதிரை யொடும் மதுரை நோக்கிப் போகப் தொடங்கினான் . சோழனும் தன் படைவெள்ளத்தொடு பின்றொடர்ந்தான் . சொக்கனும் மதுரைமாநகரின் மேல்பாலுள்ள ஆழம்மிக்க தடத்துட் பாய்ந்து மறையப் பின்றொடர்ந்து + இவற்றின் விரிவைப் பரஞ்சோதி நிருவிளையாடற்புராணம் அட்டமா சித்தியுப்தேடுத்த படலம் 23-7 செய்யுள்களிற் காண்க . கீர்த்தித் திருவகவல் வந்த சோமனும் வந்த வேகத்தினால் குதிரையோடு அத்தடத்துட் பாய்ந்து மாண்டான் என நம்பி திருவிளையாடற்புராணம் கூறும் . இவ்வரலாறு மண்டிரு வேட்டுப் பஞ்சவற் பொருத கிள்ளியுங் கிளையுங் கிளர்படை நான்குந் திண்மையுஞ் செருக்குந் தேற்றமும் பொன்றிட வெளிவா யுரக கிருணாட் டொருவக் கொலைக்கொண் டாழி குறியுடன் படைத்து மறியப் புதைத்த மறங்கெழு பெருமான் ( 83 : 11.6 ) எனக்கல்லாடந்து வருதலுங் காண்க . வேடுவனாகி - வேட்டுவப் பரியாளனாகி . விரைவின் வெங்களத்துத் தோன்றி வேட்டுவப் பரியா ளாகி ( நம்பி திருவிளை . சோழனை 20 ) என வருதலுங் காண்க . இறைவன் வேட்டுவப் பரியாளாகியது அச்சமயத்திற்கு வேண்டிய திருவுருவாதலின் ' வேண்டுருக் கொண்டு ' என்றார் . சோழனைத் தடத்தில் வீழ்த்திய இடம் அடிகள் காலத்துக் காடாய்க் கிடந்தமை பற் றிக் காடது தன்னில் ' என்றார் . போர்க்களத்திலே புறங்கொடுத்தான் என்று சோழன் எண்ணும் படி களத்தினைவிட்டு மதுரை நோக்கிச் சென்று அச்சோழன் படையொடும் பின்றொடர்ந்து தடத்துள் பாய்ந்து மாளுமாறு இறைவன் தன் படையொடு அதனுட் பாய்ந்து மறைந்தமை யின் கரந்த கள்ளமும் ' என்றார் . L 06-7 . மெய்க் காட்டிட்டு -படைத்திரளின் உண்மையைக் காட்டி யருளி வேண்டு உருக்கொண்டு - தான் விரும்பியகோர் உருவினை மேற் கொண்டு தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் - தகுதியுடையோன் ஒருவ னாகத் தோன்றிய தன்மையும் . முற்காலத்து அரசுபுரிந்த பாண்டியமன்னன் ஒருவனுக்குச் சுந்தர சாமந்தன் என்னும் படைத்தலைவன் ஒருவன் இருந்தான் . அவன் சிவ பெருமானிடத்தும் அவன் அடியாரிடத்தும் பேரன்புடையனாய் ஒழுகிவரு நாளில் சேதிபர்கோன் என்னும் கிராதர் கோமான் பெரும்படையொடு தன்னுடன் பொருதற்கு வர எண்ணியிருப்பதை ஒற்றர் மூலம் அறிந்த பாண்டியன் தன் படைத்தலைவனை அழைத்து அதனை அறிவித்து நீ பொன்ன றையைத் திறந்து வேண்டும் திரவியங்களை எடுத்துப் படைதிரட்டு என் ரூன் . படைத்தலைவனும் பொருள்பலவும் எடுத்துக் கொண்டு திருக்கோயிலை அடைந்து அங்கயற்கண்ணி பங்கனை அங்கையாற்றெழுது இப்பொருள் உடன்னடியவர்க்கே பயன்படன் வேண்டும் என்று . இறைஞ்சி அப்பொருள் கொண்டு சிவனடியார்க்கு நாடொம் அமுது செய்வித்து மன்னவன் பொருள் முழுவதையும் ஆற திங்களில் அழித்தான் . அரசனும் ஆறு திங் கள் சென்றதும் தன்படைத்தலைவனை அழைத்துப் படைகள் எவ்வளவு தொகுத்தனை என்துவினாவ அவனும் அடியவர்க் கெளிய சுந்தரனுண்டு ; அவன் அடிமேன் கருத்தினை முடிப்பான் . வேண்டியபொழுல் படையு முண்டு ' என்று உரைப்ப மன்னவனும் அதிசயித்துச் செனைத்தலைவ நாளைக் னு 7