திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

50 திருவாசக ஆராய்ச்சியுரை காலையில் நின்படையினை மெய்க்காட்டிடுக; உருப்படக்காண்பேம் என்று கூறி விடுத்தான். சாமந்தனும் திருக்கோயிலை யடைந்து சொக்கனை வணங்கி பாண்டியன் பொருளெல்லாம் உன் அடியார்க்கு இறைத்தேன். அவன் நாளைப்படையினை மெய்க்காட்டிடுக எனப் போந்தேன். படை காட்டுமாறு எவ்வாறு? அதனை அருள் செய்க எனவேண்டுதலும் அப்பொழுது நீ வருந்தாத மனத்தொடும் செல்; குறைவற வேண்டும்படையொடு கொற்றவன் காண யாம் வருவேம் என ஒரு அசரீரிவாக்குத் தோன்றிற்று. அவனும் மனந் தேறி மறுநாட்காலையில் மன்னவன் வாயிலை அடையும்போது இறையரு ளால் எம்மருங்கும் பல்லியங் கறங்கப் பெரும்படைச் சாத்துவர, அதனைக் கண்டு வேந்தன் பெரும் பயத்தினோடும் ஈதென்கொல் என்று படைத் தலைவனை வினாவினான், அவனும் அடிவனங்கி இது நம்படை; அஞ்சற்க என் அப்படையினை நிறுத்தி அவற்றின் மெய்ம்மையைக் காட்டியிட்டான். அப் போது அரசன், பரிமேற்கொண்டு உலாவுகின்ற படைத்தலைவன் யார் கொல் என வினாவி அவனைத் தன்படைத்தலைவனால் அருகழைத்துத் துகில் அளித்து அவன் பரியுகைக்குமாறெல்லாம் கண்டு அதிகரித்து நிற்கையில், அரசன் முன் ஒற்றன் ஒருவன் போங்து,படையான் மிக்க சேதிபர் கோமானைக் காட்டின்கண் ஒரு சிங்கம் கொன்றுவிட்டது என்றனன். கேட்ட வேந்தன் திருவருளை வாழ்த்தித் தன்படைத்தலைவனை நோக்கிக் கொடும் பகை போனது; இப்படைஞரை வருத்தவேண்டியதில்லை; தத்தம் இடத் துப் போகச் சாற்றுதி என்ன, அப்பெரும்படையும் படைத்தலைவனும் இறைப்பொழுதில் மறைந்திட பாண்டியனும் சாமந்தனும் இறைவன் திரு வருளை வியந்து வாழ்த்தினர் என நம்பி திருவிளையாடற்புராணம் கூறும். மெய்க்காட்டிட்டு - உண்மையைக் காட்டி. "எண்ணாப் பெரும்படை மெய்க்காட்டிட்டு (நம்பிதிருவிளை. பயங்கரமாலை 39) என வருதலும் காண்க. தக்கான் என்றது வந்த படைகளின் நடுவே அழகு பொங்கப் பரிமேற்கொண்டு படைத்தலைவனாக ஈன்ற இறைவனை உணர்த்தியது. 68-9. ஓரி ஊரின் உகந்து இது அருளி - ஓரி என்னும் ஊரின் கண் அடியவள் ஒருத்தியை ஆட்கொள்ள விரும்பி அவளுக்கு மகிழ்ச்சி மிகும்படி இனிதாக அருள்செய்து, பார் இரும் பாலகன் ஆன பரிசும் - இந்நிலவுலகத்திற் பிறவாயாக்கைப் பெருமையையுடைய பாவகன் ஆகிய தன்மையும். முன்னொரு காலத்திலே பாண்டி நாட்டிலுள்ள சிறந்த கிராமம் ஒன் றில் மறையோன் ஒருவன் இருந்தான். அவன் தான் அரிதிற்பெற்ற கன்னிகைரைப் பிரமசாரியாய் வரும் மறையோன் ஒருவனுக்குக் கொடுப் பம் என விச்சயித்திருக்கையிற் பிச்சைபெற வந்த வைணவப் பிரமசாரி ஒருவனுக்குத் தன் கன்னிகையை மணஞ்செய்து கொடுத்து அவனொடு அவலூருக்குப் போக விடுத்தான். அவன் அவளொடு தன் ஊருக்குச் சென்று தன் வீட்டிற் புகும்பொழுது அவனுடைய தாய் சைவப் பார்ப்பன மகளை அவன் மணஞ்செய்து வந்தமையை அறிந்து கடுந்துயருழந்து அவ கீர்த்தித் திருவகவல் 51 ளைத் தன் வீட்டின் ஒதுக்கிடத்தே வைத்துக் கொடுமையாய் நடத்தி வந் தான். அவளை மணந்?தானும் அவள்பால் மனம் வையாமல் இருப்ப. ஈசனிடத்தே மனம் வைத்த அப்பெண் அவ்வில்லின்கண் அளவிறந்த வைணவர்கள் புசித்தல் கண்டு. இங்கு ஒரு தவமுனிவர் நணுகாரோ என்று எண்ணியிருந்தாள். முன்செய்த நல்வினையால் அவள் மாமன் மாமி முதலானோர் பிறிதோர் இல்வத்திற்குப் போக மதுரைச் சொக்கநாதர் விருத்தர் உருக்கொண்டு அப்பெண் தனியே இருந்த அவ்வீட்டிற்சென்று நமக்கு அமுதுபடை என்று கூற, அவளும் அவரை வணங்கித் தன் மாமி கதவடைத்துப் போயினள்; அமுதபடி புறத்தேயில்லை என உரைத்தாள். அவரும் நீ செல்லுங்கால் கதவம் திறக்கும் எனக் கூற அவளும் அவ் வாறே சென்றபோது கதவந்திறப்பு உட்புகுந்து உணவுக்கு வேண்டும் பொருள்களை எடுத்து அடிசில் அமைத்துப் படைக்க அம்முதியோரும் வயிறார உண்டு அழகு மிக்க பதினாருட்டைப் பராயத்தராய் விளங்கினார். அதுகண்டு அவள் அதிசயித்து நிற்பப் பிறிதோரில்லத்திற்குச் சென்றி ருந்த மாமி அம் மனைவயிலில் வந்து இங்கு வந்தவர் யாவரோவென்று வினாவ அவள் ஒருமாற்றமும் கூறாது நின்றாள். அப்பொழுது இறை வர் பாலனுருக்கொண்டு தொட்டிலிற் கிடந்தனர். அதனைக் கண்ட மாமி இப்பாலன் யாவனென வினாவு, இங்கு வந்தாள் ஒருத்தி இதனைத் தொட்டி லிற் கிடத்தி இப்பாலகளைப் பாதுகரத்துக்கொள் எனக் கூறிக் கணவ னொடும் போயினான் என்றாள். அது கேட்ட மாமி பிறர்தரும் பாலகனை நீயோ காப்பாய் என்று கூறி அப்பாலகனோடும் புறத்தே தள்ளிக் கத வடைத்தாள். இறைவனும் பாலகனுருவம் நீங்கித் தாமாந்தன்மையை யுணரத்தக்க உண்மை வடிவினைக்கொண்டு அம்மாதுக்கு உமையம்மை யின் சாரூபத்தைக் கொடுத்துச் சத்திமண்டலத்தை யடையுமாறு செய்து தாம் மறைந்தருளினர் என நம்பி திருவிளையாடற்புராணம் கூறும். இப் புராணத்தில், மறையோன் வாழ்ந்தவூர் கூறப்பட்டிலதாயினும் 'ஓரியூரின்' என அடிகள் கூறுதலின் இவ்வரலாறு அவ்வூரில் நிகழ்ந்ததாகக் கொள் ளப்படும். உகந்து - விரும்பி. பார் - நிலவுலகம். "துப்புறு பரவை யேழுஞ் சூழ்ந்த பார்" (கம்ப. உருக்காட்டு 33) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 70-2. பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் -பாண்டூர் என்னும் தலத்தில் அடியவர்கள் திரண்டு வந்து வணங்கும்படி எழுந்தருளியிருக் தும், *தேவூர் தென்பால் திகழ்தரு தீவில் - திருத்தேவூருக்குக் தென்பக் தேவூர் வேதாரணியத்திற்குச் சமீபத்திலுள்ள ஒருர். அதற்குத் தென் பால் திகழ்தருதீவு, மணற்றி, மணிபல்லவம் என்னும் பெயர்களையுடைய யாழ்ப்பாணத் தீபகற்பமாகலாம். நித்திபகற்பத்திலுள்ள சீவதலங்களுள் நகுலேசுவரம் மிக்க பழமையுடையது. அதுவே இறைவன் கோவார் கோலங் கொண்ட தலமாக அமையுமோ என எண்ண இடமுண்டு.
50 திருவாசக ஆராய்ச்சியுரை காலையில் நின்படையினை மெய்க்காட்டிடுக ; உருப்படக்காண்பேம் என்று கூறி விடுத்தான் . சாமந்தனும் திருக்கோயிலை யடைந்து சொக்கனை வணங்கி பாண்டியன் பொருளெல்லாம் உன் அடியார்க்கு இறைத்தேன் . அவன் நாளைப்படையினை மெய்க்காட்டிடுக எனப் போந்தேன் . படை காட்டுமாறு எவ்வாறு ? அதனை அருள் செய்க எனவேண்டுதலும் அப்பொழுது நீ வருந்தாத மனத்தொடும் செல் ; குறைவற வேண்டும்படையொடு கொற்றவன் காண யாம் வருவேம் என ஒரு அசரீரிவாக்குத் தோன்றிற்று . அவனும் மனந் தேறி மறுநாட்காலையில் மன்னவன் வாயிலை அடையும்போது இறையரு ளால் எம்மருங்கும் பல்லியங் கறங்கப் பெரும்படைச் சாத்துவர அதனைக் கண்டு வேந்தன் பெரும் பயத்தினோடும் ஈதென்கொல் என்று படைத் தலைவனை வினாவினான் அவனும் அடிவனங்கி இது நம்படை ; அஞ்சற்க என் அப்படையினை நிறுத்தி அவற்றின் மெய்ம்மையைக் காட்டியிட்டான் . அப் போது அரசன் பரிமேற்கொண்டு உலாவுகின்ற படைத்தலைவன் யார் கொல் என வினாவி அவனைத் தன்படைத்தலைவனால் அருகழைத்துத் துகில் அளித்து அவன் பரியுகைக்குமாறெல்லாம் கண்டு அதிகரித்து நிற்கையில் அரசன் முன் ஒற்றன் ஒருவன் போங்து படையான் மிக்க சேதிபர் கோமானைக் காட்டின்கண் ஒரு சிங்கம் கொன்றுவிட்டது என்றனன் . கேட்ட வேந்தன் திருவருளை வாழ்த்தித் தன்படைத்தலைவனை நோக்கிக் கொடும் பகை போனது ; இப்படைஞரை வருத்தவேண்டியதில்லை ; தத்தம் இடத் துப் போகச் சாற்றுதி என்ன அப்பெரும்படையும் படைத்தலைவனும் இறைப்பொழுதில் மறைந்திட பாண்டியனும் சாமந்தனும் இறைவன் திரு வருளை வியந்து வாழ்த்தினர் என நம்பி திருவிளையாடற்புராணம் கூறும் . மெய்க்காட்டிட்டு - உண்மையைக் காட்டி . எண்ணாப் பெரும்படை மெய்க்காட்டிட்டு ( நம்பிதிருவிளை . பயங்கரமாலை 39 ) என வருதலும் காண்க . தக்கான் என்றது வந்த படைகளின் நடுவே அழகு பொங்கப் பரிமேற்கொண்டு படைத்தலைவனாக ஈன்ற இறைவனை உணர்த்தியது . 68-9 . ஓரி ஊரின் உகந்து இது அருளி - ஓரி என்னும் ஊரின் கண் அடியவள் ஒருத்தியை ஆட்கொள்ள விரும்பி அவளுக்கு மகிழ்ச்சி மிகும்படி இனிதாக அருள்செய்து பார் இரும் பாலகன் ஆன பரிசும் - இந்நிலவுலகத்திற் பிறவாயாக்கைப் பெருமையையுடைய பாவகன் ஆகிய தன்மையும் . முன்னொரு காலத்திலே பாண்டி நாட்டிலுள்ள சிறந்த கிராமம் ஒன் றில் மறையோன் ஒருவன் இருந்தான் . அவன் தான் அரிதிற்பெற்ற கன்னிகைரைப் பிரமசாரியாய் வரும் மறையோன் ஒருவனுக்குக் கொடுப் பம் என விச்சயித்திருக்கையிற் பிச்சைபெற வந்த வைணவப் பிரமசாரி ஒருவனுக்குத் தன் கன்னிகையை மணஞ்செய்து கொடுத்து அவனொடு அவலூருக்குப் போக விடுத்தான் . அவன் அவளொடு தன் ஊருக்குச் சென்று தன் வீட்டிற் புகும்பொழுது அவனுடைய தாய் சைவப் பார்ப்பன மகளை அவன் மணஞ்செய்து வந்தமையை அறிந்து கடுந்துயருழந்து அவ கீர்த்தித் திருவகவல் 51 ளைத் தன் வீட்டின் ஒதுக்கிடத்தே வைத்துக் கொடுமையாய் நடத்தி வந் தான் . அவளை மணந் ? தானும் அவள்பால் மனம் வையாமல் இருப்ப . ஈசனிடத்தே மனம் வைத்த அப்பெண் அவ்வில்லின்கண் அளவிறந்த வைணவர்கள் புசித்தல் கண்டு . இங்கு ஒரு தவமுனிவர் நணுகாரோ என்று எண்ணியிருந்தாள் . முன்செய்த நல்வினையால் அவள் மாமன் மாமி முதலானோர் பிறிதோர் இல்வத்திற்குப் போக மதுரைச் சொக்கநாதர் விருத்தர் உருக்கொண்டு அப்பெண் தனியே இருந்த அவ்வீட்டிற்சென்று நமக்கு அமுதுபடை என்று கூற அவளும் அவரை வணங்கித் தன் மாமி கதவடைத்துப் போயினள் ; அமுதபடி புறத்தேயில்லை என உரைத்தாள் . அவரும் நீ செல்லுங்கால் கதவம் திறக்கும் எனக் கூற அவளும் அவ் வாறே சென்றபோது கதவந்திறப்பு உட்புகுந்து உணவுக்கு வேண்டும் பொருள்களை எடுத்து அடிசில் அமைத்துப் படைக்க அம்முதியோரும் வயிறார உண்டு அழகு மிக்க பதினாருட்டைப் பராயத்தராய் விளங்கினார் . அதுகண்டு அவள் அதிசயித்து நிற்பப் பிறிதோரில்லத்திற்குச் சென்றி ருந்த மாமி அம் மனைவயிலில் வந்து இங்கு வந்தவர் யாவரோவென்று வினாவ அவள் ஒருமாற்றமும் கூறாது நின்றாள் . அப்பொழுது இறை வர் பாலனுருக்கொண்டு தொட்டிலிற் கிடந்தனர் . அதனைக் கண்ட மாமி இப்பாலன் யாவனென வினாவு இங்கு வந்தாள் ஒருத்தி இதனைத் தொட்டி லிற் கிடத்தி இப்பாலகளைப் பாதுகரத்துக்கொள் எனக் கூறிக் கணவ னொடும் போயினான் என்றாள் . அது கேட்ட மாமி பிறர்தரும் பாலகனை நீயோ காப்பாய் என்று கூறி அப்பாலகனோடும் புறத்தே தள்ளிக் கத வடைத்தாள் . இறைவனும் பாலகனுருவம் நீங்கித் தாமாந்தன்மையை யுணரத்தக்க உண்மை வடிவினைக்கொண்டு அம்மாதுக்கு உமையம்மை யின் சாரூபத்தைக் கொடுத்துச் சத்திமண்டலத்தை யடையுமாறு செய்து தாம் மறைந்தருளினர் என நம்பி திருவிளையாடற்புராணம் கூறும் . இப் புராணத்தில் மறையோன் வாழ்ந்தவூர் கூறப்பட்டிலதாயினும் ' ஓரியூரின் ' என அடிகள் கூறுதலின் இவ்வரலாறு அவ்வூரில் நிகழ்ந்ததாகக் கொள் ளப்படும் . உகந்து - விரும்பி . பார் - நிலவுலகம் . துப்புறு பரவை யேழுஞ் சூழ்ந்த பார் ( கம்ப . உருக்காட்டு 33 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . 70-2 . பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் -பாண்டூர் என்னும் தலத்தில் அடியவர்கள் திரண்டு வந்து வணங்கும்படி எழுந்தருளியிருக் தும் * தேவூர் தென்பால் திகழ்தரு தீவில் - திருத்தேவூருக்குக் தென்பக் தேவூர் வேதாரணியத்திற்குச் சமீபத்திலுள்ள ஒருர் . அதற்குத் தென் பால் திகழ்தருதீவு மணற்றி மணிபல்லவம் என்னும் பெயர்களையுடைய யாழ்ப்பாணத் தீபகற்பமாகலாம் . நித்திபகற்பத்திலுள்ள சீவதலங்களுள் நகுலேசுவரம் மிக்க பழமையுடையது . அதுவே இறைவன் கோவார் கோலங் கொண்ட தலமாக அமையுமோ என எண்ண இடமுண்டு .