திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

52 திருவாசக ஆராய்ச்சியுரை கத்தே கடற்கண் விளங்காநின்ற தீவின்கண்,கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும் - அரசியற் றன்மை பொருந்திய திருவுருவினைக் கொண்டு சிந்தருளிய கோட்பாடும். ஈண்டுதல் - திரளுதல். "ஈன்டு பெருந்தானை" (முல்லை 20) என் புரி யும் இப்பொருட்டாதல் காண்க. நெருங்குதல் எனினுமாம். திகழ்தரு தல் - விளங்குதல். கோ என்றது ஈண்டு அரசியற் றன்மையை உணர்த்தி யது. பாண்டூர் தேவூர் என்பன பாண்டி நாட்டிலுள்ளன என்பர். 73-4. தேன் அமர் சோலை திரு ஆரூரின் - வண்டுகள் தங்கும் சோலை களையுடைய திருவாரூரில், ஞானம் தன்னை நல்கிய நன்மையும் - வீடு பயக்கும் உணர்வினை உபதேசித்தருளிய நலமும். தேன் - வண்டு. 'தேனியிர் கண்ணி" (பு. வெ மா. 43) என்புழி யும் இப்பொருட்டாதல் காண்க. "சிறைவண்டார் பொழில்குழ் திருவா ரூர்" (ஞான 303:3) எனத் தேவாரத்து வருதலுங் காண்க, தேன் எனினுமமையும். ஞானம் - விடுபயக்குமுணர்வு. ஞானமாவது வீடு பயக்குமுணர்வு: எனப் பரிமேவழகர் உரைத்தமையும் (குறள் 34 அதி) காண்க. 75-8. இடை மருது அதனில் ஈண்ட இருந்து - திருவிடைமருதூரின் கண் அடியவர்கள் நெருங்கி வந்து வழிபட வீற்றிருந்து, படிம பாதம் வைத்த பரிசும் - தனது தூய திருவடிகளை அடியவர்களின் சென்னிமீது வைத்து அருள் செய்த கருணைத் தன்மையும். இடைமருது - திருவிடை மருதூர். ஈண்ட இருந்து - நெருங்கி வந்து வழிபட இருந்து. இடை மரு துறையும் எந்தாய் போற்றி (போற்றி 145) " இடை மருதே யிடங்கொண்ட அம்மானே" (ஏசறவு இ) "வருந்திய மாதவத்தோர் வானோ ரேனோர் வந்தீண்டிப் பொருந்திய... இடை மருகில், பொருந்திய கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே (தே.ஞான 192:5) என வருவன காண்க. படிமம் என்றது ஈண்டு தூய்மை என்னும் பொருள் பட நின்றது. 77-8. ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து - திருக்கச்சி ஏகம்பம் என் னும் காஞ்சிமாநகரில் தமது இயற்கையான அருவத் திருமேனியோடு வீற் றிருந்து, பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் - இடப்பாகம் உமையம்மை யாரோடு கூடியதான தன்மையும். திருக்கையிலையில் இறைவி தன் உள்ளத்தில் எழுந்த அன்பின் மிகுதி யால் இறைவனது பின்புறத்திற் சென்று அவ்விறைவனுடைய திருக்கண் களைத் தமது அழகிய திருக்கரங்களாற் புதைத்தலும் அக்கண்களினொளி மறைய அதனால் எல்லாவுலகங்களும் எட்டுத்திசைகளும் விண்ணோருலக் மும் இருளடைந்தன. நிலவுலகிளர் பூமியையும் அதிலுள்ள பொருள்களை யும் காணாராயினர். தேவர் முதலிய யாவரும் ஒன்றுந் தோன்றாது 53 கீர்த்தித் திருவகவல் வருந்தி இருள்வயப்பட்டுப் பதைபதைத்துப் பெருங்குரலிட அதனைக் கேட்ட அம்மையார் தமது திருக்கரத்தை நீக்க இறைவன் தமது கண்களைத் திறந் உடனே ஞாயிறு திங்கள் வான்மீன் முதலிய எல்லா ஒளி மண்ட லங்களும் விளங்கின. இறைவன் இறைவியை நோக்கி நீ நம் கண்களை விளையாட்டாக மூடித்திறந்தது ஒரு சிறு பொழுதே யாயினும் அஃது உல கங்களுக்கெல்லாம் எண்ணிறந்த பல ஊழிக்காலங்களாகக் கழிந்து படைத் தல் முதலிய தொழில்கள் இவ்யாம் வண்ணம் தகைந்த காரணத்தால் அதற்குக் கழுவாயாக நீ நம்மை அகன்று மண்ணுலகிற் சென்று நமக்கு இனிய காஞ்சிமாநகரில் நம்மைச் சிவலிங்க வடிவில் வைத்து வழிபடுவா யாக என்று விடுப்ப, இறைவியும் இறைவனைப் பிரிந்துபோந்து காஞ்சியிலே கம்பையாற்றங்கரையில் ஒரு மாமரத்தினடியிற் சிவலிங்கத் திருவுருவைக் கண்டு வழிபட, இறைவன் திருவுள்ளக் குறிப்பினால் அக்கம்பையாற்றில் வெள்ளம் சிலபூசையைச் சிதைவு செய்வதுபோற் பெருக்கெடுத்துக் கருகி வருதலும் இறைவி மனங்கலங்கி இப்பெருநீர் வெள்ளம் எம்பிரான் மிசையே நண்ணும்; இனிச் செய்வதென்னை என்று தம்பெருமானார்பால் அன்பு நிறைந்தெழுகின்ற திருவுள்ளத்தோடும் தன் இருகரங்களாலும் அச்சிவலிங்கத்தினைக் கட்டித் தருவப் பெருமானும் அத்திருவுருவிளின்றுந் தோன்றி உமையம்மையை அனைத்துத் தனது இடப்பாகத்திற் பொருந்த வைத்தான் எனக் காஞ்சிபுராணம் கூறும். ஏகாமரம் என்பது ஏகம்பம் என மருவியது. ஏக ஆமரம் ஒரு மாமரம். "நிறைமலர்த் தனிமா கீழ னித்தனே " (காஞ்சி. தழுவக் 405) என வருதலும் காண்க, 79-80. திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து - திருவாஞ்சியம் என் னும் திருப்பதியில் திருமணச்சீர் பெறுதற்குரிய அழகுடன் எழுந்தருளி, யிருந்து. மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் இயற்கைமணம் பொருந்திய கூந்தலையுடைய உமாதேவியோடு கலந்து மகிழ்ந்த திருவிளை யாட்டும். திருவாஞ்சியம் என்பது சோழநாட்டிலுள்ள பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. இலக்குமியை வாஞ்சித்துத் ருமால் இறைவனைப் பூசித்த கார ணத்தால் இத்தலம் இப்பெயர் பெற்றது. ''கற்றை வார்குழற் றிருவைவாஞ் சியத்துள் கருணை யாலுறத் தமியனேன் மேவப் பெற்ற திந்நக ராதலா வீதற்குப் பெயரு மேதிரு வாஞ்சிய மெனவும் " (திருமால் தவம்புரி 105) எனத் திருவாஞ்சியந்தலபுராணத்து வருதலும் காண்க. மரு-மணம். 'மருவார் கொன்றை" (தே.சுந்53.1) என்புரியும் இப்பொருட்டாதல் காண்க. மருவார் குழலி வென்றது இயற்கை மணம் பொருந்திய கூந்
52 திருவாசக ஆராய்ச்சியுரை கத்தே கடற்கண் விளங்காநின்ற தீவின்கண் கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும் - அரசியற் றன்மை பொருந்திய திருவுருவினைக் கொண்டு சிந்தருளிய கோட்பாடும் . ஈண்டுதல் - திரளுதல் . ஈன்டு பெருந்தானை ( முல்லை 20 ) என் புரி யும் இப்பொருட்டாதல் காண்க . நெருங்குதல் எனினுமாம் . திகழ்தரு தல் - விளங்குதல் . கோ என்றது ஈண்டு அரசியற் றன்மையை உணர்த்தி யது . பாண்டூர் தேவூர் என்பன பாண்டி நாட்டிலுள்ளன என்பர் . 73-4 . தேன் அமர் சோலை திரு ஆரூரின் - வண்டுகள் தங்கும் சோலை களையுடைய திருவாரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும் - வீடு பயக்கும் உணர்வினை உபதேசித்தருளிய நலமும் . தேன் - வண்டு . ' தேனியிர் கண்ணி ( பு . வெ மா . 43 ) என்புழி யும் இப்பொருட்டாதல் காண்க . சிறைவண்டார் பொழில்குழ் திருவா ரூர் ( ஞான 303 : 3 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க தேன் எனினுமமையும் . ஞானம் - விடுபயக்குமுணர்வு . ஞானமாவது வீடு பயக்குமுணர்வு : எனப் பரிமேவழகர் உரைத்தமையும் ( குறள் 34 அதி ) காண்க . 75-8 . இடை மருது அதனில் ஈண்ட இருந்து - திருவிடைமருதூரின் கண் அடியவர்கள் நெருங்கி வந்து வழிபட வீற்றிருந்து படிம பாதம் வைத்த பரிசும் - தனது தூய திருவடிகளை அடியவர்களின் சென்னிமீது வைத்து அருள் செய்த கருணைத் தன்மையும் . இடைமருது - திருவிடை மருதூர் . ஈண்ட இருந்து - நெருங்கி வந்து வழிபட இருந்து . இடை மரு துறையும் எந்தாய் போற்றி ( போற்றி 145 ) இடை மருதே யிடங்கொண்ட அம்மானே ( ஏசறவு ) வருந்திய மாதவத்தோர் வானோ ரேனோர் வந்தீண்டிப் பொருந்திய ... இடை மருகில் பொருந்திய கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே ( தே.ஞான 192 : 5 ) என வருவன காண்க . படிமம் என்றது ஈண்டு தூய்மை என்னும் பொருள் பட நின்றது . 77-8 . ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து - திருக்கச்சி ஏகம்பம் என் னும் காஞ்சிமாநகரில் தமது இயற்கையான அருவத் திருமேனியோடு வீற் றிருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் - இடப்பாகம் உமையம்மை யாரோடு கூடியதான தன்மையும் . திருக்கையிலையில் இறைவி தன் உள்ளத்தில் எழுந்த அன்பின் மிகுதி யால் இறைவனது பின்புறத்திற் சென்று அவ்விறைவனுடைய திருக்கண் களைத் தமது அழகிய திருக்கரங்களாற் புதைத்தலும் அக்கண்களினொளி மறைய அதனால் எல்லாவுலகங்களும் எட்டுத்திசைகளும் விண்ணோருலக் மும் இருளடைந்தன . நிலவுலகிளர் பூமியையும் அதிலுள்ள பொருள்களை யும் காணாராயினர் . தேவர் முதலிய யாவரும் ஒன்றுந் தோன்றாது 53 கீர்த்தித் திருவகவல் வருந்தி இருள்வயப்பட்டுப் பதைபதைத்துப் பெருங்குரலிட அதனைக் கேட்ட அம்மையார் தமது திருக்கரத்தை நீக்க இறைவன் தமது கண்களைத் திறந் உடனே ஞாயிறு திங்கள் வான்மீன் முதலிய எல்லா ஒளி மண்ட லங்களும் விளங்கின . இறைவன் இறைவியை நோக்கி நீ நம் கண்களை விளையாட்டாக மூடித்திறந்தது ஒரு சிறு பொழுதே யாயினும் அஃது உல கங்களுக்கெல்லாம் எண்ணிறந்த பல ஊழிக்காலங்களாகக் கழிந்து படைத் தல் முதலிய தொழில்கள் இவ்யாம் வண்ணம் தகைந்த காரணத்தால் அதற்குக் கழுவாயாக நீ நம்மை அகன்று மண்ணுலகிற் சென்று நமக்கு இனிய காஞ்சிமாநகரில் நம்மைச் சிவலிங்க வடிவில் வைத்து வழிபடுவா யாக என்று விடுப்ப இறைவியும் இறைவனைப் பிரிந்துபோந்து காஞ்சியிலே கம்பையாற்றங்கரையில் ஒரு மாமரத்தினடியிற் சிவலிங்கத் திருவுருவைக் கண்டு வழிபட இறைவன் திருவுள்ளக் குறிப்பினால் அக்கம்பையாற்றில் வெள்ளம் சிலபூசையைச் சிதைவு செய்வதுபோற் பெருக்கெடுத்துக் கருகி வருதலும் இறைவி மனங்கலங்கி இப்பெருநீர் வெள்ளம் எம்பிரான் மிசையே நண்ணும் ; இனிச் செய்வதென்னை என்று தம்பெருமானார்பால் அன்பு நிறைந்தெழுகின்ற திருவுள்ளத்தோடும் தன் இருகரங்களாலும் அச்சிவலிங்கத்தினைக் கட்டித் தருவப் பெருமானும் அத்திருவுருவிளின்றுந் தோன்றி உமையம்மையை அனைத்துத் தனது இடப்பாகத்திற் பொருந்த வைத்தான் எனக் காஞ்சிபுராணம் கூறும் . ஏகாமரம் என்பது ஏகம்பம் என மருவியது . ஏக ஆமரம் ஒரு மாமரம் . நிறைமலர்த் தனிமா கீழ னித்தனே ( காஞ்சி . தழுவக் 405 ) என வருதலும் காண்க 79-80 . திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து - திருவாஞ்சியம் என் னும் திருப்பதியில் திருமணச்சீர் பெறுதற்குரிய அழகுடன் எழுந்தருளி யிருந்து . மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் இயற்கைமணம் பொருந்திய கூந்தலையுடைய உமாதேவியோடு கலந்து மகிழ்ந்த திருவிளை யாட்டும் . திருவாஞ்சியம் என்பது சோழநாட்டிலுள்ள பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று . இலக்குமியை வாஞ்சித்துத் ருமால் இறைவனைப் பூசித்த கார ணத்தால் இத்தலம் இப்பெயர் பெற்றது . ' ' கற்றை வார்குழற் றிருவைவாஞ் சியத்துள் கருணை யாலுறத் தமியனேன் மேவப் பெற்ற திந்நக ராதலா வீதற்குப் பெயரு மேதிரு வாஞ்சிய மெனவும் ( திருமால் தவம்புரி 105 ) எனத் திருவாஞ்சியந்தலபுராணத்து வருதலும் காண்க . மரு - மணம் . ' மருவார் கொன்றை ( தே.சுந் 53.1 ) என்புரியும் இப்பொருட்டாதல் காண்க . மருவார் குழலி வென்றது இயற்கை மணம் பொருந்திய கூந்