திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

60 திருவாசக ஆராய்ச்சியுரை "வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் கானுடையான் ஆறு " என எனத் திருத்தசாங்கத்து வருதலுங் காண்க. ஒருங்குடன் - ஒரு சேர. மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு* (அக 282: 8) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஆனந்தமே என்பது ஆனந்தம்மே விரிந்தது. ஆறாக என்பது கடைக்குறைந்து நின்றது. மாதிற் கூறுடை என்பதனை மாது சுற்றிலுடை என உருபு பிரித்துக் கூட்டி உமையம்மை பெருமை இடப்பாகத்திலுடைய என உரைப்பினுமமையும். எனப் பொருள்படும் மா, பெரு என்னுஞ்சொற்கள் பிரிவின்றித் தொடர்ந்து வந்தமை ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்" (தொல். எச்ச 64) என்பதனால் அமைக்கப்படும். யாரை நாத தத்துவம் உலகத்தோற்றத்திற்கு மூலமாதலாலும் அது ஒலி வடிவினதாதலாலும், அதனை இறைவற்கு முரசாக உருவகப்படுத்திக் கூறுதலாலும் 'நாதப் பெரும்பறை' என்றார். "தோற்றம் துடியதனில் (95) என உண்மை விளக்கத்தும், பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும் நாமநீர் வரைப்பி நானில வளாகமும் ஏனைய புவனமு மெண்ணீங் குயிரும் தானே வகுத்ததுன் றமருகக் கரமே" எனச் சிதம்பர மும்மணிக்கோவையினும் வருவன காண்க. அடிகள் நாத தத்துவத்தினைப் பறையாக உருவகப்படுத்திக் கூறுதலை, "வேத மொழியர்வெண் நீற்றர்செம் மேனியர் நாதப் பறையின அன்னைப்பத்து 1. எனவும், சிம் எனவும். "பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை ' திருத்தசாங்கம் 8. ''ஞானவா ளேந்து மையன் நாதப்பறை யறைமின் " படையெழுச்1. எனவும் வருவனவற்றாலுமறிக. நவின்று - பயின்று. "மூவிரு முகனு முறைநவின் றொழுதலின் " (103) என்னும் திருமுருகாற்றுப்படையினும் இப்பொருட்டாதல் காண்க. நாதப்பறை மேன்மேலும் ஒலித்தலின் நவீன்று கறங்கவும்' என்றார். 109--110. அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் - மும்மலங்களும் உயிர்களைச் சேராவண்ணம் அவ்வுயிர்களை அடிமைகொன்டு அருள்செய்யும் இறைவன், கழுக்கடை தன்னை கைக்கொண்டு அருளியும் முத்தலை வேலைத் திருக்கரத்தல் தாங்கியருளியும். 30 61 கீர்த்தித் திருவகவல் அழுக்கடையாமல் என்றது உயிர்களைப்பற்றி நின்ற ஆணவம் கன் மம் மாயை என்னும் மும்மலங்கள் மீண்டும் பயிற்சிவயத்தால் உயிர்களைப் பற்றுமல் என்றவாறு. கழுக்கடை, முத்தலைவேல்,மூவிலைவேல் குலப்படை என்பது ஒருபொருட் சொற்கள் கழுமுண் மூவிலைவேல் முத்தலை கழுச் சத்தி வருபவை குலப் படையென வறங்குவர்'' எனத் தினாகரத்து வருதல் காண்க. மும்மலங்களாகிய அழுக்கு உயிர்களைச் சார்ந்து வருத் தாமல் அவ்வுயிர்களை ஆண்டுகொண்டருளும் இறைவன் அம்மும்மலங்களை யும் நீக்குதற்கு அறிகுறியாக இச்சா ஞானக்கிரியா சத்திகளாகிய முத் தகையுைடைய குலவேலைத் தாங்குதல் இயையுடைத்தாயிற்று.அழுக் கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங், கழுக்கடைகாண் கைக்கொள் (பூசாங்கம் ? ) எனவும், "தயங்குமூ விலைச் குலப்படை யானே'' (திருப்புலம் 2) எனவும் வருவனவும் காண்க. படை " 111-14.மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் - உயிர்களின் துன்பங் கட்கு ஏதுவாகிய மும்மலங்களையும் நீக்குகின்ற தூய மேனி சுடர்விடு சோதி - இயல்பாகவே பாசங்களினீங்கிய திருமேனியையுடைய கதிர்பரக் கும் பேரொளியாகிய இறைவன், காதலன் ஆதி - அன்புச்குரியவனாகி, கழுநீர் மாலை உடைத்தாக எழில்பெற அணிந்தும் - செங்கழுநீர் மலையினைப் பொருத்தமுடைத்தாக அழகுபெற அணிந்தும். எல் எனவும். மும்மலங்களும் உயிர்களின் துன்பத்திற்கு மூலமாயிருத்தலின் 'மூல மாகிய மும்மலம் என்குர். மும்மலம் - ஆணவம் கன்மம் மாயை என்பன. மும்மலம் அறுக்கும். மும்மலங்களையும் நீரகும். "மயக்கமாயதோர் மும்மலப் பழ வல்வினைக்குள் அழுந்தவுந் துயக்கறுத்து' (சிருக்கமுக் ?) சிதடரொடுந் திரிவேனை மும்மைமல மருவித்து' (அச்சோ ஓ) எனவும் அடிகள் அருளியமை காண்க. அறக்கும் சோகி என இயையும். தூயமேனி என்றார் இறைவன் இயல்பாகவே பாசங்களினீங்கிய பரிசுத்த மான அருட்டிருமேனியை யுடையனாகலின், "தூய திருமேனிச் செல்வர் போலும்' "தூத்தூய திருமேனித் தோன்றள் போலும்" (நாவு 242:3:8) எனத் தேவாரத்து வருவனவும் காண்க. சுடர்விடு.கதிர்பரக்கும். விடுதல்- பரத்தல் என்னும் பொருட்டாதல் விடுசுடர் - பரந்த அனல்' என்னும் (பு.வெ.மா.183) உரையானுமறிக. இறைவன் கதிர்பரக்கின்றபேரொளி யினனாதலின் சுடர்வீடு சோதி' என்றார். "கடவிடை நஞ்சமுண்ட கறை யணி கண்டனார்தாம். சுடர்விடு மேனிதன்மேல்" என அப்பரடிகள் (தே. நாவு 58:10) அருளியவா றுங் காண்க. இறைவன் அடியார்களாற் செய்யப்படும் அன்புக்குரியவனாதலின் 'காதனாகி' என்றார். இனி, அடியவன் தன்னைக் காதலியாகவும் ஆண் டானைக் காதலனாகவும் வைத் துரைத்தல் மரபாதலானும், சன்மார்க்கத்தின் கன் ஆண்டாலுக்கும் அடியவனுக்குமுள்ள இமையினுக்கு காதலன் காத வீக்குள்ள இயல்பிளை எடுத்துக் காட்டுதலினாலும் அடிகள் சன்மார்க்கத் திற்குரியராதலினாலும் 'காதலனாகி' என்றார் எனினுமாம்.
60 திருவாசக ஆராய்ச்சியுரை வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் கானுடையான் ஆறு என எனத் திருத்தசாங்கத்து வருதலுங் காண்க . ஒருங்குடன் - ஒரு சேர . மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு * ( அக 282 : 8 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ஆனந்தமே என்பது ஆனந்தம்மே விரிந்தது . ஆறாக என்பது கடைக்குறைந்து நின்றது . மாதிற் கூறுடை என்பதனை மாது சுற்றிலுடை என உருபு பிரித்துக் கூட்டி உமையம்மை பெருமை இடப்பாகத்திலுடைய என உரைப்பினுமமையும் . எனப் பொருள்படும் மா பெரு என்னுஞ்சொற்கள் பிரிவின்றித் தொடர்ந்து வந்தமை ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார் ( தொல் . எச்ச 64 ) என்பதனால் அமைக்கப்படும் . யாரை நாத தத்துவம் உலகத்தோற்றத்திற்கு மூலமாதலாலும் அது ஒலி வடிவினதாதலாலும் அதனை இறைவற்கு முரசாக உருவகப்படுத்திக் கூறுதலாலும் ' நாதப் பெரும்பறை ' என்றார் . தோற்றம் துடியதனில் ( 95 ) என உண்மை விளக்கத்தும் பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும் நாமநீர் வரைப்பி நானில வளாகமும் ஏனைய புவனமு மெண்ணீங் குயிரும் தானே வகுத்ததுன் றமருகக் கரமே எனச் சிதம்பர மும்மணிக்கோவையினும் வருவன காண்க . அடிகள் நாத தத்துவத்தினைப் பறையாக உருவகப்படுத்திக் கூறுதலை வேத மொழியர்வெண் நீற்றர்செம் மேனியர் நாதப் பறையின அன்னைப்பத்து 1 . எனவும் சிம் எனவும் . பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை ' திருத்தசாங்கம் 8 . ' ' ஞானவா ளேந்து மையன் நாதப்பறை யறைமின் படையெழுச் 1 . எனவும் வருவனவற்றாலுமறிக . நவின்று - பயின்று . மூவிரு முகனு முறைநவின் றொழுதலின் ( 103 ) என்னும் திருமுருகாற்றுப்படையினும் இப்பொருட்டாதல் காண்க . நாதப்பறை மேன்மேலும் ஒலித்தலின் நவீன்று கறங்கவும் ' என்றார் . 109--110 . அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் - மும்மலங்களும் உயிர்களைச் சேராவண்ணம் அவ்வுயிர்களை அடிமைகொன்டு அருள்செய்யும் இறைவன் கழுக்கடை தன்னை கைக்கொண்டு அருளியும் முத்தலை வேலைத் திருக்கரத்தல் தாங்கியருளியும் . 30 61 கீர்த்தித் திருவகவல் அழுக்கடையாமல் என்றது உயிர்களைப்பற்றி நின்ற ஆணவம் கன் மம் மாயை என்னும் மும்மலங்கள் மீண்டும் பயிற்சிவயத்தால் உயிர்களைப் பற்றுமல் என்றவாறு . கழுக்கடை முத்தலைவேல் மூவிலைவேல் குலப்படை என்பது ஒருபொருட் சொற்கள் கழுமுண் மூவிலைவேல் முத்தலை கழுச் சத்தி வருபவை குலப் படையென வறங்குவர் ' ' எனத் தினாகரத்து வருதல் காண்க . மும்மலங்களாகிய அழுக்கு உயிர்களைச் சார்ந்து வருத் தாமல் அவ்வுயிர்களை ஆண்டுகொண்டருளும் இறைவன் அம்மும்மலங்களை யும் நீக்குதற்கு அறிகுறியாக இச்சா ஞானக்கிரியா சத்திகளாகிய முத் தகையுைடைய குலவேலைத் தாங்குதல் இயையுடைத்தாயிற்று.அழுக் கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங் கழுக்கடைகாண் கைக்கொள் ( பூசாங்கம் ? ) எனவும் தயங்குமூ விலைச் குலப்படை யானே ' ' ( திருப்புலம் 2 ) எனவும் வருவனவும் காண்க . படை 111-14.மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் - உயிர்களின் துன்பங் கட்கு ஏதுவாகிய மும்மலங்களையும் நீக்குகின்ற தூய மேனி சுடர்விடு சோதி - இயல்பாகவே பாசங்களினீங்கிய திருமேனியையுடைய கதிர்பரக் கும் பேரொளியாகிய இறைவன் காதலன் ஆதி - அன்புச்குரியவனாகி கழுநீர் மாலை உடைத்தாக எழில்பெற அணிந்தும் - செங்கழுநீர் மலையினைப் பொருத்தமுடைத்தாக அழகுபெற அணிந்தும் . எல் எனவும் . மும்மலங்களும் உயிர்களின் துன்பத்திற்கு மூலமாயிருத்தலின் ' மூல மாகிய மும்மலம் என்குர் . மும்மலம் - ஆணவம் கன்மம் மாயை என்பன . மும்மலம் அறுக்கும் . மும்மலங்களையும் நீரகும் . மயக்கமாயதோர் மும்மலப் பழ வல்வினைக்குள் அழுந்தவுந் துயக்கறுத்து ' ( சிருக்கமுக் ? ) சிதடரொடுந் திரிவேனை மும்மைமல மருவித்து ' ( அச்சோ ) எனவும் அடிகள் அருளியமை காண்க . அறக்கும் சோகி என இயையும் . தூயமேனி என்றார் இறைவன் இயல்பாகவே பாசங்களினீங்கிய பரிசுத்த மான அருட்டிருமேனியை யுடையனாகலின் தூய திருமேனிச் செல்வர் போலும் ' தூத்தூய திருமேனித் தோன்றள் போலும் ( நாவு 242 : 3 : 8 ) எனத் தேவாரத்து வருவனவும் காண்க . சுடர்விடு.கதிர்பரக்கும் . விடுதல் பரத்தல் என்னும் பொருட்டாதல் விடுசுடர் - பரந்த அனல் ' என்னும் ( பு.வெ.மா .183 ) உரையானுமறிக . இறைவன் கதிர்பரக்கின்றபேரொளி யினனாதலின் சுடர்வீடு சோதி ' என்றார் . கடவிடை நஞ்சமுண்ட கறை யணி கண்டனார்தாம் . சுடர்விடு மேனிதன்மேல் என அப்பரடிகள் ( தே . நாவு 58:10 ) அருளியவா றுங் காண்க . இறைவன் அடியார்களாற் செய்யப்படும் அன்புக்குரியவனாதலின் ' காதனாகி ' என்றார் . இனி அடியவன் தன்னைக் காதலியாகவும் ஆண் டானைக் காதலனாகவும் வைத் துரைத்தல் மரபாதலானும் சன்மார்க்கத்தின் கன் ஆண்டாலுக்கும் அடியவனுக்குமுள்ள இமையினுக்கு காதலன் காத வீக்குள்ள இயல்பிளை எடுத்துக் காட்டுதலினாலும் அடிகள் சன்மார்க்கத் திற்குரியராதலினாலும் ' காதலனாகி ' என்றார் எனினுமாம் .