திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

62 திருவாசக ஆராய்ச்சியுரை "சூடுவேன் பூங்கொன்றை குடிச்சிவன் திரள்தோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் " அம்மானை 17. என அடிகள் அருளியமை ஈண்டைக்கேற்ப அறியற் பாலது. இறைவன் கழுநீர் மாலை அணிந்தமை "கழுநீர் மாவைக் கடவுள் போற்றி " (போற்றி 217) என்பதனாலுமறிக. இறைவன் பரமாசாரியனாய் அடிகளுக்கு உப தேசஞ் செய்தபோது கழுநீர் மாலையை அணிந்திருந்தார் என்பது, "வண்ணமென் கழுநீர் மாலை வளம்பெற வணிந்து " (திருப்பெருந்50) "துற்ற சாந்துடன் முயங்குசெங் கழுநீர்த் தொடையலின் சுமை பொறாதெனத் துளங்கி... இறைவன். கவின்கொண் மார்ப ணி மலர்த்தொடை கழித்து' (திருப்பெருந் 62) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருவளவற்றாலுமறிக. 1156. அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் - திருமாலுக்கும் பிரமனுக்கும் எல்வை அறியப்படாதவன் பரிமாவின் மிசை பயின்ற வண்ண மும் - எல்லாரும் குதிரையின் மேல் பலகாலும் ஊர்ந்த தன்மையும். காணும்படி ஒ ரு - எண்ணுப் பொருளது அளவு - எல்லை. 'அகடுசேர்பு பொருந்தி அளவினிற்றிரியாது (மலைபடு 33) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. அறியாதவன் அறியப்படாதவன். செயப்பாட்டு வினையாலணை யும் பெயர். பரிமா - குதிரையாகிய விலங்கு. பரி - குதிரை. பயின்ற என்றது குதிரைமீது நெடும்பொழுது ஊர்ந்து வந்தமையைக் குறித்தது. நெருங்கி வந்த எனினுமாம். வண்ணம் என்றது தேவர்களிற் சிறந்த அரிக்கும் பிரமற்கும் அறிதற்கரிய இறைவன் அடிகள் பொருட்டு எல் லாருங்காணப் பரிமாவின்மீது எளிமையாய் வந்த தன்மையைக் குறித்தது. பரிமா வேறி ஐயன் பெருந்துறையாதி யந்நாள்...ஆண்டுகொண்ட இயல் பறிவா ரெம்பிரா னாவாரே'' (திருவார்த் 4) என வருதல் காண்க. 21 117-8. மீண்டு வாரா வழி அருள்புரிபவன் - திரும்பி இப்பிறவிக்கு வராத வீட்டு நெறியை அருள்செய்பவன். பாண்டி நாடே பழம்பதியாக வும் - பாண்டி நாட்டினையே தமது பழைய பதியாகக் கொண்டருளியும். மீண்டு வாராவழி - பரமுத்திவழி மீளத்திரும்பாத வழியிற் சென்று இறைவன் திருவருளைப் பெற்று ஒன்றானவர் மீண்டு இப்பிறப்பினை அடையாராதலின், அப்பேற்றினைத் தருகின்ற நெறியினை 'மீண்டு வாரா நெறி' என்றார். 'கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி" குறள் 356. கீர்த்தித் திருவகவல் என்பதும் ஈண்டு அறியற்பாலது. மீண்டு வாரா வழியை இறைவன் அருள்புரிதல்,'வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி, ஆரா வமுதாய் அமைந்தன்றே" (திருவெண்பா7) என்பதனாலுமறியப்படும். பாண்டியன் நாடு என்பது பாண்டிநாடு என மருவிற்று. பாண்டி நாட்டினைப் பழம்பதியென்றது அங்கயற்கண்ணியம்மையாரும் சோமசுந்தர பாண்டியரும் உக்கிரகுமாரரும் மதுரைமாநகரில் அரசுவீற்றிருந்து அங் நாட்டினைப் புரந்தமைபற்றியாகும். # 63 தென்பாண்டி நாட்டானே'. சிவபுரா 90. தென்னாடுடைய சிவனே போற்றி" போற் 164. 'தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டாளை''அம்மானை 10. தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை" அம்மானை 19. "தென்பாண்டி நாடனை" குயில் 2. என இத் திருவாசகத்து வருவளவுங் காண்க. கடுக்கைமலர் மாற்றி வேப்பலர் சூடி ஐவாய்க் காப்புவிட் டணிபூ ணணிந்து விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி யெடுத்து வழுதி யாடு முழுதுவ களிக்கும் பேரரு ணாயகன்'" (2:9-14) எனக் கல்லாடந்து வருதலும் ஈண்டு அறியற்பாலது. ** பதி - இருப்பிடம், தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்ப" (கலி 118:17) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 119-20.பத்தி செய் அடியரை பரம்பரத்து உய்ப்பவன் - அன்பி னால் தன்னை வழிபாடு செய்கின்ற அடியவரை மிகமேலான வீட்டுலகிற் சேர்க்கின்ற இறைவன். உத்தரகோசமங்கை ஊராகவும் - உத்தரகோச மங்கையைத் தானிருக்கும் ஊராகக் கொண்டருளியும். பத்தியினாற் செய்யும் வழிபாட்டிணைப் 'பத்திசெய்' என்றார். அவ்வழி பாடு இறைவனை இடைவிடாது நினைத்தலும் வணங்குதலும் வாழ்த்து தலுமாம். பரம் - சுத்தவித்தியாதத்துவம். இது சிவதத்துவம் ஐந்தனுள் கீழ்ப்படிகணுள்ளது. அதன் மேலே ஈசுவரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்னும் தத்துவங்கள் உள்ளன. அலை மேன்மேல் நோக்க ஒன்றி னொன்று உயர்வுடையன. அத்தத்துவங்களை அடைந்தோர் விஞ்ஞான கலராய் மீண்டுவாரா முத்தியாகிய சாயுச்சியத்தை அடைவர். சுத்த வித்தியாதத்துவம், தனக்குக் கீழேயுள்ள வித்தியாதத்துவம், ஆன்மதத்து வங்களை நோக்க உயர்வுடையதாகலின் 'பரம்' எனப்படும் பரம்- மேலானது எனப்பொருள்படும் வடசொல், அதனிலும் ஈகவரமும் அதனி யூம் சாதாக்கியமும் அதனிலும் சத்தியும் அதனிலும் சிவமும் உயர்வுடை
62 திருவாசக ஆராய்ச்சியுரை சூடுவேன் பூங்கொன்றை குடிச்சிவன் திரள்தோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் அம்மானை 17 . என அடிகள் அருளியமை ஈண்டைக்கேற்ப அறியற் பாலது . இறைவன் கழுநீர் மாலை அணிந்தமை கழுநீர் மாவைக் கடவுள் போற்றி ( போற்றி 217 ) என்பதனாலுமறிக . இறைவன் பரமாசாரியனாய் அடிகளுக்கு உப தேசஞ் செய்தபோது கழுநீர் மாலையை அணிந்திருந்தார் என்பது வண்ணமென் கழுநீர் மாலை வளம்பெற வணிந்து ( திருப்பெருந் 50 ) துற்ற சாந்துடன் முயங்குசெங் கழுநீர்த் தொடையலின் சுமை பொறாதெனத் துளங்கி ... இறைவன் . கவின்கொண் மார்ப ணி மலர்த்தொடை கழித்து ' ( திருப்பெருந் 62 ) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருவளவற்றாலுமறிக . 1156. அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் - திருமாலுக்கும் பிரமனுக்கும் எல்வை அறியப்படாதவன் பரிமாவின் மிசை பயின்ற வண்ண மும் - எல்லாரும் குதிரையின் மேல் பலகாலும் ஊர்ந்த தன்மையும் . காணும்படி ரு - எண்ணுப் பொருளது அளவு - எல்லை . ' அகடுசேர்பு பொருந்தி அளவினிற்றிரியாது ( மலைபடு 33 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . அறியாதவன் அறியப்படாதவன் . செயப்பாட்டு வினையாலணை யும் பெயர் . பரிமா - குதிரையாகிய விலங்கு . பரி - குதிரை . பயின்ற என்றது குதிரைமீது நெடும்பொழுது ஊர்ந்து வந்தமையைக் குறித்தது . நெருங்கி வந்த எனினுமாம் . வண்ணம் என்றது தேவர்களிற் சிறந்த அரிக்கும் பிரமற்கும் அறிதற்கரிய இறைவன் அடிகள் பொருட்டு எல் லாருங்காணப் பரிமாவின்மீது எளிமையாய் வந்த தன்மையைக் குறித்தது . பரிமா வேறி ஐயன் பெருந்துறையாதி யந்நாள் ... ஆண்டுகொண்ட இயல் பறிவா ரெம்பிரா னாவாரே ' ' ( திருவார்த் 4 ) என வருதல் காண்க . 21 117-8 . மீண்டு வாரா வழி அருள்புரிபவன் - திரும்பி இப்பிறவிக்கு வராத வீட்டு நெறியை அருள்செய்பவன் . பாண்டி நாடே பழம்பதியாக வும் - பாண்டி நாட்டினையே தமது பழைய பதியாகக் கொண்டருளியும் . மீண்டு வாராவழி - பரமுத்திவழி மீளத்திரும்பாத வழியிற் சென்று இறைவன் திருவருளைப் பெற்று ஒன்றானவர் மீண்டு இப்பிறப்பினை அடையாராதலின் அப்பேற்றினைத் தருகின்ற நெறியினை ' மீண்டு வாரா நெறி ' என்றார் . ' கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி குறள் 356 . கீர்த்தித் திருவகவல் என்பதும் ஈண்டு அறியற்பாலது . மீண்டு வாரா வழியை இறைவன் அருள்புரிதல் ' வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி ஆரா வமுதாய் அமைந்தன்றே ( திருவெண்பா 7 ) என்பதனாலுமறியப்படும் . பாண்டியன் நாடு என்பது பாண்டிநாடு என மருவிற்று . பாண்டி நாட்டினைப் பழம்பதியென்றது அங்கயற்கண்ணியம்மையாரும் சோமசுந்தர பாண்டியரும் உக்கிரகுமாரரும் மதுரைமாநகரில் அரசுவீற்றிருந்து அங் நாட்டினைப் புரந்தமைபற்றியாகும் . # 63 தென்பாண்டி நாட்டானே ' . சிவபுரா 90 . தென்னாடுடைய சிவனே போற்றி போற் 164 . ' தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டாளை''அம்மானை 10 . தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை அம்மானை 19 . தென்பாண்டி நாடனை குயில் 2 . என இத் திருவாசகத்து வருவளவுங் காண்க . கடுக்கைமலர் மாற்றி வேப்பலர் சூடி ஐவாய்க் காப்புவிட் டணிபூ ணணிந்து விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி யெடுத்து வழுதி யாடு முழுதுவ களிக்கும் பேரரு ணாயகன் ' ( 2 : 9-14 ) எனக் கல்லாடந்து வருதலும் ஈண்டு அறியற்பாலது . ** பதி - இருப்பிடம் தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்ப ( கலி 118 : 17 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . 119-20.பத்தி செய் அடியரை பரம்பரத்து உய்ப்பவன் - அன்பி னால் தன்னை வழிபாடு செய்கின்ற அடியவரை மிகமேலான வீட்டுலகிற் சேர்க்கின்ற இறைவன் . உத்தரகோசமங்கை ஊராகவும் - உத்தரகோச மங்கையைத் தானிருக்கும் ஊராகக் கொண்டருளியும் . பத்தியினாற் செய்யும் வழிபாட்டிணைப் ' பத்திசெய் ' என்றார் . அவ்வழி பாடு இறைவனை இடைவிடாது நினைத்தலும் வணங்குதலும் வாழ்த்து தலுமாம் . பரம் - சுத்தவித்தியாதத்துவம் . இது சிவதத்துவம் ஐந்தனுள் கீழ்ப்படிகணுள்ளது . அதன் மேலே ஈசுவரம் சாதாக்கியம் சத்தி சிவம் என்னும் தத்துவங்கள் உள்ளன . அலை மேன்மேல் நோக்க ஒன்றி னொன்று உயர்வுடையன . அத்தத்துவங்களை அடைந்தோர் விஞ்ஞான கலராய் மீண்டுவாரா முத்தியாகிய சாயுச்சியத்தை அடைவர் . சுத்த வித்தியாதத்துவம் தனக்குக் கீழேயுள்ள வித்தியாதத்துவம் ஆன்மதத்து வங்களை நோக்க உயர்வுடையதாகலின் ' பரம் ' எனப்படும் பரம் மேலானது எனப்பொருள்படும் வடசொல் அதனிலும் ஈகவரமும் அதனி யூம் சாதாக்கியமும் அதனிலும் சத்தியும் அதனிலும் சிவமும் உயர்வுடை