திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை டுரு' என்னும் அட்டமூர்த்தங்களையும் குறிக்கும். தான் ஒருவனாயினும் உயிர்களுக்கு அருள்செய்ய வேண்டிய பல திருவுருவங்களைக் கொள்ளுத லின் 'அநேகன்' என்றார் எனினுமாம். பழையோனாகிய இறைவன் ஆகம் அளவையைக் கடந்தோனாதளின் சொற்பதங் கடந்த தொல்லோன்' என்றார். என்றது வாக்குக்கெட்டா தவன் என்றவாறு+ "அப்படியு மல்கிற மவ்வண்ணமு மவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படிய னிந்நிறத்த னிவ்வண்ணத்தன் இவனிறைவ னென்றெழுதிக் காட்டொணுாதே" (தே 311: 10) என அப்பரடிகள் அருளியவா றுங் காண்க. பதம்- அளவை : தரம், தொல் லோன் - பழைபோன். "சுற்றம்பல மின்மை காட்டித் தன்றொல்கழறந்த தொல்லோன் " (340) என்றார் திருக்கோவையாரினும், சித்தர்-மனம் சேட்சியன் - தூரத்தின்கணுள்ளவன்: என்றது மனத்தி னால் சிந்தித்தறியமுடியாதவன் என்றவாறு. இதனால் இறைவன் மனா தீதன் என்பது புலப்படுத்தியவாறு. "மாற்ற மனங்கறிய நின்ற மறை யோனே" என்றார் சிவபுராணத்தும். இறைவனுக்கு "அப்பிரமேயன்* என்னும் பெயருண்மையின் காட்சி முதலிய அளவைகளால் அறியப்படா தவன் என்பது போதரும். 42-8. பத்தி வலையில் படுவோன் காண்க. அன்பரது பத்தியாகிய வலையில்.அகப்படுவோன் காண்க ; ஒருவன் என்னும் ஒருவன் காண்க. உலகிற்கு ஒரு முழுமுதல் என்று சொல்லப்படும் ஒப்பற்றவன் காண்க: விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க - விரிந்த உலகங்கள் எல்லாமாய் விரிந்து வின்றவன் காண்த) அ தரும் தன்மையில் ஐயோன் காண்ச-அணுவிற் காணப்படும் நுட்பத்தன்மையிலும் வியக்கத் தக்க நுண்மையுடையோன் காண்க; இணைப்பு அரு பெருமையில் ஈசன் காண்க - ஒ புச்சொல்லுதற்கரிய பெருமையினையுமுடைய தலைவன் காண்க; அரியதில் அறிய அரியோன் காண்க-அருமையையுடைய பொருள்களிலும் அருமையுடைய அரியோன் காண்க; எப்பொருளும் மருவி வளர்ப்போன் காண்க - அங்ஙனம் அருமையுடையனாயினும் எல்லாப்பொருள்களிலும் தான் கலந்து நின்று அவற்றை வளர்த்து வருவோன் காண்க. வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதவனாயினும் இறைவன் அருமையில் எளியனுப் அன்பரது பேரன்பாகிய வலையில் அகப்படுதலின் 'பத்தில்லை யிற் படுவோன் என்றார். தப்பாது அகப்படுத்துதல் பற்றிப் பத்தியை 'வலை' என்றர். இந்து ஏகதேசவுருவகம். பத்தியை வ என்றமை யால் இறைவனை அசில் அயப்படும் பொருள கக் கொள்க. இறைவன் அன்புடையார் சிந்தையில் உறைதல், திருவண்டற் பகுதி 89 "பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் கெஞ்சத் துள்ளார்' (தே 25:5) பத்தராகிப் பாடியும் ஆடிநின்றும் உள்குவார் உள்ளத்துள்ளார். " (தே 45:9) ''உள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே" (தே 250:8) 'சீலமுடை அடியார் சிந்தையான் காண் '' (தே 208 :2) என அப்பரடிகள் அருளியமையானுமறிக. உலகுக்கெல்லாம் முழுமுதல்வன் இறைவனாதலானும் அவனோடொப் பார் பிறர் எவருமின்மையானும் *ஒருவனென்னும் ஓருவன்' என்றாரி. உலகுக்கொருவனாய் நின்றாய் நீயே" ஒப்பொருவ ரில்லாதவொருவன் (நாவு 252: 1:247:9) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. பொழில் - உலகம். "ஏம்பொழிற்கு மேழ்நிலத் தலஞ்சமைத்த தென்ன (கம்ப நகரப் 26) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. விரிபொழில் என்றது மண்முதல் விண்ஈறாகவுள்ள பகுதிகளாய் விரிந்த உலகங்களை. இறைவனது வியாபகத்துள் உலகங்களெல்லாம் அடங்குதல் பற்றி விரிபொழில் முழுதாய் விரிந்தோன்' என்றார். " அணுத்தரும் தன்மையில் ஐயோன் - பரமாணுவிற் காணப்படும் நுட் பத்தன்மையிலும் வியக்கத்தக்க நுண்மையுடையோன்; என்றது நுண் பொருள்கள் எல்லாவற்றிலும் மிக்கநுண்பொருளாயுள்ளவன் என்றவாறு. நுண்ணியான் ' ஞான 01: 6) எனவும் பரியர் நுண்ணியர் பார்ப் பதற்கரியவர்" (நாவு 141 : 5) எனவும் தேவாரத்து வருவனவுங் காண்க. ஐ-வியப்பு இச்சொல் இப்பொருட்டாதல்,"ஐதேய்ந் தன்று. பிறையு மன்று' (கலி 55:9) என்புழியுங் காண்க, "ஐவியப்பாகும்'' (உரி 89) என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். இறைவன் ஒப்புச் சொல்லுதற்கரிய பெருமையையுடைய தலைவனாத லின் இணைப்பரும் பெருமையில் ஈசன்' என்றார். இணைப்பு - ஒப்பு. ஈசன். தலைவன். 49- 55. நூல் உணர்வு உணரா துண்ணியோன் காண்க - நூற் பொருள் உணர்ச்சியினால் ப்படாத நுட்பத்தினையுடையோன் காண்க; மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க - மேலுங் கீருமாய் விரிந்து நின்ற வன் காண்க; அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க - முடிவும் முதலும் நீங்கினவன் காண்க; பந்தமும் விடும் படைப்போன் காண்க -ஆன்மா வைப்பற்றிய அநா திபந்தமாகிய ஆணவத்தைக் கெடுத்தற்பொருட்டுப் பிரவாக அநாதியாகிய பிறவிப் பந்தத்தினையும் அதன் நீக்கத்தினையும் உண்டாக்குவோன் காண்க; நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க - நிலை யியற் பொருள்களிலும் இயங்கியற் பொருள்களிலும் வியாபித்து நின்ற வன் காண்க; கற்பமும் இந்தியும் கண்டோன் காண்க -பிரமன் முதலி யோரது தோற்றத்தினையும் அவர்களது முடிவினையும் செய்தோன் காண்க; 13
திருவாசக ஆராய்ச்சியுரை டுரு ' என்னும் அட்டமூர்த்தங்களையும் குறிக்கும் . தான் ஒருவனாயினும் உயிர்களுக்கு அருள்செய்ய வேண்டிய பல திருவுருவங்களைக் கொள்ளுத லின் ' அநேகன் ' என்றார் எனினுமாம் . பழையோனாகிய இறைவன் ஆகம் அளவையைக் கடந்தோனாதளின் சொற்பதங் கடந்த தொல்லோன் ' என்றார் . என்றது வாக்குக்கெட்டா தவன் என்றவாறு + அப்படியு மல்கிற மவ்வண்ணமு மவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படிய னிந்நிறத்த னிவ்வண்ணத்தன் இவனிறைவ னென்றெழுதிக் காட்டொணுாதே ( தே 311 : 10 ) என அப்பரடிகள் அருளியவா றுங் காண்க . பதம்- அளவை : தரம் தொல் லோன் - பழைபோன் . சுற்றம்பல மின்மை காட்டித் தன்றொல்கழறந்த தொல்லோன் ( 340 ) என்றார் திருக்கோவையாரினும் சித்தர் - மனம் சேட்சியன் - தூரத்தின்கணுள்ளவன் : என்றது மனத்தி னால் சிந்தித்தறியமுடியாதவன் என்றவாறு . இதனால் இறைவன் மனா தீதன் என்பது புலப்படுத்தியவாறு . மாற்ற மனங்கறிய நின்ற மறை யோனே என்றார் சிவபுராணத்தும் . இறைவனுக்கு அப்பிரமேயன் * என்னும் பெயருண்மையின் காட்சி முதலிய அளவைகளால் அறியப்படா தவன் என்பது போதரும் . 42-8 . பத்தி வலையில் படுவோன் காண்க . அன்பரது பத்தியாகிய வலையில்.அகப்படுவோன் காண்க ; ஒருவன் என்னும் ஒருவன் காண்க . உலகிற்கு ஒரு முழுமுதல் என்று சொல்லப்படும் ஒப்பற்றவன் காண்க : விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க - விரிந்த உலகங்கள் எல்லாமாய் விரிந்து வின்றவன் காண்த ) தரும் தன்மையில் ஐயோன் காண்ச - அணுவிற் காணப்படும் நுட்பத்தன்மையிலும் வியக்கத் தக்க நுண்மையுடையோன் காண்க ; இணைப்பு அரு பெருமையில் ஈசன் காண்க - புச்சொல்லுதற்கரிய பெருமையினையுமுடைய தலைவன் காண்க ; அரியதில் அறிய அரியோன் காண்க - அருமையையுடைய பொருள்களிலும் அருமையுடைய அரியோன் காண்க ; எப்பொருளும் மருவி வளர்ப்போன் காண்க - அங்ஙனம் அருமையுடையனாயினும் எல்லாப்பொருள்களிலும் தான் கலந்து நின்று அவற்றை வளர்த்து வருவோன் காண்க . வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதவனாயினும் இறைவன் அருமையில் எளியனுப் அன்பரது பேரன்பாகிய வலையில் அகப்படுதலின் ' பத்தில்லை யிற் படுவோன் என்றார் . தப்பாது அகப்படுத்துதல் பற்றிப் பத்தியை ' வலை ' என்றர் . இந்து ஏகதேசவுருவகம் . பத்தியை என்றமை யால் இறைவனை அசில் அயப்படும் பொருள கக் கொள்க . இறைவன் அன்புடையார் சிந்தையில் உறைதல் திருவண்டற் பகுதி 89 பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் கெஞ்சத் துள்ளார் ' ( தே 25 : 5 ) பத்தராகிப் பாடியும் ஆடிநின்றும் உள்குவார் உள்ளத்துள்ளார் . ( தே 45 : 9 ) ' ' உள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே ( தே 250 : 8 ) ' சீலமுடை அடியார் சிந்தையான் காண் ' ' ( தே 208 : 2 ) என அப்பரடிகள் அருளியமையானுமறிக . உலகுக்கெல்லாம் முழுமுதல்வன் இறைவனாதலானும் அவனோடொப் பார் பிறர் எவருமின்மையானும் * ஒருவனென்னும் ஓருவன் ' என்றாரி . உலகுக்கொருவனாய் நின்றாய் நீயே ஒப்பொருவ ரில்லாதவொருவன் ( நாவு 252 : 1 : 247 : 9 ) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . பொழில் - உலகம் . ஏம்பொழிற்கு மேழ்நிலத் தலஞ்சமைத்த தென்ன ( கம்ப நகரப் 26 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . விரிபொழில் என்றது மண்முதல் விண்ஈறாகவுள்ள பகுதிகளாய் விரிந்த உலகங்களை . இறைவனது வியாபகத்துள் உலகங்களெல்லாம் அடங்குதல் பற்றி விரிபொழில் முழுதாய் விரிந்தோன் ' என்றார் . அணுத்தரும் தன்மையில் ஐயோன் - பரமாணுவிற் காணப்படும் நுட் பத்தன்மையிலும் வியக்கத்தக்க நுண்மையுடையோன் ; என்றது நுண் பொருள்கள் எல்லாவற்றிலும் மிக்கநுண்பொருளாயுள்ளவன் என்றவாறு . நுண்ணியான் ' ஞான 01 : 6 ) எனவும் பரியர் நுண்ணியர் பார்ப் பதற்கரியவர் ( நாவு 141 : 5 ) எனவும் தேவாரத்து வருவனவுங் காண்க . - வியப்பு இச்சொல் இப்பொருட்டாதல் ஐதேய்ந் தன்று . பிறையு மன்று ' ( கலி 55 : 9 ) என்புழியுங் காண்க ஐவியப்பாகும் ' ' ( உரி 89 ) என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும் . இறைவன் ஒப்புச் சொல்லுதற்கரிய பெருமையையுடைய தலைவனாத லின் இணைப்பரும் பெருமையில் ஈசன் ' என்றார் . இணைப்பு - ஒப்பு . ஈசன் . தலைவன் . 49- 55. நூல் உணர்வு உணரா துண்ணியோன் காண்க - நூற் பொருள் உணர்ச்சியினால் ப்படாத நுட்பத்தினையுடையோன் காண்க ; மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க - மேலுங் கீருமாய் விரிந்து நின்ற வன் காண்க ; அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க - முடிவும் முதலும் நீங்கினவன் காண்க ; பந்தமும் விடும் படைப்போன் காண்க -ஆன்மா வைப்பற்றிய அநா திபந்தமாகிய ஆணவத்தைக் கெடுத்தற்பொருட்டுப் பிரவாக அநாதியாகிய பிறவிப் பந்தத்தினையும் அதன் நீக்கத்தினையும் உண்டாக்குவோன் காண்க ; நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க - நிலை யியற் பொருள்களிலும் இயங்கியற் பொருள்களிலும் வியாபித்து நின்ற வன் காண்க ; கற்பமும் இந்தியும் கண்டோன் காண்க -பிரமன் முதலி யோரது தோற்றத்தினையும் அவர்களது முடிவினையும் செய்தோன் காண்க ; 13