திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

94 திருவாசக ஆராய்ச்சியுரை உள்ள பக்குவான்மாக்களின் உள்ளங்களில் நிறைய, கேத குட்டம் கை அற ஓங்கி வரை உற - துன்பமாகிய நீர் நிலகள் செயல் அற்றுப்போகும் படி அவ்வெள்ளம் உயர்ந்து எல்லையை அடைய. இருமுச்சமயத்து ஒரு பேய்த்தேரினை - அருவகைச் சமயங்களின் பெறுபேறாகிய ஒரு கானல் நீரினை. நீர் நசை தரவரு நெடுங்கண் மான் இனம் - தமது உய்திக்குரிய நல்ல நீரெனக்கருதி அதனைப்பருக நீர்வேட்கை கொண்டுவர வருகின்ற நெடிய அறிவாகிய கண்களையுடைய மான் கூட்டங்கள் பெரு வாயிடை தவ பருகி - பெரிய வாயினால் மிகவும் பருகியும், அவ பெருந் தாபம் நீங் காது தளர்வொடும் அசைந்தன -கேட்டினைச் செய்யும் பெரிய நீங்கப்பெறாமல் தளர்ச்சியோடும் வருந்தினவாக ஆயிடை -அப்பொழுது, வானப் பேர் யாற்று அகவயின் பாய்ந்து எழுந்து - அருள்வெளியாகிய பெரிய யாற்றின் உள்ளிடத்துப் பாய்ந்து மேல் எழுந்து. இன்ப பெரு சுழி கொழித்து சுழித்து -இன்பமாகிய பெரிய சுழியினைத் தெள்ளிச் சுழித் துக்கொண்டு சென்று எம் பந்தம் மா கரை பொருது அலைத்து இடித்து- எமது மலக்கட்டாகிய பெரிய கரையினைமோதி அசைத்து இடித்து.ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மா மரம் வேர் பறித்து எழுந்து - முறை முறையாக உயர்ந்துள்ள நம்முடைய இருவினைகளாகிய பெரிய மரங்களை வேரோடும் பிறங்கி எழுந்து, உருவ அருள் நீர் ஓட்டி - அழகிய அருளா கிய நீரினைப் பாய்ச்சி, அரு வரை சந்தின் வான் சிறை கட்டி- அரிய மலைபோலும் நிலையிற்றிரியாத அடியார்களின் உள்ளமாகிய பெரிய சந்தன மரங்களாற் பெரிய அணையைக்கட்டி, மட்டு அவிழ் வெறி மலர் குளம் வாய் கோலி - தேன் பரக்கின்ற நறுமணத்தினையுடைய இதயமேலமாகிய குளத்திற்கு நீர்பாயும் வழியினை அமைத்து, நிறை அகில் மாபுகை வண்டு உடை கரைசேர் குளத்தில் மீக்கொள - நிறையாகிய அதிலின் பெரிய புகையாகிய வண்டுகளையுடைய கரையமைந்த இருதயகமலம் கிய குளத் தில் அருள் வெள்ளமானது மேற்கொண்டு வா, மேல் மேல் மகிழ்தலின் நோக்கி -மேனும் மேலும் மகிழ்ச்சியுண்டாதவால் அதனை உற்றுப்பார்த்து. அருச்சனை வயலுள் அன்பு வித்துஇட்டு-வழிபாடாகிய வயலிடத்துப் பாய்ச்சி அன்பாகிய வித்தினை விதைத்து விளைத்து. கொண்ட உழவர் ஆர தந்த - தொண்டங்களாகிய உழவர்கள் சிவபோகமாகிய விளைவினை நுகருமாறு தந்தருளிய, அண்டத்து அரும் பெறவ் மேகன் வாழ்க - அருள் வெளியின்கண் உள்ள பெறுதற்கரிய மேகம் போல்வான் வாழ்க. பர உலகின்கண் முகில் கடவின் ஒரு பகுதியின் நீராவியால் ஆகும் இங்கு அருண்முகில் பரமானந்தப் பழங்கடல் முழுதாலும் ஆனமையின் மானந்தப் பழங்கடவதுவே கருமா முகிலிற் றோன்றி என்றார் அதுவே என்பது பழங்கடல் முழுவதையும் குறித்து நின்றது. அடிகள் தமக்கு அருள்செய்த இறைவன் குருவாகிவந்து திருப்பெருந் துறையில் தங்கியமையின் அதனை அம்முகில்படியும் மலையாகக் கூறியருளி திருவண்டப் பகுதி 95 னார். "பெருந்துறைக் கொண்டலே " (திருக்கழுக் 5) என அடிகள் பிறி தோரிடத்துக் கூறுதலும் காண்க. திருத்தகு ஒளி என்றது இறைவனது அழகு பொருந்திய அருள் ஒளி யைக் குறித்தது. தங்கிய இறைவனின் அருள்ஒளியே மின்னொளியாகத் திக்குகள் தோறும் பரவியது. மின்னொளி என்பது உருவக இயைபுபற்றி ஒளிமின் என மாற்றிக்கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது. கருமாமுகில் பெருந்துறை வரையில் ஏறினமையால் அருள் ஒளியாகிய மின் திக்குகள் தோறும் பரவியமையின் 'மின்னொனி திசைக்சை விரிய' என்றார். திசை திசை என்னும் அடுக்குத் தொறுப்பொருளில் வந்தது. பந்தனை -பந்தனம் ஐம்புலனைப் பந்தனை என்றது சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐம்புலன்களும் ஐம்பொறிவாயிலாக மனத்தினைத் தம்பாற் கவரும் முறைமைபற்றியாகும். வான் அரவு - கொல்லுந்தன் மையையுடைய அரவு பாம்பின் விடம் உடம்பினை வருத்தி உயிர்நீங்கச் செய்வது போல ஐம்புல அவாக்களும் உயிரைப் பிணித்து வருத்திப் பிற விக்கண் வீழச் செய்தலின் 'ஐம்புலப் பந்தனை வாளரவு' என்றார். ''அவா வென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றுந், தவாப் பிறப்பீனும் வித்து (குறள் 36!) என்றார் திருவள்ளுவநாயனாரும். # அரவு இரிய என்றது மின் திசைதிசை விரிதலாற் பாம்பு கெட என்ற வாறு, " பார்கடல் பருகி மேகம் பார்ப்பினம் பதைப்ப மின்னி '' (சீவசு 3071) என்றார் பிறகும். இரிய - கெட. "கோழிவயப்பெடை பிரிய... சேணின்று இழுமென விறிதரு மருவி " (311-10) என்னும் திருமுருகாற் றுப்படையினும் இப்பொருட்டாதல் காண்க. வெந்துயர் என்றது ஈண்டுப் பிறவி எடுத்ததனுலாகிய கொடுந்துன் பத்தை. கோடை- கோடைக்காலம். வெந்துயரைக் கோடை என்றது கோடைக்காலம் போலத் துன்பஞ் செய்தல் பற்றி. "வேனி லுழந்த வறி துயங் கோய் களிறு '' (கவீ 7:11 என வருதலுங் காண்க. மழையினாற் கோடைத்துன்பம் மறைதல்போல இறைவனது அருண்மழையினால் பிறவிபி னால் உண்டாகிய வெந்துயர் முற்றும் மறைதலின் 'வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப" என்றார். கரப்ப (71) நுண்டுளி கொள்ள (70) எனக் கூட்டுக. எழில் - எழுச்சி குறள் 407 பரிமேல்.நீடெழில் என்பது ஈண்டு மிக்க எழுச்சியையுடைய பக்குவான்மாக்க உணர்த்தியது. தோன்றி. செங்காந்தள். ''காந்தள் தோன்றி பற்றை செங்காந்தள் எனத் திவா கரத்தும் வருதரும் காண்க. இது மழைக்காலத்துப் பூத்தல் "தோடார் தோன்றி குருதி பூப்ப" (முல்லைப் ) என வருதலானுமறியப்படும். வாளொளி - ஒரு பொருட் பன்மொழி. மிக்க ஒளி. மழையினால் தோன் றிப்பூ மிக்க செவ்வொளியோடு விளங்குதல் போல அடியார்களும் இறை
94 திருவாசக ஆராய்ச்சியுரை உள்ள பக்குவான்மாக்களின் உள்ளங்களில் நிறைய கேத குட்டம் கை அற ஓங்கி வரை உற - துன்பமாகிய நீர் நிலகள் செயல் அற்றுப்போகும் படி அவ்வெள்ளம் உயர்ந்து எல்லையை அடைய . இருமுச்சமயத்து ஒரு பேய்த்தேரினை - அருவகைச் சமயங்களின் பெறுபேறாகிய ஒரு கானல் நீரினை . நீர் நசை தரவரு நெடுங்கண் மான் இனம் - தமது உய்திக்குரிய நல்ல நீரெனக்கருதி அதனைப்பருக நீர்வேட்கை கொண்டுவர வருகின்ற நெடிய அறிவாகிய கண்களையுடைய மான் கூட்டங்கள் பெரு வாயிடை தவ பருகி - பெரிய வாயினால் மிகவும் பருகியும் அவ பெருந் தாபம் நீங் காது தளர்வொடும் அசைந்தன -கேட்டினைச் செய்யும் பெரிய நீங்கப்பெறாமல் தளர்ச்சியோடும் வருந்தினவாக ஆயிடை -அப்பொழுது வானப் பேர் யாற்று அகவயின் பாய்ந்து எழுந்து - அருள்வெளியாகிய பெரிய யாற்றின் உள்ளிடத்துப் பாய்ந்து மேல் எழுந்து . இன்ப பெரு சுழி கொழித்து சுழித்து -இன்பமாகிய பெரிய சுழியினைத் தெள்ளிச் சுழித் துக்கொண்டு சென்று எம் பந்தம் மா கரை பொருது அலைத்து இடித்து எமது மலக்கட்டாகிய பெரிய கரையினைமோதி அசைத்து இடித்து.ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மா மரம் வேர் பறித்து எழுந்து - முறை முறையாக உயர்ந்துள்ள நம்முடைய இருவினைகளாகிய பெரிய மரங்களை வேரோடும் பிறங்கி எழுந்து உருவ அருள் நீர் ஓட்டி - அழகிய அருளா கிய நீரினைப் பாய்ச்சி அரு வரை சந்தின் வான் சிறை கட்டி- அரிய மலைபோலும் நிலையிற்றிரியாத அடியார்களின் உள்ளமாகிய பெரிய சந்தன மரங்களாற் பெரிய அணையைக்கட்டி மட்டு அவிழ் வெறி மலர் குளம் வாய் கோலி - தேன் பரக்கின்ற நறுமணத்தினையுடைய இதயமேலமாகிய குளத்திற்கு நீர்பாயும் வழியினை அமைத்து நிறை அகில் மாபுகை வண்டு உடை கரைசேர் குளத்தில் மீக்கொள - நிறையாகிய அதிலின் பெரிய புகையாகிய வண்டுகளையுடைய கரையமைந்த இருதயகமலம் கிய குளத் தில் அருள் வெள்ளமானது மேற்கொண்டு வா மேல் மேல் மகிழ்தலின் நோக்கி -மேனும் மேலும் மகிழ்ச்சியுண்டாதவால் அதனை உற்றுப்பார்த்து . அருச்சனை வயலுள் அன்பு வித்துஇட்டு - வழிபாடாகிய வயலிடத்துப் பாய்ச்சி அன்பாகிய வித்தினை விதைத்து விளைத்து . கொண்ட உழவர் ஆர தந்த - தொண்டங்களாகிய உழவர்கள் சிவபோகமாகிய விளைவினை நுகருமாறு தந்தருளிய அண்டத்து அரும் பெறவ் மேகன் வாழ்க - அருள் வெளியின்கண் உள்ள பெறுதற்கரிய மேகம் போல்வான் வாழ்க . பர உலகின்கண் முகில் கடவின் ஒரு பகுதியின் நீராவியால் ஆகும் இங்கு அருண்முகில் பரமானந்தப் பழங்கடல் முழுதாலும் ஆனமையின் மானந்தப் பழங்கடவதுவே கருமா முகிலிற் றோன்றி என்றார் அதுவே என்பது பழங்கடல் முழுவதையும் குறித்து நின்றது . அடிகள் தமக்கு அருள்செய்த இறைவன் குருவாகிவந்து திருப்பெருந் துறையில் தங்கியமையின் அதனை அம்முகில்படியும் மலையாகக் கூறியருளி திருவண்டப் பகுதி 95 னார் . பெருந்துறைக் கொண்டலே ( திருக்கழுக் 5 ) என அடிகள் பிறி தோரிடத்துக் கூறுதலும் காண்க . திருத்தகு ஒளி என்றது இறைவனது அழகு பொருந்திய அருள் ஒளி யைக் குறித்தது . தங்கிய இறைவனின் அருள்ஒளியே மின்னொளியாகத் திக்குகள் தோறும் பரவியது . மின்னொளி என்பது உருவக இயைபுபற்றி ஒளிமின் என மாற்றிக்கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது . கருமாமுகில் பெருந்துறை வரையில் ஏறினமையால் அருள் ஒளியாகிய மின் திக்குகள் தோறும் பரவியமையின் ' மின்னொனி திசைக்சை விரிய ' என்றார் . திசை திசை என்னும் அடுக்குத் தொறுப்பொருளில் வந்தது . பந்தனை -பந்தனம் ஐம்புலனைப் பந்தனை என்றது சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐம்புலன்களும் ஐம்பொறிவாயிலாக மனத்தினைத் தம்பாற் கவரும் முறைமைபற்றியாகும் . வான் அரவு - கொல்லுந்தன் மையையுடைய அரவு பாம்பின் விடம் உடம்பினை வருத்தி உயிர்நீங்கச் செய்வது போல ஐம்புல அவாக்களும் உயிரைப் பிணித்து வருத்திப் பிற விக்கண் வீழச் செய்தலின் ' ஐம்புலப் பந்தனை வாளரவு ' என்றார் . ' ' அவா வென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றுந் தவாப் பிறப்பீனும் வித்து ( குறள் 36 ! ) என்றார் திருவள்ளுவநாயனாரும் . # அரவு இரிய என்றது மின் திசைதிசை விரிதலாற் பாம்பு கெட என்ற வாறு பார்கடல் பருகி மேகம் பார்ப்பினம் பதைப்ப மின்னி ' ' ( சீவசு 3071 ) என்றார் பிறகும் . இரிய - கெட . கோழிவயப்பெடை பிரிய ... சேணின்று இழுமென விறிதரு மருவி ( 311-10 ) என்னும் திருமுருகாற் றுப்படையினும் இப்பொருட்டாதல் காண்க . வெந்துயர் என்றது ஈண்டுப் பிறவி எடுத்ததனுலாகிய கொடுந்துன் பத்தை . கோடை- கோடைக்காலம் . வெந்துயரைக் கோடை என்றது கோடைக்காலம் போலத் துன்பஞ் செய்தல் பற்றி . வேனி லுழந்த வறி துயங் கோய் களிறு ' ' ( கவீ 7:11 என வருதலுங் காண்க . மழையினாற் கோடைத்துன்பம் மறைதல்போல இறைவனது அருண்மழையினால் பிறவிபி னால் உண்டாகிய வெந்துயர் முற்றும் மறைதலின் ' வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப என்றார் . கரப்ப ( 71 ) நுண்டுளி கொள்ள ( 70 ) எனக் கூட்டுக . எழில் - எழுச்சி குறள் 407 பரிமேல்.நீடெழில் என்பது ஈண்டு மிக்க எழுச்சியையுடைய பக்குவான்மாக்க உணர்த்தியது . தோன்றி . செங்காந்தள் . ' ' காந்தள் தோன்றி பற்றை செங்காந்தள் எனத் திவா கரத்தும் வருதரும் காண்க . இது மழைக்காலத்துப் பூத்தல் தோடார் தோன்றி குருதி பூப்ப ( முல்லைப் ) என வருதலானுமறியப்படும் . வாளொளி - ஒரு பொருட் பன்மொழி . மிக்க ஒளி . மழையினால் தோன் றிப்பூ மிக்க செவ்வொளியோடு விளங்குதல் போல அடியார்களும் இறை