திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

102 திருவாசக ஆராய்ச்சியுரை தானும் இயைபு இல்லாதவனாகும் எம் இறைவன் வாழ்க; காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க - அன்பராயினுர்க்கு எய்ப்படைந்த காசுத்திற் எதிர்பாராது கிடைத்த புதைபொருள் போன்றவன் வாழ்க. வலி - பெரிய வலி கரும்பணக் கச்சைக் கடவுள் என்றது பாம்பை அரைக்கச்சாக அணிந்த இறைவனை.வரியரவக் கச்சானை" "படவர்வமொன் கொண்டரையி வார்த்த பராபரளை " (நாவு 233:4; 234:3) எனத் தேவாரத்து வரு வனவுங் காண்க. கரும்பணம். பெரிய பணம் கருமை - பெருமையென் னும் பொருட்டாதல் கருவலித் தடக்கை (சீவ 2269) என்புழிக் கரு என நச்சினார்க்கினியர் உரைத்தமையானும் அறியப் படும். "கருமை கதழ்வு கயவுமூரி பெருமை பாடு மண்ணமைதற்கே' எனத் திவாகரத்து (பண்பு) வருதலுங் காண்க. பணம்-படம். அஃது ஈண்டுச் சினையாகுபெயராய்ப் பாம்பினை உணர்த்தியது. கச்சை - அரையிற் கட்டும் பட்டிகை. இறைவன் உலகங்களைத் தோற்றுவித்தற் பொருட்டுச் சுத்தமாயையைக் கலக்க அதனிடத்துப் பாம்பு மண்டலித்தாற் போலும் ஓரியக்கமுண்டாகும். இறைவனையே பற்றுக்கோடாகக் கொண்ட அவ்வியக் கம் குண்டலினி சத்தியெனப்படும். அது நுண்ணுலகுக்கும் பருவுலகுக்கும் ஏதுவாகலின் அவ்விருவுலகினும் வியாபகமுடைய இறைவனுக்கு அரைக் கச்சுப் போல்வதாயிற்று. 2.4 அருந்தவர் - உயிர் உய்தி கூடுதற்குரிய அரிய தவத்தினையுடையவர். ஆதி - முதல்வன். அச்சம் தவிர்த்த என்றது பிறப்பிறப்பிற்குக் காரண மாகிய அறம்பாவம் என்னும் இரண்டின் பயத்தை நீக்கிய என்றவாறு. ஒருகாத லடியார்தம் அச்சந்தீர்த்தாட்கொண்டான்' அடியனாக்கி (சத 28) 'அளித்து வந்தெனக் காவவென் றருளியச்சந்தீர்த்தநின் '' (செத் 10) என வருவன காண்க. சேவகள் என்றார் பிறரால் நீக்கு தற்கரிய அச்சத்தை நீக்கியமைபற்றி. " நிச்சலும் - எப்பொழுதும். 'நிச்சநிரப்புக் கொன்றாங்கு ' (குறள்) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஈர்த்தாட்கொள்ளல் - அன்பராயி னாரைத் தகுதியறிந்து வந்து வலிந்திழுத்து ஆட்கொள்ளுதல். "ஈர்த் தெவனை யாட்கொண்ட எந்தை பெருமானே" என்றார் சிவபுராணத் தும் (74). "வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும்'' (மீத் 4) 'இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கி' (ஏசறவு !) என் பனவும் ஈண்டைக்கேற்ப அறியற்பாஎன. இது மாற்சஈரசம்பத்தம் எனப் படும். இங்ஙனம் ஆட்கொள்ளுதல் எக்காலத்துமாம் என்பார் 'நிச்சலும் என்றார். குழிருந் துன்பம் என்றது இறைவன் ஆணையால் வந்து குழம்துன்பம் என்றவாறு. முற்பிறவிகளிற் செய்த தீவினையின் பயன் துன்பவுருவில் வந்து உயிர்களைச் சூழ்ந்து வருத்துதலின், அதனை நீக்கும் இறைவனைச் திருவண்டப் பகுதி குழிருந்துன்பந் துடைப்போன்' என்று அருளிச்செய்தார். 'தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி " போற் 131) என வருதலுங் காண்க. ''பல்லாவு ளுய்த்து விடினுங் குழக்கன்று வல்லதாந் தாய்நாடிக் கோடலைத்- தொல்லைப் பழவினையு மன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு" (பழவினை 1) என நாலடியாரிற் கூறியபடி வினை, தானே தன்னைச் செய்தவனைத் துன்பவுருவில் வந்து வருத்துமென்றல் சமணர்க்கு உடன்பாடாயினும் சித் தாந்த சைவர்க்கு அஃது உடன் பாடன்மையால் இறைவனுாணையால் வந்து குழும்' என உரைக்கப்பட்டது. செய்து ளோர்பெறும் வினைப்பய னொருவர் சேர்க்க வேண்டுவ தில்லெனி னிதுமே 103 லெய்து மேலிது நுகர்வதென் றறிவ தில்லை நீவினை பெனிற் சடமறியா" (திருவாத. திருப்பெருந் 65) எனக் கடவுண்மாமுனிவர் அருளிச்செய்தமையால். வினைப்பானை அனுப விக்கும்போது உயிர்கள் அவற்றினை முறைப்படி யறியா: வினை தானே ஊட்டுமெனில் அது சடம்புகவின் அறியாது. ஆகவே உயிர்களையும் உயிர் வினைப்பயன்களையும் அறிந்து இறைவன் ஊட்டுவிப்பான் என களின் அறிக. எய்தினர் - தன்னைவந்து அடைந்தவர். ஆரமுது = அரிய அமுது. அருமை என்னும் பண்புப்பெயர் ஆர் எனத் திரிந்தது. ''ஆரஞர்' (கலி 120:15) என்புழிப்போல ஆரமுது என்றது திருவடிப்பேரின்பத்தை. உயிர்கள் தம் அறிவு இச்சை செயல்களில் ஒடுங்கிக் கேவலநிலையில் ஆணவ வல்லிருளில் அழுந்துக்கிடக்கும் காலத்தும் இறைவன் அவ்வுயிர் கள்பொருட்டுச் செய்யும் ஐந்தொழிற் கூத்தை ஓவாது இயற்றதலின் கூரிருட் கூத்தொடு' என்றார். கள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே (சிவபுராண 89) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க. குனிப்பு - கூத்து. "குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பி '' (கோத் 3. என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. குறி்ப்பு என்றது இறைவன் பேரூழியின் பின் நடிக்கும் பெருங்கூத்தினை. அது உயிர்களின் உடலிலுள்ள நதத்துவத்தின் மேலுள்ள அருள் வெளிக்கண் ணும் பிர மாண்டத்தில் தில்லைச் திருச்சிற்றர்பலத்தின்கண்ணும். நடைபெறுவது. கேவலத்தில் இறைவன் இயற்றுங் கூத்திணை ஆண்டு உடனிருந்து காண்பாள் உமையச்மையாகலின் கூரிருட் கூத்தினைக் குனிப்போன்' என்பதனை அடுத்துப் 'பேரமைத் தோளிக் காதலன்' என்று அருளிச் செய்தார். 1
102 திருவாசக ஆராய்ச்சியுரை தானும் இயைபு இல்லாதவனாகும் எம் இறைவன் வாழ்க ; காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க - அன்பராயினுர்க்கு எய்ப்படைந்த காசுத்திற் எதிர்பாராது கிடைத்த புதைபொருள் போன்றவன் வாழ்க . வலி - பெரிய வலி கரும்பணக் கச்சைக் கடவுள் என்றது பாம்பை அரைக்கச்சாக அணிந்த இறைவனை.வரியரவக் கச்சானை படவர்வமொன் கொண்டரையி வார்த்த பராபரளை ( நாவு 233 : 4 ; 234 : 3 ) எனத் தேவாரத்து வரு வனவுங் காண்க . கரும்பணம் . பெரிய பணம் கருமை - பெருமையென் னும் பொருட்டாதல் கருவலித் தடக்கை ( சீவ 2269 ) என்புழிக் கரு என நச்சினார்க்கினியர் உரைத்தமையானும் அறியப் படும் . கருமை கதழ்வு கயவுமூரி பெருமை பாடு மண்ணமைதற்கே ' எனத் திவாகரத்து ( பண்பு ) வருதலுங் காண்க . பணம் - படம் . அஃது ஈண்டுச் சினையாகுபெயராய்ப் பாம்பினை உணர்த்தியது . கச்சை - அரையிற் கட்டும் பட்டிகை . இறைவன் உலகங்களைத் தோற்றுவித்தற் பொருட்டுச் சுத்தமாயையைக் கலக்க அதனிடத்துப் பாம்பு மண்டலித்தாற் போலும் ஓரியக்கமுண்டாகும் . இறைவனையே பற்றுக்கோடாகக் கொண்ட அவ்வியக் கம் குண்டலினி சத்தியெனப்படும் . அது நுண்ணுலகுக்கும் பருவுலகுக்கும் ஏதுவாகலின் அவ்விருவுலகினும் வியாபகமுடைய இறைவனுக்கு அரைக் கச்சுப் போல்வதாயிற்று . 2.4 அருந்தவர் - உயிர் உய்தி கூடுதற்குரிய அரிய தவத்தினையுடையவர் . ஆதி - முதல்வன் . அச்சம் தவிர்த்த என்றது பிறப்பிறப்பிற்குக் காரண மாகிய அறம்பாவம் என்னும் இரண்டின் பயத்தை நீக்கிய என்றவாறு . ஒருகாத லடியார்தம் அச்சந்தீர்த்தாட்கொண்டான் ' அடியனாக்கி ( சத 28 ) ' அளித்து வந்தெனக் காவவென் றருளியச்சந்தீர்த்தநின் ' ' ( செத் 10 ) என வருவன காண்க . சேவகள் என்றார் பிறரால் நீக்கு தற்கரிய அச்சத்தை நீக்கியமைபற்றி . நிச்சலும் - எப்பொழுதும் . ' நிச்சநிரப்புக் கொன்றாங்கு ' ( குறள் ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ஈர்த்தாட்கொள்ளல் - அன்பராயி னாரைத் தகுதியறிந்து வந்து வலிந்திழுத்து ஆட்கொள்ளுதல் . ஈர்த் தெவனை யாட்கொண்ட எந்தை பெருமானே என்றார் சிவபுராணத் தும் ( 74 ) . வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் ' ' ( மீத் 4 ) ' இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கி ' ( ஏசறவு ! ) என் பனவும் ஈண்டைக்கேற்ப அறியற்பாஎன . இது மாற்சஈரசம்பத்தம் எனப் படும் . இங்ஙனம் ஆட்கொள்ளுதல் எக்காலத்துமாம் என்பார் ' நிச்சலும் என்றார் . குழிருந் துன்பம் என்றது இறைவன் ஆணையால் வந்து குழம்துன்பம் என்றவாறு . முற்பிறவிகளிற் செய்த தீவினையின் பயன் துன்பவுருவில் வந்து உயிர்களைச் சூழ்ந்து வருத்துதலின் அதனை நீக்கும் இறைவனைச் திருவண்டப் பகுதி குழிருந்துன்பந் துடைப்போன் ' என்று அருளிச்செய்தார் . ' தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி போற் 131 ) என வருதலுங் காண்க . ' ' பல்லாவு ளுய்த்து விடினுங் குழக்கன்று வல்லதாந் தாய்நாடிக் கோடலைத்- தொல்லைப் பழவினையு மன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு ( பழவினை 1 ) என நாலடியாரிற் கூறியபடி வினை தானே தன்னைச் செய்தவனைத் துன்பவுருவில் வந்து வருத்துமென்றல் சமணர்க்கு உடன்பாடாயினும் சித் தாந்த சைவர்க்கு அஃது உடன் பாடன்மையால் இறைவனுாணையால் வந்து குழும் ' என உரைக்கப்பட்டது . செய்து ளோர்பெறும் வினைப்பய னொருவர் சேர்க்க வேண்டுவ தில்லெனி னிதுமே 103 லெய்து மேலிது நுகர்வதென் றறிவ தில்லை நீவினை பெனிற் சடமறியா ( திருவாத . திருப்பெருந் 65 ) எனக் கடவுண்மாமுனிவர் அருளிச்செய்தமையால் . வினைப்பானை அனுப விக்கும்போது உயிர்கள் அவற்றினை முறைப்படி யறியா : வினை தானே ஊட்டுமெனில் அது சடம்புகவின் அறியாது . ஆகவே உயிர்களையும் உயிர் வினைப்பயன்களையும் அறிந்து இறைவன் ஊட்டுவிப்பான் என களின் அறிக . எய்தினர் - தன்னைவந்து அடைந்தவர் . ஆரமுது = அரிய அமுது . அருமை என்னும் பண்புப்பெயர் ஆர் எனத் திரிந்தது . ' ' ஆரஞர் ' ( கலி 120 : 15 ) என்புழிப்போல ஆரமுது என்றது திருவடிப்பேரின்பத்தை . உயிர்கள் தம் அறிவு இச்சை செயல்களில் ஒடுங்கிக் கேவலநிலையில் ஆணவ வல்லிருளில் அழுந்துக்கிடக்கும் காலத்தும் இறைவன் அவ்வுயிர் கள்பொருட்டுச் செய்யும் ஐந்தொழிற் கூத்தை ஓவாது இயற்றதலின் கூரிருட் கூத்தொடு ' என்றார் . கள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே ( சிவபுராண 89 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க . குனிப்பு - கூத்து . குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பி ' ' ( கோத் 3. என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . குறி்ப்பு என்றது இறைவன் பேரூழியின் பின் நடிக்கும் பெருங்கூத்தினை . அது உயிர்களின் உடலிலுள்ள நதத்துவத்தின் மேலுள்ள அருள் வெளிக்கண் ணும் பிர மாண்டத்தில் தில்லைச் திருச்சிற்றர்பலத்தின்கண்ணும் . நடைபெறுவது . கேவலத்தில் இறைவன் இயற்றுங் கூத்திணை ஆண்டு உடனிருந்து காண்பாள் உமையச்மையாகலின் கூரிருட் கூத்தினைக் குனிப்போன் ' என்பதனை அடுத்துப் ' பேரமைத் தோளிக் காதலன் ' என்று அருளிச் செய்தார் . 1