திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "பாலொத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார் (ஞான 70:2) ''அஞ்சொலாள் காணநின்று அழகமீ யாடுமாறே" (நாவு 23:9) "கொடியிடை யுமையவள் காண ஆடிய அழகா" (சுந்69:2) எனத் தேவாரத்து வருவன காண்க. 104 "பாணியுந் தூக்குஞ் சீரு மென் றிவை மாணிழை யரிவை காப்ப வாணமில் பொருளெமுக் கமர்ந்தனை யாடி" (கடவுள் 15-7) எனக் கலித்தொகையில் வருதலும் ஈண்டு அறியற்பாலது. '' அமை அமை - மூங்கில். இது உமையம்மையின் தோளுக்கு உவமம். யார் திரடோட் குரவார் குழலாள்" (ஞான 153:2) " வேய்கொள் தோளுமை ** (சுந் 56 : 8) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. ஏதிலர் - இயைபில்லாதவர். ஏது - இயைபு. அன்பினால் இயைபில்லா தவர்களுக்கு தானும் இகைபில்லாதவனாய் இறைவன் நிற்றலின் "ஏகி லர்க்கு ஏதில் இறைவன்' என்றார். இயைபில்லாதவனாய் நிற்றல்-ஏதி லார்பாற் புலப்படாது நிற்றல். H காதலர் - அன்பர். எய்ப்பு- இளைப்பு. "எய்ப்பிடத்துன்னைச் சிக்கெ னப் பிடித்தேன் " பிடித்தபத்து 5. வைப்பு - புதைபொருள். அன்பராயினர்க்கு எய்ப்பிளில் வைப்புப் போன்றன் என்பதை, இறைவன் "தொழும்பாள ரெய்ப்பினில் வைப்பனே'' சதகம் 98. "எனக் கெய்ப்பினில் வைப்பே" நீத் 39 எனப் பிறாண்டும் அடிகள் அருளியவாற்றானுமறிக. நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை (67: 2) எனச் சுந்தரர்தேவாரத்து வருதலுங் காண்க. 108 - 114. நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி - நஞ்சினையுடைய பாம்பை ஆட்டிய நம்பெருமானுக்கு வணக்கம்: பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி - இவன் பித்தன் என்று சொல்லும்படியான விவைமை யினை எனக்கு உண்டாகும்படி செய்த பெரியோனுக்கு வணக்கம் ; நீற் றொடு தோற்ற வல்லோன் போற்றி - திருவெண்ணீற்றொடு திருவடிவம் தோற்ற வல்லவனுக்கு வணக்கம்; நால் திசை நடப்பல நடாஅய்- நான்கு திசைகளிலுமுள்ள இயங்கியற் பொருள்களை இயங்கச் செய்து, கிடப்பன கிடாஅய் - நிலையியற் பொருள்களிற் கிடப்பனவற்றைக் கிடக்கச் செய்து, நிற்பன நிறீஇ - அவற்றுள் மீற்பனவற்றை நிற்கச்செய்து, சொல் பதம் கடந்த தொல்லோன் - சொல்லளவையைக் கடந்துநின்ற பழையோன்: உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன -மனத்தினது உணர்ச்சி யால் அளந்து அறிந்து கொள்ளவும் படாதவன்; கண் முதல் புலனால் காட்சியும் இல்லோள் - கண்முதலிய ஐம்பொறிகளின் அறிவினால் அறி யப்படுதலும் இல்லாதவன்; விண் முதல் பூதலம் வெளிப்பட வகுத் திருவண்டப் பகுதி 105 தோன் - பிரகிருதி மாயையில் நுண்ணிய உருவில் ஒடுங்கிய வான் முத லாகிய ஐம்பெரும் பூதங்களையும் வெளிப்படையாகத் தோன்றுமாறு படைத் தவன். நஞ்சரவு என்பது நச்சரவு என வலித்தது. ''மெல்லொற்றுத் தொடர் மொழி மெல்லொற் றெல்லாம், வல்லொற் றிறுதி கிளையொற் றாகும்'' (தொல்.எழுத்து 414) என்பது விதி. நச்சரவாட்டிய நம்பன் என்பது மணஞ் செய்தற்பொருட்டுத் தன் காதலியை அழைத்துச் சென்ற ஒருவன் திருப்புறம் பயம் என்னும் ஊரில் தங்கியிருந்தபோது அரவுதீண்டி இறக்க அதுகண்டு அவன்றன் காதலி மனங்கலங்கி இறைவனை நினைந்து புலம்பினள். இறைவன் அவட்கு இரங்கி ஒரு பாம்பாட்டியாக அங்கு போந்து பாம்பினை ஆட்டி அந்நஞ்சினைத் தீர்த்து அவனை உயிர்பெற்றெழச் செய்த வரலாற்றினைக் குறித்தது. " பச்சைத் தாள் அரவாட்டீ படர்சடையாய்" (ஏசற 4) என இத் திருவாசகத்தும், "கோளரவ மாட்டுங் குழகா போற்றி" "பற்றிப் பாம்பாட்டும் படிறன் கண் .ாய்" (நாவு 219 5; 253: 3) எனத் தேவாரத்தும் வருவனவுங் திரும்புறம்பயத்தில் அரவின் விடந்தீர்த்தவன் இறைவனேயாகத் திருவிளையாடற்புராண காரர்கள் இந்நிகழ்ச்சியைத் திருஞானசம்பந்த சுவாமிகள் மீது ஏற்றிக் கூறியுள்ளனர். திருஞான சம்பந்த சுவாமிகள் விடம் தீர்த்தது திருமருகலிற் போந்த காதலர் வேறு இருவரில் ஒருவற் கேயாம் என்பதனை, காண்க திருமருகல் நகரின்கண் எழுந்தருளி... பெருகுதமிழ்த் தொடைசாத்தி அங்கிருந்தார் பெரும்புகலிப் பிள்ளையார் தாம்" திருஞான.472 "மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான் மறிகடலிற் கலங்கவிழ்ந் தார் போலஸின்றேன், சுற்றத்தார் எனவந்து தோன்றி என் பால் துயரமெலாம் நீங்க அருள்செய்தீர் என்னக் கற்றவர்கள் தொழு தேத்துங் காழிவேந்தர் கருணையினாற் காரிகையாள் தனக்கு நல்கப், பற்றியவாள் அரவுவிடந் திரு மாறு பணைமருகற் பெருமானைப் பாட லுற்றார்" திருஞான 481. எனப் பெரியபுராணம் கூறுமாற்றானுமறிக * பிச்செமை ஏற்றிய பெரியோள் என்றது உலகியல் நினைவு சிறிது மின்றி இறைவனது திருவருட்டிறத்தையே நினைந்திருக்குமாறு தம்மைச் செய்தமையைத் தெரிவித்தவாறு. வஞ்சகப்பெரும் புலையனேனையுன் கோயில் வாயியிற் பிச்சனாக்கினார்" (சதக சீபீ) 'தென்னன் பெருந்துறை யான் பிச்சேற்றி ' (அம் 2, : என்பிறவியை வேரறுத்துப் பெரும் பிச் சுத் தரும்பெருவன் “ (அடைக் 9) பித்தென்னை ஏற்றும் அந்தன் " (திருவெண்பா5) எனப் பிறாண்டும் அடிகள் அருளியமையுங் காண்க பிச்சு- பித்து. எமை என்னும் இரண்டாவது நான்காவதன் பொருட்கண் வந்தது மாப்பேரூழிக் காலத்து எல்லாவுலகங்களையும் பொடியாச்சி அப்பொடி தன் திருமேனியிற் பொருந்துமாறு தோன்றுதல் தனக்கன்றிப் பிறர்
திருவாசக ஆராய்ச்சியுரை பாலொத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார் ( ஞான 70 : 2 ) ' ' அஞ்சொலாள் காணநின்று அழகமீ யாடுமாறே ( நாவு 23 : 9 ) கொடியிடை யுமையவள் காண ஆடிய அழகா ( சுந் 69 : 2 ) எனத் தேவாரத்து வருவன காண்க . 104 பாணியுந் தூக்குஞ் சீரு மென் றிவை மாணிழை யரிவை காப்ப வாணமில் பொருளெமுக் கமர்ந்தனை யாடி ( கடவுள் 15-7 ) எனக் கலித்தொகையில் வருதலும் ஈண்டு அறியற்பாலது . ' ' அமை அமை - மூங்கில் . இது உமையம்மையின் தோளுக்கு உவமம் . யார் திரடோட் குரவார் குழலாள் ( ஞான 153 : 2 ) வேய்கொள் தோளுமை ** ( சுந் 56 : 8 ) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . ஏதிலர் - இயைபில்லாதவர் . ஏது - இயைபு . அன்பினால் இயைபில்லா தவர்களுக்கு தானும் இகைபில்லாதவனாய் இறைவன் நிற்றலின் ஏகி லர்க்கு ஏதில் இறைவன் ' என்றார் . இயைபில்லாதவனாய் நிற்றல் - ஏதி லார்பாற் புலப்படாது நிற்றல் . H காதலர் - அன்பர் . எய்ப்பு- இளைப்பு . எய்ப்பிடத்துன்னைச் சிக்கெ னப் பிடித்தேன் பிடித்தபத்து 5. வைப்பு - புதைபொருள் . அன்பராயினர்க்கு எய்ப்பிளில் வைப்புப் போன்றன் என்பதை இறைவன் தொழும்பாள ரெய்ப்பினில் வைப்பனே ' ' சதகம் 98 . எனக் கெய்ப்பினில் வைப்பே நீத் 39 எனப் பிறாண்டும் அடிகள் அருளியவாற்றானுமறிக . நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை ( 67 : 2 ) எனச் சுந்தரர்தேவாரத்து வருதலுங் காண்க . 108 - 114. நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி - நஞ்சினையுடைய பாம்பை ஆட்டிய நம்பெருமானுக்கு வணக்கம் : பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி - இவன் பித்தன் என்று சொல்லும்படியான விவைமை யினை எனக்கு உண்டாகும்படி செய்த பெரியோனுக்கு வணக்கம் ; நீற் றொடு தோற்ற வல்லோன் போற்றி - திருவெண்ணீற்றொடு திருவடிவம் தோற்ற வல்லவனுக்கு வணக்கம் ; நால் திசை நடப்பல நடாஅய்- நான்கு திசைகளிலுமுள்ள இயங்கியற் பொருள்களை இயங்கச் செய்து கிடப்பன கிடாஅய் - நிலையியற் பொருள்களிற் கிடப்பனவற்றைக் கிடக்கச் செய்து நிற்பன நிறீஇ - அவற்றுள் மீற்பனவற்றை நிற்கச்செய்து சொல் பதம் கடந்த தொல்லோன் - சொல்லளவையைக் கடந்துநின்ற பழையோன் : உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன -மனத்தினது உணர்ச்சி யால் அளந்து அறிந்து கொள்ளவும் படாதவன் ; கண் முதல் புலனால் காட்சியும் இல்லோள் - கண்முதலிய ஐம்பொறிகளின் அறிவினால் அறி யப்படுதலும் இல்லாதவன் ; விண் முதல் பூதலம் வெளிப்பட வகுத் திருவண்டப் பகுதி 105 தோன் - பிரகிருதி மாயையில் நுண்ணிய உருவில் ஒடுங்கிய வான் முத லாகிய ஐம்பெரும் பூதங்களையும் வெளிப்படையாகத் தோன்றுமாறு படைத் தவன் . நஞ்சரவு என்பது நச்சரவு என வலித்தது . ' ' மெல்லொற்றுத் தொடர் மொழி மெல்லொற் றெல்லாம் வல்லொற் றிறுதி கிளையொற் றாகும் ' ' ( தொல்.எழுத்து 414 ) என்பது விதி . நச்சரவாட்டிய நம்பன் என்பது மணஞ் செய்தற்பொருட்டுத் தன் காதலியை அழைத்துச் சென்ற ஒருவன் திருப்புறம் பயம் என்னும் ஊரில் தங்கியிருந்தபோது அரவுதீண்டி இறக்க அதுகண்டு அவன்றன் காதலி மனங்கலங்கி இறைவனை நினைந்து புலம்பினள் . இறைவன் அவட்கு இரங்கி ஒரு பாம்பாட்டியாக அங்கு போந்து பாம்பினை ஆட்டி அந்நஞ்சினைத் தீர்த்து அவனை உயிர்பெற்றெழச் செய்த வரலாற்றினைக் குறித்தது . பச்சைத் தாள் அரவாட்டீ படர்சடையாய் ( ஏசற 4 ) என இத் திருவாசகத்தும் கோளரவ மாட்டுங் குழகா போற்றி பற்றிப் பாம்பாட்டும் படிறன் கண் .ாய் ( நாவு 219 5 ; 253 : 3 ) எனத் தேவாரத்தும் வருவனவுங் திரும்புறம்பயத்தில் அரவின் விடந்தீர்த்தவன் இறைவனேயாகத் திருவிளையாடற்புராண காரர்கள் இந்நிகழ்ச்சியைத் திருஞானசம்பந்த சுவாமிகள் மீது ஏற்றிக் கூறியுள்ளனர் . திருஞான சம்பந்த சுவாமிகள் விடம் தீர்த்தது திருமருகலிற் போந்த காதலர் வேறு இருவரில் ஒருவற் கேயாம் என்பதனை காண்க திருமருகல் நகரின்கண் எழுந்தருளி ... பெருகுதமிழ்த் தொடைசாத்தி அங்கிருந்தார் பெரும்புகலிப் பிள்ளையார் தாம் திருஞான .472 மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான் மறிகடலிற் கலங்கவிழ்ந் தார் போலஸின்றேன் சுற்றத்தார் எனவந்து தோன்றி என் பால் துயரமெலாம் நீங்க அருள்செய்தீர் என்னக் கற்றவர்கள் தொழு தேத்துங் காழிவேந்தர் கருணையினாற் காரிகையாள் தனக்கு நல்கப் பற்றியவாள் அரவுவிடந் திரு மாறு பணைமருகற் பெருமானைப் பாட லுற்றார் திருஞான 481 . எனப் பெரியபுராணம் கூறுமாற்றானுமறிக * பிச்செமை ஏற்றிய பெரியோள் என்றது உலகியல் நினைவு சிறிது மின்றி இறைவனது திருவருட்டிறத்தையே நினைந்திருக்குமாறு தம்மைச் செய்தமையைத் தெரிவித்தவாறு . வஞ்சகப்பெரும் புலையனேனையுன் கோயில் வாயியிற் பிச்சனாக்கினார் ( சதக சீபீ ) ' தென்னன் பெருந்துறை யான் பிச்சேற்றி ' ( அம் 2 : என்பிறவியை வேரறுத்துப் பெரும் பிச் சுத் தரும்பெருவன் ( அடைக் 9 ) பித்தென்னை ஏற்றும் அந்தன் ( திருவெண்பா 5 ) எனப் பிறாண்டும் அடிகள் அருளியமையுங் காண்க பிச்சு பித்து . எமை என்னும் இரண்டாவது நான்காவதன் பொருட்கண் வந்தது மாப்பேரூழிக் காலத்து எல்லாவுலகங்களையும் பொடியாச்சி அப்பொடி தன் திருமேனியிற் பொருந்துமாறு தோன்றுதல் தனக்கன்றிப் பிறர்