திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "நாயிற் கடையாம் நாயேனை நயந்து மீயே ஆட்கொண்டாய்' 114 குழைத் 8, தில்லைமூதூர் நடஞ்செய்வான், எத்தனாவந் தில்புகுந்தெமை சென்னிப்4. யாளுங் கொண்டு " என அடிகள் அருளியவாற்றானுமறிக. உளையா - வருந்தி, "உளைவிலை வருத்தமிலையாய்' கவி 83 : 5 நச். வருந்தியது அருட்பெருக்கைத் தாங்கமுடியாமை பற்றி, இனி உளையா அன்பு என்பதற்கு வெறுப்பில்லாத அன்பு எனினுமாம். அன்பு என்புருக என் றது அன்பினால் உடலின் வலியபாகமாகிய என்பும் உருகும்படி என்றவாறு. " அன்பினா லடியேன் ஆவியோ டாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக' (கோயிற்2) என வருதல் காண்க. ஓலமிட்டு -கூவியழைத்து. திருக்கேரவை இயையும். அலை யார் 179 உரை. ஓலமிட்டு (150) ஆர்த்து (151) என கடற் றீரையின் ஆர்த்தார்த்து ஓங்கி விழுந்து புரண்டு அவறி என இயை யும். "ஓங்கணை மேவிப் புரண்டுவிழுந் தோலமிட்டுத். தீங்கணைந்தோ ரல்லுந் தேறாய் கலங்கிச் செறிகடலே'' (திருக்கோவை 174) என அடி கள் அருளியமையுங் காண்க. ஆர்த்து ஆர்த்து என்னும் அடுக்கு விரைவு பற்றி வந்தது. தலைதடுமாறு - நிலைகலங்கி. இது செய்யாவென்னும் வாய் பாட்டு வினையெச்சம். பித்தரின் மயங்கி - பித்தர் மயங்குவதுபோல மயங்கி என்றவாறு. ஓலமிட்டதும் ஆர்த்தார்த்து ஓங்கியதும் தலைதடுமாறியதும் வீழ்ந்து புரண்டு அலறியதும் இறைவனது அருட்பெருக்கைத் தன் ஊனுடம்பில் தாங்கமுடியாமை பற்றி என்க மத்தர் - மனக்களிப்பினையுடையவர். மத்தம் - மனக்களிப்பு. ''மத்த மனத்தொடு மாலிவனென்ன" (சதக 3) என வருதல் காண்க மதித்தல். கருதுதல். மனங்கொ ள்ளருள் நீர்மைதனின் ஆடலை மதித்தான்" (கந்த. திருவிளையாட்டு 1) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, மருளவும், வியப்பவும் ஆற்றேனாக என இயையும். கடக்களின் ஏற்றத் தடப்பெருமதத்தின் ஆற்றோனாக என்றது களிறு பாகனைத் தன்மீது ஏறவிடாமைக்குக் காரணமாகிய மதத்திள் வழி திரிதல் போல என்பாற்பெருகிய அருட்பெருக்கினை ஊனுடம்பினையுடைய யான் தாங்கமாட்டேனாய் அவ்வருள்வழித் திரிதர என்றவாறு. கடக்கனிறு என் பது இடுகுறிமாத்திரையாய் நின்றது. கருங்கண்னன் என்பது போல. அவயகம் கோற்றேன் கொண்டு செய்தனன் என்றது இங்ஙனம் ஆற்றா நிலையைக்கண்ட இறைவன் தன்மாட்டு யான்கொண்ட பேரன்பாலும் அவ் வன்பினால் யான் பெற்ற பேரருளாலும் தூயதான என் இயல்புக்குத்தக என் உடம்பையும் நுண்ணிய தூய இன்பவடிவாகச் செய்தனன் என்ற வாறு. இது அடிகள் இறைவனிடத்து நிருவாணதிக்கை பெற்றுக்கொண்ட பின் தமது உடம்பில் உளதாகிய தூயதன்மையைக் கூறியவாறு.அவய திருவண்டப் பகுதி 115 வம் - உறுப்பு வடசொல். கோற்றேன் - கொம்புத்தேன். மிக்க தீஞ்சுவைத் தாதலின் அதனை எடுத்துக் கூறினார். "கோற்றேன் எனக்கென்கோ குரை கடல்வா யமுதென்கோ" (உயிருண் 8) கோற்றேன் மொழிக் கிள்ளாய்" (தசாங்கம் 7) என அடிகள் பிறண்டு கூறுதலும் காண்க. கேட்க (147) மறையோர் கோலம் காட்டி (149) வந்து 147) அறை கூவி ஆட்கொண்டருளி (148, இயம்பி (147) அருளலும் (149) உளையா ஓலமிட்டு (151) ஆர்த்தார்த்து ஓங்கி 151) வீழ்ந்து புரண்டு அலறி (152) மயங்கி (153) மருளவும் வியப்பவும் (154) ஆற்றேனாக அவயவம் (151) கோற்றேன் கொண்டு செய்தனன் (157) என முடிக்க 158- 162. ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின் வீழ்வித்து ஆங்கு = பகைவர்களுடைய பழைய ஊர் மூன் றினையும் எழுச்சிபெற்றுத் தோன்றிய சிரிப்பில் உண்டான நெருப்பினால் சாம்பராய் வீழச் செய்தாற்போல, அன்று ஒருத்தரும் வாழாமை அடியோம் அடிக்குடில் அருள் பெரும் தீயில் ஒடுக்கினன் - எம்மை ஆட்கொண்ட அந்நாளில் ஒருவரும் தவறிப்போகா மல் அடியோங்களது அடிமைச் சிறு வீடுகளாகிய உடம்புகளைத் தனது அருளாகிய பெருந்தீயினிடத்தே ஓடுங்கச் செய்தனன்; தட கையின் நெல் வீக்கனி எனக்கு ஆயினன் - வளைந்த கையினிடத்து ஏந்திய நெல்லிக்கனி போன்று எனக்கு எளிவந்து விளங்கித் தோன்றுவானாயினன். ஏற்றார் - பகைவர். இப்பொருட்டாதலைப் "போரெதிர்ந்தேற்றார் மதுகை ஊர்.' மதந்தப " என்னும் பரிபாடலினும் (18:1) காண்க. முதுமை மூதூர் எழில் - எழுச்சி கலி 14: 2 நச். எழில்நகை என்றார், போர்க்கரு களாயமைந்த தேவர்களின் அறியாமையை உணர்ந்த இறைவன் தேரின் கண் திருவடியை வைத்தலும் அதன் அச்சு முரிந்தமையால் உண்டாகிய எழுச்சிபெற்ற நகையாதலின். ஏற்றுர் மூதூர் எழில்நகை எரியின் வீழ்வித்த வரலாறு :- தார காக்கன், கமலாக்கன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களும் இரும்பு வெள்ளி பொன் என்னும் மூன்று உலோகங்களாலான முப்புரங்களை விண்ணிலுடையராய் அவற்றுடன் சென்று தேவர் முதலியோரது நகரங் களை அறித்துத் தீமைசெய்து வந்தனர். அம்மூப்புரங்களை அழித்து அசு ரர்களை வெல்லத் தேவர்கள் எவராலும் ஆகாமையின் இறைவனிடத்துச் சென்று வேண்டுதல் செய்து பூமியைத் தேர்த்தட்டாகவும் சூரிய சந்திரர் களை உருளைகளாகவும் நான் முகனைச் சாரதியாகவும் கொண்டு தேர் அமைத்து மேருவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அமைத்தனர். அமைத்த அத்தேவர், தம் எல்வோரதும் உதவியினாலேயே இறைவன் முப்புரங்களை அளிப்பராகின்றார் என்று எண்ணித் தருக்கினர். அஃதறிந்த இறைவன், 'தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முரிந்ததென் றுந்தீ பற அழிந்தன மூப்புர மென்றுந்தி பற' உந்தி 13.
திருவாசக ஆராய்ச்சியுரை நாயிற் கடையாம் நாயேனை நயந்து மீயே ஆட்கொண்டாய் ' 114 குழைத் 8 தில்லைமூதூர் நடஞ்செய்வான் எத்தனாவந் தில்புகுந்தெமை சென்னிப் 4 . யாளுங் கொண்டு என அடிகள் அருளியவாற்றானுமறிக . உளையா - வருந்தி உளைவிலை வருத்தமிலையாய் ' கவி 83 : 5 நச் . வருந்தியது அருட்பெருக்கைத் தாங்கமுடியாமை பற்றி இனி உளையா அன்பு என்பதற்கு வெறுப்பில்லாத அன்பு எனினுமாம் . அன்பு என்புருக என் றது அன்பினால் உடலின் வலியபாகமாகிய என்பும் உருகும்படி என்றவாறு . அன்பினா லடியேன் ஆவியோ டாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக ' ( கோயிற் 2 ) என வருதல் காண்க . ஓலமிட்டு -கூவியழைத்து . திருக்கேரவை இயையும் . அலை யார் 179 உரை . ஓலமிட்டு ( 150 ) ஆர்த்து ( 151 ) என கடற் றீரையின் ஆர்த்தார்த்து ஓங்கி விழுந்து புரண்டு அவறி என இயை யும் . ஓங்கணை மேவிப் புரண்டுவிழுந் தோலமிட்டுத் . தீங்கணைந்தோ ரல்லுந் தேறாய் கலங்கிச் செறிகடலே ' ' ( திருக்கோவை 174 ) என அடி கள் அருளியமையுங் காண்க . ஆர்த்து ஆர்த்து என்னும் அடுக்கு விரைவு பற்றி வந்தது . தலைதடுமாறு - நிலைகலங்கி . இது செய்யாவென்னும் வாய் பாட்டு வினையெச்சம் . பித்தரின் மயங்கி - பித்தர் மயங்குவதுபோல மயங்கி என்றவாறு . ஓலமிட்டதும் ஆர்த்தார்த்து ஓங்கியதும் தலைதடுமாறியதும் வீழ்ந்து புரண்டு அலறியதும் இறைவனது அருட்பெருக்கைத் தன் ஊனுடம்பில் தாங்கமுடியாமை பற்றி என்க மத்தர் - மனக்களிப்பினையுடையவர் . மத்தம் - மனக்களிப்பு . ' ' மத்த மனத்தொடு மாலிவனென்ன ( சதக 3 ) என வருதல் காண்க மதித்தல் . கருதுதல் . மனங்கொ ள்ளருள் நீர்மைதனின் ஆடலை மதித்தான் ( கந்த . திருவிளையாட்டு 1 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க மருளவும் வியப்பவும் ஆற்றேனாக என இயையும் . கடக்களின் ஏற்றத் தடப்பெருமதத்தின் ஆற்றோனாக என்றது களிறு பாகனைத் தன்மீது ஏறவிடாமைக்குக் காரணமாகிய மதத்திள் வழி திரிதல் போல என்பாற்பெருகிய அருட்பெருக்கினை ஊனுடம்பினையுடைய யான் தாங்கமாட்டேனாய் அவ்வருள்வழித் திரிதர என்றவாறு . கடக்கனிறு என் பது இடுகுறிமாத்திரையாய் நின்றது . கருங்கண்னன் என்பது போல . அவயகம் கோற்றேன் கொண்டு செய்தனன் என்றது இங்ஙனம் ஆற்றா நிலையைக்கண்ட இறைவன் தன்மாட்டு யான்கொண்ட பேரன்பாலும் அவ் வன்பினால் யான் பெற்ற பேரருளாலும் தூயதான என் இயல்புக்குத்தக என் உடம்பையும் நுண்ணிய தூய இன்பவடிவாகச் செய்தனன் என்ற வாறு . இது அடிகள் இறைவனிடத்து நிருவாணதிக்கை பெற்றுக்கொண்ட பின் தமது உடம்பில் உளதாகிய தூயதன்மையைக் கூறியவாறு.அவய திருவண்டப் பகுதி 115 வம் - உறுப்பு வடசொல் . கோற்றேன் - கொம்புத்தேன் . மிக்க தீஞ்சுவைத் தாதலின் அதனை எடுத்துக் கூறினார் . கோற்றேன் எனக்கென்கோ குரை கடல்வா யமுதென்கோ ( உயிருண் 8 ) கோற்றேன் மொழிக் கிள்ளாய் ( தசாங்கம் 7 ) என அடிகள் பிறண்டு கூறுதலும் காண்க . கேட்க ( 147 ) மறையோர் கோலம் காட்டி ( 149 ) வந்து 147 ) அறை கூவி ஆட்கொண்டருளி ( 148 இயம்பி ( 147 ) அருளலும் ( 149 ) உளையா ஓலமிட்டு ( 151 ) ஆர்த்தார்த்து ஓங்கி 151 ) வீழ்ந்து புரண்டு அலறி ( 152 ) மயங்கி ( 153 ) மருளவும் வியப்பவும் ( 154 ) ஆற்றேனாக அவயவம் ( 151 ) கோற்றேன் கொண்டு செய்தனன் ( 157 ) என முடிக்க 158- 162. ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின் வீழ்வித்து ஆங்கு = பகைவர்களுடைய பழைய ஊர் மூன் றினையும் எழுச்சிபெற்றுத் தோன்றிய சிரிப்பில் உண்டான நெருப்பினால் சாம்பராய் வீழச் செய்தாற்போல அன்று ஒருத்தரும் வாழாமை அடியோம் அடிக்குடில் அருள் பெரும் தீயில் ஒடுக்கினன் - எம்மை ஆட்கொண்ட அந்நாளில் ஒருவரும் தவறிப்போகா மல் அடியோங்களது அடிமைச் சிறு வீடுகளாகிய உடம்புகளைத் தனது அருளாகிய பெருந்தீயினிடத்தே ஓடுங்கச் செய்தனன் ; தட கையின் நெல் வீக்கனி எனக்கு ஆயினன் - வளைந்த கையினிடத்து ஏந்திய நெல்லிக்கனி போன்று எனக்கு எளிவந்து விளங்கித் தோன்றுவானாயினன் . ஏற்றார் - பகைவர் . இப்பொருட்டாதலைப் போரெதிர்ந்தேற்றார் மதுகை ஊர் . ' மதந்தப என்னும் பரிபாடலினும் ( 18 : 1 ) காண்க . முதுமை மூதூர் எழில் - எழுச்சி கலி 14 : 2 நச் . எழில்நகை என்றார் போர்க்கரு களாயமைந்த தேவர்களின் அறியாமையை உணர்ந்த இறைவன் தேரின் கண் திருவடியை வைத்தலும் அதன் அச்சு முரிந்தமையால் உண்டாகிய எழுச்சிபெற்ற நகையாதலின் . ஏற்றுர் மூதூர் எழில்நகை எரியின் வீழ்வித்த வரலாறு : - தார காக்கன் கமலாக்கன் வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களும் இரும்பு வெள்ளி பொன் என்னும் மூன்று உலோகங்களாலான முப்புரங்களை விண்ணிலுடையராய் அவற்றுடன் சென்று தேவர் முதலியோரது நகரங் களை அறித்துத் தீமைசெய்து வந்தனர் . அம்மூப்புரங்களை அழித்து அசு ரர்களை வெல்லத் தேவர்கள் எவராலும் ஆகாமையின் இறைவனிடத்துச் சென்று வேண்டுதல் செய்து பூமியைத் தேர்த்தட்டாகவும் சூரிய சந்திரர் களை உருளைகளாகவும் நான் முகனைச் சாரதியாகவும் கொண்டு தேர் அமைத்து மேருவை வில்லாகவும் வாசுகியை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அமைத்தனர் . அமைத்த அத்தேவர் தம் எல்வோரதும் உதவியினாலேயே இறைவன் முப்புரங்களை அளிப்பராகின்றார் என்று எண்ணித் தருக்கினர் . அஃதறிந்த இறைவன் ' தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முரிந்ததென் றுந்தீ பற அழிந்தன மூப்புர மென்றுந்தி பற ' உந்தி 13 .