திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

6- தேசித்த பொருளைக்கொண்ட திருமந்திரவாழ்த்து. இரண்டாவது வாழ்த்து அவ்வுபதேசம் அருளிய திருவடி வாழ்த்து.' திருவருள் வாழ்த்தும் அதுவே அடுத்த வாழ்த்து அத்திருவருளுருவாய் அவ் வாசிரியர் திருவுள்ளத்து நீங்காதிருக்கும் அகக்குருவின் வாழ்த்து. அடுத்த வாழ்த்து அவ்வகக் குருவே புறக்குருவாகி வந்து சிவஞான போதம் செய்தருளி ஆட்கொண்ட மெய்ப்பொருளை வாழ்த்தியதா கும். ஆகவே அது மூன்றாவது திருவடியாக அமைந்திருக்கின்றது. அறுகுணங்களைத் திருவுள்ளத்தடைத்து அறுமுறை வாழ்க என்றது அறிஞர்க்குத் தெரியும். இங்கே கோகழியாண்ட குருமணி என் றது. அகத்துறு நோய்க்குள்ளினர் அன்றி அதனைச் சகத்தவருங் காண்பரோ தான்' என்னும் திருவருட்பயனை நோக்கிப் பொருள் கொள்ளத்தக்கது. தகவே, அகத்தே இமைப்பொழுதும் நீங்காதானே குருமணியானவுண்மை யாவர்க்கும் இசைந்ததேயாகும். ஆகவே அக்குருமணி நாம் வணங்கும் இக்குருமணியை (மாணிக்க வாசகரை) ஆண்ட இடம் எது? திருப்பெருந்துறையா ? வேறா? திருப்பெருந்துறையாயின் அதனைத் தலைக்கண் வழிபடாது வேறு தலத்தை முதலில் ஆசிரியர் வழிபடுவாரா ? இச்சிவபுராணம் திருப் பெருந்துறையில் அருளப்பட்டது என்பதும் பிரசித்தம். சிவபுரமும் தில்லையும் தென்பாண்டி நாடும் இதிற் குறிக்கப்படினும் அங்குப் பாடியதாக எவரும் கருதார். சீரார்பெருந்துறையே இது பாடிய இடம் என்று உறுதியாயிற்று. ஆகவே அப்பெருந்துறையில், நம் குருமணியை அவர் குருமணி ஆண்ட இடம் கோகழி ஆவறாம், அது திருப்பெருந்துறையிலன்றி வேறெங்கும் இராததும், அவ்விடமே ஆண்டதற்குரிய இடம் ஆவதும் ஐயத்துக்குரியன ஆமோ? ஆகாது. ஒருகாலும் ஆகாது, கோகழியில் ஆண்ட குருமணி என்றே கொள் ளல் வேண்டும். ஏழனுருபன்றி வேறெவ்வுருபும் ஆண்டும் பொருந் தாது. கோ-குரு. கழி-உபதேசம் செய்து மறைந்த (கழிந்த) இடம். அவ்விடமே ஆசிரியர் திருவுள்ளத்தில் முதலில் எய்துதற் குரியது. அஃதெய்த அதனை வாழ்த்தியதே அவ்வாழ்த்து. "கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க' இத்திருவாசகவுரை (முதற் பகுதி) நாடெங்கும் உலவி நல்லோர் பல்லோர்க்கும் நற்பொருளை விளக்கி நாளும் நிலவுக.-அருளம்பலவ னார் மெய்ப்பொருளடி நீழவில் இன்புறுக. அவர் மனைவி மக்கள் அனைவரும் எல்லாச் செல்வங்களும் நலங்களும் பெற்று நீடுழி இனிது வாழ்க வாழ்க வாழ்க. சிவம் மதிப்புரைகள் யாழ்ப்பாணத்துச் சைவாசிரிய கலாசாலை முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதியது சிவ திருவாசகப் பாட்டனைத்தும் சிவபுராணம் எனப்படும்: புராணமாகிய திருவாசகம் முன்னமே சொல்லிய பாட்டாம். அஃதாவது உள்நின்று உணர்த்துவதொன்றற் சொல்லப்பட்ட பாட் டாம். பாட்டின் பொருள் "நமச்சிவாய' என்பது. நமச்சிவாயப் பொருள் சாதகர்களின் இருதயத்தில் இடையீ டின்றி வாழுதற்கும், முந்தைவினை முழுதும் ஓயத் திருவாசகத்தை ஓதும் பரிபக்குவர்களுக்கு அப்பொருள் சித்தித்தற்கும் உபகரிக்கும் உரையே திருவாசகத்துக்கு உரையாம். அவ்வாறாய உரை நம்ம னோர்க் கெட்டாதது. "செய்காட்டுங் கமூகடலித் தில்லையுளார் பொருள் கேட்பச் சொல்லிய பாட்டின் பொருளாவர் கூத்தப்பெருமானே யென்று சுட்டிக்காட்டி மற்றொன்றும் உரையாமே மறைந்தருளினார் மணி வாசகப் பெருமானார். அருள் அநுபவக் கனிவாகிய திருவாசகத்துக்கு உரை எழுதல் இயலாது; உரையெழுதவெண்ணாது; அதன் பொருள் குரு பரம் பரையில் உபதேசக் கிரமத்திற் கிடைக்கற்பாலது' என்ற கருத்தும் உண்டு. இங்ஙனமாய போதும் மொழித்திறத்தின் முட்டறுப்பதன் மூலம் தூலப்பொருளைத் தெளிவுபடுத்துவதனால் மெய்ப்பொருள் சித்திக்கு மென்கின்றதொரு முறையில், வித்துவான்கள் பலர் ஒருங்குகூடியும் தனித்துங் காலந்தோறும் பல வேறு உரைகள் திருவாசகத்துக்குச் செய்திருக்கின்றார்கள். அவை பதவுரை பொழிப்புரை பொழிப் புரையும் விரிவுரையும் எனப் பல திறத்தன. அவ்வுரைகளை ஆராய்ந்து அன்பர் திரு. அருளம்பலவனார் அவர் கள் இவ்வுரையை உதவியிருக்கின்றார்கள். உரை தெளிவானது பத வுரை பொழிப்புரைகள் கருத்துக்களைத் திரட்டியுதவுவன. ஆராய்ச்சி யோடு கூடிய விரிவுரை புடைபட ஆராய்வார்க்கின்றியமையாதது. இவர்கள் முன்னமே பதிற்றுப்பத்துக்குச் சொல்லாராய்ச்சி முற் றியதொரு பேருரை செய்து சொற்பொருள் உணர்த்துஞ் சொல் வன்மை வாய்க்கப் பெற்றவர்கள் மகாவித்துவான். வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்கின்ற தொல்காப்பி யப் பொதுப்பாயிரத்திற் சொற்பொருளுணர்த்துஞ் சொல்வன்மை நல்லாசிரியலக்கணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டது,
6 தேசித்த பொருளைக்கொண்ட திருமந்திரவாழ்த்து . இரண்டாவது வாழ்த்து அவ்வுபதேசம் அருளிய திருவடி வாழ்த்து . ' திருவருள் வாழ்த்தும் அதுவே அடுத்த வாழ்த்து அத்திருவருளுருவாய் அவ் வாசிரியர் திருவுள்ளத்து நீங்காதிருக்கும் அகக்குருவின் வாழ்த்து . அடுத்த வாழ்த்து அவ்வகக் குருவே புறக்குருவாகி வந்து சிவஞான போதம் செய்தருளி ஆட்கொண்ட மெய்ப்பொருளை வாழ்த்தியதா கும் . ஆகவே அது மூன்றாவது திருவடியாக அமைந்திருக்கின்றது . அறுகுணங்களைத் திருவுள்ளத்தடைத்து அறுமுறை வாழ்க என்றது அறிஞர்க்குத் தெரியும் . இங்கே கோகழியாண்ட குருமணி என் றது . அகத்துறு நோய்க்குள்ளினர் அன்றி அதனைச் சகத்தவருங் காண்பரோ தான் ' என்னும் திருவருட்பயனை நோக்கிப் பொருள் கொள்ளத்தக்கது . தகவே அகத்தே இமைப்பொழுதும் நீங்காதானே குருமணியானவுண்மை யாவர்க்கும் இசைந்ததேயாகும் . ஆகவே அக்குருமணி நாம் வணங்கும் இக்குருமணியை ( மாணிக்க வாசகரை ) ஆண்ட இடம் எது ? திருப்பெருந்துறையா ? வேறா ? திருப்பெருந்துறையாயின் அதனைத் தலைக்கண் வழிபடாது வேறு தலத்தை முதலில் ஆசிரியர் வழிபடுவாரா ? இச்சிவபுராணம் திருப் பெருந்துறையில் அருளப்பட்டது என்பதும் பிரசித்தம் . சிவபுரமும் தில்லையும் தென்பாண்டி நாடும் இதிற் குறிக்கப்படினும் அங்குப் பாடியதாக எவரும் கருதார் . சீரார்பெருந்துறையே இது பாடிய இடம் என்று உறுதியாயிற்று . ஆகவே அப்பெருந்துறையில் நம் குருமணியை அவர் குருமணி ஆண்ட இடம் கோகழி ஆவறாம் அது திருப்பெருந்துறையிலன்றி வேறெங்கும் இராததும் அவ்விடமே ஆண்டதற்குரிய இடம் ஆவதும் ஐயத்துக்குரியன ஆமோ ? ஆகாது . ஒருகாலும் ஆகாது கோகழியில் ஆண்ட குருமணி என்றே கொள் ளல் வேண்டும் . ஏழனுருபன்றி வேறெவ்வுருபும் ஆண்டும் பொருந் தாது . கோ - குரு . கழி - உபதேசம் செய்து மறைந்த ( கழிந்த ) இடம் . அவ்விடமே ஆசிரியர் திருவுள்ளத்தில் முதலில் எய்துதற் குரியது . அஃதெய்த அதனை வாழ்த்தியதே அவ்வாழ்த்து . கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க ' இத்திருவாசகவுரை ( முதற் பகுதி ) நாடெங்கும் உலவி நல்லோர் பல்லோர்க்கும் நற்பொருளை விளக்கி நாளும் நிலவுக . - அருளம்பலவ னார் மெய்ப்பொருளடி நீழவில் இன்புறுக . அவர் மனைவி மக்கள் அனைவரும் எல்லாச் செல்வங்களும் நலங்களும் பெற்று நீடுழி இனிது வாழ்க வாழ்க வாழ்க . சிவம் மதிப்புரைகள் யாழ்ப்பாணத்துச் சைவாசிரிய கலாசாலை முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் பண்டிதமணி திரு . சி . கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதியது சிவ திருவாசகப் பாட்டனைத்தும் சிவபுராணம் எனப்படும் : புராணமாகிய திருவாசகம் முன்னமே சொல்லிய பாட்டாம் . அஃதாவது உள்நின்று உணர்த்துவதொன்றற் சொல்லப்பட்ட பாட் டாம் . பாட்டின் பொருள் நமச்சிவாய ' என்பது . நமச்சிவாயப் பொருள் சாதகர்களின் இருதயத்தில் இடையீ டின்றி வாழுதற்கும் முந்தைவினை முழுதும் ஓயத் திருவாசகத்தை ஓதும் பரிபக்குவர்களுக்கு அப்பொருள் சித்தித்தற்கும் உபகரிக்கும் உரையே திருவாசகத்துக்கு உரையாம் . அவ்வாறாய உரை நம்ம னோர்க் கெட்டாதது . செய்காட்டுங் கமூகடலித் தில்லையுளார் பொருள் கேட்பச் சொல்லிய பாட்டின் பொருளாவர் கூத்தப்பெருமானே யென்று சுட்டிக்காட்டி மற்றொன்றும் உரையாமே மறைந்தருளினார் மணி வாசகப் பெருமானார் . அருள் அநுபவக் கனிவாகிய திருவாசகத்துக்கு உரை எழுதல் இயலாது ; உரையெழுதவெண்ணாது ; அதன் பொருள் குரு பரம் பரையில் உபதேசக் கிரமத்திற் கிடைக்கற்பாலது ' என்ற கருத்தும் உண்டு . இங்ஙனமாய போதும் மொழித்திறத்தின் முட்டறுப்பதன் மூலம் தூலப்பொருளைத் தெளிவுபடுத்துவதனால் மெய்ப்பொருள் சித்திக்கு மென்கின்றதொரு முறையில் வித்துவான்கள் பலர் ஒருங்குகூடியும் தனித்துங் காலந்தோறும் பல வேறு உரைகள் திருவாசகத்துக்குச் செய்திருக்கின்றார்கள் . அவை பதவுரை பொழிப்புரை பொழிப் புரையும் விரிவுரையும் எனப் பல திறத்தன . அவ்வுரைகளை ஆராய்ந்து அன்பர் திரு . அருளம்பலவனார் அவர் கள் இவ்வுரையை உதவியிருக்கின்றார்கள் . உரை தெளிவானது பத வுரை பொழிப்புரைகள் கருத்துக்களைத் திரட்டியுதவுவன . ஆராய்ச்சி யோடு கூடிய விரிவுரை புடைபட ஆராய்வார்க்கின்றியமையாதது . இவர்கள் முன்னமே பதிற்றுப்பத்துக்குச் சொல்லாராய்ச்சி முற் றியதொரு பேருரை செய்து சொற்பொருள் உணர்த்துஞ் சொல் வன்மை வாய்க்கப் பெற்றவர்கள் மகாவித்துவான் . வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்கின்ற தொல்காப்பி யப் பொதுப்பாயிரத்திற் சொற்பொருளுணர்த்துஞ் சொல்வன்மை நல்லாசிரியலக்கணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டது