திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

134 திருவாசக ஆராய்ச்சி சியுரை யும் எனை பல பிழைத்தும் - பொருளைத் தொகுத்து வைத்தும், தொகுத்து வைத்த பொருளைப் பாதுகாத்து வைத்தும், இவ்வாறு எவ்வளவோ பல துன்பங்களுக்குத் தப்பியும், காலை மலமொடு - காலையில் மலசலக் கழிவி லும்,கடு பகல் பசி -உச்சிக்காலத்தில் பசிப்பிணியிலும், நிசி வேளை வித்திரை - இராக்காலத்தில் உறக்கத்திலும், யாத்திரை பிழைத்தும் - இவை யொழிந்தபோது போக்கு வரவில் நேரும் துன்பங்களுக்குத் தப்பியும், கரு குழல் செவ்வாய் வெண் நகை - கரிய கூந்தலினையும் சிவந்த வாயினையும் வெள்ளிய எயிற்றினையும், கார் மயில் ஒடுங்கிய சாயல் - கார்காலத்து மயி லும் அடங்குகற்கேதுவாகிய மென்மையினையும் நெருங்கி உன் மதர்த்து மிகப் பருத்தலினால் ஒன்றோடொன்று நெருங்கி உள்ளே கழித்து, கச்சு அற நிமிர்ந்து கதிர்த்து - பட்டிகை அனும்படி அண்ணாந்து ஒளிவீட்டு, முன் பணைத்து -முற்பக்கம் பருத்து, இடை எய்த்து வருந்த எழுந்து புடை பரந்து - இடை இளைத்து வருந்தும்படி எழுச்சி பெற்றுப் பக்கங் களிற் பரந்து, ஈர்க்கு இடை போகர இளமுலை மாதர்தம் - ஈர்க்கும் நடுவே நுழையமுடியாதபடி நெருக்கத்தினையுடைய இளைய முலைகளையுடைய மக ளிருடைய, கூர்த்த நயன கொள்கையில் பிழைத்தும் - நுணுகிய பார்வை யையுடைய கண்களின் பெருங் களவிற்குத் தப்பியும், பித்தர் உலகர் பெரு துறை பரப்பினுள் - மயக்கங்கொண்ட உலகத்தவர் மேற்கொள்கின்ற மிக்க பலதுறைப்பட்ட எண்ணப்பரப்புகளுள். மத்த களிறு எனும் அவா இடை பிழைத்தும் - மதம்கொண்ட யானை என்று சொல்லத்தக்க அவாவி னின்றும் தப்பியும், கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் - கற்கப்படுவன என்று சொல்லப்படும் பலவாகிய கடல்போன்ற கலைகளிளின்றும் தப்பி யும், செல்வம் என்னும் அல்லவில் பிழைத்தும் - செல்வம் என்று உரைக் கப்படும் துன்பத்தினின்றும் தப்பியும். நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் - வறுமை என்று சொல்லப்படும் பழைய கஞ்சுக்குத் தப்பி யும், புல் வரம்பு ஆய பல்துறை பிழைத்தும் - புல்லைக்கீழ் எல்லையாக வுடைய பலவகை உயிர்த்தோற்றங்களின் இடையூறுக்குத் தப்பியும். ஈட்டியும் என்பது எதுகை நோக்கி மெலிந்தது. எனை எவ்வளவு. "எனைப்பகை யுற்றாரு முய்வர் (குறள் 207) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க மலசலக் கழிவுத் துன்பம் மற்றைக் காலங்களிலும் விடி யற்காலையில் மிக்கிருத்தலின் காலை மலமொடு' என்றார். பசித்துன்பம் எனைக்காலங்களிலும் ஞாயிறுதன் முழு ஆற்றலொடு கிளர்த்து நிற்கும் உச்சிப்பொழுதில் வயிற்றிடத்துள்ள பசித்தீயும் கிளர்ந்து விற்றலின் கடும்பகற் பசி' என்றார். கடும்பகல் - உச்சிப்பொழுது கலி 94 : 14 நச். உடம்பில் அயர்வு உண்டாகும்போது மற்றைக் காலங்களிலும் உறக் கம் வருதல் இயல்பாயினும் இராக்கால உறக்கம் எல்லாவுயிர்களுக்கும் பொதுவாதலின் ' நிசிவேலை நித்திரை ' என்றார். இரவு என்னும் பொருள் படும் நிசா என்னும் வடசொல் நீசி என்ற ஈண்டு நடு இரவு என்னும் பொருள்பட வந்தது. நடு இரவை உணர்த்துவதாகிய நிதே : என்பதே நிசி போற்றித் திருவகவல் 135 என்றாயிற்று என்பாருமுளர். வேலா என்னும் வடசொல் தமிழில் வேலை என வந்தது. வேலை- காலம். இப்பொருட்டாதல் ''அவ்வேலையில் வள்ளி யச்சமொடு மீண்டு" என்னும் கந்தபுராணத்தும் (வள்ளிதிருமண 112) காண்க. நித்திரை - உறக்கம். யாத்திரை - வழிச்செலவு. கருங்குழலினையும் செவ்வாயினையும் வெண்ணகையினையும் மயில் ஒருங்க கிய சாயலினையும் இளமுலையினையுமுடைய மாதர் என்க. கருங்குழல் - கரிய கூந்தல். செவ்வாய் - கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாய்."கொங்கையர் கொவ்வைச் செய்வாய்" (நீத் 2) என வரு தலுங் காண்க. பவளம்போற் சிவந்த வாய் எனினுமமையும். கருங்கடற் பவளச் செவ்வாய்" (சீவக 658) எனப் பிறகும் கூறுதல் காண்க. வெண் ண்கை - வெள்ளிய எயிறு. முத்தன்ன வெண்ணகையாய்" (திருவெம் 3) என வருதலும் காண்க. மாதர் கார்காலத்து களிப்புடைய மயிலும் ஒடுங்குதற்கேதுவாகிய மீக்க மென்மையையுடையர் என்பார் 'கார்மயில் ஒருங்கிய சாயல்' என் றார். "மயின்மயிற் குளிக்குஞ் சாயல்" (சிறுபாண் 16) என்பது ஈண்டு அறியற்பாலது. கார்காலத்து மயில் களிப்புடைத்தாதல் "மஞ்ஞை மாயி னம். கால மாரி பெய்தென வதனெதிர், ஆலலு மாலின ''(குறுந் 251) என்பதனாலுமறிக ஒருங்குதல் - ஓடுங்குதல், "உரமொருங்கியது...வாலி யது மார்பு'' (கம்ா.யுத்த மந்தர 90) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சாயல் - மென்மை. சாயன் மென்மை" என்பது தொல்காப் பியம் (உரி 27). ஈண்டு கட்கினிதாகிய மென்மையை. ***** நெருங்கி என்றது எழுந்து புடைபரந்தமையின் தனங்கள் ஒன்றே டொன்று நெருங்கி என்றவாறு. புணர்முலையார்" (அச்சோ2) என வருதலும் காண்க. உன்மதர்த்து என்றது உள்ளே களிப்பினைத் தரும் அமுதினையுடைத்தாய் என்றவாறு. பொருப்பென வெழுந்து வல்லின் பொற்பெனத் திரண்டு தென்னங் தருப்பயி லிளநீ ரென்னத் தண்ணெனா வமுதுட் கொண்டு மருப்பெனக் கூர்ந்து மாரன் மகுடத்தின் வனப்பு மெய்தி இருப்பதோர் பொருளுண் டாமேல் இளமுலைக் குவமை மரமே எனக் கந்தபுராணத்து வருதலுங் காண்க. பு (மாயைப் 51) சுச்சு பட்டி கை. "வம்பு பிணிகை பட்டிகை வார்வடம், என்றிவை யைந்துங் கச்சென விசைப்பர்' என்றார் திவாரத்தும். இது இயங்கும் போது அசைமல் கொங்கைமேற் கட்டப்படுவது. கருங்க ணிளமுலை கச்சற விக்கி'' (சீவக 2118) எனப் பிறர் கூறுதலும் காண்க. இப்பட்டிகை யும் அறும்வண்ணம் நிமிர்ந்த கொங்கை என்பார் 'கச்சற நிமிர்ந்து ' என்றார். நிமிர்ந்து - அண்ணாந்து. "அண்ணுந் தேந்திய வனமுலை " (அக ) என்றார் பிறரும். கதீர்த்தல் - ஒளிவிடுதல். கதிர்முலைகண், மானக் கன கந் தரும் '' (திருக்கோவை 335) என வருதலுங் காண்க.
134 திருவாசக ஆராய்ச்சி சியுரை யும் எனை பல பிழைத்தும் - பொருளைத் தொகுத்து வைத்தும் தொகுத்து வைத்த பொருளைப் பாதுகாத்து வைத்தும் இவ்வாறு எவ்வளவோ பல துன்பங்களுக்குத் தப்பியும் காலை மலமொடு - காலையில் மலசலக் கழிவி லும் கடு பகல் பசி -உச்சிக்காலத்தில் பசிப்பிணியிலும் நிசி வேளை வித்திரை - இராக்காலத்தில் உறக்கத்திலும் யாத்திரை பிழைத்தும் - இவை யொழிந்தபோது போக்கு வரவில் நேரும் துன்பங்களுக்குத் தப்பியும் கரு குழல் செவ்வாய் வெண் நகை - கரிய கூந்தலினையும் சிவந்த வாயினையும் வெள்ளிய எயிற்றினையும் கார் மயில் ஒடுங்கிய சாயல் - கார்காலத்து மயி லும் அடங்குகற்கேதுவாகிய மென்மையினையும் நெருங்கி உன் மதர்த்து மிகப் பருத்தலினால் ஒன்றோடொன்று நெருங்கி உள்ளே கழித்து கச்சு அற நிமிர்ந்து கதிர்த்து - பட்டிகை அனும்படி அண்ணாந்து ஒளிவீட்டு முன் பணைத்து -முற்பக்கம் பருத்து இடை எய்த்து வருந்த எழுந்து புடை பரந்து - இடை இளைத்து வருந்தும்படி எழுச்சி பெற்றுப் பக்கங் களிற் பரந்து ஈர்க்கு இடை போகர இளமுலை மாதர்தம் - ஈர்க்கும் நடுவே நுழையமுடியாதபடி நெருக்கத்தினையுடைய இளைய முலைகளையுடைய மக ளிருடைய கூர்த்த நயன கொள்கையில் பிழைத்தும் - நுணுகிய பார்வை யையுடைய கண்களின் பெருங் களவிற்குத் தப்பியும் பித்தர் உலகர் பெரு துறை பரப்பினுள் - மயக்கங்கொண்ட உலகத்தவர் மேற்கொள்கின்ற மிக்க பலதுறைப்பட்ட எண்ணப்பரப்புகளுள் . மத்த களிறு எனும் அவா இடை பிழைத்தும் - மதம்கொண்ட யானை என்று சொல்லத்தக்க அவாவி னின்றும் தப்பியும் கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் - கற்கப்படுவன என்று சொல்லப்படும் பலவாகிய கடல்போன்ற கலைகளிளின்றும் தப்பி யும் செல்வம் என்னும் அல்லவில் பிழைத்தும் - செல்வம் என்று உரைக் கப்படும் துன்பத்தினின்றும் தப்பியும் . நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் - வறுமை என்று சொல்லப்படும் பழைய கஞ்சுக்குத் தப்பி யும் புல் வரம்பு ஆய பல்துறை பிழைத்தும் - புல்லைக்கீழ் எல்லையாக வுடைய பலவகை உயிர்த்தோற்றங்களின் இடையூறுக்குத் தப்பியும் . ஈட்டியும் என்பது எதுகை நோக்கி மெலிந்தது . எனை எவ்வளவு . எனைப்பகை யுற்றாரு முய்வர் ( குறள் 207 ) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க மலசலக் கழிவுத் துன்பம் மற்றைக் காலங்களிலும் விடி யற்காலையில் மிக்கிருத்தலின் காலை மலமொடு ' என்றார் . பசித்துன்பம் எனைக்காலங்களிலும் ஞாயிறுதன் முழு ஆற்றலொடு கிளர்த்து நிற்கும் உச்சிப்பொழுதில் வயிற்றிடத்துள்ள பசித்தீயும் கிளர்ந்து விற்றலின் கடும்பகற் பசி ' என்றார் . கடும்பகல் - உச்சிப்பொழுது கலி 94 : 14 நச் . உடம்பில் அயர்வு உண்டாகும்போது மற்றைக் காலங்களிலும் உறக் கம் வருதல் இயல்பாயினும் இராக்கால உறக்கம் எல்லாவுயிர்களுக்கும் பொதுவாதலின் ' நிசிவேலை நித்திரை ' என்றார் . இரவு என்னும் பொருள் படும் நிசா என்னும் வடசொல் நீசி என்ற ஈண்டு நடு இரவு என்னும் பொருள்பட வந்தது . நடு இரவை உணர்த்துவதாகிய நிதே : என்பதே நிசி போற்றித் திருவகவல் 135 என்றாயிற்று என்பாருமுளர் . வேலா என்னும் வடசொல் தமிழில் வேலை என வந்தது . வேலை- காலம் . இப்பொருட்டாதல் ' ' அவ்வேலையில் வள்ளி யச்சமொடு மீண்டு என்னும் கந்தபுராணத்தும் ( வள்ளிதிருமண 112 ) காண்க . நித்திரை - உறக்கம் . யாத்திரை - வழிச்செலவு . கருங்குழலினையும் செவ்வாயினையும் வெண்ணகையினையும் மயில் ஒருங்க கிய சாயலினையும் இளமுலையினையுமுடைய மாதர் என்க . கருங்குழல் - கரிய கூந்தல் . செவ்வாய் - கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாய் . கொங்கையர் கொவ்வைச் செய்வாய் ( நீத் 2 ) என வரு தலுங் காண்க . பவளம்போற் சிவந்த வாய் எனினுமமையும் . கருங்கடற் பவளச் செவ்வாய் ( சீவக 658 ) எனப் பிறகும் கூறுதல் காண்க . வெண் ண்கை - வெள்ளிய எயிறு . முத்தன்ன வெண்ணகையாய் ( திருவெம் 3 ) என வருதலும் காண்க . மாதர் கார்காலத்து களிப்புடைய மயிலும் ஒடுங்குதற்கேதுவாகிய மீக்க மென்மையையுடையர் என்பார் ' கார்மயில் ஒருங்கிய சாயல் ' என் றார் . மயின்மயிற் குளிக்குஞ் சாயல் ( சிறுபாண் 16 ) என்பது ஈண்டு அறியற்பாலது . கார்காலத்து மயில் களிப்புடைத்தாதல் மஞ்ஞை மாயி னம் . கால மாரி பெய்தென வதனெதிர் ஆலலு மாலின ' ' ( குறுந் 251 ) என்பதனாலுமறிக ஒருங்குதல் - ஓடுங்குதல் உரமொருங்கியது ... வாலி யது மார்பு ' ' ( கம்ா.யுத்த மந்தர 90 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . சாயல் - மென்மை . சாயன் மென்மை என்பது தொல்காப் பியம் ( உரி 27 ) . ஈண்டு கட்கினிதாகிய மென்மையை . ***** நெருங்கி என்றது எழுந்து புடைபரந்தமையின் தனங்கள் ஒன்றே டொன்று நெருங்கி என்றவாறு . புணர்முலையார் ( அச்சோ 2 ) என வருதலும் காண்க . உன்மதர்த்து என்றது உள்ளே களிப்பினைத் தரும் அமுதினையுடைத்தாய் என்றவாறு . பொருப்பென வெழுந்து வல்லின் பொற்பெனத் திரண்டு தென்னங் தருப்பயி லிளநீ ரென்னத் தண்ணெனா வமுதுட் கொண்டு மருப்பெனக் கூர்ந்து மாரன் மகுடத்தின் வனப்பு மெய்தி இருப்பதோர் பொருளுண் டாமேல் இளமுலைக் குவமை மரமே எனக் கந்தபுராணத்து வருதலுங் காண்க . பு ( மாயைப் 51 ) சுச்சு பட்டி கை . வம்பு பிணிகை பட்டிகை வார்வடம் என்றிவை யைந்துங் கச்சென விசைப்பர் ' என்றார் திவாரத்தும் . இது இயங்கும் போது அசைமல் கொங்கைமேற் கட்டப்படுவது . கருங்க ணிளமுலை கச்சற விக்கி ' ' ( சீவக 2118 ) எனப் பிறர் கூறுதலும் காண்க . இப்பட்டிகை யும் அறும்வண்ணம் நிமிர்ந்த கொங்கை என்பார் ' கச்சற நிமிர்ந்து ' என்றார் . நிமிர்ந்து - அண்ணாந்து . அண்ணுந் தேந்திய வனமுலை ( அக ) என்றார் பிறரும் . கதீர்த்தல் - ஒளிவிடுதல் . கதிர்முலைகண் மானக் கன கந் தரும் ' ' ( திருக்கோவை 335 ) என வருதலுங் காண்க .