திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

138 திருவாசக ஆராய்ச்சியுரை படும். வரம்பு - எல்லை. "புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்" (பதிற் 33:)ே என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இப்பகுதியில் 11- 41) இயங்கியற் பொருள்களுள் யானை முதல் எறும்பி றாயவற்றை முதற்கட் கூறிப் பின்னர் மானிடப் பிறப்பை எடுத்துக் கொண்டு அப்பிறப்பில் உயிர் கருவுற்ற காலந் தொடங்கிப் பூமியிற் பிற வியை அடையும் வரை அடையும் துன்பங்களை முறைப்பட வகுத்து ஓதி அதன் பின்னர் ஆண்டுகள் தோறும் வளரும் வளர்ச்சியைக் கூறி அதன் பின்னர்க் காலையில் மலோபாதிக்கும் நண்பகலிற் கடும்பசிக்கும் நடுஇர வில் நித்திரை உபாதிக்கும் தப்பியமையைக் கூறிப் பின்னர் மாதர் நயனக் கொள்ளையிற் பிழைத்தமையைக் கூறிப் பொருளல்லாத உலவொழ்க்கையைப் பொருளாக எண்ணும் பித்தவுலகினரின் பல துறையாய எண்ணங்களுன் அவா அறக்கொடிதாகலின் அதனின்றும் தப்பியமை கூறிப் பின்னர் பல துறைப்பட்ட கல்வியின்றும் தப்பியமைகூறி. உலக வாழ்வுக்கு இன்றி யமையாது வேண்டப்படும் செல்வம் "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும்'' (திருக்கோவையார்) என அடிகள் கூறியவாறு சிறப்புடைத்த யினும் அது ஈட்டுதல் முதவான பலவகைத் துன்பங்களைத் தருதலின் அதனின்று தப்பியமை கூறித் தொன்றுதொட்டு விடம்போல வருத்திவரும் நல்குரவுக்குத் தப்பியமை கூறியும் வந்த அடிகள் நிலையியற் பொருள்களுள் ஓரறிவுடைய புல்லினைக் கீழ் எல்லையாகவும் ஆறறிவுடைய மக்களை மேலெல்லையாகவும் அமைத்துக் கொண்டு அதனைத் தொகுத்துக் கூறுவார் 'புல்வரம்பாய பல்துறை பிழைத்தும் என்று அருளிச்செய்தார். 42-58. தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி - கடவுள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதாகிய ஒருபொருள் உண்டு என்னும் எண் ணம் உளதாகி. முனிவு இலாதது ஓர் பொருள் அது கருகலும்- வெறுப் பில்லாததாகிய ஒப்பற்ற பொருளாகிய அதனை எண்ணப் புகுந்த அளவில், ஆறு மாயாகோடி சத்திகள் - உயிர்களின் உள்ளத்துள்ள உட்பகைகளா கிய விருப்பு வெகுளி ஈயாமை மயக்கம் செருக்கு பொறாமை என்னும் ஆறாகிய மாயையின் மிகப்பலவான ஆற்றல்கள். வேறு வேறு தம் மாயை கள் தொடங்கின - வேறுவேறாகத் தம் வஞ்சனைகளைச் செய்யத் தொடங் கின; ஆப்தமானார் அயலவர் கூடி - உண்மையைக் கூறும் நண்பர்களும் பிறரும் ஒன்று சேர்ந்து, நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர் - கடவுள் இல்லை என்று பொய் வழக்குப் பேசி அதனால் நாவும் தழும்பேறப் பெற்ற னர்; சுற்றம் என்னும் தொல் பசு குழாங்கள் - உறவினர் என்று சொல் லப்படும் பழமையான பசுக்கூட்டங்கள் பற்றி அழைத்து பெருகவும் பதறினர் - நம்மைப் பிடித்து அழைத்து மிகவும் பதறினர்; விரதமே பரம் ஆக வேதியரும் சரதம் ஆக சாத்திரம் காட்டினர் - விரதம் ஆற்று தலே விடு பேற்றினைத் தரும் மேலான சாத்திரமாகச் சொல்லி வேதம் உணர்ந்த பார்ப்பனரும் தமது கூற்றுக்கு உண்மையாம்படி நூல்களைக் சாட்டினர்; சமய வாதிகள் தத்தம் மதங்களில் - சமயக் கணக்கர்கள் தங் 139 71E போற்றித் திருவகவல் கள் தங்கள் சமயங்களில். அமைவதாக அரற்றி மலைந்தனர் - வீடு பேற் றினைத் தரும் நெறி அமைந்திருப்பதாக வாய்விட்டுக் கதறி மாறுபட்டுக் கூறுவாராயினர்; மிண்டிய மாயவாதம் என்னும் சண்ட மாருதம் - நெருங் கிய மாயாவாதம் என்று சொல்லப்படும் சுழல் காற்றானது, சுழித்து அடித்து ஆர்த்து - சுமுன்று வீசிப் பேராராவாரஞ் செய்யப்பெற்று, உலோ காயதன் என்னும் ஒள் திறல் பாம்பின் என்று உலோகாயதன் சொல்லப்படும் ஒள்ளிய வலியினையுடைய பாம்பினது, கலா பேதத்த கடு விடம் எய்தி- கலை வேறு பாடுகளையுடைய கொடிய நஞ்சு வந்து பொருந் தப்பெற்று, அதில் பெருமாயைகள் எனை பல சூழவும் - அந்நிலையில் பெரிய வஞ்சனைகள் எவ்வளவோ பல நம்மை வந்து சுற்றவும், தெய்வும் - கடவுள். "தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்" (கலி 103:76) என்புறிப்போல என்பது என்றது என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எனப் பொருள்தந்து நின்றது. 'வாய்மையெனப்படு வது' என்பதற்கு 'வாய்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எனப் பரிமேலழகரும் (குறன் 291 உரை), 'பேணினரெனப்படுதல்' என்பதற்குப் பேணினாரென்று நன்மக்கள் புகழ்ந்து கூறப்படுதல் ' என நச்சினார்க்கினிபரும் (களி 47 21 உரை) உரைத்தமை காண்க. தெய்வம் என்பதோர் சித்தம் கடவுள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதாகிய சித்தம் - கருத்து. உலகியலில் ஒரு பொருள் உண்டு என்னும் சித்தம் நிகழும் பேரிடர்களுக்கெல்லாம் தப்பித் தெய்வம் உண்டு என்பதொரு சித்தம் உண்டாதல் அரிதாகலின் 'தெய்வ முண்டென்பதோர் சித்த முண்டாகி" என்றார். உண்டாகி என்னும் செய்தெனெச்சம் கருதலும் என்னும் தன் வினை முதல் வினையொடு முடிந்தது. 7 என தனுகாண புவன போசுங்களைத் தந்து உயிர்களை நன் கரிலைக்கட் செலுத்தும் கடவுள் தன் அருட் செயலில் வெறுப்புச் சிறிதமின்மையின் முனிவிலாதது முனிவிலாததோர் பொருள்' எனக் கூறினார். வெறுப்பின்மை கூறப்படினும் விருப்பின்மையும் கொள்ளப்படும். அது பற்றிக் கடவுளை "வேண்டுதல் வேண்டாமையிலான்' என்றார் திருவள்ளு வரும். ஒரு சித்தம் ஒரு பொருள் என நிற்கப்பாலன செய்யுளாதலின் ஓர் சித்தம் ஓர் பொருள் எனத் திரிந்து நின்றன. பொருளது - பொருளாகிய அதனை.தெய்வம் உண்டென்பதோர் சித்த முண்டாகி அகளை ஆராய்வார்க்கு அதன்பொது வியல்பன்றிச் சிறப்பியல்பு இனிது விளங்காமையின் அம்முதற்பொருள் 'அது' என ஒரு குறிப்புப் பெயரளவாய் வைத்துச் சொல்லப்பட்டது. வேதத்துள்ளும் கடவுள் 'அது' 'அது' என வைத்துரைக்கப்படுதல் காண்க. இனி, அது என்பது பெயர்ப் பொருளை அசைத்து நின்ற அசைத்லை எனக் கொள்ளினுமமையும். ஆறு மாயாசத்திகள், கோடி மாயாசத்திகள் எனத் தனித்தனி இயைக்க. ஆறு மாயாசத்திகளாவன : உயிர்களின் உள்ளத்துள்ள உட்பகைகளாகிய விருப்பு, வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, பொருமை என்பன.
138 திருவாசக ஆராய்ச்சியுரை படும் . வரம்பு - எல்லை . புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம் ( பதிற் 33 : )ே என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . இப்பகுதியில் 11- 41 ) இயங்கியற் பொருள்களுள் யானை முதல் எறும்பி றாயவற்றை முதற்கட் கூறிப் பின்னர் மானிடப் பிறப்பை எடுத்துக் கொண்டு அப்பிறப்பில் உயிர் கருவுற்ற காலந் தொடங்கிப் பூமியிற் பிற வியை அடையும் வரை அடையும் துன்பங்களை முறைப்பட வகுத்து ஓதி அதன் பின்னர் ஆண்டுகள் தோறும் வளரும் வளர்ச்சியைக் கூறி அதன் பின்னர்க் காலையில் மலோபாதிக்கும் நண்பகலிற் கடும்பசிக்கும் நடுஇர வில் நித்திரை உபாதிக்கும் தப்பியமையைக் கூறிப் பின்னர் மாதர் நயனக் கொள்ளையிற் பிழைத்தமையைக் கூறிப் பொருளல்லாத உலவொழ்க்கையைப் பொருளாக எண்ணும் பித்தவுலகினரின் பல துறையாய எண்ணங்களுன் அவா அறக்கொடிதாகலின் அதனின்றும் தப்பியமை கூறிப் பின்னர் பல துறைப்பட்ட கல்வியின்றும் தப்பியமைகூறி . உலக வாழ்வுக்கு இன்றி யமையாது வேண்டப்படும் செல்வம் முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் ' ' ( திருக்கோவையார் ) என அடிகள் கூறியவாறு சிறப்புடைத்த யினும் அது ஈட்டுதல் முதவான பலவகைத் துன்பங்களைத் தருதலின் அதனின்று தப்பியமை கூறித் தொன்றுதொட்டு விடம்போல வருத்திவரும் நல்குரவுக்குத் தப்பியமை கூறியும் வந்த அடிகள் நிலையியற் பொருள்களுள் ஓரறிவுடைய புல்லினைக் கீழ் எல்லையாகவும் ஆறறிவுடைய மக்களை மேலெல்லையாகவும் அமைத்துக் கொண்டு அதனைத் தொகுத்துக் கூறுவார் ' புல்வரம்பாய பல்துறை பிழைத்தும் என்று அருளிச்செய்தார் . 42-58 . தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி - கடவுள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதாகிய ஒருபொருள் உண்டு என்னும் எண் ணம் உளதாகி . முனிவு இலாதது ஓர் பொருள் அது கருகலும்- வெறுப் பில்லாததாகிய ஒப்பற்ற பொருளாகிய அதனை எண்ணப் புகுந்த அளவில் ஆறு மாயாகோடி சத்திகள் - உயிர்களின் உள்ளத்துள்ள உட்பகைகளா கிய விருப்பு வெகுளி ஈயாமை மயக்கம் செருக்கு பொறாமை என்னும் ஆறாகிய மாயையின் மிகப்பலவான ஆற்றல்கள் . வேறு வேறு தம் மாயை கள் தொடங்கின - வேறுவேறாகத் தம் வஞ்சனைகளைச் செய்யத் தொடங் கின ; ஆப்தமானார் அயலவர் கூடி - உண்மையைக் கூறும் நண்பர்களும் பிறரும் ஒன்று சேர்ந்து நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர் - கடவுள் இல்லை என்று பொய் வழக்குப் பேசி அதனால் நாவும் தழும்பேறப் பெற்ற னர் ; சுற்றம் என்னும் தொல் பசு குழாங்கள் - உறவினர் என்று சொல் லப்படும் பழமையான பசுக்கூட்டங்கள் பற்றி அழைத்து பெருகவும் பதறினர் - நம்மைப் பிடித்து அழைத்து மிகவும் பதறினர் ; விரதமே பரம் ஆக வேதியரும் சரதம் ஆக சாத்திரம் காட்டினர் - விரதம் ஆற்று தலே விடு பேற்றினைத் தரும் மேலான சாத்திரமாகச் சொல்லி வேதம் உணர்ந்த பார்ப்பனரும் தமது கூற்றுக்கு உண்மையாம்படி நூல்களைக் சாட்டினர் ; சமய வாதிகள் தத்தம் மதங்களில் - சமயக் கணக்கர்கள் தங் 139 71E போற்றித் திருவகவல் கள் தங்கள் சமயங்களில் . அமைவதாக அரற்றி மலைந்தனர் - வீடு பேற் றினைத் தரும் நெறி அமைந்திருப்பதாக வாய்விட்டுக் கதறி மாறுபட்டுக் கூறுவாராயினர் ; மிண்டிய மாயவாதம் என்னும் சண்ட மாருதம் - நெருங் கிய மாயாவாதம் என்று சொல்லப்படும் சுழல் காற்றானது சுழித்து அடித்து ஆர்த்து - சுமுன்று வீசிப் பேராராவாரஞ் செய்யப்பெற்று உலோ காயதன் என்னும் ஒள் திறல் பாம்பின் என்று உலோகாயதன் சொல்லப்படும் ஒள்ளிய வலியினையுடைய பாம்பினது கலா பேதத்த கடு விடம் எய்தி- கலை வேறு பாடுகளையுடைய கொடிய நஞ்சு வந்து பொருந் தப்பெற்று அதில் பெருமாயைகள் எனை பல சூழவும் - அந்நிலையில் பெரிய வஞ்சனைகள் எவ்வளவோ பல நம்மை வந்து சுற்றவும் தெய்வும் - கடவுள் . தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும் ( கலி 103 : 76 ) என்புறிப்போல என்பது என்றது என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எனப் பொருள்தந்து நின்றது . ' வாய்மையெனப்படு வது ' என்பதற்கு ' வாய்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எனப் பரிமேலழகரும் ( குறன் 291 உரை ) ' பேணினரெனப்படுதல் ' என்பதற்குப் பேணினாரென்று நன்மக்கள் புகழ்ந்து கூறப்படுதல் ' என நச்சினார்க்கினிபரும் ( களி 47 21 உரை ) உரைத்தமை காண்க . தெய்வம் என்பதோர் சித்தம் கடவுள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதாகிய சித்தம் - கருத்து . உலகியலில் ஒரு பொருள் உண்டு என்னும் சித்தம் நிகழும் பேரிடர்களுக்கெல்லாம் தப்பித் தெய்வம் உண்டு என்பதொரு சித்தம் உண்டாதல் அரிதாகலின் ' தெய்வ முண்டென்பதோர் சித்த முண்டாகி என்றார் . உண்டாகி என்னும் செய்தெனெச்சம் கருதலும் என்னும் தன் வினை முதல் வினையொடு முடிந்தது . 7 என தனுகாண புவன போசுங்களைத் தந்து உயிர்களை நன் கரிலைக்கட் செலுத்தும் கடவுள் தன் அருட் செயலில் வெறுப்புச் சிறிதமின்மையின் முனிவிலாதது முனிவிலாததோர் பொருள் ' எனக் கூறினார் . வெறுப்பின்மை கூறப்படினும் விருப்பின்மையும் கொள்ளப்படும் . அது பற்றிக் கடவுளை வேண்டுதல் வேண்டாமையிலான் ' என்றார் திருவள்ளு வரும் . ஒரு சித்தம் ஒரு பொருள் என நிற்கப்பாலன செய்யுளாதலின் ஓர் சித்தம் ஓர் பொருள் எனத் திரிந்து நின்றன . பொருளது - பொருளாகிய அதனை.தெய்வம் உண்டென்பதோர் சித்த முண்டாகி அகளை ஆராய்வார்க்கு அதன்பொது வியல்பன்றிச் சிறப்பியல்பு இனிது விளங்காமையின் அம்முதற்பொருள் ' அது ' என ஒரு குறிப்புப் பெயரளவாய் வைத்துச் சொல்லப்பட்டது . வேதத்துள்ளும் கடவுள் ' அது ' ' அது ' என வைத்துரைக்கப்படுதல் காண்க . இனி அது என்பது பெயர்ப் பொருளை அசைத்து நின்ற அசைத்லை எனக் கொள்ளினுமமையும் . ஆறு மாயாசத்திகள் கோடி மாயாசத்திகள் எனத் தனித்தனி இயைக்க . ஆறு மாயாசத்திகளாவன : உயிர்களின் உள்ளத்துள்ள உட்பகைகளாகிய விருப்பு வெகுளி இவறன்மை மயக்கம் செருக்கு பொருமை என்பன .