திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை உலோகாயதன் -உலோகாயதம். மகர னகரப் போலி. "அகன மர்ந்து செய்யா ளுறையும் " (குறள் 84) என்புழிப் போல. உலோகாயதம் மாதரே தெய்வம்; போகமே மோட்சம் எனக் கூறுவது. உலோகாயத் சமயக்கொள்கை பொதுவறிவுடையாரைப் பெரிதும் மயங்கச் செய்து கெடுத்து விடுமாதலின் 'ஒண்டிறற் பாம்பின் கலாபேதத்த கடுவிடம் எய்தி என்றார். உலோகாயதம் மிக்க வலிமை படைத்த பாம்பாகவும் அதனது பல்வேறு வகைப்பட்ட கலைகள் பாம்பின் விடமாகவும் உருவ ரஞ் செய்யப்பட்டன. 142 59-72. தப்பாமே தாம் பிடித்தது சலியா - முற்கூறப்பட்ட ஏதுக்க ளால் நெறிநின்று தவறாமல் தாம் பிடித்த கடவுட் கொள்கையினின்றும் சலிப்படைந்து விட்டு விடாமல், தழலது கண்ட மெழுகது போல- நெருப்பை அணுகின மெழுகினைப் போல, உளம் உருகி தொழுது உள்ளம் உருகி இறைவனை வணங்கி, அழுது உடல் கம்பித்து - அழுது உடல் நடுக்கம் அடைந்து, ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்- பின் னர் ஆனந்தக் கூத்து இயற்றியும் ஓலமிட்டும் இசைபாடல்களைப் பாடி வழிபட்டும். கொடிறும் பேதையும் கொண்டது வீடாது எனும் படியே ஆகி - பற்றுக்குறடும் அறிவிலியும் தாம்பிடித்தவற்றை நெகிழவிடா என்னும் பழமொழி போலாகத் தாம்பிடித்த கடவுட்கொள்கையை விடா மல், நல் இடை அறா அன்பின் - நன்றாகிய இடையே அற்றுப் போதலில் லாத அன்பினால், பசு மரத்து ஆணி அறைந்தால் போல பச்சை மரத் திலே ஆணியை அடித்தாற்போல நன்றாகப் பதியப்பெற்று, கசிவது பெருகி - மனநெகிழ்ச்சி மிகுந்து, கடல் என மறுகி கடன் போலச் சுழன்று, அகம் குழைந்து - மனம் குழையப்பெற்று: அனுகுலமாய் மெய் விதிர்த்து - அதற்கு அனுகூலமாய் உடம்பு நடுங்கப்பெற்று, சகம் பேய் என்று தம்மை சிரிப்பு - உலகினர் இவர் பேயாற் பிடிக்கப்பட்டவர் என்று தர்மைப் பரிகசிக்க, நாணது ஒழிந்து -அதற்கு நாணத்தை விட்டு, நாட வர் பழித்து உரை கோணுதல் இன்றி பூணது ஆக-நாட்டிலுள்ளார். தம்மைப் பழித்துக் கூறும் வசைமொழிகள் தாம் வெறுப்பின்றி ஏற்றுக் கொள்ளுதலால் அணிகலம் போல அமைய, சதுர் இழந்து - யாம் வல்லு நம் என்னும் வலி அழிந்து, அறி மால் கொண்டு - அதனால் உண்மை அறிவினைப்பெறும் விருப்பத்தினைக் கொண்டு. பர மா அதிசயம் ஆக தாம் அடைதற்குரிய வீடுபேற்று இன்பமே மேலான பெரிய வியப்புக்கு இடமாக தப்பாமே என்றது மாயாசத்திகள் மாயைகள் தொடங்கினமையும். ஆத்தமானாரும் அயலவர்களும் நாத்திகம் பேசினமையும் சுற்றத்தார்கள் பற்றியழைத்துப் பதறினமையும் வேதியர் சாத்திரங் காட்டினமையும் சமயவாதிகள் அரற்றி மலைந்தமையும் மயாவாதிகள் ஆரவாரிக்கப்பட்ட மையும் உலோகாயதனது கடுவிடம் எய்கப்பெற்று அந்நிலையில் பெரிய வஞ்சனைகள் குழைப்பெற்றமையுமாகிய இவ்வேதுக்களால் நெறியினின்றும் போற்றித் திருவகவல் தவறாமல் என்றவாறு. தப்புதல் - தவறுதல் "தப்பாமே தாளடைந் தார்'' (திருவம்மானை 11) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க. 143 சலியா - சலீயாமல். என்றது சலிப்படைந்து விட்டுவிடாமல் என்ற சலியா - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்,'காக்கை கரவா கரைந்துண்ணும்'' (குறள் 537) என்புழிப்போல. வாது " தழலது மெழுகது என்பவற்றில் அது பகுதிப்பொருள் விகுதி தழ லது கண்ட மெழுகதுபோல உருகி என இயையும். அழல் சேர்ந்த மெழுகே யன்னார் '' (ஈத 88),தீசேர் மெழுகொப்பாய்" (திருவெம்?) அழலுறுமெழுமாம் என்பராய் நினைவார்" (செத்திலாப் 4) "அனல் சேர் மெழுகொப்ப" (ஆரைப்8) என பிருண்டு வருவனவும் ஈண்டறி யற்பாலன, கண்ட என்பது அணுகுதற் பொருளில் வந்தது. கம்பித்தல். நடுங்குதல்." மெய்ம் முழுதுங் கம்பித் தழுமடியாரிடை " (நீத் 27) என் புறியும் இப்பொருட்டாதல் காண்க. கொடிறு - குறடு கடைவாய்ப் புறமுங் கருவிப் பற்றுங், குருமகிழ் பூசமுங் கொடிறென லாகும்" என்பது பிங்கலந்தை, (10:402) பேதை- அறிவிவி. கொடிறும் பேதையும் கொண்டது விடாது என்பது ஒருமை பன்மை மயக்கம் அன்றி. கொடிறும் விடாது. பேதையும் விடாது எனத் தனித்தனி இயைப்பினுமமையும். பேதையைக் கொடிறொடு சேர்த் துக் கொண்டது விடாது' என அஃறிணையாற் கூறியது இழிவுபற்றி, கொடிறும் பேதையும் தாம் பற்றிய பொருளை விடாத தன்மைபோல மெய்யன்பரும் கடவுட் கொள்கையை விடாமைபற்றிக் கொடிறும் பேதை யுங் கொண்டது விடாதெனும் படியேயாகி' என்றார். படி - தன்மை. கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படியவாய்'' (சீவக 187) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க. " அன்பிற் (64) பெருகி (H6 ) என இயையும். பசுமரத்தாணி அறைந் தாற் போல நன்றாகப் பதியப்பெற்று எனச் சில சொற்கள் வருவித் துரைக்க பசுமரத்தாணி அறைந்தாற் போலக் கசிவது பெருகி என்றது பசுமரத்தில் ஆணி அறைந்தால் எப்படி எளிதில் நன்றாக அழுந்தி விடுமேல் அதுபோலத் தைலதாரை போன்ற இடையீடில்லா அன்பினால் நெகிழ்ச்சி மிகுந்து என்றவாறு. மரத்திற்குப் பசு மரத்தினையும், இடை யரு அன்பினுக்கு ஆணியினையும் அன்பினால் நெகிழ்ச்சி மிகுதலுக்கு அது நன்றாகப் பதிதலையும் உவமையாகக் கொள்க. மன் கசிவு - நெகிழ்ச்சிப் பெருக்கு. கடல் அலைபோல மீட்டும் மீட்டும் உள தாகலின் 'கடலென மறுகி' என்றார் கடல் அதன் அலைக்கு ஆகுபெயர். அகங்குழைதல் - உள்ளநெசிந்தல். அனுகுலம் - அனுகூலம் என்னும் வட சொற்றிரிபு. அகங்குழைதலின் மெய்ப்பாடு மெய்விதிர்த்தலாதலின் அனு கொடிறும் பேதையும் போலத் தாங்கொண்டதே பற்றி" கிவஞான பாடியம் அவையடக்கம்.
திருவாசக ஆராய்ச்சியுரை உலோகாயதன் -உலோகாயதம் . மகர னகரப் போலி . அகன மர்ந்து செய்யா ளுறையும் ( குறள் 84 ) என்புழிப் போல . உலோகாயதம் மாதரே தெய்வம் ; போகமே மோட்சம் எனக் கூறுவது . உலோகாயத் சமயக்கொள்கை பொதுவறிவுடையாரைப் பெரிதும் மயங்கச் செய்து கெடுத்து விடுமாதலின் ' ஒண்டிறற் பாம்பின் கலாபேதத்த கடுவிடம் எய்தி என்றார் . உலோகாயதம் மிக்க வலிமை படைத்த பாம்பாகவும் அதனது பல்வேறு வகைப்பட்ட கலைகள் பாம்பின் விடமாகவும் உருவ ரஞ் செய்யப்பட்டன . 142 59-72 . தப்பாமே தாம் பிடித்தது சலியா - முற்கூறப்பட்ட ஏதுக்க ளால் நெறிநின்று தவறாமல் தாம் பிடித்த கடவுட் கொள்கையினின்றும் சலிப்படைந்து விட்டு விடாமல் தழலது கண்ட மெழுகது போல நெருப்பை அணுகின மெழுகினைப் போல உளம் உருகி தொழுது உள்ளம் உருகி இறைவனை வணங்கி அழுது உடல் கம்பித்து - அழுது உடல் நடுக்கம் அடைந்து ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்- பின் னர் ஆனந்தக் கூத்து இயற்றியும் ஓலமிட்டும் இசைபாடல்களைப் பாடி வழிபட்டும் . கொடிறும் பேதையும் கொண்டது வீடாது எனும் படியே ஆகி - பற்றுக்குறடும் அறிவிலியும் தாம்பிடித்தவற்றை நெகிழவிடா என்னும் பழமொழி போலாகத் தாம்பிடித்த கடவுட்கொள்கையை விடா மல் நல் இடை அறா அன்பின் - நன்றாகிய இடையே அற்றுப் போதலில் லாத அன்பினால் பசு மரத்து ஆணி அறைந்தால் போல பச்சை மரத் திலே ஆணியை அடித்தாற்போல நன்றாகப் பதியப்பெற்று கசிவது பெருகி - மனநெகிழ்ச்சி மிகுந்து கடல் என மறுகி கடன் போலச் சுழன்று அகம் குழைந்து - மனம் குழையப்பெற்று : அனுகுலமாய் மெய் விதிர்த்து - அதற்கு அனுகூலமாய் உடம்பு நடுங்கப்பெற்று சகம் பேய் என்று தம்மை சிரிப்பு - உலகினர் இவர் பேயாற் பிடிக்கப்பட்டவர் என்று தர்மைப் பரிகசிக்க நாணது ஒழிந்து -அதற்கு நாணத்தை விட்டு நாட வர் பழித்து உரை கோணுதல் இன்றி பூணது ஆக - நாட்டிலுள்ளார் . தம்மைப் பழித்துக் கூறும் வசைமொழிகள் தாம் வெறுப்பின்றி ஏற்றுக் கொள்ளுதலால் அணிகலம் போல அமைய சதுர் இழந்து - யாம் வல்லு நம் என்னும் வலி அழிந்து அறி மால் கொண்டு - அதனால் உண்மை அறிவினைப்பெறும் விருப்பத்தினைக் கொண்டு . பர மா அதிசயம் ஆக தாம் அடைதற்குரிய வீடுபேற்று இன்பமே மேலான பெரிய வியப்புக்கு இடமாக தப்பாமே என்றது மாயாசத்திகள் மாயைகள் தொடங்கினமையும் . ஆத்தமானாரும் அயலவர்களும் நாத்திகம் பேசினமையும் சுற்றத்தார்கள் பற்றியழைத்துப் பதறினமையும் வேதியர் சாத்திரங் காட்டினமையும் சமயவாதிகள் அரற்றி மலைந்தமையும் மயாவாதிகள் ஆரவாரிக்கப்பட்ட மையும் உலோகாயதனது கடுவிடம் எய்கப்பெற்று அந்நிலையில் பெரிய வஞ்சனைகள் குழைப்பெற்றமையுமாகிய இவ்வேதுக்களால் நெறியினின்றும் போற்றித் திருவகவல் தவறாமல் என்றவாறு . தப்புதல் - தவறுதல் தப்பாமே தாளடைந் தார் ' ' ( திருவம்மானை 11 ) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க . 143 சலியா - சலீயாமல் . என்றது சலிப்படைந்து விட்டுவிடாமல் என்ற சலியா - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் ' காக்கை கரவா கரைந்துண்ணும் ' ' ( குறள் 537 ) என்புழிப்போல . வாது தழலது மெழுகது என்பவற்றில் அது பகுதிப்பொருள் விகுதி தழ லது கண்ட மெழுகதுபோல உருகி என இயையும் . அழல் சேர்ந்த மெழுகே யன்னார் ' ' ( ஈத 88 ) தீசேர் மெழுகொப்பாய் ( திருவெம் ? ) அழலுறுமெழுமாம் என்பராய் நினைவார் ( செத்திலாப் 4 ) அனல் சேர் மெழுகொப்ப ( ஆரைப் 8 ) என பிருண்டு வருவனவும் ஈண்டறி யற்பாலன கண்ட என்பது அணுகுதற் பொருளில் வந்தது . கம்பித்தல் . நடுங்குதல் . மெய்ம் முழுதுங் கம்பித் தழுமடியாரிடை ( நீத் 27 ) என் புறியும் இப்பொருட்டாதல் காண்க . கொடிறு - குறடு கடைவாய்ப் புறமுங் கருவிப் பற்றுங் குருமகிழ் பூசமுங் கொடிறென லாகும் என்பது பிங்கலந்தை ( 10 : 402 ) பேதை அறிவிவி . கொடிறும் பேதையும் கொண்டது விடாது என்பது ஒருமை பன்மை மயக்கம் அன்றி . கொடிறும் விடாது . பேதையும் விடாது எனத் தனித்தனி இயைப்பினுமமையும் . பேதையைக் கொடிறொடு சேர்த் துக் கொண்டது விடாது ' என அஃறிணையாற் கூறியது இழிவுபற்றி கொடிறும் பேதையும் தாம் பற்றிய பொருளை விடாத தன்மைபோல மெய்யன்பரும் கடவுட் கொள்கையை விடாமைபற்றிக் கொடிறும் பேதை யுங் கொண்டது விடாதெனும் படியேயாகி ' என்றார் . படி - தன்மை . கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படியவாய் ' ' ( சீவக 187 ) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க . அன்பிற் ( 64 ) பெருகி ( H6 ) என இயையும் . பசுமரத்தாணி அறைந் தாற் போல நன்றாகப் பதியப்பெற்று எனச் சில சொற்கள் வருவித் துரைக்க பசுமரத்தாணி அறைந்தாற் போலக் கசிவது பெருகி என்றது பசுமரத்தில் ஆணி அறைந்தால் எப்படி எளிதில் நன்றாக அழுந்தி விடுமேல் அதுபோலத் தைலதாரை போன்ற இடையீடில்லா அன்பினால் நெகிழ்ச்சி மிகுந்து என்றவாறு . மரத்திற்குப் பசு மரத்தினையும் இடை யரு அன்பினுக்கு ஆணியினையும் அன்பினால் நெகிழ்ச்சி மிகுதலுக்கு அது நன்றாகப் பதிதலையும் உவமையாகக் கொள்க . மன் கசிவு - நெகிழ்ச்சிப் பெருக்கு . கடல் அலைபோல மீட்டும் மீட்டும் உள தாகலின் ' கடலென மறுகி ' என்றார் கடல் அதன் அலைக்கு ஆகுபெயர் . அகங்குழைதல் - உள்ளநெசிந்தல் . அனுகுலம் - அனுகூலம் என்னும் வட சொற்றிரிபு . அகங்குழைதலின் மெய்ப்பாடு மெய்விதிர்த்தலாதலின் அனு கொடிறும் பேதையும் போலத் தாங்கொண்டதே பற்றி கிவஞான பாடியம் அவையடக்கம் .