திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

148 திருவாசக ஆராய்ச்சியுரை யின் பேறு போன்றதாகும். கைதருதல் - உதவி செய்தல். கடவுள் என் றார் இறைவன் எப்பொருட்டன்மையையுங் கடந்து நிற்றலின். ஆ. ஆடகம் - பொன்."தடாதகைப் பிராட்டியாரைத் திருமணஞ்செய்து இறைவன் சோமசுந்தரபாண்டியனாய் முடிகவித்து மதுரைமாநகரிலிருந்து அரசு செலுத்தினராதலின் 'மதுரைக் கரசே' என்றார். MONAS காண்க. - கூடல் - மதுரை. மதுரைமாநகர் நான்மாடக்கூடலான வரலாறு திரு விளையாடற்புராணத்துட் இலங்குதல் விளங்குதல். பொருட்டாதல், "இரவின் மாட்டிய இலங்கு சுடர் " (பெரும்பாண் 349) என்புழியுங் காண்க. குரு -நிறம். ''குருவுங் கெழுவு நிறனா கும்மே" என்பது தொல்காப்பியம். (உரி 5) குருமணி என்றது ஈண்டு மதுரைத் திருகோயிலில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதரை. இங்ஙனமன்றி, இறைவன் அடிகளை ஆட்கொண்டபோது இன்ன இன்ன தலங்களை வணங் குதி எனப் பணித்து அவ்வத்தவங்களிலெல்லாம் இக்குருவடிவையே காட்டு தும் காணுதி என அருளிச் செய்தமையின் குருமணி என்பதற்கு ஆசாரிய மணி எனப் பொருளுரைத்தலும் பொருந்தும். வைத்தரும் பதிக டம்மி லிவை யிவை வணங்கி லாங்கே, யித்திகழ் வடிவே காண்டி காட்டுது மென வியம்பி எனத் திருவாதவூரடிகள் புராணத்து (மண்சுமந்த 98) வருதலும் காண்க. திருவுத்தரகோசமங்கையிற் சென்றபோது அங்கே இறைவரது குருவடிவங் காணப்பெறாமையால் வருந்திய அடிகள் நீத்தல் விண்ணப்பம் அருளிச் செய்தமையும் அதன் பின்னர்க் குருவடிவங் காணப் பெற்றமையும், 41 "சடையவர் கோயி லெய்தித் தம்மைவந் தடிமை கொண்ட வடிவது காணாராகி மயங்கிவெய் துயிர்த்து வீழ்ந்து விடுதிகொ லென்னை யென்று நீத்தல் விண்ணப்ப மென்னுந் தொடைகெழு பாட லோதக் காட்டினர் தொல்லை மே திருவம்பலத் 27 எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதல் ஈண்டு சிந்திக்கத்தக்கது. தென்தில்லை அழகியதில்லை. இனி, தென்மன்று எனக் கூட்டித் திருவாலங் காட்டிற்குத் தெற்கின் கணுள்ள மன்று எனினுமாம். அமுத ஆடி ஆடுபவன் எனப் பெயராய் நின்றது. அரு அமுது, ஆரமுது என்றாயின. ''ஆரிருள் '' (கலி 147: 30) என்புழிப் போல. அமுதம் தன்னை யுண்டாரை நரை திரை நோய் மூப்புச் சாக்காடுகளினின்றும் நீக்கி என்றும் ஒரே தன்மைத்தாய் இருக்கச் செய்தல்போல இறைவன் அரு ளும், அடிகளுக்கு எல்லா நலங்களையும் ஒருங்கு கொடுத்தலின் மானாய்' என்றார். எனக்கமுதனே ' (சத 98) அமுதமுமாய் நின்றான் (திருவெம் 18) "அமுதமுமாய்" (அம்மானை 18) "அமுதானானை" (கண்ட 5) ' அடியார்க் கமுதன்" (வார்த் 10) என அடிகள் பிறாண்டு அருளி யுமையுங் காண்க. அற்றவர்க் காரமுதானாய் போற்றி" என்றார் அப்பு * போற்றித் திருவகவல் 149 ரடிகளும்.(தே.நாவு 246:2). இனி, உபநிடதங்களில் இறைவனை 'அமிர் தம்' எனக் கூறுதல் பற்றி 'அமிர்தமானாய் என்றார் எனினுமாம். 94-99.மூவா நான்மறை முதல்வா போற்றி - எக்காலத்தும் மூத் தல் இல்லாத நான்கு வேதங்கட்கும் முதல்வனே நினக்கு வணக்கம்; சே ஆர் வெல்கொடி சிவனே போற்றி - ஆனேற்றின் வடிவு எழுதப்பட்ட வெல்லும் கொடியினையுடைய சிவபெருமானே நினக்கு வணக்கம்; மின் ஆர் உருவ விகிர்தா போற்றி - ஒளிபொருந்திய உருவத்தினையுடைய வி தனே வினக்கு வணக்கம்: கல் நார் உரித்த கனியே போற்றி - கல்லின் கண் நார் உரித்த பழச்சுவையை ஒப்பவனே நினக்கு வணக்கம்; கனக குன்றே காவாய் போற்றி - பொன்மலை போன் றவனே காப்பாற்றுவாயாக நினக்கு வணக்கம்: ஆ ஆ எனக்கு அருளாய் போற்றி - ஆ ஆ என்று வியக் கத்தக்க பேற்றினை எனக்கு அருள்புரிவாயாக நினக்கு வணக்கம். மூவாமுதல்வா எனவும், நான்மறை முதல்வா எனவும் தனித்தனி "மூவா முதலாய் நின்ற முதல்வா " (புணர்ச்சிப் 10) 'மூவாத (ஏசற் 8) என வருவன காண்க. நான்மறை முதல்வா இயையும். முதவானே என்றார் P நான்கு வேதங்களை அருளியமையானும் அவற்றால் போற்றப் படுதலானும், "வேதமெய்ந்நூல் சொன்னவனே' (நீத் 43) எனவும் வேதங்கள், ஐயாவென வோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே" (சிவ புரா 3d-5) எனவும் அடிகள் அருளியமையுங் காண்க. Sch சே - ஆனேறு: இடபம். இறைவனது கொடியில் ஆனேறு எழுதப் பட்டமையின் "சேவார் கொடிச் சிவனே" என்றார், 'சேவக மேந்திய வெல்கொடியான் '' (பொற் 18) " ஏற்றுயர் கொடியுடையாய்" (பள்ளி1) எனவும், "வருமிடபக் கொடியுடையான்' செங்கண் ஏறணி வெல் கொடியான்' 'சேவுயருந் திண்கொடியான் ' (தே. ஞான 12:10,105: 7; 120:1) "சேவார்ந்த வெல்கொடியாய்'' (நாவு 246 : 9) 'சேவேந் திய கொடியான்" (சுந் 82: 8) எனவும் வருவன காண்க. எக்காலத்தும் தோல்வியின்மையின் வெல்கொடி என்று கூறினார். இடபக்கொடியை விதந்து கூறினாராயினும், அரவு மதி கொன்றை வெண்ணீறு மூவிலைவேல் முதலியன கொண்டிருத்தலுங் கொள்க. "கொடிமே லிடபமுங் கோவணக் கீளு மோர் கொக்கிறகும் அடிமேற் கழலும் அகலத்தில் மீறும் ஐவாயரவு முடிமேன் மதியும் முருகலர் கொன்றையு மூவிலைய வடிவேல் வடிவு மென்கண்ணு ளெப்போதும் வருகின் றன வே" (20) எனப் பொன்வண்ணத்தந்தாதியில் வருதலுங் காண்க. ** இறைவன் உருவு ஒளிமிகுந்ததாதலின் 'மின்னார் உருவ' என்றார். "மின்னேரனைய பூங்கழல்கள்" (ஆனந்த 1) என அடிகள் பிருண்டு அருளியமையுங் காண்க. விக்ருத என்னும் வடமொழியினின்றும் பிறந்த விகிர்தன் என்பது விகிர்தா என விளியேற்றது. விகிர்தம் - வேறுபாடு. 2215
148 திருவாசக ஆராய்ச்சியுரை யின் பேறு போன்றதாகும் . கைதருதல் - உதவி செய்தல் . கடவுள் என் றார் இறைவன் எப்பொருட்டன்மையையுங் கடந்து நிற்றலின் . . ஆடகம் - பொன் . தடாதகைப் பிராட்டியாரைத் திருமணஞ்செய்து இறைவன் சோமசுந்தரபாண்டியனாய் முடிகவித்து மதுரைமாநகரிலிருந்து அரசு செலுத்தினராதலின் ' மதுரைக் கரசே ' என்றார் . MONAS காண்க . - கூடல் - மதுரை . மதுரைமாநகர் நான்மாடக்கூடலான வரலாறு திரு விளையாடற்புராணத்துட் இலங்குதல் விளங்குதல் . பொருட்டாதல் இரவின் மாட்டிய இலங்கு சுடர் ( பெரும்பாண் 349 ) என்புழியுங் காண்க . குரு -நிறம் . ' ' குருவுங் கெழுவு நிறனா கும்மே என்பது தொல்காப்பியம் . ( உரி 5 ) குருமணி என்றது ஈண்டு மதுரைத் திருகோயிலில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதரை . இங்ஙனமன்றி இறைவன் அடிகளை ஆட்கொண்டபோது இன்ன இன்ன தலங்களை வணங் குதி எனப் பணித்து அவ்வத்தவங்களிலெல்லாம் இக்குருவடிவையே காட்டு தும் காணுதி என அருளிச் செய்தமையின் குருமணி என்பதற்கு ஆசாரிய மணி எனப் பொருளுரைத்தலும் பொருந்தும் . வைத்தரும் பதிக டம்மி லிவை யிவை வணங்கி லாங்கே யித்திகழ் வடிவே காண்டி காட்டுது மென வியம்பி எனத் திருவாதவூரடிகள் புராணத்து ( மண்சுமந்த 98 ) வருதலும் காண்க . திருவுத்தரகோசமங்கையிற் சென்றபோது அங்கே இறைவரது குருவடிவங் காணப்பெறாமையால் வருந்திய அடிகள் நீத்தல் விண்ணப்பம் அருளிச் செய்தமையும் அதன் பின்னர்க் குருவடிவங் காணப் பெற்றமையும் 41 சடையவர் கோயி லெய்தித் தம்மைவந் தடிமை கொண்ட வடிவது காணாராகி மயங்கிவெய் துயிர்த்து வீழ்ந்து விடுதிகொ லென்னை யென்று நீத்தல் விண்ணப்ப மென்னுந் தொடைகெழு பாட லோதக் காட்டினர் தொல்லை மே திருவம்பலத் 27 எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதல் ஈண்டு சிந்திக்கத்தக்கது . தென்தில்லை அழகியதில்லை . இனி தென்மன்று எனக் கூட்டித் திருவாலங் காட்டிற்குத் தெற்கின் கணுள்ள மன்று எனினுமாம் . அமுத ஆடி ஆடுபவன் எனப் பெயராய் நின்றது . அரு அமுது ஆரமுது என்றாயின . ' ' ஆரிருள் ' ' ( கலி 147 : 30 ) என்புழிப் போல . அமுதம் தன்னை யுண்டாரை நரை திரை நோய் மூப்புச் சாக்காடுகளினின்றும் நீக்கி என்றும் ஒரே தன்மைத்தாய் இருக்கச் செய்தல்போல இறைவன் அரு ளும் அடிகளுக்கு எல்லா நலங்களையும் ஒருங்கு கொடுத்தலின் மானாய் ' என்றார் . எனக்கமுதனே ' ( சத 98 ) அமுதமுமாய் நின்றான் ( திருவெம் 18 ) அமுதமுமாய் ( அம்மானை 18 ) அமுதானானை ( கண்ட 5 ) ' அடியார்க் கமுதன் ( வார்த் 10 ) என அடிகள் பிறாண்டு அருளி யுமையுங் காண்க . அற்றவர்க் காரமுதானாய் போற்றி என்றார் அப்பு * போற்றித் திருவகவல் 149 ரடிகளும் . ( தே.நாவு 246 : 2 ) . இனி உபநிடதங்களில் இறைவனை ' அமிர் தம் ' எனக் கூறுதல் பற்றி ' அமிர்தமானாய் என்றார் எனினுமாம் . 94-99.மூவா நான்மறை முதல்வா போற்றி - எக்காலத்தும் மூத் தல் இல்லாத நான்கு வேதங்கட்கும் முதல்வனே நினக்கு வணக்கம் ; சே ஆர் வெல்கொடி சிவனே போற்றி - ஆனேற்றின் வடிவு எழுதப்பட்ட வெல்லும் கொடியினையுடைய சிவபெருமானே நினக்கு வணக்கம் ; மின் ஆர் உருவ விகிர்தா போற்றி - ஒளிபொருந்திய உருவத்தினையுடைய வி தனே வினக்கு வணக்கம் : கல் நார் உரித்த கனியே போற்றி - கல்லின் கண் நார் உரித்த பழச்சுவையை ஒப்பவனே நினக்கு வணக்கம் ; கனக குன்றே காவாய் போற்றி - பொன்மலை போன் றவனே காப்பாற்றுவாயாக நினக்கு வணக்கம் : எனக்கு அருளாய் போற்றி - என்று வியக் கத்தக்க பேற்றினை எனக்கு அருள்புரிவாயாக நினக்கு வணக்கம் . மூவாமுதல்வா எனவும் நான்மறை முதல்வா எனவும் தனித்தனி மூவா முதலாய் நின்ற முதல்வா ( புணர்ச்சிப் 10 ) ' மூவாத ( ஏசற் 8 ) என வருவன காண்க . நான்மறை முதல்வா இயையும் . முதவானே என்றார் P நான்கு வேதங்களை அருளியமையானும் அவற்றால் போற்றப் படுதலானும் வேதமெய்ந்நூல் சொன்னவனே ' ( நீத் 43 ) எனவும் வேதங்கள் ஐயாவென வோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே ( சிவ புரா 3d - 5 ) எனவும் அடிகள் அருளியமையுங் காண்க . Sch சே - ஆனேறு : இடபம் . இறைவனது கொடியில் ஆனேறு எழுதப் பட்டமையின் சேவார் கொடிச் சிவனே என்றார் ' சேவக மேந்திய வெல்கொடியான் ' ' ( பொற் 18 ) ஏற்றுயர் கொடியுடையாய் ( பள்ளி 1 ) எனவும் வருமிடபக் கொடியுடையான் ' செங்கண் ஏறணி வெல் கொடியான் ' ' சேவுயருந் திண்கொடியான் ' ( தே . ஞான 12 : 10 : 7 ; 120 : 1 ) சேவார்ந்த வெல்கொடியாய் ' ' ( நாவு 246 : 9 ) ' சேவேந் திய கொடியான் ( சுந் 82 : 8 ) எனவும் வருவன காண்க . எக்காலத்தும் தோல்வியின்மையின் வெல்கொடி என்று கூறினார் . இடபக்கொடியை விதந்து கூறினாராயினும் அரவு மதி கொன்றை வெண்ணீறு மூவிலைவேல் முதலியன கொண்டிருத்தலுங் கொள்க . கொடிமே லிடபமுங் கோவணக் கீளு மோர் கொக்கிறகும் அடிமேற் கழலும் அகலத்தில் மீறும் ஐவாயரவு முடிமேன் மதியும் முருகலர் கொன்றையு மூவிலைய வடிவேல் வடிவு மென்கண்ணு ளெப்போதும் வருகின் றன வே ( 20 ) எனப் பொன்வண்ணத்தந்தாதியில் வருதலுங் காண்க . ** இறைவன் உருவு ஒளிமிகுந்ததாதலின் ' மின்னார் உருவ ' என்றார் . மின்னேரனைய பூங்கழல்கள் ( ஆனந்த 1 ) என அடிகள் பிருண்டு அருளியமையுங் காண்க . விக்ருத என்னும் வடமொழியினின்றும் பிறந்த விகிர்தன் என்பது விகிர்தா என விளியேற்றது . விகிர்தம் - வேறுபாடு . 2215