திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

உ சித்தாந்த கலைச் செல்வரும் தருமபுர ஆதீனப் புலவருமாகிய உயர்திரு. சு. வச்சிரவேலு முதலியார் B. A., L. T. எழுதியது திருவருட் செல்வர் அருளம்பலவனார் இயற்றியுள்ள திருவாசக ஆராய்ச்சி உரை முன்பகுதியை ஓரளவு ஆழ்ந்து பல இடங்களில் படித்துப் பார்த்தேன். அஃது உரையாசிரியருடைய சைவசித் தாந்த நுட்ப உணர்வையும் திருமுறைகள், சங்க இலக்கியங்கள் என்பவற்றில் பயின்றுள்ள பயிற்சியையும் புலப்படுத்துகின்றது. உரைக்கப்படும் பாட்டில் வரும் சொற்பொருள் அமைதிகளுக்கு ஒத்த அமைப்புள்ள பகுதிகளைத் திருவாசகத்தினின்றும் திருக்கோவை யாரினின்றும் தேவாரம் முதலிய பிற திருமுறைகளிலிருந்தும் பற் பலவற்றை ஆங்காங்கு ஒருங்கே திரட்டிக் காட்டுதல் உரையைக் கற்போர்க்கு நல்விருந்தாக அமைகிறது. நூல் ஆசிரியருடைய அது பவத்தையும் திருக்குறிப்பையும் ஆங்காங்கு இனிது எடுத்துக்காட்டு வதாக உள்ளது. சிற்சில இடங்களில் அச்சுப் பிழைகள் இருந்திருப் பினும் உரையினுடைய அருமை பெருமைகள் அதனால் பாதிக்கப்பட மாட்டா என்பது துணிபு. திருவாசகத்தின் உரைகளாகப் பல வெளி வந்திருப்பினும் இவ்வாராய்ச்சியுரை தனக்கே உரியமுறையில் தன் னைக் கற்போர்க்குத் தனிப்பட்ட உணர்வு நலனைப் பயக்கும் என்ப தில் ஐயமில்லை. தமிழகச்சேலம் அம்மாப்பேட்டை, புலவர் சு.கு.அருணாசலனார் M. A., B.O.L. பாடிய வாழ்த்து அரிய திருவா சகவுரைக்கா வலைந்த வூர்க ளெத்தனையோ உரிய பொருளை விளக்கவென வழந்த பாடு மெத்தனையோ தெரியப் பதிற்றுப் பத்து முதலாத் தெள்ளுரை வரைந்தன எத்தனையோ பெரிய அருளம் பலவக்குயின் பெரும்புகழ் பேசுவார் எத்தனையோ உ "உரை நெறியில் ஓர் ஒளி விளக்கு" தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் செஞ்சொற் கொண்டல் வித்துவான் சொ. சிங்காரவேலன் M. A., Dip. Ling. அவர்கள் எழுதியது 'ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவதே' உயர் ஞான நூல் களின் குறிக்கோள். அத்தகு ஞானநூல்களும், ஏனைநூல்களும் இக் குறிக்கோளில் வேறுபடுபவை. அதனாலேயே சிறிய உள்ளம் உடைய வர்களால் ஞானப் பனுவல்களை அணுக முடிவதில்லை. ஞான அநு பவம் என்ற உயர்குறிக்கோளை அடையும் நோக்குடையவர் மட்டுமே அவ்வுயர் நூல்களை அணுக முடிகின்றது. "அருள் இல்லாதவன் செய்யும் அறம், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டாற் போல் வது '' என்பர் திருவள்ளுவர். தெளிவில்லாதவன் மெய்ப்பொருள் காண முற்படுவானாயின், தன் தெருளாமையால் மெய்ப்பொருள் காண இயலாதவன் ஆவன். திருமுறை ஆகிய உயர் பனுவல்களுக்கு உரைகாணும் நிலையை நோக்கினால் இவ்வுண்மை இனிது புலப்படும். திருமுறை யாசிரியர் கள் இறைவனோடு ஒன்றுபட்டுக் கூடி இவ்உலகிடை வாழ்ந்து தவம் பெருக்கியவர்கள், அறவர்களாய், - அறிவர்களாய், - அருளர்க ளாய் வாழ்ந்த அச்சான்றோர்கள் ' எனதுரை தனதுரையே ' என்ற உறுதியுடன் அருள்மொழி அருளியவர்கள். அவர்கள் அருள்வாக்கு கள் இறைமொழிகளேயாமென்பதை அவர்கள் திருமொழிகளாலேயே இனிது தெளியலாம். எனவே, அவற்றுக்கு விளக்கம் எழுதுவது என்பது " செயற்கருஞ்செயல் '' ஆக மதிக்கத்தக்கது ஆகும். சுருங் கூறினால், இத்தெய்வத் தமிழ்ப்பணி இறைபணி எனலாம். கக் ** ஏகன் ஆகி இறை பணி நிற்றல் எனும் உயர்நிலையோடொத்த ஒளி நிலையே இது. திருவாசகத்திற்குப் பல உரைகள் பல ஆண்டுகளாக வெளிவந் திருக்கின்றன. அவரவர் அநுபவத்திற்கேற்ப அவ்வுரைகள் மலர்ந் திருக்கின்றன. பெரும்புலவரும், சங்கநூற் செல்வரும், யெழுதுவதில் உரை பழைய உரைகாரர்களை ஒத்த ஒட்பமும் நுட்பமும் உடையவரும், நல்லாசிரியரும் ஆகிய, பண்டித அருளம்பலவனார் அவர்களது உரை இப்போது வெளிவருகின்றது. இதன் முதற் பாகத்தை (நீத்தல் விண்ணப்பம் வரை) நான் கண்டின்புற்றேன்.
சித்தாந்த கலைச் செல்வரும் தருமபுர ஆதீனப் புலவருமாகிய உயர்திரு . சு . வச்சிரவேலு முதலியார் B. A. L. T. எழுதியது திருவருட் செல்வர் அருளம்பலவனார் இயற்றியுள்ள திருவாசக ஆராய்ச்சி உரை முன்பகுதியை ஓரளவு ஆழ்ந்து பல இடங்களில் படித்துப் பார்த்தேன் . அஃது உரையாசிரியருடைய சைவசித் தாந்த நுட்ப உணர்வையும் திருமுறைகள் சங்க இலக்கியங்கள் என்பவற்றில் பயின்றுள்ள பயிற்சியையும் புலப்படுத்துகின்றது . உரைக்கப்படும் பாட்டில் வரும் சொற்பொருள் அமைதிகளுக்கு ஒத்த அமைப்புள்ள பகுதிகளைத் திருவாசகத்தினின்றும் திருக்கோவை யாரினின்றும் தேவாரம் முதலிய பிற திருமுறைகளிலிருந்தும் பற் பலவற்றை ஆங்காங்கு ஒருங்கே திரட்டிக் காட்டுதல் உரையைக் கற்போர்க்கு நல்விருந்தாக அமைகிறது . நூல் ஆசிரியருடைய அது பவத்தையும் திருக்குறிப்பையும் ஆங்காங்கு இனிது எடுத்துக்காட்டு வதாக உள்ளது . சிற்சில இடங்களில் அச்சுப் பிழைகள் இருந்திருப் பினும் உரையினுடைய அருமை பெருமைகள் அதனால் பாதிக்கப்பட மாட்டா என்பது துணிபு . திருவாசகத்தின் உரைகளாகப் பல வெளி வந்திருப்பினும் இவ்வாராய்ச்சியுரை தனக்கே உரியமுறையில் தன் னைக் கற்போர்க்குத் தனிப்பட்ட உணர்வு நலனைப் பயக்கும் என்ப தில் ஐயமில்லை . தமிழகச்சேலம் அம்மாப்பேட்டை புலவர் சு.கு.அருணாசலனார் M. A. B.O.L. பாடிய வாழ்த்து அரிய திருவா சகவுரைக்கா வலைந்த வூர்க ளெத்தனையோ உரிய பொருளை விளக்கவென வழந்த பாடு மெத்தனையோ தெரியப் பதிற்றுப் பத்து முதலாத் தெள்ளுரை வரைந்தன எத்தனையோ பெரிய அருளம் பலவக்குயின் பெரும்புகழ் பேசுவார் எத்தனையோ உரை நெறியில் ஓர் ஒளி விளக்கு தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் செஞ்சொற் கொண்டல் வித்துவான் சொ . சிங்காரவேலன் M. A. Dip . Ling . அவர்கள் எழுதியது ' ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவதே ' உயர் ஞான நூல் களின் குறிக்கோள் . அத்தகு ஞானநூல்களும் ஏனைநூல்களும் இக் குறிக்கோளில் வேறுபடுபவை . அதனாலேயே சிறிய உள்ளம் உடைய வர்களால் ஞானப் பனுவல்களை அணுக முடிவதில்லை . ஞான அநு பவம் என்ற உயர்குறிக்கோளை அடையும் நோக்குடையவர் மட்டுமே அவ்வுயர் நூல்களை அணுக முடிகின்றது . அருள் இல்லாதவன் செய்யும் அறம் தெருளாதான் மெய்ப்பொருள் கண்டாற் போல் வது ' ' என்பர் திருவள்ளுவர் . தெளிவில்லாதவன் மெய்ப்பொருள் காண முற்படுவானாயின் தன் தெருளாமையால் மெய்ப்பொருள் காண இயலாதவன் ஆவன் . திருமுறை ஆகிய உயர் பனுவல்களுக்கு உரைகாணும் நிலையை நோக்கினால் இவ்வுண்மை இனிது புலப்படும் . திருமுறை யாசிரியர் கள் இறைவனோடு ஒன்றுபட்டுக் கூடி இவ்உலகிடை வாழ்ந்து தவம் பெருக்கியவர்கள் அறவர்களாய் - அறிவர்களாய் - அருளர்க ளாய் வாழ்ந்த அச்சான்றோர்கள் ' எனதுரை தனதுரையே ' என்ற உறுதியுடன் அருள்மொழி அருளியவர்கள் . அவர்கள் அருள்வாக்கு கள் இறைமொழிகளேயாமென்பதை அவர்கள் திருமொழிகளாலேயே இனிது தெளியலாம் . எனவே அவற்றுக்கு விளக்கம் எழுதுவது என்பது செயற்கருஞ்செயல் ' ' ஆக மதிக்கத்தக்கது ஆகும் . சுருங் கூறினால் இத்தெய்வத் தமிழ்ப்பணி இறைபணி எனலாம் . கக் ** ஏகன் ஆகி இறை பணி நிற்றல் எனும் உயர்நிலையோடொத்த ஒளி நிலையே இது . திருவாசகத்திற்குப் பல உரைகள் பல ஆண்டுகளாக வெளிவந் திருக்கின்றன . அவரவர் அநுபவத்திற்கேற்ப அவ்வுரைகள் மலர்ந் திருக்கின்றன . பெரும்புலவரும் சங்கநூற் செல்வரும் யெழுதுவதில் உரை பழைய உரைகாரர்களை ஒத்த ஒட்பமும் நுட்பமும் உடையவரும் நல்லாசிரியரும் ஆகிய பண்டித அருளம்பலவனார் அவர்களது உரை இப்போது வெளிவருகின்றது . இதன் முதற் பாகத்தை ( நீத்தல் விண்ணப்பம் வரை ) நான் கண்டின்புற்றேன் .