திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

158 திருவாசக ஆராய்ச்சியுரை னாக்கி -அடியாருள் ஒருவனாக்கி. "உளக்குரிய அன்பரில் உரியனாயுனைப் பருகின்றதோர் துப்பளே' (சந 98) "தன் அடியரிற் கூட்டிய அதிச மங் கண்டாமே" (அதிசய I) ரான வருவன காண்க. இருங்கழல் சென்னியில் வைத்த என்றது இறைவன் அடிகளுக்குத் திருவடி தீக்கை செய்தமையைக் கூறியவாறு. 'சிவன்... பூவாரடிச் சுவடென்றலைமேற் பொறித்தலுமே" தெள்?. இணையார் திருவடி யென்றலைமேல் வைத்தலுமே" பூவல்லி 1. பெருந்துறையான், சீரார் திருவடி யென்றலைமேல் வைத்தபிரான்'' "மிதிக்குந் திருவடி யென்றலைமேல் வீற்றிருப்ப குலா?.[பூவல்லி 10 என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. இருங்கழல் என்புழி இருமை, பெருமை என்னும் பொருட்டாய் நின்றது. " இருநிலம்'' (பெரும் பாண் 20) என்புழிப்போல, சென்னி - தலை. சேவகன் - வீரன். திருவடி தீக்கை செய்து ஆட்கொள்ளும் திறமுடையார் பிதர் எத்தேவருமின்மை யின் ' சேவக' என்றார். " 131- 144. தொழு தகை துன்பம் துடைப்பாய் போற்றி - நின்னைத் தொழும் தகுதியையுடைய அடியார்களின் துன்பங்களை நீக்குவோனே நினக்கு வணக்கம்; அறிவு இலா ஆனந்த வாரி போற்றி - கெடுதவில்லாத இன்பக் கடலே நினக்கு வணக்கம்; அறிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி. கேடும் தோற்றமும் நீங்கினவனே நினக்கு வணக்கம்; முழுவதும் இறந்த முதல்வா போற்றி - எல்லாவற்றையுங் கடந்த முதல்வனே நினக்கு வணக் கம்; மான் நேர் நோக்கி மணாளா போற்றி- மானினது நோக்கம் போன்ற நோக்கினையுடைய உமையம்மைக்கு மணவாளனே நினக்கு வணக்கம்; வானகத்து அமரர் தாயே போற்றி - வானிடத்துள்ள தேவர்களுக்கும் தாய் போன்றவனே நினக்கு வணக்கம்; பார் இடை ஐந்தாய் பரந்தாய் போற்றி - நிலத்தினிடத்து நாற்றம் சுயை ஒளி ஊறு இசை என் னும் ஐந்து பண்புகளாக விரிந்து நின்றவனே நினக்கு வணக்கம்; நீர் இடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி - நீரினிடத்து சுவை ஒளி ஓசை என்னும் நான்கு பண்புகளாய் விளங்கிளவனே நினக்கு வனக்கம். தீ இடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி - நெருப்பினிடத்து ஒளி ஊறு ஓசை என்னும் மூன்று பண்புகளாக விளங்கினவனே நினக்கு வணக்கம்; வளி இடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி - காற்றினிடத்து ஊறு ஓசை என்னும் இரண்டு பண்புகளாக மகிழ்ந்து கின்றவனே நினக்கு வணக்கம், வெளி இடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி -வானிடத்து ஓசையாகிய ஒரு பண்பாய் நிறைந்துள்ளவனே நினக்கு வணக்கம்; அனி பவர் உள்ளத்து அமுதே போற்றி - அன்பினால் உருகுபவரது உள்ளத் தின்கண் ஊறும் அமுதமானவனே நினக்கு வணக்கம்; கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி - கனவினிடத்தும் அன்பரல்லாத தேவர்கட்கும் காண் ஊறு போற்றித் திருவகவல் டற்கரியவனே வணக்கம். நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி நனவினிடத்தும் நாய்போல் இறிந்த அடியேனுக்கு வெளிப்பட்டு அருள் புரிந்தவனே நினக்கு வணக்கம். 159 - இறைவன் தன்னைத்தொழும் தகுதியையுடைய அடியார்களின் துன் பங்களை நீக்குவோனாதலின் 'தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி என்றார். துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி, தொழுதகை துன் பம் துடைப்பாய் போற்றி" எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் (தே 219: 8) அருளியவாறுங் காண்க. தொழுதகை - வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இனி, தொழு என்பதனை முதனிலைத் தொழிற்பெயராகக் கொண்டு, 'தொழு தகை துன்பம்' என்பதற்குத் தொழுதலைத் தடுக்கும் துன்பம் எனவும், தொழுத கை துன்பம் எனப் பிரித்துத் தொழுத கையினையுடைய அடியார்க்குவரும் துன்பம் எனவும் உரைக்கலாம். தொழுதல் - கும்பிடுதல். தொழுதகையுள்ளும் படை யொடுங்கும் " (குறள் 828) என்புழியும் இப்பொருட்டாதல். காண்க. தகைதல் - தடுத்தல் என்னும் பொருட்டாதல், "கானந் தகைப்ப செலவு (கலி 3: 22) என்புழிக் காண்க. +# கடனீரும் வற்றும் ஊழிக்காலத்தும் கெடுதலில்லாத ஆனந்தமாகிய நீரானிறைந்த கடல் இறைவனாதலின் 'அழிவிலா ஆனந்தவாரி' என் றார். "பந்தமனுக்கு மானந்த மாக்கடலே'' (கோயிற் 9) ஆனந்த மாக் கடல்' (திருக்கோவை 146) என அடிகள் பிறாண்டு அருளியமையும் காண்க. இறைவன் கேடும் தோற்றமும் இல்லாதவனாதலின் அழிவதுமாவ துங் கடந்தாய் என்றார். "பிறப்போ டிறப்பென்றும் இல்லாதான் காண்" தோற்றக்கே டில்லாதான் காண் (நாவு 243:5: 277: 3, எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. எல்வாப் பொருள்களிலும் இறைவன் கலந்திருந்தும் அவற்றால் தாக் குண்ணாது அவற்றிற்கும் அப்பாற்பட்டவனாய் நிற்றலின் 'முழுது மிறந்த" என்றார். "பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர் விண்ணாகி மண்ணாகி வித்தனையும் வேறாகி' (திருவெம் 18) எனவும் "பூதங்கள் ஜந்தாகிப் புலனாகிப் பொருளாகிப், பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமி லாப் பெருமையனை" (கண்ட 10) எனவும் வருவன காண்க. இறத்தல்- கடத்தல். முதல்வா - முதல்வனே. மானேர் நோக்கி - மாள் பிணையினது வெருவின நோக்கம் போலும் நோக்கினையுடையாள். "மானோக்கினவர்' என்பதற்கு 'மானினது நோக் கம் போதும் நோக்கினையுடையார்' (கலி 30 : 11 உரை ) எனவும், "பிணை யெழின் மானோக்கின் " என்பதற்கு 'மாண்பிணையினது அழகினையுடைய வெருவீன நோக்கம் போலும் நோக்கினையும்'" (கவி 58 : 2 உரை) என வும் வரூஉம் உரைப்பகுதிகள் ஈண்டறியற்பாலன. மானேச் நோக்கி
158 திருவாசக ஆராய்ச்சியுரை னாக்கி -அடியாருள் ஒருவனாக்கி . உளக்குரிய அன்பரில் உரியனாயுனைப் பருகின்றதோர் துப்பளே ' ( சந 98 ) தன் அடியரிற் கூட்டிய அதிச மங் கண்டாமே ( அதிசய I ) ரான வருவன காண்க . இருங்கழல் சென்னியில் வைத்த என்றது இறைவன் அடிகளுக்குத் திருவடி தீக்கை செய்தமையைக் கூறியவாறு . ' சிவன் ... பூவாரடிச் சுவடென்றலைமேற் பொறித்தலுமே தெள் ?. இணையார் திருவடி யென்றலைமேல் வைத்தலுமே பூவல்லி 1 . பெருந்துறையான் சீரார் திருவடி யென்றலைமேல் வைத்தபிரான் ' ' மிதிக்குந் திருவடி யென்றலைமேல் வீற்றிருப்ப குலா ? . [ பூவல்லி 10 என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . இருங்கழல் என்புழி இருமை பெருமை என்னும் பொருட்டாய் நின்றது . இருநிலம் ' ' ( பெரும் பாண் 20 ) என்புழிப்போல சென்னி - தலை . சேவகன் - வீரன் . திருவடி தீக்கை செய்து ஆட்கொள்ளும் திறமுடையார் பிதர் எத்தேவருமின்மை யின் ' சேவக ' என்றார் . 131- 144. தொழு தகை துன்பம் துடைப்பாய் போற்றி - நின்னைத் தொழும் தகுதியையுடைய அடியார்களின் துன்பங்களை நீக்குவோனே நினக்கு வணக்கம் ; அறிவு இலா ஆனந்த வாரி போற்றி - கெடுதவில்லாத இன்பக் கடலே நினக்கு வணக்கம் ; அறிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி . கேடும் தோற்றமும் நீங்கினவனே நினக்கு வணக்கம் ; முழுவதும் இறந்த முதல்வா போற்றி - எல்லாவற்றையுங் கடந்த முதல்வனே நினக்கு வணக் கம் ; மான் நேர் நோக்கி மணாளா போற்றி- மானினது நோக்கம் போன்ற நோக்கினையுடைய உமையம்மைக்கு மணவாளனே நினக்கு வணக்கம் ; வானகத்து அமரர் தாயே போற்றி - வானிடத்துள்ள தேவர்களுக்கும் தாய் போன்றவனே நினக்கு வணக்கம் ; பார் இடை ஐந்தாய் பரந்தாய் போற்றி - நிலத்தினிடத்து நாற்றம் சுயை ஒளி ஊறு இசை என் னும் ஐந்து பண்புகளாக விரிந்து நின்றவனே நினக்கு வணக்கம் ; நீர் இடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி - நீரினிடத்து சுவை ஒளி ஓசை என்னும் நான்கு பண்புகளாய் விளங்கிளவனே நினக்கு வனக்கம் . தீ இடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி - நெருப்பினிடத்து ஒளி ஊறு ஓசை என்னும் மூன்று பண்புகளாக விளங்கினவனே நினக்கு வணக்கம் ; வளி இடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி - காற்றினிடத்து ஊறு ஓசை என்னும் இரண்டு பண்புகளாக மகிழ்ந்து கின்றவனே நினக்கு வணக்கம் வெளி இடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி -வானிடத்து ஓசையாகிய ஒரு பண்பாய் நிறைந்துள்ளவனே நினக்கு வணக்கம் ; அனி பவர் உள்ளத்து அமுதே போற்றி - அன்பினால் உருகுபவரது உள்ளத் தின்கண் ஊறும் அமுதமானவனே நினக்கு வணக்கம் ; கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி - கனவினிடத்தும் அன்பரல்லாத தேவர்கட்கும் காண் ஊறு போற்றித் திருவகவல் டற்கரியவனே வணக்கம் . நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி நனவினிடத்தும் நாய்போல் இறிந்த அடியேனுக்கு வெளிப்பட்டு அருள் புரிந்தவனே நினக்கு வணக்கம் . 159 - இறைவன் தன்னைத்தொழும் தகுதியையுடைய அடியார்களின் துன் பங்களை நீக்குவோனாதலின் ' தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி என்றார் . துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி தொழுதகை துன் பம் துடைப்பாய் போற்றி எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் ( தே 219 : 8 ) அருளியவாறுங் காண்க . தொழுதகை - வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை . இனி தொழு என்பதனை முதனிலைத் தொழிற்பெயராகக் கொண்டு ' தொழு தகை துன்பம் ' என்பதற்குத் தொழுதலைத் தடுக்கும் துன்பம் எனவும் தொழுத கை துன்பம் எனப் பிரித்துத் தொழுத கையினையுடைய அடியார்க்குவரும் துன்பம் எனவும் உரைக்கலாம் . தொழுதல் - கும்பிடுதல் . தொழுதகையுள்ளும் படை யொடுங்கும் ( குறள் 828 ) என்புழியும் இப்பொருட்டாதல் . காண்க . தகைதல் - தடுத்தல் என்னும் பொருட்டாதல் கானந் தகைப்ப செலவு ( கலி 3 : 22 ) என்புழிக் காண்க . + # கடனீரும் வற்றும் ஊழிக்காலத்தும் கெடுதலில்லாத ஆனந்தமாகிய நீரானிறைந்த கடல் இறைவனாதலின் ' அழிவிலா ஆனந்தவாரி ' என் றார் . பந்தமனுக்கு மானந்த மாக்கடலே ' ' ( கோயிற் 9 ) ஆனந்த மாக் கடல் ' ( திருக்கோவை 146 ) என அடிகள் பிறாண்டு அருளியமையும் காண்க . இறைவன் கேடும் தோற்றமும் இல்லாதவனாதலின் அழிவதுமாவ துங் கடந்தாய் என்றார் . பிறப்போ டிறப்பென்றும் இல்லாதான் காண் தோற்றக்கே டில்லாதான் காண் ( நாவு 243 : 5 : 277 : 3 எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . எல்வாப் பொருள்களிலும் இறைவன் கலந்திருந்தும் அவற்றால் தாக் குண்ணாது அவற்றிற்கும் அப்பாற்பட்டவனாய் நிற்றலின் ' முழுது மிறந்த என்றார் . பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர் விண்ணாகி மண்ணாகி வித்தனையும் வேறாகி ' ( திருவெம் 18 ) எனவும் பூதங்கள் ஜந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமி லாப் பெருமையனை ( கண்ட 10 ) எனவும் வருவன காண்க . இறத்தல் கடத்தல் . முதல்வா - முதல்வனே . மானேர் நோக்கி - மாள் பிணையினது வெருவின நோக்கம் போலும் நோக்கினையுடையாள் . மானோக்கினவர் ' என்பதற்கு ' மானினது நோக் கம் போதும் நோக்கினையுடையார் ' ( கலி 30 : 11 உரை ) எனவும் பிணை யெழின் மானோக்கின் என்பதற்கு ' மாண்பிணையினது அழகினையுடைய வெருவீன நோக்கம் போலும் நோக்கினையும் ' ( கவி 58 : 2 உரை ) என வும் வரூஉம் உரைப்பகுதிகள் ஈண்டறியற்பாலன . மானேச் நோக்கி