திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

164 திருவாசக ஆராய்ச்சியுரை கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன் ' என்னும் திருக் கோவையார் (358 பேர்) உரை ஈண்டறியற்பாலது. இறைவனையன்றிப் பிறர் எவரையும் பற்றுக்கோடாகக் கருதாமை யின் மற்றோர் பற்று இங்கு அறியேன்' என்றார். "ஐய நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று" (சத 73, என அடிகள் பிருண்டு அருளியவா றுங் காண்க. மற்றொரு பற்றிலை நெஞ்சமே" என ஆளுடையாள்ளை யாரும் (தே 282:6), மற்றுப் பற்றெனக்கின்றி கின்றிருப் பாதமே மனம் பாவித்தேன் என ஆளுடைய நர்பியும் (தே சுந் 48: 1) அருளி யமை காண்க, பற்று - பற்றுக்கோடு. 'பரிந்தோம்பிப் பற்றற்றேமென் பர்" (குறள் 88) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. குற்றாலத்துக்கூத்தன் - திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் கூத் தன். ''குற்றாலத்துறை கூத்தன்" 'குற்றாலத்தெங்கூத்தனை' குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன்" (நாவு 9: 10: 15:7: 204:3) எனத் தேவா ரத்து வருவனவுங் காண்க. 157 - 160, கோகழி மேவிய கோவே போற்றி - திருவாவடுதுறையில் விரும்பி எழுந்தருளிய அரசனே சினக்கு வணக்கம்: ஈங்கோய்மலை எம் எந் தாய் போற்றி -திருளீங்கோய்மலையில் எழுந்தருளியிருக்கும் எம் எந்தையே நினக்கு வணக்கம்; பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி - அழகு நிறைந்த திருப்பழனத்தில் வீற்றிருக்கும் அழகனே நினக்கு வணக்கம்: கடம்பூர் மேவிய விடங்கா போற்றி - திருக்கடம்பூரில் விரும்பி எழுந்தருளியிருக்கும் இயல்பாகத் தோன்றியவரே நினக்கு வணக்கம். கோகழி - திருவாவடுதுறை. திருப்பெருந்துறை என்னாமோ வெனின், என்னாம். என்னை? திருப்பெருந்துறையும் கோகழியும் வேறு வேறு தலங்க ளாதல், நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போய்கல் எண்ணி யெழுகோகழிக் கரசை" (பண்டாய5) என அடிகள் திருவாக்காற் பெறுதுமாகலின், ஈங்கோய்மலை - திருவிங்கோய்மலை. இர்மலையைப் பற்றி. ''ஏனத்திரள்வந் திழியுஞ் சார லிங்கோய் மை ஞான 70 1. ''ஏலத்தொடு நல்லில வங்கமழு மீங்கோய் மலை'' ஞான 70:2 "எழிலார் சுனையும் பொழிலும் புடைசூழ் ஈங்கோய்மலை 70: 11. எனத் தேவாரம் கூறும். எந்தை என்றது இறைவனை, "சங்கோய் நீங்கா இறைவனை '' ஈங்கோய் சிங்கா துறையும் இறைவன்'' (நாவு 208:7; 273:10) எனத் தேவாரத்து வருவனவும் காண்க. பாங்கு - அழகு. ''ஏரும் வனப்பு மெழிலு பாங்கு மம்முஞ் சொக் கும்... அழகின் பெயர்" எனப் பிங்கலந்தையில் (7:183) வருதல் காண்க. போற்றித் திருவகவல் 165 பழனம் - திருப்பழனம். "படுமாலை வண்டறையும் பழனம்'''' பண்ணி லவு பைப்பொழில் சூழ் பழனம் (நாவு 227:1;232:2) தல் காண்க. என வரு கடம்பூர் - திருக்கடர்பூர் "பறையொடு சங்க மியம்பப் பல்கொடிசேர் கெடுமாடம். கறையுடைவேல் வரிக்கண்ணார் கலையொலிசேர் கடம்பூரில் " பலிகெழு செம்மலர்சாரம் பாடலொ டாடலருத கலிகெழு வீதிகலந்த கார்வால்சூழ் கடம்பூரில்" (ஞான 204 : 4: 204: 7) என வருவன காண்க.. விடங்கன் வி+டங்கன்; டங்கம் - உளி, விடங்கன் உளியினாற் செதுக் கப்படாதவன்; என்றது தானே யுண்டானவன்; சுயம்பு விங்கம் என்பது ''கையார் விழலார் விடங்கா போற்றி" என அப்பரடிகள் (தே 271:3) அருளியமையுங் காண்க. 161-170. அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி -தன்னைச் சார்ந்தவர்க்கு அருள்செய்யும் தந்தையே நினக்கு வணக்கம்; இத்தி தன் னின் கீழ் இரு மூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி - இத்தி மரத்தின் நீழற்கீழிருந்து இயக்கியர் அறுவர்க்கும் கடம்பவனத்தில் ஐரா வத யானைக்கும் அருள்செய்த அரசனே நினக்கு வணக்கம்; தென் நாடு உடைய சிவனே போற்றி - தெற்கின்கணுள்ள பாண்டி நாட்டினைப் பழமை யான பதியாகவுடையவனே நினக்கு வணக்கம்; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி -தென்னாட்டையுடையையாயினும் எந்நாட்டவர்க்கும் தலைவனே நினக்கு வணக்கம்; என குருளைக்கு அருளினை போற்றி - பன்றிக்குட்டிக் குத் தாய்ப்பன் றீயாய்க்கிடந்து அருள் செய்தவனே நினக்கு வணக்கம்; மான கயிலை மலையாய் போற்றி - பெருமைபொருந்திய கயிலைமலையை உறை விடமாகக் கொண்டவனே நினக்கு வணக்கம்; அருளிட வேண்டும் அம் மான் போற்றி - அருள் செய்ய வேண்டும் அம்மானே நினக்கு வணக்கம்; இருள்கெட அருளும் இறைவா போற்றி - ஆணவ இருள் கெடும்படி அருள் புரியும் தலைவனே நினக்கு வணக்கம்; அடியேன் தமியேன் தளர்ந்தேன் போற்றி -நினக்கு அடியவனாகிய தனியேன் தளர்ச்சியடைந்தேன்; அத் தளர்ச்சியை நீக்கிக் காத்தருள வேண்டும் நினக்கு வணக்கம். இறைவன் எல்லாவுயிர்களையும் சார்ந்திருப்பினும் நமக்குச் சார்பா வாள் இறைவனன்றிப் பிறரில்ெையய வுணர்ந்து தன்னை வந்தடைந்தவர் களுக்கு அருள்செய்பவனாதவின் அடைந்தவர்க்கருளுமப்பா' என்றார். இத்தி தன்னின்கீழ் இருமுவர்க்கு அருளிய என்றது இறைவன் பட்ட மங்கையென்னும் தலத்தில் இத்திமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்து இயக்கி யர் அழவர்க்கு அட்டமாசித்திகளை உபதேசித்தருளிய திருவிளையாடலைக் குறித்தது. ''பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங் கட்டமா சித்தி யருளிய அதுவும் " 02 - 3. எனக் கீர்த்தித்திருவகவலில் வந்தமை காண்க.
164 திருவாசக ஆராய்ச்சியுரை கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன் ' என்னும் திருக் கோவையார் ( 358 பேர் ) உரை ஈண்டறியற்பாலது . இறைவனையன்றிப் பிறர் எவரையும் பற்றுக்கோடாகக் கருதாமை யின் மற்றோர் பற்று இங்கு அறியேன் ' என்றார் . ஐய நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று ( சத 73 என அடிகள் பிருண்டு அருளியவா றுங் காண்க . மற்றொரு பற்றிலை நெஞ்சமே என ஆளுடையாள்ளை யாரும் ( தே 282 : 6 ) மற்றுப் பற்றெனக்கின்றி கின்றிருப் பாதமே மனம் பாவித்தேன் என ஆளுடைய நர்பியும் ( தே சுந் 48 : 1 ) அருளி யமை காண்க பற்று - பற்றுக்கோடு . ' பரிந்தோம்பிப் பற்றற்றேமென் பர் ( குறள் 88 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . குற்றாலத்துக்கூத்தன் - திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் கூத் தன் . ' ' குற்றாலத்துறை கூத்தன் ' குற்றாலத்தெங்கூத்தனை ' குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் ( நாவு 9 : 10 : 15 : 7 : 204 : 3 ) எனத் தேவா ரத்து வருவனவுங் காண்க . 157 - 160 கோகழி மேவிய கோவே போற்றி - திருவாவடுதுறையில் விரும்பி எழுந்தருளிய அரசனே சினக்கு வணக்கம் : ஈங்கோய்மலை எம் எந் தாய் போற்றி -திருளீங்கோய்மலையில் எழுந்தருளியிருக்கும் எம் எந்தையே நினக்கு வணக்கம் ; பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி - அழகு நிறைந்த திருப்பழனத்தில் வீற்றிருக்கும் அழகனே நினக்கு வணக்கம் : கடம்பூர் மேவிய விடங்கா போற்றி - திருக்கடம்பூரில் விரும்பி எழுந்தருளியிருக்கும் இயல்பாகத் தோன்றியவரே நினக்கு வணக்கம் . கோகழி - திருவாவடுதுறை . திருப்பெருந்துறை என்னாமோ வெனின் என்னாம் . என்னை ? திருப்பெருந்துறையும் கோகழியும் வேறு வேறு தலங்க ளாதல் நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போய்கல் எண்ணி யெழுகோகழிக் கரசை ( பண்டாய 5 ) என அடிகள் திருவாக்காற் பெறுதுமாகலின் ஈங்கோய்மலை - திருவிங்கோய்மலை . இர்மலையைப் பற்றி . ' ' ஏனத்திரள்வந் திழியுஞ் சார லிங்கோய் மை ஞான 70 1 . ' ' ஏலத்தொடு நல்லில வங்கமழு மீங்கோய் மலை ' ' ஞான 70 : 2 எழிலார் சுனையும் பொழிலும் புடைசூழ் ஈங்கோய்மலை 70 : 11 . எனத் தேவாரம் கூறும் . எந்தை என்றது இறைவனை சங்கோய் நீங்கா இறைவனை ' ' ஈங்கோய் சிங்கா துறையும் இறைவன் ' ' ( நாவு 208 : 7 ; 273 : 10 ) எனத் தேவாரத்து வருவனவும் காண்க . பாங்கு - அழகு . ' ' ஏரும் வனப்பு மெழிலு பாங்கு மம்முஞ் சொக் கும் ... அழகின் பெயர் எனப் பிங்கலந்தையில் ( 7 : 183 ) வருதல் காண்க . போற்றித் திருவகவல் 165 பழனம் - திருப்பழனம் . படுமாலை வண்டறையும் பழனம் ' ' ' ' பண்ணி லவு பைப்பொழில் சூழ் பழனம் ( நாவு 227 : 1 ; 232 : 2 ) தல் காண்க . என வரு கடம்பூர் - திருக்கடர்பூர் பறையொடு சங்க மியம்பப் பல்கொடிசேர் கெடுமாடம் . கறையுடைவேல் வரிக்கண்ணார் கலையொலிசேர் கடம்பூரில் பலிகெழு செம்மலர்சாரம் பாடலொ டாடலருத கலிகெழு வீதிகலந்த கார்வால்சூழ் கடம்பூரில் ( ஞான 204 : 4 : 204 : 7 ) என வருவன காண்க .. விடங்கன் வி + டங்கன் ; டங்கம் - உளி விடங்கன் உளியினாற் செதுக் கப்படாதவன் ; என்றது தானே யுண்டானவன் ; சுயம்பு விங்கம் என்பது ' ' கையார் விழலார் விடங்கா போற்றி என அப்பரடிகள் ( தே 271 : 3 ) அருளியமையுங் காண்க . 161-170 . அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி -தன்னைச் சார்ந்தவர்க்கு அருள்செய்யும் தந்தையே நினக்கு வணக்கம் ; இத்தி தன் னின் கீழ் இரு மூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி - இத்தி மரத்தின் நீழற்கீழிருந்து இயக்கியர் அறுவர்க்கும் கடம்பவனத்தில் ஐரா வத யானைக்கும் அருள்செய்த அரசனே நினக்கு வணக்கம் ; தென் நாடு உடைய சிவனே போற்றி - தெற்கின்கணுள்ள பாண்டி நாட்டினைப் பழமை யான பதியாகவுடையவனே நினக்கு வணக்கம் ; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி -தென்னாட்டையுடையையாயினும் எந்நாட்டவர்க்கும் தலைவனே நினக்கு வணக்கம் ; என குருளைக்கு அருளினை போற்றி - பன்றிக்குட்டிக் குத் தாய்ப்பன் றீயாய்க்கிடந்து அருள் செய்தவனே நினக்கு வணக்கம் ; மான கயிலை மலையாய் போற்றி - பெருமைபொருந்திய கயிலைமலையை உறை விடமாகக் கொண்டவனே நினக்கு வணக்கம் ; அருளிட வேண்டும் அம் மான் போற்றி - அருள் செய்ய வேண்டும் அம்மானே நினக்கு வணக்கம் ; இருள்கெட அருளும் இறைவா போற்றி - ஆணவ இருள் கெடும்படி அருள் புரியும் தலைவனே நினக்கு வணக்கம் ; அடியேன் தமியேன் தளர்ந்தேன் போற்றி -நினக்கு அடியவனாகிய தனியேன் தளர்ச்சியடைந்தேன் ; அத் தளர்ச்சியை நீக்கிக் காத்தருள வேண்டும் நினக்கு வணக்கம் . இறைவன் எல்லாவுயிர்களையும் சார்ந்திருப்பினும் நமக்குச் சார்பா வாள் இறைவனன்றிப் பிறரில்ெையய வுணர்ந்து தன்னை வந்தடைந்தவர் களுக்கு அருள்செய்பவனாதவின் அடைந்தவர்க்கருளுமப்பா ' என்றார் . இத்தி தன்னின்கீழ் இருமுவர்க்கு அருளிய என்றது இறைவன் பட்ட மங்கையென்னும் தலத்தில் இத்திமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்து இயக்கி யர் அழவர்க்கு அட்டமாசித்திகளை உபதேசித்தருளிய திருவிளையாடலைக் குறித்தது . ' ' பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங் கட்டமா சித்தி யருளிய அதுவும் 02 - 3 . எனக் கீர்த்தித்திருவகவலில் வந்தமை காண்க .