திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இம்மழை வீழ்ச்சியை வேண்டவே அதனால் உலகம் செழிப்ப டைந்து எல்லா வளங்களும் உடையதாகும்; செழிப்படைதலால்; தானம் தவம் இரண்டும் தங்கும். அந்நெறிகளை உயிர்கள் தலைப் பட்டு இன்னருளுக்கு இலக்காகி மேற்கதியைடயும். 548 இதன்கண் அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் மொழியாய் என்பதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 171. செங்கணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பால் எங்கு மிலாததோ ரின்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் மில்லங்க டோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை அங்க ணரசை யடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய். 16. ப - ரை செங்கணவன் பால்- செந்தாமரைப் பூங்கண்ணராகிய திருமாலிடத்தும், திசைமுகன்பால்-நான்கு திசைகளிலும் முகங்களையு டைய பிரமனிடத்தும், தேவர்கள்பால் - இந்திரன் முதலிய தேவர் களிடத்தும், எங்கும் இலாதது ஓர் இன்பம் நம் பாலதா-மற்று எவ்விடங்களிலுள்ளாரிடத்தும் இல்லாததாகிய ஒப்பற்ற பேரின்பம் நம்மிடத்து உளதாகும்படி, கொங்கு உண் கரு குழலி நம் தம்மை கோதாட்டி - மணந்தங்கிய கரிய கூந்தலையுடைய உமையம்மையார் தகுதியில்லாத எளியோமையும் பொருளாகக்கொண்டு பாராட்டி முதலில் அருள் செய்தலும், இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந் தருளி - இந்நிலவுலகில் நம்வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செம் கமல பொன் பாதம் தந்தருள வந்தருளும் சேவகனை - செந்தாமரை மலர்போன்ற அழகிய திருவடிகளைத் தந்து அருள் செய்ய வலிய எழுந் தருளி வருகின்ற வீரனை, அங்கண் அரசை - அருட் கண்ணையுடைய அரசரை, அடியோங்கட்கு ஆர் அமுதை - அடியோங்கட்குக் கிடைத் தற்கரிய சாவாமருந்து போல்வானை, நங்கள் பெருமானைப் பாடி-எங் கள் தலைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு, நலம் திகழ-இன்பம் விளங் கும்படி, பங்கயம் பூம் புனல் பாய்ந்து ஆடு-தாமரைப் பூக்களையுடைய நீரில் பாய்ந்து முழுகுவோமாக, எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற் குரிய பாவையாகிய பார்வதிதேவீ, நீயும் நீராடியருள்வாயாக (என இறைவியின் அருளும் திறமும் இறைவனின் ஆளும் திறமும் கூறினர்) என்பதாம்.
திருவாசக ஆராய்ச்சியுரை இம்மழை வீழ்ச்சியை வேண்டவே அதனால் உலகம் செழிப்ப டைந்து எல்லா வளங்களும் உடையதாகும் ; செழிப்படைதலால் ; தானம் தவம் இரண்டும் தங்கும் . அந்நெறிகளை உயிர்கள் தலைப் பட்டு இன்னருளுக்கு இலக்காகி மேற்கதியைடயும் . 548 இதன்கண் அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் மொழியாய் என்பதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 171. செங்கணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பால் எங்கு மிலாததோ ரின்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் மில்லங்க டோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை அங்க ணரசை யடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய் . 16 . - ரை செங்கணவன் பால்- செந்தாமரைப் பூங்கண்ணராகிய திருமாலிடத்தும் திசைமுகன்பால் - நான்கு திசைகளிலும் முகங்களையு டைய பிரமனிடத்தும் தேவர்கள்பால் - இந்திரன் முதலிய தேவர் களிடத்தும் எங்கும் இலாதது ஓர் இன்பம் நம் பாலதா - மற்று எவ்விடங்களிலுள்ளாரிடத்தும் இல்லாததாகிய ஒப்பற்ற பேரின்பம் நம்மிடத்து உளதாகும்படி கொங்கு உண் கரு குழலி நம் தம்மை கோதாட்டி - மணந்தங்கிய கரிய கூந்தலையுடைய உமையம்மையார் தகுதியில்லாத எளியோமையும் பொருளாகக்கொண்டு பாராட்டி முதலில் அருள் செய்தலும் இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந் தருளி - இந்நிலவுலகில் நம்வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து செம் கமல பொன் பாதம் தந்தருள வந்தருளும் சேவகனை - செந்தாமரை மலர்போன்ற அழகிய திருவடிகளைத் தந்து அருள் செய்ய வலிய எழுந் தருளி வருகின்ற வீரனை அங்கண் அரசை - அருட் கண்ணையுடைய அரசரை அடியோங்கட்கு ஆர் அமுதை - அடியோங்கட்குக் கிடைத் தற்கரிய சாவாமருந்து போல்வானை நங்கள் பெருமானைப் பாடி - எங் கள் தலைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு நலம் திகழ - இன்பம் விளங் கும்படி பங்கயம் பூம் புனல் பாய்ந்து ஆடு - தாமரைப் பூக்களையுடைய நீரில் பாய்ந்து முழுகுவோமாக எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற் குரிய பாவையாகிய பார்வதிதேவீ நீயும் நீராடியருள்வாயாக ( என இறைவியின் அருளும் திறமும் இறைவனின் ஆளும் திறமும் கூறினர் ) என்பதாம் .