திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 'அங்கணரசைத் தொழுதெழுந்து' (பெரிய - திருநாவு.-312) என வருவன வற்றாலுமறிக; அடியோங்களாகிய எங்களுக்குச் சாவாமருந்துபோலப் பயன் விளைத்தலின் "அடியோங்கட் காரமுதை என்றார். அடியேன் இடர்களைந்த அமுதே" (பிரார்.-4) (வார்த்தை.-10) என வருவன காண்க. >> அடியார்க் கமுதன் ' “ 65 172. 551 நங்கள் பெருமானைப்பாடி ஆடு எனவும் நலந்திகழ ஆடு எனவும் இயைப்ப. நலம்- இன்பம்; திகழுதல் - மிக்கு விளங்குதல். பங் கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு என முடிக்க. இதன்கண் "செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை" என்பதனால் சத்தியை வியந்தது எனப்பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 17 அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போற் கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். ப-ரை. அண்ணா மலையான் அடி கமலம் சென்று இறைஞ்சும்- திருவண்ணாமலையின் வடிவத்தையுடைய இறைவனின் திருவடித் தாமரை மலர்களைச் சார்ந்து வணங்குகின்ற, விண்ணோர் முடியின் மணிதொகை வீறு அற்றால் போல் - தேவர்களினுடைய முடிகளி லுள்ள மணிகளின் தொகுதி திருவடிப் பேரொளியால் தம் ஒளிப் பொலிவை இழந்தாற்போல, கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப - இறைவனின் வலத்திருக் கண்ணாய் அமைந்த சூரியனுடைய கதிரொளி வருதலால் இருள் நீங்குதலும், தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள் அகல - குளிர்ச்சி பொருந்திய ஒளி மழுங்கப்பெற்று விண்மீன்கள் மறைந்துபோக, (இவ்வாறு உதயகால நிகழ்ச்சிகள் உளவாக.) பெண்ணே - தோழீ, பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒளி சேர் விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகி- பெண்ணாகியும் ஆணாகியும் அலியாகியும் விளங்குகின்ற ஒளிமண்ட லங்களையுடைய ஆகாயமாகியும் மண்ணுலகமாகியும் இவை அனைத்
திருவெம்பாவை ' அங்கணரசைத் தொழுதெழுந்து ' ( பெரிய - திருநாவு . - 312 ) என வருவன வற்றாலுமறிக ; அடியோங்களாகிய எங்களுக்குச் சாவாமருந்துபோலப் பயன் விளைத்தலின் அடியோங்கட் காரமுதை என்றார் . அடியேன் இடர்களைந்த அமுதே ( பிரார் . - 4 ) ( வார்த்தை . - 10 ) என வருவன காண்க . >> அடியார்க் கமுதன் ' 65 172 . 551 நங்கள் பெருமானைப்பாடி ஆடு எனவும் நலந்திகழ ஆடு எனவும் இயைப்ப . நலம்- இன்பம் ; திகழுதல் - மிக்கு விளங்குதல் . பங் கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு என முடிக்க . இதன்கண் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை என்பதனால் சத்தியை வியந்தது எனப்பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 17 அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போற் கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் . - ரை . அண்ணா மலையான் அடி கமலம் சென்று இறைஞ்சும் திருவண்ணாமலையின் வடிவத்தையுடைய இறைவனின் திருவடித் தாமரை மலர்களைச் சார்ந்து வணங்குகின்ற விண்ணோர் முடியின் மணிதொகை வீறு அற்றால் போல் - தேவர்களினுடைய முடிகளி லுள்ள மணிகளின் தொகுதி திருவடிப் பேரொளியால் தம் ஒளிப் பொலிவை இழந்தாற்போல கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப - இறைவனின் வலத்திருக் கண்ணாய் அமைந்த சூரியனுடைய கதிரொளி வருதலால் இருள் நீங்குதலும் தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள் அகல - குளிர்ச்சி பொருந்திய ஒளி மழுங்கப்பெற்று விண்மீன்கள் மறைந்துபோக ( இவ்வாறு உதயகால நிகழ்ச்சிகள் உளவாக . ) பெண்ணே - தோழீ பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒளி சேர் விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகி பெண்ணாகியும் ஆணாகியும் அலியாகியும் விளங்குகின்ற ஒளிமண்ட லங்களையுடைய ஆகாயமாகியும் மண்ணுலகமாகியும் இவை அனைத்