திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தினின்றும் வேமுகியும், கண் ஆர் அமுதமுமாய் நின்றான் கழல்பாடி அகக்கண்ணாலும் புறக் கண்ணாலும் பருகும் அமுதமாகியும் நிலைபெற்ற இறைவனின் வீரக்கழல் பொருந்திய திருவடிகளைப் புகழ்ந்து பாடிக் கொண்டு,இ பூம் புனல் பாய்ந்து ஆடு - இந்தத் தாமரை முதலிய பூக் களைய ாயுடைய நீரில் பாய்ந்து ஆடுவோமாக. எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவீ, நீயும் நீராடியருள் வாயாக (என எல்லாமாய் அல்லவுமாய் நிற்கும் இறைவன் இயல்பு கூறினர்) என்பதாம். அண்ணாமலையானின் திருவடித் தாமரைமலர்களைச் 552 சென்று வணங்குகின்ற விண்ணோரின் முடிகளிலுள்ள மணித்தொகை தம் ஒளிப்பொலிவை இழந்தாற்போல, இறைவனின் வலத்திருக்கண்ணா யமைந்த ஞாயிற்றின் கதிர் வருதலால் இருள் நீங்குதலும் தாரகை கள் ஒளி மழுங்கி மறைந்து போக (இவ்வாறு உதயகால நிகழ்ச்சி கள் உளவாகும்.) பெண்ணே! பெண்ணாகியும், ஆணாகியும் அலியாகி யும் விண்ணாகியும் மண்ணாகியும் இத்தனையும் வேறாகியும் கண்ணார் அமுதமுமாகியும் நிலைபெற்ற இறைவனின் திருவடிகளைப் புகழ்ந்து பாடிக்கொண்டு இப்பூம்புனற் பாய்ந்து நீராடுவோமாக. வாய்! நீயும் நீராடியருள்க (என எல்லாமாய் அல்லவுமாய் நிற்கும் இறைவன் இயல்பு கூறினர்) என்பதாம். எம்பா தஞ் A கயிலை மலையாள் ஈங்கோய் மலையான் என்னுமிடங்களில் மலை கள் இறைவன் எழுந்தருளியிருக்கும் இடங்களாக, அம்மலைகளில் எழுந்தருளியிருக்கும் இறைவன் வேறாகக் கூறப்படுதல் போலன்றி, அண்ணாமலையான் என்பதில் அண்ணாமலை இறைவனது திருவுருவா கவும் அமைந்திருத்தலின் அண்ணாமலையான்' என்பதற்கு அண்ணாமலை யின் வடிவத்தையுடைய இறைவனெனப் பொருளுரைக்கப்பட்டது. "கடல் வண்ணனும் வேதக், கிளர்தாமரை மலர்மே லுறை கேடில் புகழோனும் அளவா வண்ணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்'' எனத் தேவாரத்து (ஞான.-10 - 9: வருதலுங் காண்க. அடிக்கமலம் சென்று இறைஞ்சும் விண்ணோர் என்றது திருவண் ணமலையின் வடிவத்தையுடைய இறைவன் தேவர்களின் வேண்டு கோட்கிரங்கி அவர்கள் வணங்குதற்குரிய திருவுருவங் கொள்ளு தலும் அவ்விறைவனது திருவடித்தாமரை மலர்களை வணங்கினர் விண்ணோர் என்றவாறு. ''சென்றிமையோர் பரவுந் திகழ் சேவடியான்" (ஞான 319-7) 'சவானோர் மகுடமன்னி நிலையாயிருப்பன-ஐயாறனடித்தலமே'' (நாவு 92-11)
திருவாசக ஆராய்ச்சியுரை தினின்றும் வேமுகியும் கண் ஆர் அமுதமுமாய் நின்றான் கழல்பாடி அகக்கண்ணாலும் புறக் கண்ணாலும் பருகும் அமுதமாகியும் நிலைபெற்ற இறைவனின் வீரக்கழல் பொருந்திய திருவடிகளைப் புகழ்ந்து பாடிக் கொண்டு பூம் புனல் பாய்ந்து ஆடு - இந்தத் தாமரை முதலிய பூக் களைய ாயுடைய நீரில் பாய்ந்து ஆடுவோமாக . எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவீ நீயும் நீராடியருள் வாயாக ( என எல்லாமாய் அல்லவுமாய் நிற்கும் இறைவன் இயல்பு கூறினர் ) என்பதாம் . அண்ணாமலையானின் திருவடித் தாமரைமலர்களைச் 552 சென்று வணங்குகின்ற விண்ணோரின் முடிகளிலுள்ள மணித்தொகை தம் ஒளிப்பொலிவை இழந்தாற்போல இறைவனின் வலத்திருக்கண்ணா யமைந்த ஞாயிற்றின் கதிர் வருதலால் இருள் நீங்குதலும் தாரகை கள் ஒளி மழுங்கி மறைந்து போக ( இவ்வாறு உதயகால நிகழ்ச்சி கள் உளவாகும் . ) பெண்ணே ! பெண்ணாகியும் ஆணாகியும் அலியாகி யும் விண்ணாகியும் மண்ணாகியும் இத்தனையும் வேறாகியும் கண்ணார் அமுதமுமாகியும் நிலைபெற்ற இறைவனின் திருவடிகளைப் புகழ்ந்து பாடிக்கொண்டு இப்பூம்புனற் பாய்ந்து நீராடுவோமாக . வாய் ! நீயும் நீராடியருள்க ( என எல்லாமாய் அல்லவுமாய் நிற்கும் இறைவன் இயல்பு கூறினர் ) என்பதாம் . எம்பா தஞ் A கயிலை மலையாள் ஈங்கோய் மலையான் என்னுமிடங்களில் மலை கள் இறைவன் எழுந்தருளியிருக்கும் இடங்களாக அம்மலைகளில் எழுந்தருளியிருக்கும் இறைவன் வேறாகக் கூறப்படுதல் போலன்றி அண்ணாமலையான் என்பதில் அண்ணாமலை இறைவனது திருவுருவா கவும் அமைந்திருத்தலின் அண்ணாமலையான் ' என்பதற்கு அண்ணாமலை யின் வடிவத்தையுடைய இறைவனெனப் பொருளுரைக்கப்பட்டது . கடல் வண்ணனும் வேதக் கிளர்தாமரை மலர்மே லுறை கேடில் புகழோனும் அளவா வண்ணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல் ' ' எனத் தேவாரத்து ( ஞான . - 10 - 9 : வருதலுங் காண்க . அடிக்கமலம் சென்று இறைஞ்சும் விண்ணோர் என்றது திருவண் ணமலையின் வடிவத்தையுடைய இறைவன் தேவர்களின் வேண்டு கோட்கிரங்கி அவர்கள் வணங்குதற்குரிய திருவுருவங் கொள்ளு தலும் அவ்விறைவனது திருவடித்தாமரை மலர்களை வணங்கினர் விண்ணோர் என்றவாறு . ' ' சென்றிமையோர் பரவுந் திகழ் சேவடியான் ( ஞான 319-7 ) ' சவானோர் மகுடமன்னி நிலையாயிருப்பன - ஐயாறனடித்தலமே ' ' ( நாவு 92-11 )