திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை பொருட்கும் முதலாயும் முடிவாயும் இருத்தலின் "ஆதியாம் பாத மலர் அந்தமாம் செந்தளிர்கள் என அருளிச் செய்யப்பட்டது. மாயினார்க்கு " (திருப்பொற்.-20) எனவும், (தே.ஞான - 77 10) எனவும், (நாவு.- 92-17) "ஆதியு மந்தமு ஆதியு மீறுமாய எம் அடிகள் ' ஆதியும் அந்தமுமான ஐயாறன் அடித்தலமே " எனவும் வருவன காண்க. தமக்கு ஆதியும் அந்தமும் உடைய ஒருவர் எல்லாம் பொருள்களுக்கும் ஆதியாயும் அந்தமாயுமிருத்தல் பொருந் தாதென்பது இதனால் வலியுறுத்தப்படும், " எப்பொருட்கும் ஆதியாதல் எப்பொருட்கும் முன்னுள்ளதாதல்; அந்தமாதல் எப்பொருட்கும் பின்னுள்ளதாதல்; இங்ஙனமன்றித் தோற்றம் முடிவுகளைச் செய்வது என உரைக்கின் அது பின்னர், "தோற்றமாம் பொற்பாதம் ஈறாம் இணையடிகள்" எனப் பின்னர் கூறப்படுதலின் புனருத்தியாகும். "" டன. "எல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் என்பதனால் படைத்தலும், "எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்" என்பதனால் காத்தலும், "எல்லாவுயிர்க்கும் ஈறாமிணையடிகள்" என்பதனால் அழித் தலும் "மால் நான்முகனும் காணாத புண்டரிகம்" என்பதனால் மறைத் தலும் "யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்" என்பதனால் அருளலும், ஆகிய இறைவனது ஐந்தொழில்களும் குறிப்பிடப்பட் போற்றி எல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம். போற்றி யாமுய்ய வாட்சொண்டருளும் பொன்மலர்கள்" என்னும் இப்பகுதியை எடுத்துக்காட்டி "இதனுள் தோற்றமாம் பொற்பாதம் என்பது சிருஷ்டி யென அறிக; போகமாம் பூங்கழல்கள் என்பது திதி யென அறிக; ஈறாமிணையடிகள் என்பது சங்காரமென அறிக; மால் நான்முகனும் காணாத புண்டரிகம் என்பது திரோபவமென அறிக; யாமுய்ய வாட்கொண்டருளும் பொன்மலர்கள் என்பது அனுக்கிரகமென அறிக" எனச் சிவப்பிரகாசர் உரையில் உரை எழுதியி ருத்தலும் ஈண்டறியற்பாலது. 559 ‘ எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் என்பதில் போகம் என்றது உயிர்களைக் கட்டிய காலம் வரை பிராரத்தகன்மப் பயன் களை அனுபவிக்கும்படி செய்தல். அது காத்தல் காரணமாகவே நிகழ வேண்டுதலின் போகம் ஈண்டு காத்தலாயிற்று. ஈறு என்றது உயிர்களுக்குக் கொடுத்த தனு கரண புவன போகங்களைக் கட்டிய கால முடிவில் ஒடுக்குதல். Lange "மால் நான்முகனும் காணாத புண்டரிகம்" என்றது திருமா லும் பிரமனும் காணமுடியாத திருவடிகள் என்றவாறு. அரி அயனுக்கெட்டாத தன் விரைமலர்க் கழில் காட்டி" (அற்புதப்.-99) எனத் திருவாசகத்தும், "மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி" எனத் தேவாரத்தும், (ஞா.246-9)
திருவெம்பாவை பொருட்கும் முதலாயும் முடிவாயும் இருத்தலின் ஆதியாம் பாத மலர் அந்தமாம் செந்தளிர்கள் என அருளிச் செய்யப்பட்டது . மாயினார்க்கு ( திருப்பொற் . - 20 ) எனவும் ( தே.ஞான - 77 10 ) எனவும் ( நாவு.- 92-17 ) ஆதியு மந்தமு ஆதியு மீறுமாய எம் அடிகள் ' ஆதியும் அந்தமுமான ஐயாறன் அடித்தலமே எனவும் வருவன காண்க . தமக்கு ஆதியும் அந்தமும் உடைய ஒருவர் எல்லாம் பொருள்களுக்கும் ஆதியாயும் அந்தமாயுமிருத்தல் பொருந் தாதென்பது இதனால் வலியுறுத்தப்படும் எப்பொருட்கும் ஆதியாதல் எப்பொருட்கும் முன்னுள்ளதாதல் ; அந்தமாதல் எப்பொருட்கும் பின்னுள்ளதாதல் ; இங்ஙனமன்றித் தோற்றம் முடிவுகளைச் செய்வது என உரைக்கின் அது பின்னர் தோற்றமாம் பொற்பாதம் ஈறாம் இணையடிகள் எனப் பின்னர் கூறப்படுதலின் புனருத்தியாகும் . டன . எல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் என்பதனால் படைத்தலும் எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல் என்பதனால் காத்தலும் எல்லாவுயிர்க்கும் ஈறாமிணையடிகள் என்பதனால் அழித் தலும் மால் நான்முகனும் காணாத புண்டரிகம் என்பதனால் மறைத் தலும் யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் என்பதனால் அருளலும் ஆகிய இறைவனது ஐந்தொழில்களும் குறிப்பிடப்பட் போற்றி எல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் . போற்றி யாமுய்ய வாட்சொண்டருளும் பொன்மலர்கள் என்னும் இப்பகுதியை எடுத்துக்காட்டி இதனுள் தோற்றமாம் பொற்பாதம் என்பது சிருஷ்டி யென அறிக ; போகமாம் பூங்கழல்கள் என்பது திதி யென அறிக ; ஈறாமிணையடிகள் என்பது சங்காரமென அறிக ; மால் நான்முகனும் காணாத புண்டரிகம் என்பது திரோபவமென அறிக ; யாமுய்ய வாட்கொண்டருளும் பொன்மலர்கள் என்பது அனுக்கிரகமென அறிக எனச் சிவப்பிரகாசர் உரையில் உரை எழுதியி ருத்தலும் ஈண்டறியற்பாலது . 559 எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் என்பதில் போகம் என்றது உயிர்களைக் கட்டிய காலம் வரை பிராரத்தகன்மப் பயன் களை அனுபவிக்கும்படி செய்தல் . அது காத்தல் காரணமாகவே நிகழ வேண்டுதலின் போகம் ஈண்டு காத்தலாயிற்று . ஈறு என்றது உயிர்களுக்குக் கொடுத்த தனு கரண புவன போகங்களைக் கட்டிய கால முடிவில் ஒடுக்குதல் . Lange மால் நான்முகனும் காணாத புண்டரிகம் என்றது திருமா லும் பிரமனும் காணமுடியாத திருவடிகள் என்றவாறு . அரி அயனுக்கெட்டாத தன் விரைமலர்க் கழில் காட்டி ( அற்புதப் . - 99 ) எனத் திருவாசகத்தும் மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி எனத் தேவாரத்தும் ( ஞா.246-9 )