திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ''செய்யாள் கோனு நான்முகனு மறியாச் செம்பொற்றாளிணை'' (பெருமிழலைக் -5) 5.60 எனப் பெரிய புராணத்தும் வருவன காண்க. நான்முகனும் என்ற உம்மையை மால் என்பதனோடுங் கூட்டுக. "மால் நான்முகனும் றை நான்முகன் தேடியது திருமுடியாகவும், காணாத புண்டரிகம் ” எனக்கூறியது முரணாகாதோவெனின் வனுக்கும் அவன்றன் திருவடிக்கும் பேதமின்மையால் முரணாகா தென்க. தேவத் தலைவர்களாகிய திருமாலும் நான்முகனும் திருவடி களைக் காணாமை அதிகார போக மறைப்பினாலாகும். மறைத்தல் திரோதான சத்தியின் செயலாய் உயிர்களைப் போகத்தில் மூழ்கச் செய்து அதில் உவர்ப்புண்டாகுமாறு செய்தலாகும். போகத்தில் மூழ்கி யிருக்கும் உயிர்களுக்கு இறை உணர்வு உளதாகாது. ஆதலின் "மால் நான்முகனும் காணாத புண்டரிகம்" என்பதில் மறைத்தல் கூறப் பட்டது. புண்டரிகம் தாமரை புண்டரிகப் பொய்கை (தே. சுந். 16-3) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஈண்டு, தாமரைமலர் போலும் திருவடிமலர்களை உணர்த்தலின் ஆகுபெயர். "பொலம் புண்டரிகப் புதுமலர் போல்வன...... ஐயாறனடித்தலமே " (தே.நா. 93-12) எனத் தேவாரத்து வருதலுங்காண்க 'பொற்புடைச் செய்யபாத புண்டரீகங்கள் ” (பெரிய - காரைக் - 53) எனப் பெரிய புராணத்தும் கூறப்பட்டது. யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் - யாம் உய்யும் வண்ணம் ஆட்கொண்டருளும் பொன்போன்ற திருவடிமலர்கள். இறைவன் உயிர்களை ஆட்கொண்டருளுதல் வீடு பேற்றிற்கு ஏதுவா தலின் இதனால் அருளல் கூறப்பட்டது. படைப்புத் தொழில்கள் சத்திகளால் நிகழ்தலானும் திருவடி சத்தி யைக் குறித்தலானும், "தோற்றமாம் பொற்பாதம்' "போகமாம் பூங்கழல்கள் ” “ஈறாம் இணையடிகள்” "காணாத புண்டரிகம்” ஆட்கொள்ளும் பொன்மலர்கள் என ஐந்தொழில்களையும் இறைவன் திருவடிமேல் ஏற்றிக்கூறுவாராயினர். 59 பாவை நோன்பு நோற்கும் மகளிர் புலரிக்காலத்து எழுந்து நீராடி நியதி முடித்துப்பாவை உருவில் பார்வதிதேவியை வழிபட்டுத் தாம் விரும்பிய பேற்றைப் பெறுவாராகலின் அந்நோன்பிற்கு அங்க மாக ஆடும்தூய நீராட்டு அவ்வழிபாட்டுக்கு இன்றியமையாததாக லின் "யாம் ஆடும் மார்கழி நீர் போற்றி" என அதனையே விதந் தெடுத்துக் கூறி எங்களைப் பாதுகாத்தருள்க எனக் கூறினராயினும் பாவைநோன்பு எங்களைப் பாதுகாத்தருள்க என்பதே கருத்தாகக் கொள்க. இதன்கண் இறைவன் திருவடியைப் பலமுறை புகழ்ந்து காத்த ருள்க என்பதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப் படுதல் காண்க. 20
திருவாசக ஆராய்ச்சியுரை ' ' செய்யாள் கோனு நான்முகனு மறியாச் செம்பொற்றாளிணை ' ' ( பெருமிழலைக் -5 ) 5.60 எனப் பெரிய புராணத்தும் வருவன காண்க . நான்முகனும் என்ற உம்மையை மால் என்பதனோடுங் கூட்டுக . மால் நான்முகனும் றை நான்முகன் தேடியது திருமுடியாகவும் காணாத புண்டரிகம் எனக்கூறியது முரணாகாதோவெனின் வனுக்கும் அவன்றன் திருவடிக்கும் பேதமின்மையால் முரணாகா தென்க . தேவத் தலைவர்களாகிய திருமாலும் நான்முகனும் திருவடி களைக் காணாமை அதிகார போக மறைப்பினாலாகும் . மறைத்தல் திரோதான சத்தியின் செயலாய் உயிர்களைப் போகத்தில் மூழ்கச் செய்து அதில் உவர்ப்புண்டாகுமாறு செய்தலாகும் . போகத்தில் மூழ்கி யிருக்கும் உயிர்களுக்கு இறை உணர்வு உளதாகாது . ஆதலின் மால் நான்முகனும் காணாத புண்டரிகம் என்பதில் மறைத்தல் கூறப் பட்டது . புண்டரிகம் தாமரை புண்டரிகப் பொய்கை ( தே . சுந் . 16-3 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ஈண்டு தாமரைமலர் போலும் திருவடிமலர்களை உணர்த்தலின் ஆகுபெயர் . பொலம் புண்டரிகப் புதுமலர் போல்வன ...... ஐயாறனடித்தலமே ( தே.நா. 93-12 ) எனத் தேவாரத்து வருதலுங்காண்க ' பொற்புடைச் செய்யபாத புண்டரீகங்கள் ( பெரிய - காரைக் - 53 ) எனப் பெரிய புராணத்தும் கூறப்பட்டது . யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் - யாம் உய்யும் வண்ணம் ஆட்கொண்டருளும் பொன்போன்ற திருவடிமலர்கள் . இறைவன் உயிர்களை ஆட்கொண்டருளுதல் வீடு பேற்றிற்கு ஏதுவா தலின் இதனால் அருளல் கூறப்பட்டது . படைப்புத் தொழில்கள் சத்திகளால் நிகழ்தலானும் திருவடி சத்தி யைக் குறித்தலானும் தோற்றமாம் பொற்பாதம் ' போகமாம் பூங்கழல்கள் ஈறாம் இணையடிகள் காணாத புண்டரிகம் ஆட்கொள்ளும் பொன்மலர்கள் என ஐந்தொழில்களையும் இறைவன் திருவடிமேல் ஏற்றிக்கூறுவாராயினர் . 59 பாவை நோன்பு நோற்கும் மகளிர் புலரிக்காலத்து எழுந்து நீராடி நியதி முடித்துப்பாவை உருவில் பார்வதிதேவியை வழிபட்டுத் தாம் விரும்பிய பேற்றைப் பெறுவாராகலின் அந்நோன்பிற்கு அங்க மாக ஆடும்தூய நீராட்டு அவ்வழிபாட்டுக்கு இன்றியமையாததாக லின் யாம் ஆடும் மார்கழி நீர் போற்றி என அதனையே விதந் தெடுத்துக் கூறி எங்களைப் பாதுகாத்தருள்க எனக் கூறினராயினும் பாவைநோன்பு எங்களைப் பாதுகாத்தருள்க என்பதே கருத்தாகக் கொள்க . இதன்கண் இறைவன் திருவடியைப் பலமுறை புகழ்ந்து காத்த ருள்க என்பதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப் படுதல் காண்க . 20