திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அலைபொருந்திய கடலினிடத்து மற்றையோராற் பிடிக்க முடியாத கெளிற்றுமீனைப் பிடிக்கும் பொருட்டு வலைவீசிய, பேர் ஆசை வாரி யனை பாடுதும் - அன்பர்களுக்குப் பெருவிருப்பினைச் செய்கின்ற அருட் கடலாயுள்ளவனைப் பாடிக்கொண்டு விளையாடுவோமாக. அம்மானாய், பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் ஆராலும் காண்டற்கரியவனும், எமக்கு எளி வந்து அருளிய பேர ருளாளனும், தென்னனும், திருப்பெருந்துறையை யுடையவனுமாகிய இறைவன் வலிய எழுந்தருளி வந்து, அன்பாகிய பித்தினை ஏற்றி வாராவழியருளி என் உள்ளத்தே கோயில் கொண்ட ஆரா அமு தாய், கடலிடத்து மீன் விசிறிய பேராசை வாரியனைப் பாடிக் கொண்டு விளையாடுவோமாக எனபதாம். திருவம்மானை பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் எனப் பூவுலகம் விண்ணு லகம் கீழுலகம் கூறப்பட்டனவாகப் "புறத்தார்" என வேறு உலகம் கூறியது "பூதமைந்தினும் ஏனைய திறத்தும் புறத்தும் மீதுமாம் அண் டம்'' எனக் கந்தபுராணத்து, புவனங்கள் பலவுளவாகக் கூறப்படுதல் பற்றி என்க. 60 அவனருளே கண்ணாகக் காணினல்லால் யாவராலும் தமது முயற் சியாற் காணவொண்ணாத இறைவன் அடியவர்க் கெளியவனாதலின் 'ஆராலுங் காண்டற்கரியான் எமக்கெளிய பேராளன்" என்றார். 66 "யாவரும் சிந்தையாலும் அறிவருஞ் செல்வனே'' யாவரும் அறிவரி யாயெமக் கெளியாய்” "" 569 *6 முக்கண துடை எந்தை தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்கு" (சத. 47) (பள்ளி -3) (அதிசயப்.- 3) மூவராலும் அறியொணா முதலாய ஆனந்த மூர்த்தியான் யாவ ராயினும் அன்பரன்றி அறியொணாமலர்ச் சோதியான்" (சென்னிப்.-1) என அடிகளும், "எளியவ ரடியார்க் கென்று மின்னம்ப ரீசனாரே'' (நாவு.- 72 - 5) "அவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியனிந் நிறத்த னிவ்வண்ணத்தன் இவனிறைவனென் றெழுதிக் காட்டொணாதே" (நாவு.-310-10) என அப்பரடிகளும், அருளியமை காண்க.
அலைபொருந்திய கடலினிடத்து மற்றையோராற் பிடிக்க முடியாத கெளிற்றுமீனைப் பிடிக்கும் பொருட்டு வலைவீசிய பேர் ஆசை வாரி யனை பாடுதும் - அன்பர்களுக்குப் பெருவிருப்பினைச் செய்கின்ற அருட் கடலாயுள்ளவனைப் பாடிக்கொண்டு விளையாடுவோமாக . அம்மானாய் பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் ஆராலும் காண்டற்கரியவனும் எமக்கு எளி வந்து அருளிய பேர ருளாளனும் தென்னனும் திருப்பெருந்துறையை யுடையவனுமாகிய இறைவன் வலிய எழுந்தருளி வந்து அன்பாகிய பித்தினை ஏற்றி வாராவழியருளி என் உள்ளத்தே கோயில் கொண்ட ஆரா அமு தாய் கடலிடத்து மீன் விசிறிய பேராசை வாரியனைப் பாடிக் கொண்டு விளையாடுவோமாக எனபதாம் . திருவம்மானை பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் எனப் பூவுலகம் விண்ணு லகம் கீழுலகம் கூறப்பட்டனவாகப் புறத்தார் என வேறு உலகம் கூறியது பூதமைந்தினும் ஏனைய திறத்தும் புறத்தும் மீதுமாம் அண் டம் ' ' எனக் கந்தபுராணத்து புவனங்கள் பலவுளவாகக் கூறப்படுதல் பற்றி என்க . 60 அவனருளே கண்ணாகக் காணினல்லால் யாவராலும் தமது முயற் சியாற் காணவொண்ணாத இறைவன் அடியவர்க் கெளியவனாதலின் ' ஆராலுங் காண்டற்கரியான் எமக்கெளிய பேராளன் என்றார் . 66 யாவரும் சிந்தையாலும் அறிவருஞ் செல்வனே ' ' யாவரும் அறிவரி யாயெமக் கெளியாய் 569 * 6 முக்கண துடை எந்தை தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்கு ( சத . 47 ) ( பள்ளி -3 ) ( அதிசயப்.- 3 ) மூவராலும் அறியொணா முதலாய ஆனந்த மூர்த்தியான் யாவ ராயினும் அன்பரன்றி அறியொணாமலர்ச் சோதியான் ( சென்னிப் . - 1 ) என அடிகளும் எளியவ ரடியார்க் கென்று மின்னம்ப ரீசனாரே ' ' ( நாவு.- 72 - 5 ) அவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியனிந் நிறத்த னிவ்வண்ணத்தன் இவனிறைவனென் றெழுதிக் காட்டொணாதே ( நாவு . - 310-10 ) என அப்பரடிகளும் அருளியமை காண்க .