திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

179 திருவம்மானை கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் தில்லைநகர் புக்குச் சிற்றம் பலமன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்! 577 ப - ரை. வல்லாளன் தென்னன் பெருந்துறையான் - வரம்பி லாற்றலுடையவனும் தென்னாடுடையவனும் திருப்பெருந்துறையை யுடையவனும், கல்லாமனத்து கடைப்பட்ட நாயேனை -உயிரின் உய்திக்கு வேண்டிய உண்மைநூற் கல்வியைக் கல்லாத மனத்தை யுடைமையால் கீழ்ப்பட்ட நாய்போன்ற என்னை, பிச்சு ஏற்றி- இடையறாத அன்பாகிய பித்தினை ஏறச்செய்து, கல்லை பிசைந்து கனி ஆக்கி - எனது மனமாகிய கல்லினைப் பிசைந்து இனிய கனிபோலா கச் செய்து, தன் கருணை வெள்ளத்து அழுத்தி - தன்னுடைய பேர ருட் பெருக்கிலே அமிழ்ந்தச் செய்து, வினைகடிந்த வேதியனை - எனது இருவினைகளைத் தொலைத்த அந்தணாளனும், தில்லைநகர் புக்கு சிற்றம் பலம் மன்னும் - தில்லைநகரத்திற் சென்றருளித் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே நிலைபெற்றுள்ள, ஒல்லை விடையானை அம்மானாய் பாடுதும்- விரைந்து செல்லும் இடபத்தினையுடையவனுமாகிய இறைவனை, அம்மானை ஆடும் அன்னையே பாடிக்கொண்டு ஆடுவோமாக. வல்லாளனும் தென்னனும் பெருந்துறையானும் கல்லாமனத் தினை யுடைமையாற் கடைப்பட்ட நாயேனைப் பிச்சு ஏற்றி, எனது மனமாகிய கல்லினைப் பிசைந்து கனிபோலாகச் செய்து, தன் கருணை வெள்ளத்து அமிழ்ந்தச் செய்து, இருவினைகளைத் தொலைத்த வேதி யனும் தில்லைநகர்புக்குச் சிற்றம்பலம் மன்னும் ஒல்லை விடையை யுடையவனுமாகிய இறைவனைப்பாடி ஆடுவோமாக என்பதாம். கல்லாமனம் - உண்மைநூற் கல்வியைக் கல்லாதமனம் "கல்லா மனத்தேன் கசியாதேன்" (சத. - 56) என அடிகள் அருளியமை யுங் காண்க. கல்லா மனத்து என்றது நாயேன் என்பதில் விகுதி யால் உணர்த்தப்படும் பெயர்க்கு விசேடணமாகும். அடிகள் தம் மைக் கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை எனக் கூறியது யாண்டும் தம்மைத் தாழ்த்திக் கூறும் முறைமைபற்றியாகும். "கல் லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை" (கண்டப் - 4) எனஅடி கள் பிறாண்டும் அருளியமையுங் காண்க. இறைவனை வல்லாளன் என்றார், கடைப்பட்டவனாகிய தன்னைப் பிச்சேற்றிய செயலை உட் 67
179 திருவம்மானை கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் தில்லைநகர் புக்குச் சிற்றம் பலமன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய் ! 577 - ரை . வல்லாளன் தென்னன் பெருந்துறையான் - வரம்பி லாற்றலுடையவனும் தென்னாடுடையவனும் திருப்பெருந்துறையை யுடையவனும் கல்லாமனத்து கடைப்பட்ட நாயேனை -உயிரின் உய்திக்கு வேண்டிய உண்மைநூற் கல்வியைக் கல்லாத மனத்தை யுடைமையால் கீழ்ப்பட்ட நாய்போன்ற என்னை பிச்சு ஏற்றி இடையறாத அன்பாகிய பித்தினை ஏறச்செய்து கல்லை பிசைந்து கனி ஆக்கி - எனது மனமாகிய கல்லினைப் பிசைந்து இனிய கனிபோலா கச் செய்து தன் கருணை வெள்ளத்து அழுத்தி - தன்னுடைய பேர ருட் பெருக்கிலே அமிழ்ந்தச் செய்து வினைகடிந்த வேதியனை - எனது இருவினைகளைத் தொலைத்த அந்தணாளனும் தில்லைநகர் புக்கு சிற்றம் பலம் மன்னும் - தில்லைநகரத்திற் சென்றருளித் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே நிலைபெற்றுள்ள ஒல்லை விடையானை அம்மானாய் பாடுதும் விரைந்து செல்லும் இடபத்தினையுடையவனுமாகிய இறைவனை அம்மானை ஆடும் அன்னையே பாடிக்கொண்டு ஆடுவோமாக . வல்லாளனும் தென்னனும் பெருந்துறையானும் கல்லாமனத் தினை யுடைமையாற் கடைப்பட்ட நாயேனைப் பிச்சு ஏற்றி எனது மனமாகிய கல்லினைப் பிசைந்து கனிபோலாகச் செய்து தன் கருணை வெள்ளத்து அமிழ்ந்தச் செய்து இருவினைகளைத் தொலைத்த வேதி யனும் தில்லைநகர்புக்குச் சிற்றம்பலம் மன்னும் ஒல்லை விடையை யுடையவனுமாகிய இறைவனைப்பாடி ஆடுவோமாக என்பதாம் . கல்லாமனம் - உண்மைநூற் கல்வியைக் கல்லாதமனம் கல்லா மனத்தேன் கசியாதேன் ( சத . - 56 ) என அடிகள் அருளியமை யுங் காண்க . கல்லா மனத்து என்றது நாயேன் என்பதில் விகுதி யால் உணர்த்தப்படும் பெயர்க்கு விசேடணமாகும் . அடிகள் தம் மைக் கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை எனக் கூறியது யாண்டும் தம்மைத் தாழ்த்திக் கூறும் முறைமைபற்றியாகும் . கல் லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை ( கண்டப் - 4 ) எனஅடி கள் பிறாண்டும் அருளியமையுங் காண்க . இறைவனை வல்லாளன் என்றார் கடைப்பட்டவனாகிய தன்னைப் பிச்சேற்றிய செயலை உட் 67