திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கொண்டு. வல்லாளன் தென்னன் பெருந்துறையான் ஆகிய என ஒரு சொல் வருவித்து வேதியனை விடையானை என இயைக்க. இனி வேதியனை விடையானை என்பனவற்றிலிருக்கும் இரண்டனுருபை வல் லாளன் முதலிய மூன்றனோடுங் கூட்டி வல்லாளனை தென்னனை பெருந் துறையானை வேதியனை விடையானைப் பாடுதும் எனவும் முடிக்க லாம். வல்லாளனும் தென்னனும் பெருந்துறையானும் வேதியனும் விடையானுமாகிய இறைவனைப்பாடுதும் எனவும் முடிக்கலாம். 578 தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி யென்றது தென்னவ னும் திருப்பெருந்துறையையுடையவனும் இடையறாத அன்பாகிய பித்தினை எனக்கு ஏறச்செய்து என்பதாம். ''பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி" (அம். - 2) என வருதலுங் காண்க? கல்லைப் பிசைந்து கனியாக்கல் - கல்லினைப் பிசைந்து கனிபோ லாகச் செய்தல். "கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டு (சத.-94) என வருதலுங் காண்க. கல் என்றது உருவகம். கற் போல நெகிழாத மனத்தினை உணர்த்தியது. " கன்மனம் " "கல் வகை மனத்தேன்” (சத.-37;48) 'கன்னெஞ்சுருக்கி" (திருக் கோத்.-11) என அடிகள் அருளியமை காண்க. " கல்லில் வலியமனத் தேன்" (தே. 73 - 3) என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அம்மனத் தினைக் கனிபோல நெகிழும்படி செய்தமையின் "கல்லைப் பிசைந்து கனியாக்கி" என்றார். "கல்லியன் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டி யென்களைகளை யறுக்கும், வல்லியல் வானவர் நின்றானை" (சுந். - 67 - 5) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. கனியெனப் பொதுப்படக் கூறினும் வாழைப்பழத்தினையே ஈண்டுங் கொள்க. என்னை? ''வாழைப்பழத்தின் மனங்கனிவித்து எதிர்வதெப் போது (நீத்.-34) என்றார். வணங்க "> கருணைவெள்ளம், பேரருட் பெருக்கு. 'கருணை வெள்ளப் புதுமது" (சத. 63) "கருணைவெள்ளப்பிரான்" (கோத். - 16) "தன் கருணை வெள்ளத்து'' (பொன்னூசல் - 3) என வருவன காண்க. கருணை வெள்ளத் தழுத்தி இறைவன் தன் பேரருட் பெருக்கிலே அழுந்தச் செய்து. "தானந்த மில்லாதான் றனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான்" என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. "பேச்சற்ற இன்பத்தும் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்து'' எனத் திருமந்திரத்து வருதலுங் காண்க. (சாழல் - 10) (1595)
திருவாசக ஆராய்ச்சியுரை கொண்டு . வல்லாளன் தென்னன் பெருந்துறையான் ஆகிய என ஒரு சொல் வருவித்து வேதியனை விடையானை என இயைக்க . இனி வேதியனை விடையானை என்பனவற்றிலிருக்கும் இரண்டனுருபை வல் லாளன் முதலிய மூன்றனோடுங் கூட்டி வல்லாளனை தென்னனை பெருந் துறையானை வேதியனை விடையானைப் பாடுதும் எனவும் முடிக்க லாம் . வல்லாளனும் தென்னனும் பெருந்துறையானும் வேதியனும் விடையானுமாகிய இறைவனைப்பாடுதும் எனவும் முடிக்கலாம் . 578 தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி யென்றது தென்னவ னும் திருப்பெருந்துறையையுடையவனும் இடையறாத அன்பாகிய பித்தினை எனக்கு ஏறச்செய்து என்பதாம் . ' ' பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி ( அம் . - 2 ) என வருதலுங் காண்க ? கல்லைப் பிசைந்து கனியாக்கல் - கல்லினைப் பிசைந்து கனிபோ லாகச் செய்தல் . கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டு ( சத . - 94 ) என வருதலுங் காண்க . கல் என்றது உருவகம் . கற் போல நெகிழாத மனத்தினை உணர்த்தியது . கன்மனம் கல் வகை மனத்தேன் ( சத . - 37 ; 48 ) ' கன்னெஞ்சுருக்கி ( திருக் கோத் . - 11 ) என அடிகள் அருளியமை காண்க . கல்லில் வலியமனத் தேன் ( தே . 73 - 3 ) என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அம்மனத் தினைக் கனிபோல நெகிழும்படி செய்தமையின் கல்லைப் பிசைந்து கனியாக்கி என்றார் . கல்லியன் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டி யென்களைகளை யறுக்கும் வல்லியல் வானவர் நின்றானை ( சுந் . - 67 - 5 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . கனியெனப் பொதுப்படக் கூறினும் வாழைப்பழத்தினையே ஈண்டுங் கொள்க . என்னை ? ' ' வாழைப்பழத்தின் மனங்கனிவித்து எதிர்வதெப் போது ( நீத் . - 34 ) என்றார் . வணங்க > கருணைவெள்ளம் பேரருட் பெருக்கு . ' கருணை வெள்ளப் புதுமது ( சத . 63 ) கருணைவெள்ளப்பிரான் ( கோத் . - 16 ) தன் கருணை வெள்ளத்து ' ' ( பொன்னூசல் - 3 ) என வருவன காண்க . கருணை வெள்ளத் தழுத்தி இறைவன் தன் பேரருட் பெருக்கிலே அழுந்தச் செய்து . தானந்த மில்லாதான் றனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . பேச்சற்ற இன்பத்தும் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்து ' ' எனத் திருமந்திரத்து வருதலுங் காண்க . ( சாழல் - 10 ) ( 1595 )