திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை இறைவன் அடிகளை ஆட்கொண்ட காலத்து அவன் அருளால் சஞ்சித ஆகாமியங்களாகிய இருவினைகள் நீங்கினமையின் "வினைக் டிந்த" என்றார். வேதியனை - வேதத்தினையுடைய அந்தணனை. இனிக் கல்லைப்பிசைந்து கனியாக்குவதுபோல எனது வலிய மனத்தை அன் பினால் நெகிழ்வித்து இனிமை தரும் கனியாக மாற்றுதலாகிய வேதித்தலைச் செய்தவனை எனினுமாம். ஏற்றிப் பிசைந்து ஆக்கி அழுத்திக் கடிந்த வேதியனை என முடிக்க. திருப்பெருந்துறையிலே குருந்த மரத்தடியில் குருவாக எழுந்த ருளி ஆட்கொண்ட இறைவன் அடிகளைத் தில்லைக்கு வருகெனப் பணித்துத் தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளினானாதலின் “தில்லை நகர் புக்குச் சிற்றம்பலம் மன்னும் விடையானை " என்றார். நாயினேனை நலமலி தில்லையுட் கோலமார் தருபொதுவினில் வருகென ஏல என்னை யீங்கொழித் தருளி *** இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்" எனக் கீர்த்தித் திருவகவலில் வருதலும் “ ...தென்புலியூர் புரிந்தம்பலத்து ளாங்கெனை யாண்டு கொண்டாடும் பிரான்" எனத் திருக்கோவையாரில் வருவனவும் காண்க. தில்லை என்னும் மரம் அடர்ந்து கடாயிருந்த இடம் பின் நக ரானமையின் "தில்லைநகர்' என்றார். "தில்லைமாநகர்வாய் (கோவை.-214) என்பது காண்க. சிற்றம்பலம், அந்த நகரில் அமைந்த அம்பலம். 46 579 "செறிபொழில்சூழ் தில்லைநகர் திருச்சிற்ற ர் பலமன்னி " (கண்ட.-6) பரிவு செய்தாண்டம்பலத்துப் பயில்வோன்" (கோவை. -143) என அடிகளும், 'தில்லைமா நகர்போற்றி தில்லையுட் 66 (127-145) செம்பொனம்பலம் போற்றி'' எனப் பட்டினத்தடிகளும் அருளியவாறுங் காண்க.
திருவம்மானை இறைவன் அடிகளை ஆட்கொண்ட காலத்து அவன் அருளால் சஞ்சித ஆகாமியங்களாகிய இருவினைகள் நீங்கினமையின் வினைக் டிந்த என்றார் . வேதியனை - வேதத்தினையுடைய அந்தணனை . இனிக் கல்லைப்பிசைந்து கனியாக்குவதுபோல எனது வலிய மனத்தை அன் பினால் நெகிழ்வித்து இனிமை தரும் கனியாக மாற்றுதலாகிய வேதித்தலைச் செய்தவனை எனினுமாம் . ஏற்றிப் பிசைந்து ஆக்கி அழுத்திக் கடிந்த வேதியனை என முடிக்க . திருப்பெருந்துறையிலே குருந்த மரத்தடியில் குருவாக எழுந்த ருளி ஆட்கொண்ட இறைவன் அடிகளைத் தில்லைக்கு வருகெனப் பணித்துத் தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளினானாதலின் தில்லை நகர் புக்குச் சிற்றம்பலம் மன்னும் விடையானை என்றார் . நாயினேனை நலமலி தில்லையுட் கோலமார் தருபொதுவினில் வருகென ஏல என்னை யீங்கொழித் தருளி *** இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் எனக் கீர்த்தித் திருவகவலில் வருதலும் ... தென்புலியூர் புரிந்தம்பலத்து ளாங்கெனை யாண்டு கொண்டாடும் பிரான் எனத் திருக்கோவையாரில் வருவனவும் காண்க . தில்லை என்னும் மரம் அடர்ந்து கடாயிருந்த இடம் பின் நக ரானமையின் தில்லைநகர் ' என்றார் . தில்லைமாநகர்வாய் ( கோவை . - 214 ) என்பது காண்க . சிற்றம்பலம் அந்த நகரில் அமைந்த அம்பலம் . 46 579 செறிபொழில்சூழ் தில்லைநகர் திருச்சிற்ற ர் பலமன்னி ( கண்ட . - 6 ) பரிவு செய்தாண்டம்பலத்துப் பயில்வோன் ( கோவை . -143 ) என அடிகளும் ' தில்லைமா நகர்போற்றி தில்லையுட் 66 ( 127-145 ) செம்பொனம்பலம் போற்றி ' ' எனப் பட்டினத்தடிகளும் அருளியவாறுங் காண்க .