திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பு திருவம்மானை 581 பெருந்துறையான் சித்திரங்கள் எழுதப்பட்ட மதில் நாற்புறமும் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கணுள்ளானுமாகிய இறைவன், காட்டா தன எல்லாங்காட்டி - பிறர் எவராலும் காட்டப்படாத பொருள் கள் எல்லாவற்றையும் புலப்படுத்தி, சிவம்காட்டி - சிவமாகிய தாமாந் தன்மையைக் காட்டி, தாள் தாமரை காட்டி. - திருவடியடை தற் கேதுவாகிய ஞானத்தை உண்டாக்கி, தன் கிருணை தேன் காட்டி- தனது திருவருளாகிய தேனினைக் காண்பித்து, நாட்டார் நகை செய்ய - தமது ஒழுக்கத்திற்கு மாறுபட்ட எனது ஒழுக்கத்தினைக் கண்டு உலகினர் என்னை இகழ்ந்து சிரிக்கவும், நாம் மேலை வீடு எய்த - நாம் மேலாகிய வீட்டின்பத்தை அடையவும், தான் ஆட் கொண்டு ஆண்ட ஆ(று) - தான் அடிமையாகக் கொண்டு என்னை ஆண் டருளிய விதமாகும், பாடுதும் - இதனைப் பாடிக்கொண்டு ஆடு வோமாக. அம்மானாய். தோழி, ஒருவன் பிறர் எவரும் செய்யக்கூடாத செய்கை வகைகளைச் செய்ததனை நீ கேட்டாயோ? அதனைக் கேட்பா யாக; அது, தென்னாடுடையவனும் பெருந்துறைக்கணுள்ளானு மாகிய இறைவன் காட்டாதனவெல்லாங் காட்டிச், சிவங்காட்டித், தன் தாட்டாமரை காட்டித், தன் திருவருளாகிய தேனினைக் காட்டி, நாட்டார் நகை செய்ய நாம் மேலாகிய வீட்டின்பத்தை அடைய அடிமை கொண்டு ஆண்டருளிய விதம் இதுவாகும்; இதனைப் பாடிக் கொண்டு ஆடுவோமாக என்பதாம். கேட்டாயோ தோழி என்றது ஒருத்தி தன்னோடு அம்மானை ஆடும் மகளிருள் ஒருத்தியை நோக்கிக் கூறியதாகும், கிறி - சொல் லக் கூடாதது. "பாவையரைக் கிறி பேசிப் படிறாடித் திரிவீர்" (சுந் 46 -1; என வருதலும் காண்க. அஃது ஈண்டுச் செய்யக்கூடாதது என்னும் பொருளில் வந்தது. அடிகள் இறைவனிடத்துக் கொண்ட அன்பின் மிகுதி பற்றி ஒருவன் கிறி செய்தவாறு எனக் கூறியது, "சுடர்த்தொடீஇ கேளாய் .... சோதை பரிந்து, வரிப் பந்து கொண் டோடி, நோதக்க செய்யுஞ் சிறுபட்டி" (கலித் 51 - 1 - 4) என த் தன் காதலனைத் தலைவி யொருத்தி கூறியவாறு போலாகும். ஒருவன் எனப் பொதுப்படக் கூறினும், தென்னன் பெருந்துறை யான் என விதந்து கூறுதலின் அவ்வொருவன் திருப்பெருந்துறை யானே என்பது துணியப்படும். பெருந்துறையான் ஆட்டான் கொண் டாண்டவா என இயையும். "எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமுமாட்கொண்டு... பெருந் துறையான் அங்கணன் அந்தணனா யறைகூளி வீடருளும்' (அம்மானை.-1,
பு திருவம்மானை 581 பெருந்துறையான் சித்திரங்கள் எழுதப்பட்ட மதில் நாற்புறமும் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கணுள்ளானுமாகிய இறைவன் காட்டா தன எல்லாங்காட்டி - பிறர் எவராலும் காட்டப்படாத பொருள் கள் எல்லாவற்றையும் புலப்படுத்தி சிவம்காட்டி - சிவமாகிய தாமாந் தன்மையைக் காட்டி தாள் தாமரை காட்டி . - திருவடியடை தற் கேதுவாகிய ஞானத்தை உண்டாக்கி தன் கிருணை தேன் காட்டி தனது திருவருளாகிய தேனினைக் காண்பித்து நாட்டார் நகை செய்ய - தமது ஒழுக்கத்திற்கு மாறுபட்ட எனது ஒழுக்கத்தினைக் கண்டு உலகினர் என்னை இகழ்ந்து சிரிக்கவும் நாம் மேலை வீடு எய்த - நாம் மேலாகிய வீட்டின்பத்தை அடையவும் தான் ஆட் கொண்டு ஆண்ட ( று ) - தான் அடிமையாகக் கொண்டு என்னை ஆண் டருளிய விதமாகும் பாடுதும் - இதனைப் பாடிக்கொண்டு ஆடு வோமாக . அம்மானாய் . தோழி ஒருவன் பிறர் எவரும் செய்யக்கூடாத செய்கை வகைகளைச் செய்ததனை நீ கேட்டாயோ ? அதனைக் கேட்பா யாக ; அது தென்னாடுடையவனும் பெருந்துறைக்கணுள்ளானு மாகிய இறைவன் காட்டாதனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தன் தாட்டாமரை காட்டித் தன் திருவருளாகிய தேனினைக் காட்டி நாட்டார் நகை செய்ய நாம் மேலாகிய வீட்டின்பத்தை அடைய அடிமை கொண்டு ஆண்டருளிய விதம் இதுவாகும் ; இதனைப் பாடிக் கொண்டு ஆடுவோமாக என்பதாம் . கேட்டாயோ தோழி என்றது ஒருத்தி தன்னோடு அம்மானை ஆடும் மகளிருள் ஒருத்தியை நோக்கிக் கூறியதாகும் கிறி - சொல் லக் கூடாதது . பாவையரைக் கிறி பேசிப் படிறாடித் திரிவீர் ( சுந் 46 -1 ; என வருதலும் காண்க . அஃது ஈண்டுச் செய்யக்கூடாதது என்னும் பொருளில் வந்தது . அடிகள் இறைவனிடத்துக் கொண்ட அன்பின் மிகுதி பற்றி ஒருவன் கிறி செய்தவாறு எனக் கூறியது சுடர்த்தொடீஇ கேளாய் .... சோதை பரிந்து வரிப் பந்து கொண் டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி ( கலித் 51 - 1 - 4 ) என த் தன் காதலனைத் தலைவி யொருத்தி கூறியவாறு போலாகும் . ஒருவன் எனப் பொதுப்படக் கூறினும் தென்னன் பெருந்துறை யான் என விதந்து கூறுதலின் அவ்வொருவன் திருப்பெருந்துறை யானே என்பது துணியப்படும் . பெருந்துறையான் ஆட்டான் கொண் டாண்டவா என இயையும் . எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமுமாட்கொண்டு ... பெருந் துறையான் அங்கணன் அந்தணனா யறைகூளி வீடருளும் ' ( அம்மானை . - 1