திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை யுடைய மதுரை மாநகரில் செம்மனச்செல்விக்குக் கூலியாளாய் மண் ணைச் சுமந்து, கூலிகொண்டு - அவளாற் கொடுக்கப்பட்ட பிட்டினைக் கூலியாக ஏற்று உண்டு, அ கோவால் மொத்துண்டு - அம்மதுரை நகரத்து அரசனால் அடிபட்டு, புண் சுமந்த பொன் மேனி பாடுதும்- அதனால் புண்பட்ட அவனது பொன்மயமாகிய திருமேனியைப்பாடி ஆடுவோமாக. 588 அம்மானாய், உமையம்மை பொருந்திய இடப்பாகத்தையுடைய வனும், பெம்மானும், பெருந்துறையான் வியன் மண்டலத்து ஈசனும் கண் சுமந்த நெற்றிக் கடவுளுமாகிய இறைவன் மதுரையில் செம் மனச்செல்விக்குக் கூலியாளாய் மண்ணைச் சுமந்து, அந்த நகரத்து அரசனால் அடிபட்டு அதனால் புண்பட்ட அவனது பொன்மயமாகிய திருமேனியைப்பாடி ஆடுவோமாக என்பதாம். பண் சுமந்த பாடல் - பண்ணைக்கொண்ட பாடல், இசைப்பாட்டு. பாடற் பரிசு படைத்தருளும் என்றது பாடலைப்பாடும் தன்மை யினை உண்டாக்கியருளிய என்றவாறு. இறைவன் திருவருட்டுணைக் கொண்டு பண் சுமந்த பாடல்களைப் பாடினரா கலின் இவ்வாறு கூறி னார். "நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை" (கோத்.12) 'நினைவித்துத் தன்னை யென்னெஞ்சத் திருத்தம் பலத்து நின்று புனைவித்த வீசன் (திருக்கோவை 140) எனவும் அடிகள் பிறாண்டும் அருளியவாறுங் காண்க, பரிசு -தன்மை. கெடுவதுன் பரிசு (ச த. -33) என்புழிப்போல. இனிப் பண் சுமந்த பாடற்பரிசு படைத்தருளும் என்பதற்கு, பண்களைக் கொண்ட பாட லின் இயல்பை உண்டாக்கி யருளுகின்ற எனவும், பண்களைக்கொண்ட பாடல்களுக்குத் திருவருளைப் பரிசாகக் கொடுத்தருளுகின்ற எனவும் உரைப்பினும் அமையும். படைத்தருளும் பாகத்தன் என யும். படைத்தருளும் பெண் என இயைப்பினுமமையும் பெண் என் றது உமையம்மையை. பாகம் என்றது இடப்பாகத்தை. யை பெம்மான் - பெருமான்; கடவுள், "பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே" (ஞான . தே. 1 - 1) என்பது காண்க. சிவ விண் சுமந்த மண்டலம் என்றது நாண்மீன் கோண்மீன்களின் மண்டலங்கள், இந்திரனுலகம், பிரமனுலகம் விண்டுஉலகம், லோகம் என்பனவற்றை. கீர்த்தி வியன் மண்டலம் என்றார். விரிவி னாலும் உயர்வினாலும் புகழுடைமைபற்றி, மண்டலங்களுக்கும் ஈசன் என எச்சவும்மை விரிக்க.
திருவாசக ஆராய்ச்சியுரை யுடைய மதுரை மாநகரில் செம்மனச்செல்விக்குக் கூலியாளாய் மண் ணைச் சுமந்து கூலிகொண்டு - அவளாற் கொடுக்கப்பட்ட பிட்டினைக் கூலியாக ஏற்று உண்டு கோவால் மொத்துண்டு - அம்மதுரை நகரத்து அரசனால் அடிபட்டு புண் சுமந்த பொன் மேனி பாடுதும் அதனால் புண்பட்ட அவனது பொன்மயமாகிய திருமேனியைப்பாடி ஆடுவோமாக . 588 அம்மானாய் உமையம்மை பொருந்திய இடப்பாகத்தையுடைய வனும் பெம்மானும் பெருந்துறையான் வியன் மண்டலத்து ஈசனும் கண் சுமந்த நெற்றிக் கடவுளுமாகிய இறைவன் மதுரையில் செம் மனச்செல்விக்குக் கூலியாளாய் மண்ணைச் சுமந்து அந்த நகரத்து அரசனால் அடிபட்டு அதனால் புண்பட்ட அவனது பொன்மயமாகிய திருமேனியைப்பாடி ஆடுவோமாக என்பதாம் . பண் சுமந்த பாடல் - பண்ணைக்கொண்ட பாடல் இசைப்பாட்டு . பாடற் பரிசு படைத்தருளும் என்றது பாடலைப்பாடும் தன்மை யினை உண்டாக்கியருளிய என்றவாறு . இறைவன் திருவருட்டுணைக் கொண்டு பண் சுமந்த பாடல்களைப் பாடினரா கலின் இவ்வாறு கூறி னார் . நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை ( கோத் .12 ) ' நினைவித்துத் தன்னை யென்னெஞ்சத் திருத்தம் பலத்து நின்று புனைவித்த வீசன் ( திருக்கோவை 140 ) எனவும் அடிகள் பிறாண்டும் அருளியவாறுங் காண்க பரிசு -தன்மை . கெடுவதுன் பரிசு ( . -33 ) என்புழிப்போல . இனிப் பண் சுமந்த பாடற்பரிசு படைத்தருளும் என்பதற்கு பண்களைக் கொண்ட பாட லின் இயல்பை உண்டாக்கி யருளுகின்ற எனவும் பண்களைக்கொண்ட பாடல்களுக்குத் திருவருளைப் பரிசாகக் கொடுத்தருளுகின்ற எனவும் உரைப்பினும் அமையும் . படைத்தருளும் பாகத்தன் என யும் . படைத்தருளும் பெண் என இயைப்பினுமமையும் பெண் என் றது உமையம்மையை . பாகம் என்றது இடப்பாகத்தை . யை பெம்மான் - பெருமான் ; கடவுள் பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே ( ஞான . தே . 1 - 1 ) என்பது காண்க . சிவ விண் சுமந்த மண்டலம் என்றது நாண்மீன் கோண்மீன்களின் மண்டலங்கள் இந்திரனுலகம் பிரமனுலகம் விண்டுஉலகம் லோகம் என்பனவற்றை . கீர்த்தி வியன் மண்டலம் என்றார் . விரிவி னாலும் உயர்வினாலும் புகழுடைமைபற்றி மண்டலங்களுக்கும் ஈசன் என எச்சவும்மை விரிக்க .