திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண்ணேத்திசைப்ப வான்புரவி யூரும் மகிழ்ந்து" 595 Dg0 (தசாங்கம் 6) என அடிகள் அருளியவாற்றானறிக. கோலம் ஆ எனப்பிரித்து அழகிய எருது எனப் பொருள்கொள்வாருமுளர். கண்டம் கரியான் - நஞ்சுண்டமையால் கருமையாகிய கண்டத்தை யுடையவன்; (ஞான.58-1) "மாமணி போற் கண்டங்கரியவன்” கண்டங் கரியான் கருணைத் திருவுரு" (திருமந். 2732) " கண்டங் கரியன்" (11ந் திருமுறை - சிவபெருமான் திருவந்.8) "நஞ்சமுண்டிருண்ட கண்டர்" (ஞான.237-3) (சுந். 57-4) நஞ்சமுண்டு கண்டங் கறுத்தானை" என வருவன காண்க. கண்டங் கருமை இறைவன் தேவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தினைப் புலப் படுத்துவதாகும். "எண்பெரிய வானவர்கள் நின்று துதி செய்ய இறையே கருணையாய் உண்பரிய நஞ்சதனை யுண்டுலகமுய்ய அருளுத்தமன்" (ஞான.335-7) எனத் தேவாரத்தும், "உம்பர் உய்யக், களமாம் விடமமிர்தாக்கிய தில்லைத்தொல்லோன்(22) 'ஓங்குமொரு விடமுண்டம் பலத்தும்பருய்ய வன்று தாங்குமொருவன்" எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க. 04 செம்மேனியான்-சிவந்த திருமேனியையுடையவன்"தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான்'' (158) ''சிவனெனுநாமந் தனக்கேயுடைய செம்மேனியெம்மான்" (நாவு. 178 - 4; 112 - 9) எனத்தேவாரத்தும் வருவன காண்க. Tele வெண்ணீற்றான் - சிவந்த திருமேனியில் அணிந்த திருவெண்ணீற் றையுடையவன். கரியான், செம்மேனியான். வெண்ணீற்றான் என் பன முரண் தொடை. அண்டம் என்றது வான வெளியிலுள்ள உலகங் களை முதலாயினான் என்றது அவ்வண்டங்களையெல்லாம் தன் வியாப கத்துள் அடக்கித் தான் அவற்றிற்குத் தலைவனாயினான் என்றவாறு. இறைவன் எல்லையில்லாத ஆனந்தத்தை அடியார்க் கீந்தருளு தலின் 'அந்தமிலா ஆனந்தம்" என்றார். "பரிமேற் கொண்டான்
திருவம்மானை தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண்ணேத்திசைப்ப வான்புரவி யூரும் மகிழ்ந்து 595 Dg0 ( தசாங்கம் 6 ) என அடிகள் அருளியவாற்றானறிக . கோலம் எனப்பிரித்து அழகிய எருது எனப் பொருள்கொள்வாருமுளர் . கண்டம் கரியான் - நஞ்சுண்டமையால் கருமையாகிய கண்டத்தை யுடையவன் ; ( ஞான.58-1 ) மாமணி போற் கண்டங்கரியவன் கண்டங் கரியான் கருணைத் திருவுரு ( திருமந் . 2732 ) கண்டங் கரியன் ( 11 ந் திருமுறை - சிவபெருமான் திருவந் .8 ) நஞ்சமுண்டிருண்ட கண்டர் ( ஞான.237-3 ) ( சுந் . 57-4 ) நஞ்சமுண்டு கண்டங் கறுத்தானை என வருவன காண்க . கண்டங் கருமை இறைவன் தேவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தினைப் புலப் படுத்துவதாகும் . எண்பெரிய வானவர்கள் நின்று துதி செய்ய இறையே கருணையாய் உண்பரிய நஞ்சதனை யுண்டுலகமுய்ய அருளுத்தமன் ( ஞான.335-7 ) எனத் தேவாரத்தும் உம்பர் உய்யக் களமாம் விடமமிர்தாக்கிய தில்லைத்தொல்லோன் ( 22 ) ' ஓங்குமொரு விடமுண்டம் பலத்தும்பருய்ய வன்று தாங்குமொருவன் எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க . 04 செம்மேனியான் - சிவந்த திருமேனியையுடையவன் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் ' ' ( 158 ) ' ' சிவனெனுநாமந் தனக்கேயுடைய செம்மேனியெம்மான் ( நாவு . 178 - 4 ; 112 - 9 ) எனத்தேவாரத்தும் வருவன காண்க . Tele வெண்ணீற்றான் - சிவந்த திருமேனியில் அணிந்த திருவெண்ணீற் றையுடையவன் . கரியான் செம்மேனியான் . வெண்ணீற்றான் என் பன முரண் தொடை . அண்டம் என்றது வான வெளியிலுள்ள உலகங் களை முதலாயினான் என்றது அவ்வண்டங்களையெல்லாம் தன் வியாப கத்துள் அடக்கித் தான் அவற்றிற்குத் தலைவனாயினான் என்றவாறு . இறைவன் எல்லையில்லாத ஆனந்தத்தை அடியார்க் கீந்தருளு தலின் ' அந்தமிலா ஆனந்தம் என்றார் . பரிமேற் கொண்டான்